பஹல்காம் படுகொலைகளுக்கு பொறுப்பேற்பது யார்?

0 86

வி.எஸ்.முஹம்மத் அமீன்

ஏப்ரல் 22ஆம் நாள் ஜம்மு காஷ்­மீரின் மிக முக்­கிய சுற்­றுலாத் தல­மான பஹல்­காமில் தீவி­ர­வா­திகள் நடத்­திய கொடூரத் தாக்­கு­தலில் 26 சுற்­றுலாப் பய­ணிகள் சுட்டுக் கொல்லப்பட்­டனர். 17 பேர் காய­ம­டைந்­தனர். கோழைத்­த­ன­மான, இந்த பயங்­க­ர­வாதச் செயலை செய்­த­வர்கள் எவ­ரா­யினும் அவர்கள் கடு­மை­யாகத் தண்­டிக்­கப்­பட வேண்டும். சட்­டப்­பி­ரிவு 370ஐ நீக்­கி­விட்டோம். இனி பயங்­க­ர­வா­தத்­திற்கு இட­மில்லை. சுற்­றுலாப் பய­ணிகள் அச்­ச­மின்றி வரலாம் என்ற ஒன்­றிய அரசின் கூற்றைத் தொடர்ந்து கோடை விடு­மு­றையை மகிழ்­வாகக் கொண்­டாட நாட்டின் பல பகு­தி­க­ளி­லி­ருந்தும் சுற்­றுலாப் பய­ணிகள் ஜம்மு காஷ்­மீ­ருக்கு வருகை தந்­தனர். ஆனால் அதற்குத் தகுந்த பாது­காப்பு ஏற்­பா­டு­களைச் செய்­யாமல், 26 உயிர்­களைப் பலி­கொ­டுத்­து­விட்டு வழக்­கம்போல் பாகிஸ்தான் பக்கம் கைகாட்டி நிற்­கி­றது ஒன்­றிய அரசு. இச்­சம்­ப­வத்­திற்கும் தங்­க­ளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் பாது­காப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் மறுப்பு தெரி­வித்­துள்ளார்.

2019 பெப்­ர­வரி 14ஆம் நாள் ஜம்மு காஷ்மீர் புல்­வா­மாவில் மத்­திய ரிசர்வ் போலீஸ் படை­யினர் (CRPF) வீரர்கள் சென்ற வாக­னங்­க­ளின்­மீது நடை­பெற்ற தாக்­கு­தலில் 40 வீரர்கள் கொல்­லப்­பட்­டனர். இந்தத் தாக்­குதல் இந்­திய உள்­து­றையின் அலட்­சி­யத்­தி­னால்தான் நடந்­தது. நமது வீரர்கள் தாக்­கப்­பட்ட இந்தச் சம்­ப­வத்தை பாகிஸ்­தா­னுக்கு எதி­ராகத் திசை திருப்­பி­வி­டு­வது என அவர்கள் முடிவு செய்­த­தா­கவே இருந்­தது என்று அன்­றைய ஆளு­ந­ராக இருந்த சத்­யபால் மாலிக் குற்றம் சாட்­டி­ய­தையும் இத்­துடன் இணைத்துப் பார்க்க வேண்டும். ஒன்­றிய அரசின் படு­தோல்­வியைத் திசை­தி­ருப்­பு­வ­தற்­காக முஸ்­லிம்­களைத் தீவி­ர­வா­தி­க­ளாகச் சித்­தி­ரித்து ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமு­தா­யத்தைக் குற்­றப்­ப­டுத்­து­வ­தற்­காக ‘இந்­துக்­களின் பெயர்­களைக் கேட்டுக் கேட்டுச் சுட்­டார்கள்’ என்ற அபாண்­ட­மான பொய்யை ஊட­கங்கள் திட்­ட­மிட்டு பரப்பி வரு­கின்­றன. ஆனால் இது உண்­மை­யல்ல. கொல்­லப்­பட்­ட­வர்­களில் முஸ்­லிமும் அடக்கம் என்­பதை அவர்கள் வச­தி­யாக மறந்து விட்­டார்கள்.

இச்­சூ­ழலில் சம்­பவ இடத்­தி­லி­ருந்த பய­ணிகள் இதனைத் திட்­ட­வட்­ட­மாக மறுத்­த­துடன், அங்­குள்ள முஸ்­லிம்­கள்தான் தங்­களைக் காப்­பாற்­றி­னார்கள் என்று கூறிய செய்­திகள் இப்­போது வெளி­வரத் தொடங்­கி­யுள்­ளன. இதற்­கான சாட்­சி­யாக தம் இன்­னு­யி­ரையும் தந்­தி­ருக்­கின்றார் சையத் ஆதில் ஹுசைன் ஷா. குதிரைச் சவாரி தொழில் செய்து வரும் உள்­ளூர்­வா­சி­யான இவர், தாக்­கு­தலில் இருந்து பெண் ஒரு­வரைப் பாது­காக்க முயற்­சிக்கும் போது குண்­ட­டி­பட்டு உயி­ரி­ழந்தார். தேசிய நெடுஞ்­சாலை மூடப்­பட்­டி­ருந்த நிலையில் சுற்­றுலாப் பய­ணி­க­ளுக்கு அங்­குள்ள முஸ்­லிம்கள் பள்­ளி­வா­சலில் இடம் கொடுத்­தி­ருக்­கின்­றார்கள். பாது­காப்பு ஏற்­பா­டு­களில் கோட்டை விட்­டு­விட்டு அதற்குப் பொறுப்­பேற்று பதவி வில­கு­வ­தற்குப் பதில் குறிப்­பிட்ட மதத்­த­வரைக் குறி­வைத்துத் தாக்­கி­ய­தாக ஒன்­றிய பாது­காப்­பு­ அ­மைச்சர் ராஜ்நாத் சிங் கூறி­யுள்ளார். உள்­துறை அமைச்சர் அமித் ஷா இந்தப் படு­தோல்­விக்குப் பொறுப்­பேற்று பதவி வில­கி­யி­ருக்க வேண்டும். அதி­ரடிப் பழி வாங்­கலைப் பற்றிப் பேசும் ஒன்­றிய அரசு பாது­காப்புப் படு­தோல்­விக்கு பொறுப்பேற்க முன்வரவில்லை. இதையும் மதவாதப் பிரச்சினையாகத் திசை திருப்பி நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் சிதறடிப்பதில்தான் ஒன்றிய அரசு கவனமாக இருக்கிறது. இது போன்ற சம்பவங்கள் இனி ஜம்மு காஷ்மீரில் அரங்கேறாமல் இருக்க ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது? இதற்குப் பொறுப்பேற்பது யார்?- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.