கல்வி எனும் பெயரில் அரங்கேறும் அநாச்சாரங்கள்

0 98

உஸாஹிட் முஹாஸ், காலி

தலைப்­பிற்கு செல்ல முன்னால், நான் தற்காலத்தில் கல்விச் சூழலில் கண்ட மற்றும் ஊட­கங்­களின் ஊடாக அறிந்த சில தவ­று­களை வைத்து இதை எழு­து­கிறேன். எனக்கு கற்­பித்த ஆசி­ரி­யர்கள் உண்­மை­யிலே சிறந்­த­வர்கள். தப்பைக் கண்ட இடத்தில் தட்டிக் கேட்­ப­வர்கள். நான் இதை எழு­து­வ­தற்கு எழுத்துச் சொல்லித் தந்­த­வர்­களும் அவர்­களே. அவர்­களை அவ­ம­தித்து எழு­த­வில்லை. உல­கிற்கே நீதி­யான ஆட்சி நடாத்­திய கலீபா உமரின் தவ­றையே ஸஹாபாச் சமூகம் சுட்டிக் காட்ட பின்­வாங்­க­வில்லை என்றபோது இதெல்லாம் எம்­மாத்­திரம் என்ற தைரி­யத்தை முன் வைத்து எழு­து­கிறேன்.
ஒழுக்கம் இல்­லாத கல்வி எந்த சந்­தர்ப்­பத்­திலும் பய­ன­ளிக்­காது.

அண்மையில் இலங்­கையில் 16 வயது மாண­வர்கள் 6 பேர் சேர்ந்து 15 வயது மாண­வியை கூட்டுப் பாலியல் வன்­கொ­டுமை செய்­தது கல்விச் சமூ­கத்தை பெரும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யது என்­பதில் ஐய­மில்லை.

இது சில­ருக்கு புதிய விட­ய­மாக தெரிந்­தாலும் இலங்­கையில் வருடா வருடம் பாட­சாலை மாண­வர்­க­ளி­டையே இன மத வேறு­பா­டின்றி பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்­களும் மற்றும் பல கருத்­த­ரிப்பு சம்­ப­வங்களும் அதி­க­ரித்த வண்­ணமே உள்­ளது.

உலகில் எந்த ஒரு மதமும் கூறாத அளவு ஒழுக்க நெறி­மு­றை­க­ளையும் மற்றும் கடு­மை­யான தண்­ட­னை­களை வழங்கி எச்­ச­ரித்­துள்ள இஸ்­லா­மிய மார்க்­கத்தில் பிறந்த பல இளைஞர் யுவ­திகள் இந்த விப­சாரம் என்ற பெரும் பாவத்தில் ஈடு­பட பல சமூ­க­வியல், குடும்­ப­வியல் கார­ணங்கள் இருந்­தாலும் இந்த கல்விச் சூழலில் காணப்­படும் கார­ணங்­களும் அதை தீர்க்க நமது மார்க்கம் சொன்ன சில ஒழுக்க நெறி­மு­றை­க­ளையும் இந்த கட்­டுரை சற்று அல­சு­கி­றது.

பாட­சாலை மட்­டத்தில் அதி­க­ரித்து வரும் காதல் தொடர்­புகள் இந்த சீர்­கேட்­டிற்கு பெரிதும் பங்­க­ளிக்­கி­றது. இஸ்லாம் ஒரு போதும் இந்த காதல் தொடர்­பு­களை சரி­கா­ண­வில்லை மட்­டு­மல்­லாமல் இது மார்க்­கத்தின் பார்­வையில் பாவ­மாகும். ஒரு ஆண் ஒரு அஜ்­ன­பி­யான பெண்­ணுடன் தொடர்பில் இருப்­பதை எவ­ராலும் சரி காண முடி­யாது. ஆனால் இன்று அது ஒரு சாதா­ரண விட­ய­மாக மாறி­விட்­டது. பாட­சாலைக் காலத்தில் காதல் தொடர்­பு­களில் இருப்­ப­வர்­களை ஹீரோக்­க­ளாக பார்க்கும் இளைஞர் சமூகம் பாட­சாலைக் காலத்தில் காதல் தொடர்­பு­களை புறந்­தள்ளி இருப்­ப­வர்­களை சமூகம் தெரி­யாத மற்றும் நவீனம் தெரி­யாத ஒரு குழு­வாக ஒரு வகை வேறு­பாட்­டுடன் பார்க்­கி­றது. இந்த காதல் தொடர்­பு­களில் தோல்வி கண்டு தற்­கொலை செய்து தமது வாழ்க்­கைக்கு பள்­ளிப்­ப­ரு­வத்­தி­லேயே முற்­றுப்­புள்ளி வைத்­த­வர்கள் கூட பலர் இருக்­கி­றார்கள். இந்த தவறை பாட­சாலை ஆசி­ரி­யர்­களில் பெரும்­பா­லானோர் தவ­றாக காண்­ப­தில்லை என்­பதே உண்மை.

அதே­போன்று ஒரு ஆண் இன்­னொரு ஆண் உட­னான நட்பு தான் முற்­கா­லத்தில் உயிர் நண்பன் அல்­லது தோழன் என்று காணப்­பட்­டது. ஆனால் இன்­றைய நாக­ரீகம் வளர்ந்த காலத்தில் மேற்­கத்­திய மற்றும் சினிமா உலகின் தாக்­கத்­தினால் பாட­சாலை மாண­வர்­க­ளி­டையே அதிகம் பரவி வரும் ஒரு உறவு முறை தான் இந்த Bestie என்ற உற­வு­முறை. ஒரு மாண­வனும் ஒரு மாண­வியும் நண்­பர்­க­ளாக பழ­கு­வதை இந்த வார்த்தை மேலோட்­ட­மாக குறித்து நின்­றாலும் இதற்குப் பின்னால் பாரிய கலா­சார சீர்­கே­டுகள் காணப்­ப­டு­கின்­றன. இதற்­கான வரை­வி­லக்­க­ணத்தை தேடிய போது பாலியல் ரீதி­யான உற­வு­முறை தவிர்ந்த மற்­றைய அனைத்­தையும் ஒரு ஆண் மற்றோர் பெண்­ணிற்­கி­டையே பகிர்ந்து கொண்டு வாழும் உற­வு­முறை என இது குறிப்­பி­டு­கி­றது. இந்த கலா­சாரம் கூட ஒரு நவீன ட்ரென்ட் ஆக உலகம் பார்­கி­றதே ஒழிய இவற்றை இஸ்லாம் அனு­ம­திக்­க­வில்லை என்­பதை மறந்து தான் வாழ்­கி­றது.

இவ்­வா­றான கலா­சார சீர்­கே­டு­களிற்கு பாட­சா­லையின் நிகழ்­வு­களும் செயற்­றிட்­டங்­களும் உந்து சக்­தி­யாக இருக்­கி­றது. பாட­சா­லையில் நடை­பெறும் குழு நிகழ்ச்­சி­க­ளுக்கும் மற்றும் குழு செயற்­பா­டு­க­ளுக்கும் மாணவ மாண­வி­களை கலந்து குழுக்­க­ளாக பிரிப்­பது, இல்ல விளை­யாட்டு போட்­டிகள் மற்றும் பாட­சாலை ஒன்­று­கூடல் நிகழ்­வு­களில் ஆண் பெண் கலப்­புடன் நடை­பெ­று­வது, அரை­குறை ஆடை­க­ளுடன் சினிமாப் பாடல்­களை மேடை­களில் ஏறிப் பாடு­வதும் ஆடு­வதும் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஒழுக்கம் விழுப்­பத்­துக்கே அடி , கல்­வி­யிலே ஒழுக்கம் முத­ன்மையாம் போன்ற பல வாச­கங்கள் பாட­சாலை சூழலில் அழ­காகக் தொங்­க­வி­டப்­பட்டும், பாட­சாலைப் புத்­த­கங்­களில் ஒழுக்கம் உயி­ரிலும் ஓம்­பப்­படும் என தலைப்­பிட்டும் போதாது. ஆசி­ரி­யர்­களும் பாட­சாலை நிர்­வா­கங்­களும் சரி­யான ஒழுக்க நெறி­மு­றை­களை சட்­ட­மாக்­காத வரை.
அடுத்து ஆசி­ரி­யர்கள் இந்த மாண­வர்கள் ஒழுக்கம் தவறி இவ்­வா­றான காதல் தொடர்­புகள், Bestie உற­வு­மு­றைகள் மற்றும் தேவை­யற்­ற முறையில் ஆண் பெண் மாண­வர்கள் கலந்து கதைத்து கூத்­த­டிப்­பது போன்­ற­வற்றை கண்டால் கட்­டாயம் தட்டிக் கேட்க வேண்டும். மற்றும் இவற்றின் பார­தூ­ரங்­களை மாண­வர்­களின் பெற்­றோ­ருக்கு தெரி­யப்­ப­டுத்­து­வது ஒவ்­வொரு ஆசி­ரி­ய­ரி­னதும் பொறுப்­பாகும்.

அதே­போன்று பாட­சா­லையில் நடை­பெறும் குழு நிகழ்ச்­சிகள், போட்­டிகள் மற்றும் இல்ல விளை­யாட்டு நிகழ்­வு­களில் ஆண் பெண் கலப்பை முடி­யு­மான அளவு தவிர்த்து நடை­மு­றைப்­ப­டுத்­துங்கள். அந்­நிய சமூக ஆசி­ரி­யர்­களை திருப்­திப்­ப­டுத்த மற்றும் நவீன உலகின் சமூ­க­ம­ய­மாதல் என்ற பெயருக்­காக அநாச்­சா­ரங்கள் நடை­பெற வித்­தி­டா­தீர்கள்.

கவ­லை­யான விடயம் என்­ன­வென்றால் நல்­லதை ஏவி தீமையை தடு என்று கூறும் மார்க்­கத்தில் பிறந்து சமூ­கத்­திற்கு ஒழுக்­க­மிகு ஒரு எதிர்­கால சந்­த­தியை உரு­வாக்க திட­சங்­கற்பம் பூண்டு வரும் முஸ்லிம் ஆசி­ரி­யர்­களில் சில ஆளு­மை­யற்ற ஆசி­ரி­யர்கள் மாண­வர்­களின் மனதில் இடம்­பி­டிக்க வேண்டும் என்ற நோக்­கத்தில் இவ்­வா­றான அநாச்­சா­ரங்­க­ளுக்கு முன்­நின்று செயற்­ப­டுத்­து­கி­றார்கள் என்­பது தான்.

ஆசி­ரியர் தினத்தில் சக ஆசி­ரி­யை­யோடு சினிமாப் பாட­லிற்கு மேடையில் நட­ன­மா­டி­விட்டு எந்த முகத்­தோடு போய் மாண­வர்­க­ளிடம் ஒழுக்கம் கற்­பிக்க போகி­றீர்கள்? சிறுவர் தினத்தில் பாட­சாலை அரங்கை தியேட்­ட­ராக மாற்­றி­விட்டு எந்த முகத்­தோடு போய் மாண­வர்­க­ளிடம் சினி­மாக்கள் பார்ப்­பது தவறு என சொல்லப் போகி­றீர்கள்? தனக்கு நேர­மில்லை என்­பதால் மாண­வனின் விளங்­காத பாடத்தை சக மாண­வி­யிடம் போய் கேட்­கு­மாறு நீங்­களே பணித்­து­விட்டு அஜ்­னமி மஹ்­ரமி என்ற பாடத்தை எவ்­வாறு கற்­பிக்க போகி­றீர்கள்? ஆசி­ரி­யர்­க­ளா­கிய நீங்­களே முறை­த­வ­றிய அரை­குறை ஆடை­க­ளையும் மற்றும் இறுக்­க­மான ஆடை­களை ஆண் மாண­வர்­க­ளிற்கு முன்னால் அணிந்து வந்­து­விட்டு பார்­வையை தாழ்த்­து­மாறு இஸ்லாம் கூறு­கி­றது என்று எவ்­வாறு பாட­மெ­டுக்க போகி­றீர்கள்? ஆசி­ரி­யர்­க­ளா­கிய உங்­களில் சிலரே சக ஆசி­ரி­யை­க­ளோடு பாட­சாலை சிற்­றுண்டிச் சாலை­களில் கொஞ்சிக் குலாவி அரட்டை அடித்­து­விட்டு எந்த முகத்­தோடு போய் மாண­வர்­களின் காதல் தொடர்­பு­க­ளையும் Bestie உற­வு­முறைகளையும் தவறு என்று சொல்லப் போகி­றீர்கள்?

இவர் என்­னடா ஆசி­ரி­யர்­களின் தவறை மாத்­திரம் சீண்­டு­கிறார் என சில ஆசி­ரி­யர்கள் நினைக்­கலாம். ஒழுக்­கத்தை கற்­பிக்க வேண்­டிய இடத்தில் நிற்கும் நீங்­களே ஒழுக்கம் தவறி நின்றால் எப்­படி மாணவச் சமூ­கத்தை திருத்­து­வது. ஆசி­ரி­யர்­களே உங்கள் கைகளில் வழங்­கப்­படும் ஒவ்­வொரு மாண­வர்­களும் அமா­னி­தங்­க­ளாகும். அவர்­கள் வழி­த­வ­றினால் அதற்கு கட்­டாயம் நீங்­களும் பொறுப்புச் சொல்ல வேண்டும்.
இந்த மாண­வர்­களின் சீர்­கேட்­டிற்கு ஆசி­ரி­யர்கள் மற்றும் கல்விச் சூழல் தான் முழு­மை­யாக பொறுப்பு சொல்ல வேண்டும் என்ற இடத்தில் இருந்து எழு­த­வில்லை. கண்டிப்பாக அவர்களின் பெற்றோர், சமூகம் மற்றும் உடன்பிறப்புகள் அனைவருக்கும் பொறுப்புள்ளது என்பதை யும் நினைவூட்டுகிறேன். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.