பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க முஸ்லிம்களின் குரல் ஒன்றுபடுமா?

0 88

முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜெய­வர்த்­த­னவின் ஆட்சிக் காலத்தில் தற்­காலிக அடிப்­ப­டையில் கொண்­டு­வ­ரப்­பட்ட பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தினை ஒழிக்க வேண்டும் என்ற குரல் மீண்டும் வலுப்­பெற்­றுள்­ளது.

ஆறு மாதங்­க­ளுக்கு என்று கூறியே இந்த பயங்­க­ர­வாத தடைச் சட்டம் 1978ஆம் ஆண்டு பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டது. வெறும் ஆறு மாதங்­க­ளுக்­காக நிறை­வேற்­றப்­பட்ட குறித்த சட்டம் 45 வரு­டங்­க­ளுக்கு மேல் எமது நாட்டில் அமுலில் இருந்து வரு­கின்­றது.

இந்த சட்­டத்­தினால் தமிழ் மக்கள் கடு­மை­யான நெருக்­கு­வா­ரங்­களை எதிர்­நோக்­கி­யி­ருந்­தனர். சுமார் 30 வரு­டங்கள் இடம்­பெற்ற யுத்­தத்தின் போது ஆயிரக் கணக்கான தமிழ் இளை­ஞர்கள் இந்த சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு நீண்ட காலம் தடுத்து வைக்­கப்­பட்­டனர். இதனால், குறித்த இளை­ஞர்­களின் எதிர்­கா­லமே கேள்­விக்­கு­றியாக மாறி­யது.
இவ்­வா­றான நிலையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்­கு­தலைத் தொடர்ந்து இத்தாக்குதலுடன் எந்தவகையிலும் சம்பந்தப்படாத முஸ்லிம் இளை­ஞர்கள் நூற்றுக் கணக்கானோர் கைது செய்­யப்­பட்டு இந்த சட்­டத்தின் கீழ் நீண்ட நாட்கள் தடுத்­து­வைக்­கப்­பட்­டனர். இந்த சம­யத்தில் குறித்த சட்­டத்தின் வலி­களை முஸ்லிம் சமூகம் உணர்ந்­தது.

இதே போன்று பொரு­ளா­தார நெருக்­க­டி காலத்தில் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தமைக்காக சில சிங்­கள இளை­ஞர்கள் கைது செய்­யப்­பட்டு இந்த சட்­டத்தின் கீழ் தடுத்­து­வைக்­கப்­பட்­டனர். அச்­ச­ம­யத்தில் இந்த சட்­டத்தின் வலி­யினை சிங்­கள சமூகத்தினாலும் உணர முடிந்தது.

இதன் கார­ண­மாக குறித்த சட்­டத்­தினை ஒழிக்க வேண்டும் என்று அனைத்து சமூ­கங்­களும் கோரிக்கை விடுத்­தன. இவ்­வா­றான நிலையில் அன்று எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்த அனுர குமார திசா­நா­யக்க இந்த சட்­டத்­தினை ஒழிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக குரல் கொடுத்தார்.

அது போன்று ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்டால் இந்த சட்­டத்­தினை ஒழிப்பேன் என கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­ல் விஞ்­ஞா­ப­னத்திலும் குறிப்­பிட்­டி­ருந்தார்.
ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்டு சுமார் ஆறு மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் இந்த சட்­டத்­தினை இல்­லா­தொ­ழிக்க எந்­த­வித நட­வ­டிக்­கையும் ஆளும் தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்­தினால் எடுக்­கப்­ப­ட­வில்லை.

இது தொடர்­பாக பாரா­ளு­மன்­றத்­திலும், அர­சாங்­கத்தின் ஊடக மாநா­டு­க­ளிலும் பல தட­வைகள் கேள்­விகள் எழுப்­பப்­பட்ட சம­யங்­களில் விரைவில் ஒழிக்­கப்­படும் என்று அர­சாங்கம் பதிலளித்தது. இவ்­வா­றான நிலையில்தான் கடந்த மாத இறு­தியில் இஸ்­ரே­லுக்கு எதி­ராக ஸ்டிக்கர் ஒட்­டினார் என்ற குற்­றச்­சாட்டில் நிட்­டம்­பு­வ­யினைச் சேர்ந்த 22 வய­தான முஹம்­மது லியாவுதீன் முஹம்­மது றுஸ்தி கொம்­பனித் தெரு பகு­தியில் வைத்து கைது செய்­யப்­பட்டு பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தடுத்­து­வைக்­கப்­பட்டார்.
இத­னை­ய­டுத்து ஆளும் அர­சாங்­கத்­திற்கு எதி­ரான பிரசாரம் தீவி­ர­ம­டைந்­த­துடன் இந்த சட்­டத்­தினை உட­ன­டி­யாக இல்­லாமல் செய்­ய வேண்டும் என்ற அழுத்தம் வழங்­கப்­பட்­டது.

இந்த தடுப்புக் காவல் கார­ண­மாக எதிர்­வரும் மே 6ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள உள்ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் அர­சாங்­கத்தின் முஸ்லிம் வாக்கு வங்­கியில் பாரிய சரி­வு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் வெளிப்பட்டன. இந்நிலையில்தான் பாதுகாப்பு அமைச்சு பல்­வேறு நிபந்­த­னை­க­ளுடன் குறித்த இளை­ஞனை பிணையில் விடு­தலை செய்­தது. இதனைத் தொடர்ந்து பாரா­ளு­மன்­றத்தில் இந்த இளைஞன் தொடர்பில் பல தக­வல்­களை பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் ஆனந்த விஜ­ய­பால வெளி­யிட்­டி­ருந்தார்.

இவ்­வா­றான நிலையில் அண்மையில் கிழக்கு மாகா­ணத்­திற்கு விஜயம் செய்த ஜனா­தி­பதி அனுர குமார திசா­நா­யக்க, ருஸ்தி தொடர்பில் அமைச்சர் ஆனந்த விஜ­ய­பால வெளியிட்ட அறிக்­கைக்கு முற்­றிலும் மாற்­ற­மாக கருத்து வெளி­யிட்­டி­ருந்தார்.
இதே­வேளை, பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தினை எமது அர­சாங்கம் கொண்­டு­வ­ர­வில்லை. இது நீண்ட கால­மாக காணப்­ப­டு­கின்ற சட்­ட­மொன்று என பிர­தமர் ஹரிணி அம­ர­சூ­ரி­யவும் அண்­மையில் தெரி­வித்­தி­ருந்தார். இந்த கருத்தும் பாரிய விமர்­ச­னங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

எவ்­வா­றா­யினும், பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தினை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்­சி­யாக வலுப் பெற்று வரு­வதாலும் இதற்கு மேலும் இது தொடர்பில் மெளனம் காக்க முடியாது என்பதாலும் இந்த சட்­டத்­தினை நீக்­கு­வது தொடர்பில் பரிந்­து­ரை­களை வழங்­கு­வ­தற்­காக ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரின்ஸி அர­ச­கு­ல­ரட்ண தலை­மையில் குழு­வொன்­றினை நீதி அமைச்சர் ஹர்­ஷன ராஜ­க­ருண அண்­மையில் நிய­மித்­துள்ளார். இது வரவேற்கத்தக்கதாகும். எனினும் இது முன்னைய அரசாங்கங்கள் போன்று உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லுக்­கான பிர­சா­ர­ உத்தியாக அமைந்­து­விடக் கூடாது என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.

அதேவேளை பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்­தினை ஒழித்­து­விட்டு பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­டத்­தினை கொண்டு வரவும் அர­சாங்கம் முயற்­சிக்கக் கூடாது. முன்னாள் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவின் ஆட்சிக் காலத்தில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தினை ஒழித்­து­விட்டு பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­டத்­தினை கொண்­டு­வர முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்ட போது பல்­வேறு எதிர்ப்­ப­லைகள் தோன்­றி­யமை சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.

இதே­வேளை, பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தினை ஒழிப்­ப­தற்கு சிறு­பான்மை சமூகம் தொடர்ச்சியாக குரல் கொடுக்க வேண்­டி­யது இன்­றி­ய­மை­யா­த­தொன்­றாகும். ஏற்கனவே தமிழ் சமூகத்திலுள்ள சிவில் அமைப்புகள் இச்சட்ட ஒழிப்பு தொடர்பில் குரல் கொடுத்து வருகின்றன.

அது போன்று அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா, முஸ்லிம் கவுன்ஸில், தேசிய சூரா சபை போன்ற முஸ்லிம் சமூ­கத்­தி­லுள்ள சிவில் அமைப்­புக்களும் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தினை இல்­லா­தொ­ழிப்­ப­தற்­காக அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுக்க வேண்­டி­யுள்­ளது. ருஸ்தி போன்று இன்­னு­மொரு இளைஞன் பயங்­க­ர­வாத தடை­சட்­டத்தின் ஊடாக கைது செய்­யப்­படும் வரை காத்திருக்­காமல் இந்த சட்­டத்­தினை ஒழிப்­ப­தற்­கான அழுத்­தத்­தினை முஸ்லிம் சிவில் அமைப்­புக்கள் தொடர்ந்து வழங்கத் தயாராக வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.