ஜம்இய்யா பதில் தருமா?

0 61

சென்ற 2025.04.17இல் வெளி­வந்த விடி­வெள்ளி வார இதழில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் உத்­தி­யோ­க­பூர்வ அறிக்­கையில் ஐந்தாம் பந்­தி­யிலும், இறுதிப் பந்­தி­யிலும் மாவட்ட அல்­லது பிர­தேச கிளை­களில் பதவி தாங்­கு­ப­வர்கள் கட்சி அர­சி­யலில் ஈடு­பட்டு வேட்­பா­ளர்­க­ளாக செயற்­ப­டு­கின்­றமை ஜம்­இய்­யாவின் இலக்­கு­களை அடைந்து கொள்­வ­தற்கும் அதன் கூட்டுப் பணி­க­ளுக்கும் பாத­க­மாக அமையும் என நிறை­வேற்­றுக்­கு­ழுவின் அவ­சர கூட்­டத்­தின்­போது கலந்து கொண்ட அனை­வ­ராலும் ஏக­ம­ன­தாக ஏற்றுக் கொள்­ளப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்தத் தீர்­மானம் வர­வேற்­கப்­ப­டக்­கூ­டிய ஒன்­றாகும். இதற்­காக ஜம்­இய்­யாவை எவ்­வ­ளவு தூரம் பாராட்­டி­னாலும் தகும்.

அதே­வேளை இந்த விதி மாவட்ட அல்­லது பிர­தேச கிளை­களில் அங்­கத்­த­வர்­க­ளாக பதவி வகிக்­கி­ற­வர்­க­ளாக இருப்­ப­வர்­க­ளுக்கு மட்­டும்­தானா ஏற்­பு­டை­யது? என்ற ஒரு சந்­தே­கத்தை எம்­போன்­றோ­ருக்கு எழுப்பிக் கொண்­டி­ருக்­கி­றது.

ஏனெனில் இன்­று­வரை முஸ்லிம் அர­சியல் கட்­சி­யொன்றில் உயர்­பீட உறுப்­பி­ன­ராக, அக்­கட்­சியின் சூறா சபைத்­த­லை­வ­ராக பதவி வகிப்­ப­வர்கள் சிலர் ஜம்­இய்­யாவின் மத்­திய ­குழு உறுப்­பி­ன­ராக, நிறை­வேற்­றுக்­குழு உறுப்­பி­ன­ராக, பொரு­ளா­ள­ராக, உப தலை­வ­ராக செயற்­ப­டு­வது மத்­திய குழு உறுப்­பி­னர்­க­ளுக்கு அல்­லது பதவி வகிப்பவர்­க­ளுக்கு தெரி­யாதா? அல்­லது மூடி மறைக்­கின்­றார்­களா? அல்­லது மத்­திய குழு­விற்கு இந்தத் தீர்­மானம் பொருந்­தாதா?

மாவட்ட பிர­தேச கிளை­களில் பதவி தாங்­கு­னர்­க­ளுக்கு ஹரா­மாக்­கப்­பட்ட ஒரு செயல் மத்­திய குழுவில் பதவி தாங்­கு­னர்­க­ளுக்கு ஹலா­லாக்­கப்­பட்­டுள்­ளதா?

சென்ற 20 வரு­டங்­க­ளுக்கு மேல் மத்­திய குழுவில் அங்கம் வகிப்­ப­வர்கள் இப்­ப­த­வி­களில் ஒட்­டிக்­கொண்­டி­ருக்­கி­றார்­களே! இவர்­க­ளுக்கு எவ்­வி­த­மான நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்­காத ஜம்­இய்­யா­வுக்கு இப்­போது பிர­தேச மாவட்ட கிளை­களில் பதவி தாங்­கு­னர்­க­ளாக இருப்­பது மட்­டும்தான் கண்­ணுக்குத் தெரிந்­ததா? இன்­றைய தலைவர் ரிஸ்வி முப்தி அவர்கள் பத­வி­யேற்ற காலம் முதல் இச்­செயல் நடை­பெற்று வரு­கி­றதே! இது­கூட அவ­ரது கவ­னத்தை ஈர்க்­க­வில்­லையா? அல்­லது எப்­போதும் போல ஏனோ­தா­னோ­வென்று அமை­தி­யாக இருந்தால் எல்லாம் சரி­யா­கி­விடும் என்று எண்­ணு­கி­றாரா? அல்­லது இது சம்­மந்­த­மாகப் பேசு­ப­வர்கள் சோடா போத்தல் கேஸ் மாதிரி கொதித்­தெ­ழு­வார்கள், பின்னர் அமை­தி­ய­டைந்து விடு­வார்கள் என்ற எண்­ணமா? சக­ல­ரையும் சமா­ளிப்­பது போல் அல்­லாஹ்­வி­டமும் இதற்­காக பதில் சொல்லி சமாளித்துக் கொள்ளலாம் என எண்ணுகிறார்களா? ஜம்இய்யாவின் அங்கத்தவர்கள் இந்த கேள்வியை தலைவரிடம் கேட்பார்களா?

தீர்மானங்கள் எடுக்கும்போது அது அனைவருக்கும் நீதியானதாக அமைதல் வேண்டும். மத்திய குழுவுக்கு ஒரு சட்டம் கிளைகளுக்கு ஒரு சட்டம் போடுவது எந்தவகையில் நியாயம்?

– மெளலவி அகமட்

  • Vidivelli

Leave A Reply

Your email address will not be published.