இனவாதத்தை வென்ற ஸைனப்!

இனவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது எப்போது?

0 61

எப்.அய்னா

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ‘இன­வா­தத்தை வென்ற 9 ‘ஏ’– ஷாபியின் மகள் ஸைனப் சொல்லும் செய்தி என்ன?’ எனும் தலைப்பில் விடி­வெள்ளி ஒரு கட்­டு­ரையை பிர­சு­ரித்­தி­ருந்­தது.

அக்­கட்­டு­ரையின் முதல் பந்தி ‘2021 ஆம் ஆண்­டுக்­கான கல்விப் பொதுத் தரா­தர சாதா­ரண தரப் பரீட்சை -பெறு­பே­றுகள் கடந்த வாரம் வெளி­யா­னது. பரீட்சை பெறு­பே­றுகள் வெளி­யா­னது முதல் சமூக ஊட­கங்­க­ளிலும், பிர­தான ஊட­கங்­க­ளிலும் அது தொடர்பில் பல செய்­திகள் வெளி­யி­டப்­பட்டு வரு­கின்­றன. அவ்­வா­றான செய்­தி­களில் மிக்க கவ­னத்தை ஈர்த்­ததும், உணர்­வு­பூர்­வ­மான பல உண்­மை­களை போட்­டு­டைக்கும் வண்­ணமும் அமைந்த விடயம், வைத்­தியர் ஷாபி சிஹாப்­தீனின் மகள் பாத்­திமா ஸைனப் பெற்ற 9 ‘ஏ ’ சித்­திகள் குறித்த செய்­தி­க­ளாகும்.’ என ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது.

குறித்த கட்­டு­ரையை மீண்டும் ஒரு முறை ஞாப­க­ப்­படுத்தி, இன­வா­தி­க­ளுக்கு தகுந்த பதி­ல­டி­யாக, வைத்­தியர் ஷாபி சிஹாப்­தீனின் மகள் பாத்­திமா ஸைனப் கடந்த 2024 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்­சையில் உயி­ரியல் பிரிவில் தோற்றி 3 ஏ சித்­தி­களைப் பெற்­று மருத்துவ பீடத்திற்குத் தெரிவாகியுள்ளமை அதனை ஒத்த ஒரு கட்­டு­ரையை வரைய மீண்டும் அவ­சி­யத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

தற்­போது வெளி­யி­டப்­பட்­டுள்ள 2024 ஆம் ஆண்­டுக்­கான உயர்­தரப் பரீட்சை பெறு­பே­று­களின் படி 177 588 பேர் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு விண்­ணப்­பிக்க தகுதி பெற்­றுள்­ளனர். 329 704 விண்­ணப்­ப­தா­ரி­களில் 274 361 பேர் குறித்த பரீட்­சைக்குத் தோற்­றி­யி­ருந்­தனர்.
9457 பேர் (3.45 சத­வீ­த­மானோர்) சகல பாடங்­களில் மூன்று ஏ சித்­தி­களைப் பெற்­றுள்­ளனர். 29 244 பேர் (10.66 சத­வீ­த­மானோர்) எந்­த­வொரு பாடத்­திலும் சித்தி பெற­வில்லை. வடமேல் மாகா­ணத்­தி­லேயே அதி­க­ள­வானோர் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு விண்­ணப்­பிக்க தகுதி பெற்­றுள்­ளனர். இம்­மா­கா­ணத்தில் 66.36 சத­வீ­த­மா­னோரும், வட மாகா­ணத்தில் 65.95 சத­வீ­த­மா­னோரும், மேல் மாகா­ணத்தில் 65.89 சத­வீ­த­மா­னோரும், சப்­ர­க­முவ மாகா­ணத்தில் 65.87 சத­வீ­த­மா­னோரும், தென் மாகா­ணத்தில் 65.74 சத­வீ­த­மா­னோரும் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு விண்­ணப்­பிக்க தகுதி பெற்­றுள்­ளனர்.

உயி­ரியல் அமைப்பு தொழி­நுட்ப பிரிவில் பரீட்­சைக்கு தோற்­றிய மாண­வர்­களே அதி­க­ளவில் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு விண்­ணப்­பிக்க தகுதி பெற்­றுள்­ளனர். அதற்­க­மைய இப்­பி­ரிவில் 74.37 சத­வீ­த­மா­னோரும், வணி­கப்­பி­ரிவில் 69.61 சத­வீ­த­மா­னோரும், பொறி­யியல் பிரிவில் 68.11 சத­வீ­த­மா­னோரும், கலைப்­பி­ரிவில் 65.21 சத­வீ­த­மா­னோரும், பௌதீக விஞ்­ஞான பிரிவில் 63.02 சத­வீ­த­மா­னோரும், உயி­ரியல் விஞ்­ஞா­னப்­பி­ரிவில் 58.82 சத­வீ­த­மா­னோரும் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு விண்­ணப்­பிக்க தகுதி பெற்­றுள்­ளனர்.
இந்த அடிப்­ப­டையில், 9457 பேர் 3 பாடங்­க­ளிலும் ஏ சித்­தி­களை பெற்­றி­ருந்­தாலும் உயர்­தர பெறு­பே­று­களின் பின்னர் சமூக வலைத் தளங்­க­ளிலும், சமூக மட்­டத்­திலும் அதி­க­மாக பேசப்­பட்ட 3 ஏ சித்தி வைத்­தியர் ஷாபி சிஹாப்­தீனின் மகள் பாத்­திமா ஸைனபின் சித்­தி­யாகும்.

அவர் உயி­ரியல் விஞ்­ஞானப்‌ பிரிவில் 3 ‘ஏ’ சித்­தி­களைப் பெற்று, மாவட்ட அளவில் 12 ஆவது இடத்­தையும், தேசிய ரீதியில் 357 ஆவது இடத்­தையும் தக்க வைத்­துக்­கொண்டு தனது மருத்­துவ கனவை நன­வாக்க அடித்­தளம் இட்­டுள்ளார்.

அவர் தேசிய மட்­டத்தில் அல்­லது மாவட்ட மட்­டத்தில் பெற்ற இடத்­தை­விட, 2019 ஆம் ஆண்டின் பின்னர் ஸைனபின் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தப்­பட்ட தடங்­கல்­களை, சவால்­களை தாண்டி அவர் பெற்ற வெற்­றியே அனை­வ­ரையும் பேச வைத்­துள்­ளது. பல இன­வாதிகளின் வாயை மூட­வைத்­துள்­ளது.

பாத்­திமா ஸைனப் 2022 ஆம் ஆண்டு பெற்ற 9 ஏ சித்­திகள், தற்­போது பெற்­றுள்ள 3 ஏ சித்­திகள் சாதா­ர­ண­மா­ன­தல்ல. இன­வாதம், மத­வாதம், அர­சியல் காழ்ப்­பு­ணர்ச்சி, வதந்­திகள், போலிகள், ஏமாற்­றங்கள், அதர்மம் என ஏரா­ள­மான சவால்­களை வெற்­றி­கொண்­டு பெறப்பட்ட பெறுபேறுகள் அவை. எனவே தான் ஸைனபின் பெறு­பேறு விஷே­ட­மா­னது.

பாத்­திமா ஸைனப் குரு­ணாகல் – திருக் குடும்ப கன்­னியர் மடம் பாட­சா­லையில் தனது கற்றல் நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­தவர். பின்னர் குரு­ணாகல் மாவட்­டத்­தி­லேயே மிகப் பிர­ப­ல­மான மலி­ய­தேவ மகளிர் கல்­லூ­ரியில் கல்­வியைத் தொடர்ந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகும் போதும் அவர் அப்­பா­ட­சா­லை­யி­லேயே தரம் 9 இல் கல்வி பயின்­று­கொண்­டி­ருந்தார். அப்­போ­துதான் அவ­ரது வாழ்வில் என்றும் கண்­டி­ராத பல சவால்­க­ளுக்கு அவர் முகம் கொடுக்க வேண்­டிய சூழ­லுக்கு தள்­ளப்­ப­டு­கின்றார்.

ஸைனபின் தந்தை வைத்­தியர் ஷாபி மீது இன­வாத சக்­திகள் முன்­வைத்த போலி­யான குற்­றச்­சாட்­டுக்கள், அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்­யப்­பட்­டமை பின்னர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டமை போன்ற விட­யங்கள் குறித்து நாம் அறிவோம். எனினும் டாக்டர் ஷாபியின் குடும்­பத்­தினர் குறிப்­பாக அவ­ரது பிள்­ளைகள் கூட இந்த இன­வா­தத்­தினால் குறி­வைக்­கப்­பட்­டார்கள்.

இந் நிலையில், தனது தந்­தையின் கைதின் பின்னர் கூட பாத்­திமா ஸைனப், குரு­ணாகல் மலி­ய­தேவ மகளிர் கல்­லூ­ரி­யி­லேயே கற்­றுக்­கொண்­டி­ருந்தார். இதன்­போது தந்தை ஷாபி சிஹாப்தீன் மீது முன் வைத்த அபாண்­டத்தை விஞ்­சிய குற்­றச்­சாட்டை, ஸைனப் மீது எந்த அடிப்­ப­டை­யு­மின்றி சிலர் பரப்­பினர்.

ஒரு சிறுமி (ஸைனப்) தனது சக தோழிக்கு உத­விக்­காக வழங்­கிய, செனி­டரி நப்கின் ஒன்­றினை மையப்­ப­டுத்தி மிக மோச­மாக, கீழ்த்­த­ர­மாக அடிப்­ப­டை­யின்றி சில ஊட­கங்கள் செய்­தி­களை வெளி­யிட்­டன. கருத்­த­டையை உண்­டாக்க வல்ல செனி­டரி நப்­கின்கள் பகி­ரப்­பட்­ட­தாக அச் செய்­திகள் ஊடாக கூறப்­பட்­டன. இது ஸைனபின் கற்றல் நட­வ­டிக்­கை­களை வெகு­வாக பாதித்­தது. அவ­ரது வாழ்வின் மிகப் பெரும் சவா­லாக அது மாறி­யது.

இது தொடர்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு பாத்­திமா ஸைனப் விடி­வெள்­ளிக்கு தெரிவித்த கருத்­துக்­களின் போது குறிப்­பிட்ட விட­யங்கள் இன்றும் ஞாப­கப்­ப­டுத்தவல்லது.
” ஆம்… நான் 9 ஆம் தரத்தில் கற்கும் போது, பாட­சாலை மாண­வி­க­ளி­டையே ‘ செனி­டரி நப்­கின்­களை ‘ பகிர்ந்­த­தாக கதை ஒன்று பரப்­பட்­டது. பத்­தி­ரி­கை­க­ளிலும் செய்­திகள் வெளி­யி­டப்­பட்­டன. அது தொடர்பில் நான் வெட்­க­ம­டை­கின்றேன். அதனை எழு­தி­ய­வர்கள் தொடர்பில் நான் பரி­தா­பப்­ப­டு­கின்றேன். அந்­த­ளவு தூரம் கீழ்த் தர­மாக ஒருவர் மீது குற்றம் சுமத்த முடி­யுமா?

எனக்கு எந்த கோபங்­களும் இல்லை. அந்த குற்­றச்­சாட்­டுக்­களால் நான் அன்று மிக வேதனை அடைந்தேன். இன்றும் அது தொடர்பில் ஏதோ ஒரு ஏமாற்­றத்தை உணர்­கின்றேன். இவ்­வ­ளவு கீழ்த்­த­ர­மாக குற்­றச்­சாட்டு முன் வைத்­தாலும் எனக்கு யாரு­டனும் கோபம் இல்லை. அன்று சமூக மயப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த விஷம் கார­ண­மா­கவே மக்­களின் மனங்கள் இவ்­வாறு கீழ்த்­த­ர­மான விட­யங்­களை உள்­வாங்­கின. அத­னா­லேயே இன­வாதம் எனும் ஆயுதம் கொண்டு, என்னை, எனது தந்­தையை, எனது குடும்­பத்­தி­னரை தாக்­கு­வ­தற்­கான தேவை ஏற்­பட்­டது.

இவ்­வா­றான குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்த முன்னர், அவ்­வா­றா­ன­தொரு நிலை­மைக்கு தான் ஆளாக்­கப்­பட்டால் எனது மன நிலை எப்­படி இருக்கும் என ஒவ்­வொ­ரு­வரும் சிந்­தித்தால் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெ­றாது.’ என அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.
இவ்­வா­றான பின்­ன­ணியில் சாதாரண தர பரீட்சை நெருங்கும் வேளையில், சிங்­கள மொழியில் கற்ற ஸைனப் கல்­மு­னைக்கு கட்­டாய இடம் பெயர்வை சந்­தித்து தமிழ் மொழி மூலம் கற்­க­லானார். பின்னர் மீண்டும் கண்­டிக்கு இடம்­பெ­யர்ந்து அங்கு சிங்­கள மொழியில் கற்று சாதா­ரண தர பரீட்­சையை வெற்­றி­கொண்டார். பின்னர் ஸைன­புக்கு உயர் தரத்தை ஆங்­கில மொழி மூலம் தொடர்­வ­தற்­கான தேவை இருந்த நிலையில், கடந்த கால அனு­ப­வங்கள், ஏனைய ஆலோ­ச­னை­க­ளுக்கு அமைய அவர் தனிப்­பட்ட ரீதி­யி­லேயே உயர் தர பரீட்­சைக்கு தோற்­றினார். வீட்டில் இருந்து இணையம் ஊடாக கற்றல் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்த பாத்­திமா ஸைனப், தனிப்­பட்ட பரீட்­சார்த்­தி­யாக தோற்றி மிகச் சிறந்த பதி­ல­டியை அவர் வழங்­கி­யுள்ளார்.

இவ்­வா­றான நேரத்தில், போலிக் குற்­றச்­சாட்­டுக்­களை உரு­வாக்­கிய, ஒரு குடும்­பத்தை சின்­னா­பின்­ன­மாக்­கிய, எதுவும் அறி­யாத பிள்­ளை­களைக் கூட விட்டு வைக்­காத இன­வா­தி­க­ளுக்கு எதி­ராக இது­வரை நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டாமை தொடர்ச்­சி­யாக கேள்­விக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யது.

வைத்­தியர் ஷாபி சிஹாப்­தீனின் மகள் ஸைனப் சாதா­ரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்­சையில் வெற்றி பெற்ற பின்னர் அதனை நாம் கொண்­டா­டு­கின்றோம். எனினும் அவ்­வெற்­றியின் பின்னால் உள்ள வலிகள், வடுக்கள் என்றும் ஆறா­தவை. வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன் குற்றச்­சாட்­டுக்­களில் இருந்து இன்று விடு­விக்­கப்பட்­டி­ருக்­கலாம். அவ­ரது மகள் ஸைனப் பரீட்­சையை வெற்­றி­கொண்டு சமூ­கத்தின் அடுத்த கட்­டத்தை நோக்கி நகர்ந்­தி­ருக்­கலாம்.

அதன் பின்னால் இருந்த சவால்கள், கஷ்­டங்கள் ஏராள­மாக இருந்­தாலும், இந்த போலி குற்­றச்­சாட்­டுக்­களை உரு­வாக்கி, இன­வா­தத்தை விதைத்­த­வர்கள் எந்த சிர­மமும் இன்றி தமது பதவி நிலை­க­ளிலும், ஏனைய சலு­கை­களைப் பெற்­றுக்­கொள்­வ­திலும் அடுத்த அடுத்த கட்­டங்­களை நோக்கி நகர்ந்­துள்­ளனர். இந்த போக்கு மிக ஆபத்­தா­னது.

வைத்­தியர் ஷாபி விடு­விக்­கப்­பட்ட பின்னர் அவர் பொது மக்கள் பாது­காப்பு அமைச்சின் செய­ல­ருக்கு ஒரு முறைப்­பாட்டை அளித்­தி­ருந்தார். தனக்கு எதி­ரான போலிக் குற்­றச்­சாட்டை முன் வைத்த அப்­போ­தைய குரு­ணாகல் பிரதிப் பொலிஸ் மா அதி­பரும் தற்­போ­தைய தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ரு­மான கித்­சிறி ஜயலத், அப்­போ­தைய குரு­ணாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சரும் தற்­போ­தைய பதில் பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ரு­மான மஹிந்த திஸா­நா­யக்க போன்றோ­ருக்கு எதி­ரான அந்த முறைப்­பாடு தொடர்பில் இதுவரை விசாரணை கூட ஆரம்பிக்கப்படவில்லை.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோர் இந்த முறைப்பாடு தொடர்பில் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

வைத்தியர் ஷாபி சிஹாப்தீனின் மகள் ஸைனபின் வெற்றியை கொண்டாடும் நாம், வைத்தியர் ஷாபிக்கும் அவரது குடும்பத்தாரினதும் நிம்மதியான வாழ்வை குட்டிச் சுவராக்கிய, ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் கேள்விக்கு உட்படுத்திய இனவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அவ்வாறு இனவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதன் ஊடாகவே, பல சவால்களை கடந்து தனது கல்வி நடவடிக்கையை ஆயுதமாக கொண்டு வெற்றியை நோக்கி நகர்ந்துள்ள வைத்தியர் ஷாபியின் மகள் பாத்திமா ஸைனபுக்கான ஒரு பரிசிலை வழங்க முடியும். இதுவே என்னைக் கேட்டால் நான் சொல்லும் பதில். அதற்காக இந்த சமூகமும், அரசாங்கமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.