ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகாரம் : விசாரணையின் போது உரிய‌ முறைமைகளை பின்பற்றவில்லை

குறுக்கு விசாரணையின் போது ஒப்புக்கொண்ட சி.ஐ.டி. அதிகாரி

0 52

எப்.அய்னா

பிர­பல மனித உரி­மைகள் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் தொடர்­பி­லான விசா­ர­ணை­களின் போது, பிர­தான சாட்­சி­யா­ளர்­க­ளிடம் வாக்குமூலம் பெறும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கையில் உரிய ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட விதி­மு­றைகள் பின்­பற்­றப்­ப­ட­வில்லை என்­பதை சி.ஐ.டி.யின் விசா­ரணை அதி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் தயா­நந்த ஏற்­றுக்­கொண்டார்.

ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நளிந்த இந்­ர­திஸ்­ஸவின் குறுக்கு கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் இதனை ஏற்­றுக்­கொண்டார்.

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பின்னர் தற்­போது சதி செய்­தமை, சமூ­கங்­க­ளி­டையே வெறுப்­பு­ணர்வை தூண்­டிய குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் வழக்குத் தொட­ரப்­பட்­டுள்ள சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் மற்றும் சுஹை­ரியா மத்­ரஸா பாட­சாலை அதிபர் சலீம்கான் மொஹம்மட் சகீல் ஆகி­யோ­ருக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்ள வழக்கு கடந்த வாரம் (மே 2 ஆம் திகதி) நீதி­பதி நதீ அபர்னா சுவந்­து­ரு­கொட முன்­னி­லையில் புத்­தளம் மேல் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு வந்­தது.
இதன்­போது, பிணையில் இருக்கும் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் 2 ஆம் பிர­தி­வா­தி­யான அல் சுஹை­ரியா மத்­ரஸா பாட­சாலை அதிபர் சகீல்கான் ஆகியோர் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

முதல் பிர­தி­வா­தி­யான சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் சார்பில், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நளிந்த இந்­ர­திஸ்ஸ‌ உள்­ளிட்ட குழு­வினர் ஆஜ­ரா­கினர்.

2 ஆம் பிர­தி­வா­தி­யான அதிபர் சகீல்கான் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சமிந்த அத்­து­கோ­ர­ளவின் கனிஷ்ட சட்­டத்­த­ரணி தலை­மையில் குழு­வினர் ஆஜ­ரா­கினர்.
வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்­ஷன சில்வா, பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் லக்­மினி கிரி­ஹா­கம ஆகியோர் ஆஜ­ரா­கினர்.

அத்­துடன் இவ்­வ­ழக்கு விசா­ர­ணை­களை கண்­கா­ணிக்க ஐரோப்­பிய ஒன்­றிய அதி­கா­ரிகள், அமெ­ரிக்க தூத­ரக அதி­கா­ரிகள் நீதி­மன்றில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்­தமை விஷேட அம்­ச­மாகும்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திக­திக்கும் 31 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் புத்­தளம் அல் சுஹை­ரியா மத்­ரஸா பாட­சா­லையில் கல்வி பயின்ற மாண­வர்­க­ளுக்கு, கற்­றுக்­கொ­டுக்­கப்­பட்ட சொற்கள் ஊடா­கவோ, தவ­றான பிரதிநிதித்­துவம் ஊடா­கவோ பல்­வேறு மதங்­க­ளுக்கு இடையில் மோதல் ஏற்­படும் வண்ணம் எதிர் உணர்­வு­களை தூண்டும் வித­மாக சொற்பொழி­வினை நடாத்­தி­யமை, அதற்­காக சதி செய்­தமை தொடர்பில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 2 (1) எச் பிரி­வுடன் இணைத்து கூறப்­படும் அச்­சட்­டத்தின் 3 (அ) பிரிவின் கீழ் தண்­டனைக்குரிய குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் தொடர்பில், ‘இஸ்­ரே­லி­யர்கள் கைப்­பற்­றி­யி­ருப்­பது, எமது பள்­ளி­வா­சல்கள். இலங்­கையில் கத்­தோ­லிக்­கர்­க­ளுக்கு எதி­ராக தாக்­குதல் நடத்­தி­ன­ா­லேயே அவர்கள் அச்­சப்­ப­டுவர்.’ என கூறி இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்த வீடி­யோக்­களை காண்­பித்­தமை ஊடாக மதக்குழுக்கள் இடையே மோதல் நிலை­மையை ஏற்­ப­டுத்தும் வண்ணம் உணர்­வு­களை தூண்­டி­ய­தாக பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 2 (1) எச் பிரி­வுடன் இணைத்து நோக்­கப்­படும் அச்­சட்­டத்தின் 2 (2) 11 பிரிவின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

குறித்த இரு குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும் உதவி ஒத்­தாசை புரிந்­த­தாக சுஹை­ரியா மத்­ரஸா பாட­சாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் மீது பயங்­க­ர­வாத தடைச் சட்ட ஏற்­பா­டுகள் பிர­காரம் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

இத­னை­விட, பலஸ்தீன் – இஸ்ரேல் தொடர்­பி­லான யுத்த வீடியோ காட்­சி­களை காண்­பித்து ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் கூறி­ய­தாக கூறப்­படும் வச­னங்கள் ஊடாக வெறுப்­பு­ணர்­வு­களை விதைத்­தாக குற்றம் சுமத்தி சிவில் அர­சியல் உரி­மைகள் குறித்­தான சர்­வ­தேச இணைக்­கப்­பாட்டு சட்­டத்தின் 3 (1) ஆம் உறுப்­பு­ரை­யுடன் இணைத்து பார்க்­கப்­படும் அச்­சட்­டத்தின் 3 (3) ஆம் உறுப்­பு­ரையின் கீழ் குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ரா­கவும், அதற்கு உதவி ஒத்­தாசை புரிந்­தமை தொடர்பில் மத்­ரஸா அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீ­லுக்கு எதி­ரா­கவும் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த நிலையில், அரசின் பிர­தான சாட்­சி­யா­ள­ரான மலிக் எனும் சாட்­சி­யா­ளரின் சாட்­சி­யத்தை கடந்த 2020 ஏப்ரல் 21 ஆம் திகதி பதிவு செய்­த­தாக கூற­ப்படும் சி.ஐ.டி. பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் தயா­நந்­த­விடம் ஜன­ா­திபதி சட்­டத்­த­ரணி நலிந்த இந்­ர­திஸ்ஸ குறுக்கு கேள்வி எழுப்­பினார்.

இதன்­போது முதல் சாட்­சி­யாளர் மலிக்கின் சாட்­சி­யத்­துடன் பரஸ்­பர வேறு­பாடு கொண்ட சாட்­சி­யத்தை தயா­நந்த மன்றில் வெளி­ப்ப­டுத்­தினார்.

குறிப்­பாக 2021 ஏப்ரல் 21ஆம் திகதி வாக்கு மூலம் பதிவு செய்ய மலிக்கை சி.ஐ.டி.க்கு அழைத்து வந்த நேரம் முதல் அனைத்தும், மலிக்கின் சாட்­சி­யத்தில் இருந்து வேறு­பட்­டி­ருந்­தது. அத்­துடன் இவ்­வா­றான விசா­ர­ணை­களின் போது பொலிஸார் அவர்கள் செல்லும் இடம், அழைத்து வரும் நபர்கள் உள்­ளிட்­டவை தொடர்பில் பதிவுப் புத்­த­கத்தில் பதி­விட வேண்டும் என நிர்ப்­பந்தம் உள்ள நிலையில், அவ்­வா­றான எவையும் பதி­வி­டப்­ப­ட­வில்லை என்­பது உறு­தி­யா­னது.

இதனை விட, முதல் சாட்­சி­யா­ள­ருக்கு ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்வின் புகைப்­ப­டத்தை, பொலிஸ் திணைக்­கள கட்­ட­ளை­க­ளுக்கு, மாற்­ற­மாக அதனை காட்­டி­யுள்­ளமை தொடர்பில் பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் தயாநந்த ஒப்புக்கொன்டார்.
இந்த நிலையில் அவரிடம் 2ஆம் பிரதிவாதி சார்பிலான குறுக்கு விசாரணைகளுக்காக குறித்த வழக்கு எதிர்வரும் மே 16 வரை ஒத்தி வைக்கப்பட்டது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.