தகுதியானவர்களை இனங்கண்டு வாக்களிப்போம்

0 60

எதிர்­வ­ரு­கின்ற மே 6ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை நாட­ளா­விய ரீதியில் உள்ளூ­ராட்சி மன்றத் தேர்தல் இடம்­பெ­ற­வுள்­ளது. சுமார் இரண்டு வரு­டங்­க­ளுக்கு மேல் ஒத்­தி­வைக்­கப்­பட்ட நிலை­யி­லேயே குறித்த தேர்தல் தற்­போது நடை­பெ­ற­வுள்­ளது.

இந்த தேர்­த­லுக்­கான பிரசார நட­வ­டிக்­கைகள் இறுதிக் கட்­டத்­தினை அடைந்­துள்­ளன. இதனால், கட்­சி­க­ளி­னாலும் சுயேட்சைக் குழுக்­க­ளி­னாலும் தீவிர பிரச்­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

எவ்­வா­றா­யினும், வாக்­கா­ளர்­க­ளா­கிய பொது­மக்கள் இத்­தேர்­தலில் அதிக ஆர்வம் செலுத்­தா­மை­யினை அவ­தா­னிக்க முடி­கின்­றது. குறிப்­பாக கடந்த ஒன்­பது மாத காலப் பகு­திக்குள் மூன்­றாவது தேர்­தலை இலங்கை மக்கள் எதிர்­நோக்­கு­கின்­றனர்.
இவ்­வா­று இதற்கு முன்னர் குறுகிய காலப்பகுதிக்கு தொடர்ச்­சி­யாக இலங்கை மக்கள் மூன்று தேர்­த­ல்களை எதிர்­நோக்­க­வில்லை. புது வருட கொண்­டாட்டங்களில் மக்கள் திளைத்திருப்பதால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரங்கள் தொடர்பில் பொது­மக்கள் ஆர்­வ­மின்றி காணப்­ப­டு­கின்­றனர்.

எனினும், இந்த தேர்­தலில் மக்­களின் ஆர்­வத்­தினை கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை பிரசார மேடைகளில் கேட்கக் கூடி­ய­தா­க­வுள்­ளது.
குறிப்­பாக ஆளும் கட்­சி­யி­னரும் எதிர்க்­கட்­சி­யி­னரும் போட்டி போட்­டுக்­கொண்டு பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

இந்த ஆட்­சி­யா­ளர்­க­ளினால் கடந்த ஜனா­தி­பதி மற்றும் பாரா­ளு­மன்றம் ஆகிய தேர்­தல்­களின் போது வழ­ஙக்­கப்­பட்ட வாக்­கு­று­திகள் இது­வரை நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.
இவ்­வா­றான நிலையில் இந்தத் தேர்­தலில் வழங்­கப்­ப­டு­கின்ற வாக்­கு­று­தி­களை எப்­படி நிறை­வேற்­று­வார்கள் என்ற கேள்­வியும் தற்­போது மக்கள் மத்­தியில் எழுந்­துள்­ளது.
அதே­வேளை, எதிர்க்­கட்­சி­க­ளுக்கு வாக்­க­ளித்து என்ன பயன் என்ற கேள்­வியும் மக்கள் மத்­தியில் இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் பலவீனம் ஆளும் தரப்புக்கு வாய்ப்பாகவும் மாறியுள்ளது.

இதே­வேளை, அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ருக்கு கூட கிடைக்­காத அதி­கா­ரங்கள் உள்ளூ­ராட்சி மன்­றத்தின் தலை­வ­ரொ­ரு­வ­ருக்கு சட்­டத்தின் ஊடாக வழங்­கப்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக உள்ளூராட்சி மன்­றத்தின் நிதி­யினை நேர­டி­யாக கையா­ளுதல், சபைக்கு தேவை­யான நிதி­யினை திரட்­டுதல் போன்ற முக்­கிய பல அதி­கா­ரங்கள் உள்ளூராட்சி மன்­றத்தின் தலை­வ­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

இப்­படி பல அதி­கா­ரங்­களைக் கொண்ட உள்ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­கான பிரச்­சா­ரத்தின் போது அதன் வரம்­பிற்­குட்­பட்ட வாக்­கு­று­தி­களே வழங்­கப்­பட வேண்டும்.
எனினும், தற்­கால பிரசார மேடை­களில் தேசிய ரீதி­யான வாக்­கு­று­திகள் தேர்தல் மேடை­களில் வழங்­கப்­ப­டு­வதை அவ­தா­னிக்­க­கூ­டி­ய­தாக உள்­ளது. அதே­வேளை, மக்­களை கவர்­வ­தற்­காக சில அர­சியல் தலை­வர்­க­ளினால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற உரைகள் அவர்­க­ளு­டைய எதிர்­கா­லத்­தினை கேள்­விக்­கு­றி­யாக்­கு­கின்­றன.

எந்­த­வொரு கட்சி ஆட்­சிக்கு வந்­தாலும் நாட்டின் அர­சியல் கலா­சா­ரத்­தினை மாற்ற முடி­யாது என்­பது இதன் ஊடாகத் தெளி­வா­கின்­றது. அதிலும் குறிப்­பாக தேர்தல் பிர­சார மேடை­களில் பொய் மூட்­டை­களை அள்ளி வீசும் கலா­சாரம் தொடர்ந்து கொண்டே செல்­கின்­றது. இதற்கு முடிவு கட்­டப்­பட வேண்டும். வாக்­கா­ளர்­களை ஏமாற்றும் அரசியலை இன்னும் தொடராமல் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மாத்திரம் அரசியல் கட்சிகள் வழங்க வேண்டும்.

அதேவேளை, தேர்தல் பிரசார மேடைகளில் பொய் மூட்டைகளை அள்ளி வீசுகின்ற அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகள் விடயத்தில் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும். தத்தமது பிரதேசங்களின் எதிர்காலத்தினை தீர்மானிக்கவுள்ள இந்தக் குட்டித் தேர்தலில் ஊழலற்ற, பொய் வாக்குறுதிகளை வழங்காத, அற்ப சலுகைகளுக்காக மக்களின் வாக்குகளை விலை பேசாத, பொருத்தமான நபர்களை இனங்கண்டு வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிப்பதே சிறந்த தெரிவாக அமையும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.