தே.ம.ச. தனித்தே ஆட்சியமைக்கும் –

புறக்கணிக்கப்பட்ட தரப்புகளுடன் இணைவில்லை ம.வி.மு. செயலாளர் ரில்வின் சில்வா திட்டவட்டம்

0 45

(இரா.ஹஷான்)
பெரும்­பா­லான உள்­ளூ­ராட்­சி­ மன்­றங்­களில் தனித்து பெரும்­பான்­மை­யுடன் ஆட்­சி­ய­மைப்போம். மக்­களால் புறக்­க­ணிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ருடன் கைகோர்த்து உள்­ளூ­ராட்­சி­ மன்­றங்­களை ஸ்தாபிக்க போவ­தில்லை. சுயேட்சைக் குழுக்கள் ஆளும் தரப்­புடன் கைகோர்க்­கலாம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பொதுச் செய­லாளர் ரில்வின் சில்வா தெரி­வித்தார்.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் நேற்று புதன்­கி­ழமை நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் திட்­ட­வட்­ட­மாக இதனை தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, நடை­பெற்று முடிந்த உள்­ளூ­ராட்­சி­ மன்றத் தேர்­தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்­றி­பெற்று அதி­க­ள­வான உள்­ளூ­ராட்­சி ­மன்ற சபை­களின் அதி­கா­ரத்தை கைப்­பற்­றி­யுள்­ளது. ஜனா­தி­பதித் தேர்தல் மற்றும் பொதுத்­தேர்­தலின் போது வழங்­கிய ஒத்­து­ழைப்பை இந்த தேர்­த­லிலும் வழங்­கி­ய­தற்கு நாட்டு மக்கள் அனை­வ­ருக்கும் நன்றி தெரி­வித்துக் கொள்­கிறோம்.

தேசிய மக்கள் சக்தி மற்றும் அர­சாங்­கத்தின் மீது நாட்டு மக்கள் அதீத நம்­பிக்கை கொண்­டுள்­ளார்கள். தேசிய மட்­டத்தில் அதி­கா­ரத்தை சிறந்த முறையில் செயற்­ப­டுத்­து­வதை போன்று பிர­தேச மட்­டத்­தி­லான அரச நிர்­வா­கத்­தையும் சிறந்த முறையில் செயற்­ப­டுத்­துவோம்.

ஊழ­லற்ற அர­சாங்­கத்தை ஸ்தாபித்­ததை போன்று ஊழ­லற்ற உள்­ளூ­ராட்­சி ­மன்ற அதி­கா­ரங்­க­ளையும் எம்மால் ஸ்தாபிக்க முடியும். ஒரு­சில பகு­தி­களில் பெரும்­பான்மை பலம் கிடைக்­கப்­பெ­றா­மைக்­கான கார­ணத்தை ஆராய்ந்து குறை­களை நிவர்த்தி செய்து முன்­னோக்கிச் செல்வோம்.

பெரும்­பா­லான உள்­ளூராட்­சி­ மன்­றங்­களில் தனித்து பெரும்­பான்­மை­யுடன் ஆட்­சி­ய­மைப்போம். மக்­களால் புறக்­க­ணிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ருடன் கைகோர்த்து உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை ஸ்தாபிக்க போவ­தில்லை. தோல்­வி­ய­டைந்­துள்ள தரப்­பி­னர்கள் அனை­வரும் ஒன்­றி­ணைத்து உள்­ளூராட்­சி­மன்­றங்­களை ஸ்தாபிப்­பது சிக்­க­லா­னதே.
ஒரு­சில சுயேட்­சைக் குழுக்கள் தேசிய மக்கள் சக்­தி­யுடன் ஒன்­றி­ணை­வ­தற்கு தயா­ராக இருக்குமாயின் அந்த தரப்பினரை ஒன்றிணைத்து பெரும்பான்மை பலமற்ற உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளில் ஆட்சியமைக்கலாம். எவ்வாறாயினும் மாற்றுக் கொள்கை கொண்டுள்ள எதிர்தரப்பினருடன் ஒன்றிணை போவதில்லை என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.