பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது இந்தியா

26 பேர் கொல்லப்பட்டதாகவும் 5 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் கூறுகிறது பாகிஸ்தான்

0 52

‘பஹல்­காமில் நடத்­தப்­பட்ட பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுக்கு பதி­ல­டி­யாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்­கி­ர­மிப்பு காஷ்மீரில் 9 பயங்­க­ர­வா­த ­இ­லக்­கு­களை குறி­வைத்து தாக்­குதல் நடத்­தி­ய­தாக’ இந்­தியா நேற்று நள்­ளி­ரவில் அறி­வித்­தது.

ஆனால், இந்தத் தாக்­கு­தலில் 26 பேர் கொல்­லப்­பட்­ட­தா­கவும் 46 பேர் காயம் அடைந்­த­தா­கவும் பாகிஸ்தான் இரா­ணுவம் கூறி­யுள்­ளது.

அதேவேளை, இந்­திய அரசு பத்­தி­ரி­கை­யா­ளர்கள் சந்­திப்­பின்­போது பொது­மக்­களில் யாரும் இந்­தி­யாவின் தாக்­கு­தலில் கொல்­லப்­பட்­ட­தாக தக­வல்கள் இல்லை என கூறி­யுள்­ளது.

கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி ஜம்மு காஷ்மீரின் பஹல்­காமில் நடத்­தப்­பட்ட தீவி­ர­வாத தாக்­கு­தலில் 26 பேர் கொல்­லப்­பட்­டனர். இந்த தாக்­கு­தலில் பாகிஸ்­தா­னுக்கு தொடர்­பி­ருப்­ப­தாக  குற்­றஞ்­சாட்­டிய இந்­தியா சிந்து நதி ஒப்­பந்தம் இரத்து உட்­பட பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்­தது. மறு­புறம் பஹல்காம் தாக்­கு­தலில் தங்­க­ளுக்கு எவ்­வித தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் மறுத்­து­வ­ரு­கி­றது.

இந்­நி­லை­யில்தான், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்­கி­ர­மிப்பு காஷ்மீரில் உள்ள பயங்­க­ர­வாத இலக்­கு­களைக் குறி­வைத்து தாக்­குதல் நடத்­தி­யுள்ளோம் என்றும் 9 இலக்­குகள் குறி­வைத்து தாக்­கப்­பட்­டன என்றும் இந்­தியா செவ்­வாய்க்­கி­ழமை நள்­ளி­ரவு 1.40 மணி­ய­ளவில் அறி­வித்­தது. இந்த தாக்­கு­த­லுக்கு ஆப்­பரேஷன் சிந்தூர் என பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.

பாகிஸ்தான் இரா­ணுவ தளங்­களின் மீது இலக்கு வைக்­கப்­ப­ட­வில்லை எனவும் மிகவும் கவ­னத்­துடன் கட்­டுப்­பாட்­டுடன் தாக்­குதல் நடத்­தி­யுள்­ள­தா­கவும் இந்­தியா தெரி­வித்­துள்­ளது. ஆனால், பாகிஸ்தான் இதை மறுத்­துள்­ளது.

முசா­ப­ராபாத், பாகிஸ்தான் நிர்­வா­கத்­துக்­குட்­பட்ட கோட்லி மற்றும் பாகிஸ்­தானின் பஞ்சாப் மாகா­ணத்தில் உள்ள பஹ­வல்பூர் ஆகிய பகு­திகள் குறி­வைக்­கப்­பட்­ட­தாக பாகிஸ்தான் கூறு­கி­றது.

அஹ­மத்பூர் ஷர்கியா பாகிஸ்­தானின் பஞ்சாப் மாகா­ணத்தில் உள்ள பஹா­வல்பூர் மாவட்­டத்தில் அமைந்­துள்ள ஒரு நகரம். “இந்தப் பகு­தியில் உள்ள சுபன் மசூதி இந்தத் தாக்­கு­தலில் குறி­வைக்­கப்­பட்டு கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது, சுற்­றி­யுள்ள மக்­க­ளுக்கும் பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது” என பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்­பாளர் தெரி­வித்­துள்ளார்.

அதோடு, இந்தத் தாக்­கு­தல்­களில் மூன்று வயது பெண், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உள்­ளிட ஐந்து பேர் கொல்­லப்­பட்­டுள்­ள­தா­கவும் 31 பேர் காய­ம­டைந்­துள்­ள­தா­கவும் பாகிஸ்தான் இரா­ணுவம் தெரி­வித்­துள்­ளது.

பாகிஸ்­தானின் பஞ்சாப் மாகா­ணத்தில் உள்­ளது முரிட்கே என்­கிற நகரம். இது லாஹுரில் இருந்து 40 கிலோ­மீட்டர் தொலைவில் அமைந்­துள்­ளது.
“முரிட்கே மாவட்­டத்தில் உள்ள அல்-­குரா பள்ளிவாசல் மற்றும் அதைச் சுற்­றி­யுள்ள பகு­திகள் நான்கு இந்­திய தாக்­கு­தலில் குறி­வைக்­கப்­பட்­ட­தா­கவும் இதில் ஒருவர் உயி­ரி­ழந்து, ஒருவர் காய­ம­டைந்­துள்ள நிலையில் இரு­வரைக் காண­வில்லை” என இரா­ணுவ செய்தித் தொடர்­பாளர் தெரி­வித்­துள்ளார்.

பாகிஸ்தான் நிர்­வா­கத்தின் கீழ் உள்ள காஷ்மீரின் தலை­ந­க­ர­மான இங்கு பல முக்­கிய அலு­வ­ல­கங்­களும் அர­சாங்க கட்­ட­டங்­களும் உள்­ளன.

ஷுவாய் நல்லா என்­கிற இடத்தில் அமைந்­துள்ள பிலால் பள்ளிவாசல் குறி­வைக்­கப்­பட்­ட­தாக பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்­பாளர் தெரி­வித்­துள்ளார்.
பாகிஸ்தான் நிர்­வா­கத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் அமைந்­துள்ள கோட்லி இஸ்­லா­மா­பாத்தில் இருந்து 120 கிலோ­மீட்டர் தொலைவில் எல்லைக் கட்­டுப்­பாட்டுக் கோட்­டிற்கு அருகே அமைந்­துள்­ளது.

கோட்­லியில் உள்ள பள்ளிவாசல் மீது நடை­பெற்ற தாக்­கு­தலில், 16 வயது பெண் ஒரு­வரும் 18 வயது இளை­ஞரும் உயி­ரி­ழந்­தா­கவும், இரண்டு பெண்கள் காய­ம­டைந்­துள்­ள­தா­கவும் இரா­ணுவ செய்தித் தொடர்­பாளர் தெரி­வித்­துள்ளார்.

ஷகர்கர் என்­பது பஞ்சாப் மாகா­ணத்தின் நரோபல் மாவட்­டத்தில் உள்ள ஒரு கிராமம். ஷகர்கர் மீது வீசப்­பட்ட இரண்டு குண்­டு­களால் ஒரு மருந்­தகம் சிறிய அளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக இராணுவ செய்தித் தொடர்­பாளர் தெரி­வித்­துள்ளார்.
பாகிஸ்­தானின் பாது­காப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப், ஜியோ தொலைக்­காட்­சி­யிடம் பேசும்­போது, இந்­தியா பொது­மக்கள் வசிக்கும் பகு­தியில் தாக்­கி­ய­தா­கவும் பயங்­க­ர­வாத முகாம்­களை குறி­வைத்­த­தாக இந்­தியா கூறு­வது தவறு என்றும் கூறி­யுள்ளார்.

பாகிஸ்தான் பிர­தமர ஷெபாஸ் ஷெரீஃப் ஐந்து இடங்­களில் தாக்­குதல் நடத்­தி­ய­தாக ட்வீட் ஒன்றில் கூறி­யுள்ளார். இந்­தி­யா­வுக்கு உரிய பதி­லடி தரப்­படும் என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

“எதிரி நாடு மிகவும் கோழைத்­த­ன­மாக பாகிஸ்­தானின் ஐந்து இடங்­களில் தாக்­குதல் நடத்­தி­யுள்­ளது” என்று தனது எக்ஸ் பக்­கத்தில் பதி­விட்­டி­ருந்த அவர் இந்­தி­யாவின் இந்தத் தாக்­கு­தலை “போர்ச் செயல்” என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இந்நிலையில், பதற்றங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று அந்நாட்டு பாராளுமன்ற கூட்டத்தில் உரையாற்றினார். மொத்தம் 80 இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்த அவர், அவற்றில் மூன்று ரஃபேல் விமானங்கள் உட்பட ஐந்து ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்துவதில் தமது இராணுவம் வெற்றி பெற்றது என்று தெரிவித்தார். மேலும் இரண்டு ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.