புத்தரின் புனித தந்தத்தை காண கண்டிக்கு வரும் பௌத்தர்களை அரவணைக்கும் முஸ்லிம்கள்!

பல தரப்பினரின் பாராட்டைப்பெற்றுள்ள கண்டி முஸ்லிம் மக்களின் கூட்டிணைந்த முன்மாதிரி செயற்பாடுகள்!

0 102

எஸ்.என்.எம்.சுஹைல்

புத்­தரின் புனித தந்த தாது, இலங்­கையின் பௌத்­தர்­களால் மிகுந்த பக்­தி­யுடன் வழி­ப­டப்­படும் ஒரு புனிதப் பொரு­ளாகும். 16 ஆண்­டு­க­ளுக்குப் பிறகு, இவ்­வ­ருடம் இந்த புனித தாது பொது­மக்­க­ளுக்கு காட்­சிப்­ப­டுத்­தப்­ப­டு­வதால், பக்­தர்­க­ளி­டையே மிகுந்த உற்­சாகம் காணப்­ப­டு­கி­றது. இந்த தரு­ணத்தில் கண்­டிக்கு அதிக எண்­ணிக்­கை­யி­லான மக்கள் வருகை தந்­தி­ருக்­கும்­போது, அதற்­கான ஏற்­பா­டு­களை அரச அதி­கா­ரிகள், இரா­ணுவம் மற்றும் சிவில் சமூ­கமும் முன்­னெ­டுக்­கின்­றன. குறிப்­பாக, முஸ்லிம் சமூ­கத்­தி­ட­மி­ருந்து வழங்­கப்­படும் ஒத்­து­ழைப்பு பல­ராலும் சிலா­கித்துப் பேசப்­ப­டு­வதை காண்­கிறோம்.

முக்­கி­யத்­துவம்
பிரித்­தா­னி­யர்கள் இலங்­கையைக் கைப்­பற்­று­வ­தற்கு முன்னர் கண்டி நாட்டின் கடைசி தலை­ந­க­ர­மாக இருந்­தது. இந்த நகரம் பல­வ­கை­க­ளிலும் இலங்கை கலா­சா­ரத்தைக் கொண்­டி­ருந்­தது. இங்­குள்ள தலதா மாளிகை பௌத்­தர்­களின் மிகவும் புனி­த­மான இட­மாக திகழ்­கின்­றது. இது புனித தந்தம் வைக்­கப்­பட்­டுள்ள ஆல­ய­மாகும். இதைச்­சுற்றி தொல்­பொ­ரு­ளியல் தொகு­தி­க­ளான மன்­னனின் மாளிகை, பழைய நகரம் மற்றும் ஏனைய பல மாளி­கை­களும் இணைந்து விரி­வ­டைந்­துள்­ள­தையும் சுட்­டிக்­காட்­டி­யுள்ள ஐக்­கிய நாடுகள் ஸ்தாப­னத்தின் யுனெஸ்கோ நிறு­வனம் கண்டி நக­ரத்தை 1988ஆம் ஆண்டு உலக மர­பு­ரி­மை­யாகப் பெயர் குறிப்­பிட்­டுள்­ளது.

வர­லாற்றுப் பதி­வுகள்
கண்டி தலதா மாளிகை மற்றும் அதன் புனித தந்த தாது தொடர்­பான வர­லாற்றுப் பதி­வுகள் சில முக்­கி­ய­மான பகு­தி­களை உள்­ள­டக்­கி­யவை. இவை இலங்­கையின் பௌத்த மர­புக்கு மிகவும் முக்­கி­ய­மா­னவை. இதன் வர­லாறு முதன்­மு­தலில் கிமு 4 ஆம் நூற்­றாண்­டிற்கு உட்­பட்­டது.

இத­னி­டையே, புத்­தரின் புனித தந்த தாது பொது­மக்­க­ளுக்கு காட்­சிப்­ப­டுத்­தப்­படும் போது மழை பெய்யும் என்­பது ஒரு பழ­மை­யான நம்­பிக்­கை­யாகும். இந்த நம்­பிக்­கையை 1815 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் நிர்­வாகி ஜான் டி’ஓய்லி தனது புத்­த­கத்தில் பதிவு செய்­துள்ளார்.

இறு­தி­யாக கண்டி தலதா மாளி­கையில் 2009 ஆம் ஆண்டு மார்ச் 6 முதல் மார்ச் 17 வரை நடை­பெற்ற புனித தந்த தாது (Sacred Tooth Relic) கண்­காட்சி இடம்­பெற்­றது. இந்த 12 நாள் நிகழ்வில், 1.2 மில்­லி­ய­னுக்கும் மேற்­பட்ட பக்­தர்கள் பங்­கேற்­றனர் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

2025 யாத்­திரை
ஸ்ரீ தலதா மாளி­கை­யி­லுள்ள புத்­தரின் புனித தந்­தத்தை காட்­சிப்­ப­டுத்தும் நிகழ்வு, கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளா­கத்தில் கடந்த 18 ஆம் திகதி ஆரம்­ப­மா­னது. இந்­நி­கழ்வு இம்­மாதம் 27ஆம் திகதி வரை எதிர்­வரும் 10 நாட்­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.
16 ஆண்­டு­க­ளுக்குப் பிறகு கண்டி ஸ்ரீ தலதா மாளி­கையில் நடை­பெறும் புனித தந்­தத்தின் சிறப்பு கண்­காட்சி ‘2025 ஸ்ரீ தலதா மாலி­காவ யாத்­தி­ரை’க்­கான ஏற்­பா­டு­களை புத்­த­சா­சன, மத மற்றும் கலாச்­சார விவ­கார அமைச்சு மேற்­கொண்­ட­தாக அமைச்சர் ஹினி­தும சுனில் செனவி தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­கவின் வழி­காட்­டு­தலின் கீழ், மகா­நா­யக்க தேரர்­களின் ஆலோ­சனை மற்றும் திய­வ­தன நில­மேவின் ஒப்­பு­த­லுடன் இந்­நி­கழ்­வுகள் இடம்­பெ­று­கின்­றன.

மத்­திய மாகாண ஆளுநர், கண்டி மாவட்ட செய­லாளர், கண்டி மாந­கர ஆணை­யாளர், மத்­திய மாகாண பொலிஸ் பிரிவு, பிற அரச அதி­கா­ரிகள் மற்றும் வர­லாற்று சிறப்­பு­மிக்க புனித தந்த ஆல­யத்தின் நிலமே ஆகியோர் கண்­காட்­சிக்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றனர்.

இரா­ணுவத் தள­பதி லெப்­டினன் ஜெனரல் லசந்த ரொட்­ரி­கோவின் மேற்­பார்வை மற்றும் வழி­காட்­டலின் கீழ் குறித்த நிகழ்­விற்­காக இரா­ணு­வத்­தினர் தொழில்­நுட்ப உத­வி­களை வழங்கி வரு­கின்­றனர். ஸ்ரீ தலதா மாளிகை வளா­கத்தை சுத்தம் செய்தல், பக்­தர்­க­ளுக்குத் தேவை­யான சுகா­தார வச­தி­களை வழங்­குதல், பக்­தர்­களை விகாரை வளா­கத்­திற்கு முறை­யாக வழி­ந­டத்த தேவை­யான அணுகும் வீதி­களை அமைத்தல் போன்ற நட­வ­டிக்­கை­களில் இரா­ணுவம் ஈடு­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் புனித தந்­தத்தின் சிறப்பு கண்­காட்சி ‘2025 ஸ்ரீ தலதா மாலி­காவ யாத்­தி­ரை’க்­கான ஏற்­பாட்­டு­களில் முஸ்லிம் தரப்பு வழங்கும் ஒத்­து­ழைப்பு தற்­போது பல தரப்­பி­ன­ராலும் சிலா­கித்துப் பேசப்­ப­டு­கின்­றது.

முஸ்லிம் தரப்பு என்ன செய்­கி­றது?
கண்டி தலதா புனித தந்த சிறப்பு கண்­காட்சி நிகழ்­வுக்­காக கண்டி நக­ருக்கு அதி­கப்­ப­டி­யான பௌத்த பக்­தர்கள் வருகை தரு­கின்ற இச்­சந்­தர்ப்­பத்தில் கண்டி நகர முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள் முழு­மை­யாக திறந்து வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அத்­தோடு, கண்டி நக­ருக்கு வரு­கை­தரும் பௌத்த பக்­தர்­க­ளுக்கு உணவுப் பொதி விநி­யோகம், குடிநீர் வழங்­குதல், மாத்­தி­ரைகள், தேநீர் வழங்­குதல் மற்றும் மல­ச­ல­கூட ஏற்­பா­டு­களை மேற்­கொள்ளும் நட­வ­டிக்­கை­களில் முஸ்லிம் சமூகம் முன்­னின்று செயற்­பட்டு வரு­கின்­றது. குழு­வா­கவும் தனித்தும் முஸ்லிம் சமூ­கத்­தி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் இச்­செ­யற்­பா­டா­னது சக­வாழ்­வுக்கு நல்ல எடுத்­துக்­காட்டு என பலரும் பாராட்டி வரு­கின்­றனர்.

 

முஸ்லிம் சமூகத்திடம்
விடுக்கப்பட்ட கோரிக்கை
கடந்த மார்ச் மாதத்தின் இறு­தியில் முன்­வைக்­கப்­பட்ட கோரிக்­கைக்கு அமை­வா­கவே இந்த வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. கண்டி மாந­கர ஆணை­யாளர் இந்­திகா குமாரி அபே­சிங்க, திய­வ­டன நிலமே பிரதீப் நிலங்க தேல பண்­டார, மத்­திய மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் உள்­ளிட்ட குழு­வினர் முஸ்லிம் தரப்பை சந்­தித்து கலந்­து­ரை­யா­டினர். இந்த சந்­திப்பில், கண்டி நகர முஸ்லிம் வர்த்­தக சங்கம், கண்டி மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனம், கண்டி நகர ஜம்­இய்­யதுல் உலமா தரப்­பி­னரும் கலந்­து­கொண்டர்.

இதன்­போது, புனித தந்த கண்­காட்சி நிகழ்­வுக்­காக கண்டி நக­ருக்கு வருகை தரும் பக்­தர்­க­ளுக்­கான உணவுப் பொதி வழங்­குதல், குடிநீர் ஏற்­பா­டு­களை செய்தல் மற்றும் கழி­வறை வச­தி­களை ஏற்­ப­டுத்திக் கொடுத்தல் என்­ப­வற்­றிற்­கான ஒத்­து­ழைப்பை முஸ்லிம் சமூகம் வழங்க வேண்டும் என அரச தரப்பு கோரிக்கை விடுத்­த­தாக கண்டி மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனத் தலைவர் கே.ஆர்.ஏ.சித்தீக் தெரி­வித்தார்.

கூட்­டாக செயற்­படும்
கண்டி முஸ்­லிம்கள்
இந்த கோரிக்­கைக்கு அமை­வாக கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி கண்டி பெரிய பள்­ளி­வா­சலில் முஸ்லிம் தரப்­பினர் கூடி கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடு­பட்­டனர். இலங்­கைக்­கான பாகிஸ்தான் குடி­ய­ரசின் கண்டி நகர அலு­வ­லக பிர­தி­நிதி அப்சால் மரிக்கார் தலை­மையில் இடம்­பெற்ற இக்­கூட்­டத்­தின்­போது, முஸ்லிம் தரப்பு கூட்­டாக இணைந்து இவ்­வே­லைத்­திட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தாக தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இதற்­க­மை­வாக, கண்­டிக்கு வரும் பௌத்த பக்­தர்­க­ளுடன் முஸ்லிம் சமூகம் நடந்­து­கொள்ள வேண்­டிய முறை­மைகள் பற்­றிய தெளி­வூட்­டல்­களை வழங்கும் நட­வ­டிக்­கை­களை கண்டி நகர ஜம்­இய்­யதுல் உலமா மேற்­கொண்­டது. இதன்­படி, கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஜும்­ஆ­வின்­போது முஸ்லிம் மக்­க­ளுக்கு தெளி­வூட்­டல்கள் செய்­யப்­பட்­டன. அத்­துடன், பள்­ளி­வா­சல்கள் ஊடா­கவும் மக்­க­ளுக்கு பல வழி­காட்­டல்கள் வழங்­கப்­பட்­டன.
அத்­துடன், பள்­ளி­வா­சல்­களில் குடிநீர் வச­தி­களை வழங்கும் நட­வ­டிக்­கை­க­ளையும் மல­ச­கூட வச­தி­களை ஏற்­பாடு செய்யும் திட்­டத்­தையும் கண்டி மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனம் நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கி­றது.

இதன்­படி, கண்டி நக­ரி­லுள்ள அனைத்து பள்­ளி­வா­சல்­க­ளுக்கு முன்­பா­கவும் மக்கள் தட்­டுப்­பா­டின்றி இல­கு­வாக குடி­நீரை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான வச­திகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

மேலும், நகரின் அனைத்து பள்­ளி­க­ளிலும் மல­ச­ல­கூ­டங்கள் திறந்­து­வைக்­கப்­பட்­டுள்­ள­துடன், இரண்டு மணி நேரத்­திற்கு ஒரு­முறை அவற்றை சுத்தம் செய்து கண்­டிக்கு வரும் பௌத்த பக்­தர்கள் தமது தேவைக்கு பயன்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் செய்து கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன், கண்டி நகர் வர்த்­தக சம்­மே­ளனம் உணவுப் பொதி­களை விநி­யோ­கிக்கும் செயற்­திட்­டத்தை முன்­னெ­டுப்­ப­துடன், இரவு நேரங்­களில் கோப்பிப் பானம் மற்றும் தேநீர் வழங்கும் திட்­டத்­தையும் முன்­னெ­டுக்­கி­றது.

தினமும் இரவு நேரத்தில் 2000 உணவுப் பொதிகள் விநி­யோ­கிக்­கப்­ப­டு­வ­துடன், இரவு வேளை­களில் கண்டி நகரில் குளிர்ந்த கால­நிலை ஏற்­படும் சந்­தர்ப்­பங்­க­ளிலும் கோப்பி மற்றும் தேநீர் வழங்­கப்­ப­டு­கி­றது.

இதற்­கப்பால் முஸ்லிம் சமூ­கத்தில் பல்­வேறு தரப்­பினர் தனித்தும் இந்த உதவி செயற்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­கின்­றனர். அந்த வகையில், கண்டி ராயிட் ஹோட்டல் ஊடாக 700 இரவு உணவுப் பொதி தினமும் வழங்­கப்­ப­டு­கின்­றது. அத்­துடன், அவர்­களும் கோப்பி பானம் வழங்கும் நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­ப­டு­கின்­றனர்.

இதற்கு அப்பால், முஸ்லிம் பாட­சா­லைகள் மூலமும் கண்­டிக்கு வருகை தரும் பௌத்த பக்­தர்­களின் நல­னுக்­கான நற்­ப­ணிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக, கண்டி பதி­யுதீன் பாலிகா வித்­தி­யா­லய மாண­விகள் நேற்­று­முன்­தினம் பெனடோல் மாத்­தி­ரை­களை தேவை­யா­ன­வர்­க­ளுக்கு வழங்­கினர். அத்­துடன், குடிநீர் போத்­தல்­களும் அவர்­களால் வழங்­கப்­பட்­டன.

இந்த வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்கு கண்­டி­யி­லுள்ள தன­வந்­தர்கள் பெரிதும் உதவி ஒத்­தா­சை­களை வழங்கி வரு­வ­தாக கண்டி மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனத் தலைவர் சித்தீக் மேலும் தெரி­வித்தார். அத்­துடன், நாட்டின் பல்­வேறு பகு­தி­களில் இருந்தும் இந்த சமூக நல்­லி­ணக்க பணி­க­ளுக்­காக பலரும் உதவி ஒத்­தா­சை­களை வழங்­கி­ய­தா­கவும் குறிப்­பிட்டார்.

புத்­தரின் புனித தந்த தாது காண்­காட்­சியை காண கண்டி நகரில் அலை­மேதும் பௌத்த பக்­தர்­களின் நலன்­களை முன்­னி­றுத்தி கண்டி மாவட்ட முஸ்லிம் சமூகம் மேற்­கொண்­டு­வரும் இந்த சமூக நலத்­திட்டம் பல தரப்­பி­ன­ராலும் பெரிதும் பாராட்­டப்­பட்டு வரு­கி­றது.
குறிப்­பாக கண்டி மாந­கர ஆணை­யாளர் திரு­மதி இந்­திகா குமாரி அபே­சிங்க, இந்த செயற்­திட்­ட­மா­னது நாட்டின் நல்­லி­ணக்­கத்­துக்கு நல்ல உதா­ரணம் என தெரி­வித்தார். அத்­துடன், முஸ்லிம் சமூ­கத்­திற்கு கண்டி நகர சபை­யினால் நன்றி தெரி­விப்­ப­தா­கவும் குறிப்­பிட்டார்.

தற்­போ­து­வரை கண்­டிக்கு தினமும் மூன்று இலட்சத்துக்கு அதிகமான மக்கள் வருகை தருகின்றனர். அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் வேலைத்திட்டங்களை பல தரப்பினரின் ஒத்துழைப்புடன் நாம் முன்னெடுக்கிறோம். குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினர் தம்மாலான பாரிய ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர் என்றும் கண்டி மாநாகர ஆணையாளர் கூறினார்.

புனித தந்த தாதுவை காண வந்த பல பௌத்த பக்தர்களும் முஸ்லிம் சமூகத்தை நன்றியுடன் பாராட்டி வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் வியாபிக்கப்படும் பட்சத்தில் நாட்டில் இன நல்லிணக்கம் மேலும் வலுப்பெறும் என பலதரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். இதன் பிரதிபலிப்பை சமூக வலைத்தளங்களில் சிங்கள மக்கள் வெளியிடும் கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.

இன நல்லிணக்கத்திற்கான நல்லதொரு சந்தர்ப்பத்தை முஸ்லிம் சமூகம் கூட்டாகவும் தனித்தும் சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளது. இது இலங்கையில் பெரும்பான்மை மக்கள் மனங்களில் முஸ்லிம் சமூகம் சார்ந்த நல்லபிப்பிராயத்தை தோற்றுவித்து சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கு வழிகோலும் என்பதில் ஐயமில்லை.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.