காஸாவை முழுமையாக கைப்பற்றும் திட்டம்

இஸ்ரேல் மக்கள் எதிர்த்துப் போராட்டம்

0 51

எம்.ஐ.அப்துல் நஸார்

இஸ்­ரே­லியப் பிர­தமர் பெஞ்­சமின் நெதன்­யா­குவின் அமைச்­ச­ரவை காஸாவை முழு­மை­யாக கைப்­பற்றும் திட்­டத்­திற்கு அங்­கீ­காரம் அளித்த சில மணி நேரங்­களின் பின்னர், இஸ்­ரேலில் அர­சாங்க எதிர்ப்பு போராட்­டங்கள் வெடித்­தன.

இஸ்­ரேலின் பாரா­ளு­மன்­ற­மான நெசெட்­டிற்கு வெளியே நூற்­றுக்­க­ணக்­கான மக்கள் கூடி, காஸாவில் தொடர்ந்தும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள பண­யக்­கை­தி­களை விடு­விப்­ப­தற்கு ஹமா­ஸுடன் ஒப்­பந்­தத்தை மேற்­கொள்­ளு­மாறு கோரிக்கை விடுத்­தனர்.
இஸ்­ரே­லிய அமைச்­ச­ரவை காஸாவை முழு­மை­யாக கைப்­பற்றி, கால­வ­ரை­ய­றை­யின்றி பாலஸ்­தீன பிர­தே­சத்தை கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருக்கும் திட்­டத்­திற்கு இணக்கம் தெரி­வித்­த­தாக இரண்டு இஸ்­ரே­லிய அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர். இந்த நட­வ­டிக்கை செயல்­ப­டுத்­தப்­பட்டால், அங்கு இஸ்­ரேலின் நட­வ­டிக்­கைகள் பெரு­ம­ளவில் விரி­வு­ப­டுத்­தப்­படும்; மேலும் கடு­மை­யான சர்­வ­தேச விமர்­ச­னங்­களும் உரு­வாகும்.

‘இந்த யுத்­தத்தைத் தொடர எந்த கார­ணமும் இல்லை. நாங்கள் ஒன்­றரை ஆண்­டு­க­ளாக என்ன செய்தோம்? கடந்த ஒன்­றரை ஆண்­டு­க­ளாக எம்மால் வெற்­றி­பெற முடி­ய­வில்லை, தொடர்ந்தும் அதைச் செய்ய முடி­யாது,’ என்று போராட்­டக்­கா­ரர்­களில் ஒரு­வ­ரான மிரி வுல்ப் தெரி­வித்தார்.

‘இஸ்­ரே­லிய அர­சாங்கம் காஸா பகு­தியைத் தக்­க­வைத்­துக்­கொண்டு அங்கு ஒரு புதிய குடி­யேற்­றத்தை ஏற்­ப­டுத்த விரும்­பு­கி­றது. படை­யினர் அங்­கேயே இருப்­பார்கள், வீரர்கள் கொல்­லப்­ப­டு­வார்கள், பண­யக்­கை­திகள் கறுப்­பு­நிற சாக்­கு­களில் திரும்பி வரு­வார்கள். அதுதான் நடக்கும்,’ என அவர் மேலும் தெரி­வித்தார்.

ஹமாஸைத் தோற்­க­டித்து பண­யக்­கை­தி­களை விடு­விப்­பது என்ற இஸ்­ரேலின் போர் நோக்­கங்­களை அடைய உதவும் என அதி­கா­ரிகள் தெரி­வித்த புதிய திட்­டத்தின் மூலம் இலட்­சக்­க­ணக்­கான பலஸ்­தீ­னர்­களை தெற்கு காஸா­விற்கு நகர்த்­தவும் திட்­ட­மிட்­டுள்­ளது.

ஹமாஸ் போரா­ளிகள் 2023 ஒக்­டோபர் மாதம் 7 ஆம் திகதி தெற்கு இஸ்­ரேலைத் தாக்கி சுமார் 1,200 பேரைக் கொன்­ற­போது போர் தொடங்­கி­யது, கொல்­லப்­ப­ட­ட­வர்­களுள் பெரும்பாலானோர் பொதுமக்களாவார்.

ஹமாஸ் போராளிகள் 251 பேரை பணயக்கைதிகளாகப் பிடித்துச் சென்றனர், தற்போது 59 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 24 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.