நமது கவனத்தை ஈர்க்க திட்டமிட்டு இயங்கும் சமூக வலைத்தளங்கள்

0 55

கவன ஈர்ப்பு பொரு­ளா­தாரம்
(Attention Economy)
சகல இலத்­தி­ர­னியல் கரு­வி­களும் அவற்­றுக்குள் உள்­வாங்­கப்­பட்­டி­ருக்­கிற சமூக வலைப்­பின்னல் தளங்­களும் கவன ஈர்ப்புப் பொரு­ளா­தாரம் என்­கிற ஒரு விட­யத்தை பிர­தா­ன­மாக கொண்டு அமைக்­கப்­பட்­டுள்­ளன. இது நாம் தொழில்­நுட்­பத்தில் செல­வி­டு­கின்ற ஒவ்­வொரு நொடிப் பொழு­தையும் ஏதோ ஒரு சர்­வ­தேச நிறு­வனம் பணம் சம்­பா­திக்க பயன்­ப­டுத்­து­கி­றது என்­பதை குறிக்­கி­றது. முகப்­புத்­தகம், யூடியுப் (Youtube) அல்­லது வேறொரு சமுக ஊடகத் தளத்தில் தென்­ப­டு­கின்ற வீடியோ உள்­ள­டக்­கத்தை நாம் பார்­வை­யி­டு­கின்ற பொழுது அதற்­காக நாம் கட்­டணம் செலுத்­து­வ­தில்லை. சமூக ஊடகத் தளங்கள் இல­வ­ச­மா­கவும் இல­கு­வா­கவும் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய பல்­வேறு அம்­சங்­களைக் கொண்­டுள்­ளன. ஒரு­வ­ரது கருத்­துக்கு லைக் செய்­யலாம். பின்­னூட்டம் வழங்­கலாம். மற்­ற­வர்­க­ளுடன் பகிர்ந்து கொள்­ளலாம். புகைப்­ப­டங்­களை பதி­வேற்­றலாம். நமது உள்­ள­டக்­கங்கள் தொடர்­பான கருத்­துக்­களை சேக­ரிக்­கலாம். சக நண்­பர்கள் நமது உள்­ள­டக்­கங்­களை பார்­வை­யி­டும்­படி டேக் (Tag) செய்­யலாம். இவை யாவற்­றுக்கும் நாம் எந்­த­வி­த­மான கட்­ட­ணங்­க­ளையும் செலுத்­து­வ­தில்லை. இவை இல­வ­ச­மா­கவே கிடைக்­கின்­றன. ஏன் இவை இல­கு­வாக அல்­லது இல­வ­ச­மாக கிடைக்க வேண்டும்?

நம்மைக் கவ­ரக்­கூ­டிய எண்­ணி­ல­டங்­காத கவர்ச்சி அம்­சங்­களை சமூக ஊட­கங்கள் அள்ளி வழங்­கு­வது நமது கவ­னத்தை ஈர்த்துக் கொள்ள. நாம் செல­விடும் நேரத்­தையும் நமது அவ­தா­னத்­தையும் அவர்கள் மூல­த­ன­மாக பயன்­ப­டுத்­து­கின்­றனர். இல­வ­ச­மான கவர்ச்­சி­களை நமக்கு வழங்கி நமது நேரத்தை அதற்கு பதி­லாக பெற்றுக் கொள்­கி­றார்கள். சமூக வலைத்­த­ளங்­களில் நாம் செல­விடும் ஒவ்­வொரு நொடியும் சமூக வலைத்­த­ளங்­களை நடத்­து­கின்ற சர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளுக்கு வரு­மா­னத்தை ஈட்டிக் கொடுக்­கி­றது. நாம் அதிக நேரத்தை செல­வி­டு­வதன் மூலம் நாம் அறி­யா­ம­லேயே அவர்­க­ளது விளம்­ப­ரங்­களை உள்­வாங்கிக் கொள்­கின்றோம். அதி­க­மா­ன­வர்கள் பார்­வை­யி­டு­கின்ற ஒரு சமூக தளம் அதி­க­மான விளம்­ப­ரத்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்­பினை பெறு­கி­றது. விளம்­ப­ரத்தைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான ஒரே வழி­யாக அந் நிறு­வ­னங்கள் கையாள்­வது நமது நேரத்­தையும் அவ­தா­னத்­தையும் பறித்­தெ­டுப்­ப­தற்­கான கவனப் பறிப்­பான்­களை உரு­வாக்­கு­வ­தாகும்.

எனவே, இல­கு­வாக கிடைக்கும் சமூக ஊடகத் தளங்­களின் வரப்­பி­ர­சா­தங்கள் யாவும் வர்த்­தக உத்­தி­களே. நமது அவ­தா­னத்தை பறித்­தெ­டுப்­ப­தற்­காக சர்­வ­தேச தொழில்­நுட்ப நிறு­வ­னங்கள் தம்­மி­டையே போட்டி போட்டுக் கொள்­கின்­றன. இங்கு நேரம் பறி­போ­வதோ எமது அவ­தானம் கலைக்­கப்­ப­டு­வது பாதிப்பின் ஒரு சிறு பகு­தி­யாகும். அடுத்த பகுதி, நமது அவ­தா­னத்­துக்குள் மறைந்­தி­ருக்­கிற எமது தனிப்­பட்ட தக­வல்கள் சூறை­யா­டப்­ப­டு­வ­தாகும்.

அண்­மையில், University of Wollongong பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஆய்­வா­ள­ரான, இலங்­கையை பிறப்­பி­ட­மாகக் கொண்ட, கலா­நிதி சுமூது மல்­ல­வராச்சி என்­பவர் சமூக வலைத்­த­ளங்­களில் உள்ள சாதா­ரண லைக் பொத்­தனை நாம் அழுத்­து­கின்ற போது, குறைந்­தது 10 முதல் 15 வகை­யான எமது தனிப்­பட்ட தக­வல்­களை அது சேக­ரித்துக் கொள்­கி­றது எனக் குறிப்­பிட்டார்.

எனவே. சமூக ஊட­கங்­களில் நாம் செல­வ­ழிக்­கின்ற ஒவ்­வொரு நொடிப்­பொ­ழுதும் பண­மாக்­கப்­ப­டு­கின்­றது. அனைத்து சமூக வலைத்­த­ளங்­களும் எமது அவ­தா­னத்தை ஈர்த்தெடுக்க புதுப்­புது கரு­வி­களை இல­வ­ச­மாக வெளிப்­ப­டுத்­து­கின்­றன. Youtube நிறு­வனம் ஷார்ட்ஸ் என்­கின்ற குறு வீடி­யோவை அறி­மு­கப்­ப­டுத்­திய போது அதற்கு மாற்­றாக Facebook நிறு­வனம் ரீல்ஸ் என்ற ஒன்றை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

சமூக ஊட­கங்கள் இளம் தலை­மு­றையின் கருத்­துக்­க­ளுக்கு களம் அமைத்துக் கொடுப்­பது உண்­மைதான். ஆனால், இத்­த­கைய சமூக ஊட­கங்கள் எமது கவ­னத்தை கலைத்து, கருத்­தியல் ரீதி­யாக எம்மை பிள­வு­ப­டுத்தி, கூட்­டாக செயல்­ப­டு­வ­தற்கு எம்­மிடம் உள்ள சக்­தியை மலி­னப்­ப­டுத்தி, பி­ரச்­சி­னை­களை இல­குவில் தீர்த்துக் கொள்­வ­தற்­கான எமது ஆற்­றலை மழுங்­க­டிக்கச் செய்­கின்­றன .

சமூக ஊடகத் தளங்கள் எந்த வித­மான கட்­டுப்­பா­டு­களும் வரை­ய­றை­களும் இல்­லாமல் மனித உணர்­வு­களை தூண்­டி­விட்டு, அவ­னது சிந்­த­னையின் ஆழத்தை தோண்டி எடுத்து பல்­வேறு பராக்­கு­களில் எமது கவ­னத்தை செலுத்த முற்­ப­டு­கின்­றன. எமது கவனம் என்­பது வரை­ய­றுக்­கப்­பட்ட ஒரு வளம். ஒரு நாளில் அத்­தி­யா­வ­சிய தேவை­க­ளுக்­காக நாம் பயன்­ப­டுத்­து­கின்ற நேரங்கள் போக எஞ்சி இருப்­பது மிகக் குறைந்த கால அளவே. எனவே, இத்­த­கைய குறைந்த கால அளவில் மிக சில­வற்றின் மீது மாத்­தி­ரமே எம்மால் கவனம் செலுத்த முடியும். சமூக வலைத்­த­ளங்­களில் உள்ள கவன ஈர்ப்பு அம்­சங்­களின் மீது எமது ஒட்­டு­மொத்த அவ­தா­னத்­தையும் செலுத்தும் பேது, நாம் கண்­டிப்­பாக செய்ய வேண்­டிய சமூகக் கடப்­பா­டு­களின் மீதான அவ­தானம் குறைந்­து­வி­டு­கி­றது. தொழில்­நுட்­பத்தின் கார­ண­மாக எமது வாழ்வு அதிக சிக்கல் தன்­மையை நோக்கி நகர்ந்து கொண்­டி­ருக்­கி­றது.

முன்னர் ஒரு­போதும் இல்­லா­த­வாறு ஆயி­ரக்­க­ணக்­கான செய்­தி­களும் தக­வல்­களும் எமது விரல் நுனியில் உள்­ளன. செய்­தி­களில் இருந்து நாம் விடு­பட்டு வாழ்­வ­தற்­கான சந்­தர்ப்­பமே இல்­லாமல் போயுள்­ளது. அந்த அள­வுக்கு தொழில்­நுட்பம் எமது அவ­தா­னத்தை இலக்கு வைத்து செயல்­ப­டு­கி­றது. இவ்­வாறு, இதனால், விளம்­ப­ர­தா­ரர்­களின் இலக்­கு­களை அடை­வ­தற்­கா­கவே சமூக ஊட­கங்­களின் உரு­வாக்கம் அமை­கின்­றது. பாரம்­ப­ரிய ஊட­கங்­களில் – குறிப்­பாக, தொலைக்­காட்சி, பத்­தி­ரிகை, வானொலி, சஞ்­சி­கைகள் என்­ப­ன­வற்றில் விளம்­ப­ரங்கள் நேர­டி­யா­கவே எம்மை வந்து சேர்­கின்­றன. இத்­த­கைய ஊட­கங்கள் தமது கருத்­துக்­களை நேர­டி­யாக வெளிப்­ப­டுத்­து­கின்­றன. இதற்­காக, நாம் எமது தனிப்­பட்ட எந்த ஒரு தக­வல்­க­ளையும் பாரம்­ப­ரிய ஊட­கங்­க­ளுக்கு வழங்க வேண்­டிய தேவை இல்லை. ஆனால், சமூக ஊட­கங்கள் தம் பணம் சம்­பா­திக்­கின்ற விளம்­பர உத்­தி­களை நேர­டி­யாக மாத்­தி­ர­மன்றி மறை­மு­க­மா­கவும் செய்­கின்­றன. விளம்­ப­ரங்­களை சமூக ஊடக தளங்­களில் பார்­வை­யி­டு­கின்ற பொழுது என்­னி­ட­மி­ருந்து அத்­த­லங்கள் எத்­த­கைய தனிப்­பட்ட தக­வல்­களை சேக­ரிக்­கின்­றன என்­பது தொடர்பில் எதுவும் வெளிப்­ப­டை­யாக தெரி­வ­தில்லை. இத்­த­கைய ஊட­கங்கள், நமது அவ­தா­னத்தை ஈர்ப்­ப­தற்­காக பல்­வேறு உத்­தி­களை கையா­ளு­கின்­றன. இனி அவற்றை சுருக்­க­மாக பார்க்­கலாம்.

செயற்கை நுண்­ண­றிவின் பயன்­பாடு: பெரும்­பா­லான சமூக ஊடகத் தளங்கள் நாம் இடு­கின்ற லைக், கமெண்ட், ஷேரிங் என்­ப­ன­வற்றின் மூலம் எம்மை கவர்ந்­தி­ழுக்­கின்­றன. நாம் அதிகம் தேட விரும்­பு­கின்­றவை, கொள்­வ­னவு செய்ய விரும்­பு­கின்­றவை, தொடர்­பாடல் மேற்­கொள்ள விரும்­பு­கின்­ற­வர்கள், எமது நண்பர் வட்­டாரம், பிடித்­தவை பிடிக்­கா­தவை என்­பன பற்­றிய தர­வு­களை மிக லாவக­மாக தொகுத்துக் கொள்­கின்­றன.
சமூக ஊடக நிறு­வ­னங்கள், ஆக்­க­முறை செயற்கை நுண்­ண­றி­வினை (Generative Artificial Intelligence) பயன்­ப­டுத்தி, இணை­ய­த்த­ளங்­க­ளுக்கு வந்து சேரும் தக­வல்­களை தொகுக்­கின்ற பணியை செய்­கின்­றன. இத்­த­கைய தக­வல்கள் குறித்த சமூக ஊட­கங்­களை பயன்­ப­டுத்தும் ஒவ்­வொ­ரு­வ­ரது பெய­ரிலும் சேக­ரிக்­கப்­படும். இதனால், தனிப்­பட்­ட­வர்­களை எந்த நேரத்தில் சென்­ற­டைய வேண்டும் என்ற கணிப்பு தொழில்­நுட்ப நிறு­வ­னங்­க­ளிடம் காணப்­ப­டு­கின்­றன.

ஹரிஸ்பர்க் பல்­க­லைக்­க­ழ­கத்தின் (Harrisburg University) இணைய பாது­காப்பு தொடர்­பான பேரா­சி­ரியர் புரூஸ் யங் (Bruce Young, 2021) என்­பவர் இணை­யத்­தளத் திருட்டில் ஈடு­ப­டு­கின்­ற­வர்கள் செயற்கை நுண்­ண­றிவை பயன்­ப­டுத்தி மிக சாது­ரி­ய­மாக தனிப்­பட்­ட­வர்­களின் தக­வல்­களை திரட்­டி­ அ­வற்றை பல்­வேறு தேவை­க­ளுக்­காக பயன்­ப­டுத்­து­வ­தாக குறிப்­பிட்­டுள்ளார்.

அவர், இணை­ய­தள திரு­டர்கள் எவ்­வாறு வெகு விரைவில் நமது தனிப்­பட்ட தக­வல்­களை திருட முடியும் (How AI May Soon Help Hackers Steal Your Information) எனும் தலைப்பில் எழு­திய கட்­டுரை இது பற்றி ஆழ­மாக விவ­ரிக்­கின்­றது. அவ­ரது ஆய்வில் இருந்து, ஒரு சிறு பகுதி முக்­கி­யத்­துவம் கருதி இங்கு வழங்­கப்­ப­டு­கி­றது.

செயற்கை நுண்­ண­றிவின் துணை­யோடு இடம்­பெ­று­கின்ற இணையத் தாக்­கு­தல்கள் அதிக எண்­ணிக்­கை­யி­லான தனிப்­பட்ட தக­வல்­களை திருடும் வல்­லமை உள்­ளது. இணைய பாது­காப்பு குறை­வாக உள்ள, நலி­வுற்ற கணி­னி­களை திரு­டர்கள் இலக்கு வைக்­கின்­றனர். சர்­வ­தேச ரீதி­யாக புகழ்­பெற்ற, டாஸ்க்­ரெப்பீட் (TaskRabbit) எனப்­ப­டு­கின்ற, பகுதி நேர தொழில்வாண்­மை­யா­ளர்­க­ளையும் சேவை தேவைப்­ப­டு­கின்ற மக்­க­ளையும் இணைக்­கின்ற நிகழ்­நிலை சந்தைத் தளத்­தி­லி­ருந்து, 2018 ஆம் ஆண்டு, சுமார் 3.75 மில்­லியன் பாவ­னை­யா­ளர்­க­ளது தனிப்­பட்ட தக­வல்கள் திரு­டப்­பட்­டுள்­ளன.

24/7 தாக்கம்: 24 மணித்­தி­யா­லங்கள் பூரா­வும் நாம் இணை­யத்தின் தாக்­கத்­திற்கு உட்­ப­டு­வதை இது குறிக்­கின்­றது. நாம் இணை­ய­த­ளத்தை பயன்­ப­டுத்­தி­னாலும் பயன்­ப­டுத்தாவிட்­டாலும் அதன் தாக்கம் 24 மணி நேரமும் உள்­ளது. குறுஞ்­செய்­திகள், அர­சியல் தக­வல்கள், வீட்டில் உள்­ள­வர்­களின் வட்ஸ்­அப்­புக்கு வந்த ஆச்­ச­ரி­ய­மூட்டும் தக­வல்கள் என ஏதோ ஒன்று என்னை நோக்கி வந்து கொண்டே இருக்கும். அத்­த­கைய தக­வல்­களை நாம் தேடா­விட்­டாலும் யாரோ ஒருவர் என்­னிடம் கொண்டு வந்து சேர்ப்பார். ஆய்­வு­களின் படி பில்­லியன் கணக்­கான மக்கள் தினம்­தோறும் சமூக வலைத்­த­ளங்­களில் சுமார் 150 நிமி­டங்­களை செல­வ­ழிக்­கின்­றனர். Explodingtopics எனும் ஆய்வு தளம், இவ்­வாண்டு மாத்­திரம், சமூக வலைத்­த­ளங்­களை பயன்­ப­டுத்­து­கின்­ற­வர்கள் சுமார் 4 ட்ரில்லியன் மணித்­தி­யா­லங்­களை அத்­த­ளங்­களில் செல­வி­டலா­மென கணித்­துள்­ளது. அதே­போன்று, ஒரு சாதா­ரண அமெ­ரிக்க பிரஜை நாளொன்­றுக்கு 159 தட­வைகள் தனது கைய­டக்க தொலை­பே­சியை பார்­வை­யி­டு­வ­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளது.

பேவ் ஆய்­வு­க­ளுக்­கான நிறு­வனம் (Pew Research Centre) இத்­த­கைய 24 மணி நேர ஆதிக்கம் நன்மை பயப்­ப­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளது. அமெ­ரிக்­காவைத் தள­மாகக் கொண்டு இயங்கும் சிந்­தனை மற்றும் ஆய்­வு­க­ளுக்­கான இந்­நி­று­வனம் துரி­த­மாக வளர்ந்து வரும் இணை­ய­தள சேவை­களின் வளர்ச்சி காத்­தி­ர­மான தாக்­கங்­களை வாழ்க்­கையில் ஏற்­ப­டுத்த முடியும் என்­ப­தையும் வெளி­காட்­டி­யுள்­ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.