ஆளும் கட்சிக்கு வடக்கு கிழக்கு மக்கள் சொன்ன செய்தி என்ன?

0 45

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடந்த மே 6ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்று முடிந்துள்ளது. இத்தேர்­தலில் 43.26 சத­வீ­த வாக்­கு­க­ளையே ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்க தலை­மை­யி­லான ஆளும் தேசிய மக்கள் சக்தி பெற்­றுள்ளது.ஜனாதிபதித் தேர்தலில் அக் கட்சி 42.31 வீத வாக்குகளையும் பாராளுமன்றத் தேர்தலில் 61.5 வீத வாக்குகளையும் பெற்றிருந்த நிலையில் உள்ளூராட்சித் தேர்தலில் ஒரு சரிவை சந்தித்துள்­ளது.

அதே­வேளை, 339 உள்ளூ­ராட்சி மன்­றங்­களில் 3927 ஆச­னங்­களை தேசிய மக்கள் சக்தி கைப்­பற்­றி­யுள்ள போதிலும் பல சபைகளில் ஆட்­சி­யினை நிறுவத் தேவை­யான ஆச­னங்­களை பெறத் தவ­றி­யுள்­ளது. இதனால் ஏனைய கட்சிகளுடன் இணைந்தே ஆட்சியமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கட்சிகளோடு கூட்டுச் சேரும் எண்ணம் இல்லை என்றும் சுயாதீன குழுக்களுடன் இணைந்து ஆட்சியமைப்பது பற்றிச் சிந்திக்கிறோம் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா நேற்று தெரிவித்திருக்கிறார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் வாழு­கின்ற தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அதி­க­ள­வி­லான வாக்­கினை கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஆளும் கட்சிக்கு வழங்­கி­யி­ருந்­தனர். இக்­கட்சி மீதும் அதன் தலை­மை­யான ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்க மீதும் கொண்ட அதீத நம்­பிக்­கையின் கார­ண­மாக அதிக வாக்­கு­களை கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வழங்­கினர்.

எனினும், இந்த உள்ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் தேசிய மக்கள் சக்­தியினால் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்ற உள்ளூ­ராட்சி மன்­றங்­களில் ஆட்­சி­ய­மைக்கவோ அல்லது கணிசமான வாக்குகளைப் பெறவோ முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இலங்­கையில் மிகப் பெரிய முஸ்லிம் கட்சி தேசிய மக்கள் சக்தி என்றும், மிகப் பெரிய தமிழ் கட்சி தேசிய மக்கள் சக்தி என்றும் அடிக்­கடி அக்­கட்­சி­யினர் கூறி வரு­கின்­றனர். இந்த நிலை­யி­லேயே வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்­திக்கு எதிர்பார்த்தளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இது தொடர்பில் அந்தக் கட்சி விரி­வான ஆய்­வொன்­றினை மேற்­கொண்டு சிறுபான்மை மக்களின் மனங்களை வெல்வதற்கான வியூகங்களை வகுக்க வேண்டியுள்ளது. இல்லையேல் அடுத்த மாகாண சபைத் தேர்தலில் இதைவிடப் பாரிய சவால்களை வடக்கு கிழக்கு பகுதிகளில் சந்திக்க வேண்டி வரும் என்பதையே கள நிலைவரங்கள் உணர்த்துகின்றன.

கடந்த ஜனா­தி­பதி மற்றும் பாரா­ளு­மன்றம் ஆகிய தேர்­தல்­களில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூ­கத்­தினர் அதிக வாக்­கு­களை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கி­யி­ருந்­தனர். தமிழ் முஸ்லிம் கட்சிகளின் பிரசாரங்களையும் மீறியே அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஆட்சிக்கு மக்கள் ஆதரவளித்திருந்தனர்.

எனினும், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூ­கத்­தினர் இக்­கட்சி மீது வைத்­தி­ருந்த நம்­பிக்­கைக்கு மாற்­ற­மாக கடந்த காலங்­களில் சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்­பாக அமைச்­ச­ர­வையில் முஸ்­லி­ம் பிரதிநிதி ஒருவர் உள்ளீர்க்கப்படாமை, ஜனா­தி­பதி செய­ல­ணியில் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு இடமில்லை, வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­க­ளி­லுள்ள சிறு­பான்மை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் செயற்றிறனின்மை, பயங்கரவாத தடைச்சத்தை தொடர்ந்தும் பயன்படுத்துதல் போன்ற பல கார­ணங்கள் கார­ண­மாக தமிழ் மற்றும் முஸ்லிம் சமூ­கத்­தினர் அக்­கட்­சிக்கு அதிக வாக்­கு­களை வழங்­க­வில்லை.

இதன் ஊடாக தேசிய மக்கள் சக்­திக்கு செய்­தி­யொன்­றினை தமிழ் மற்றும் முஸ்லிம் சமூ­கத்­தினர் சொல்­லி­யுள்­ளனர். அதா­வது, எதிர்­கா­லத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூ­கத்­தினரை அரவணைத்­துக்­கொண்டு தான் இந்த அர­சாங்கம் பய­ணிக்க வேண்டும் என்பதே அந்த செய்தி.

இந்தத் தேர்­தலின் ஊடாக மக்கள் சொல்­கின்ற செய்­தி­யினை ஆளும் தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் கட்­டாயம் கவ­னத்தில் எடுக்க வேண்­டிய நிலை­யி­லுள்­ளது.
அதே­வேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணத்­திற்கு வெளியில் வாழு­கின்ற தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அதி­க­ளவில் தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்­திற்கு வாக்­க­ளித்­துள்­ளதையும் இந்த இடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இதன் கார­ண­மாக கொழும்பு மாந­கர சபை, புத்­தளம் மாந­கர சபை, காலி மாந­கர சபை, கொலன்­னாவ நகர சபை மற்றும் பேரு­வளை பிர­தேச சபை போன்ற பல உள்ளூராட்சி மன்­றங்­களில் அதிக ஆச­னங்­களை தேசிய மக்கள் சக்தி பெற்­றுள்­ளது.
இதற்கு மேல­தி­மாக சிங்­கள மக்­க­ளுடன் முஸ்­லிம்கள் இணைந்து வாழ்­கின்ற உள்ளூ­ராட்சி மன்றங்களுக்கு பல முஸ்லிம் உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தியின் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வழங்கியுள்ள செய்தியினை கொஞ்சம் காது கொடுத்து கேட்க வேண்டிய நிலைக்கு தேசிய மக்கள் சக்தி தள்ளப்பட்டுள்ளது.அவ்வா றில்லாவிட்டால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தியின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.