2019 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள்: நீதியை வலியுறுத்திய 6ஆம் வருட நினைவு நிகழ்வு

0 59

எம்.எம்.சில்வெஸ்டர்

2019 ஆம் ஆண்டு இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு தின குண்­டுத்­தாக்­குதல் சம்­ப­வத்தில் பலி­யா­ன­வர்­களின் ஆன்ம இளைப்­பாற்­றிக்­கான 6 ஆவது ஆண்டு விசேட பிரார்த்­தனை, பாத­யாத்­திரை உள்­ளிட்ட நினைவு அஞ்­சலி நிகழ்­வுகள் கொழும்பு கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் திருத்­த­லத்தில் நடை­பெற்­றன.

கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்­தினால் ரஞ்சித் ஆண்­ட­கையின் தலை­மையில் நடை­பெற்ற இந்த 6 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் முதற் கட்­ட­மாக பாத யாத்­திரை நடை­பெற்­றது.

பாத யாத்­திரை
புனித அந்­தோ­னியார் திருத்­தலம் வரை­யி­லான பாத யாத்­திரை காலை 7 மணி­ய­ளவில் கொழும்பு உயர் மறை மாவட்­டத்தின் பேரா­ல­ய­மான கொட்­டாஞ்­சேனை புனித லூசியாள் பேரா­லயத்திலிருந்து ஆரம்­ப­மா­னது.

உயிர்த்த இயேசு கிறிஸ்­துவின் சொரூபம் தாங்­கிய ரதத்­துக்கு முன்னால் பாத யாத்­தி­ரையில் சென்­று­கொண்­டி­ருந்த மக்கள் குண்­டுத்­தாக்­கு­தலில் பலி­யா­ன­வர்­களின் படங்­களை ஏந்­தியும் பலி­யா­ன­வர்­க­ளுக்கு நீதி­வேண்­டியும், குண்­டுத்­தாக்­கு­தலின் பின்­ன­ணியில் உள்­ள­வர்­களை சட்­டத்தின் முன்­னி­றுத்த வேண்­டியும் பாதா­தைகள் ஏந்­தி­யி­ருந்­தனர்.

இந்த பேர­ணியில் மெல்கம் கர்­தினால் ரஞ்சித் ஆண்­டகை, துணை ஆயர் அன்ரன் ரஞ்சித் ஆண்­டகை, அருட் தந்­தை­யர்கள், அருட் சகோ­த­ரிகள், குண்­டுத்­தாக்­கு­தலில் பலி­யா­னோரின் உற­வி­னர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

அஞ்­சலி செலுத்தல்
பாத யாத்­தி­ரையின் பின்னர், கொழும்பு கொச்­சிக்­கடை அந்­தோ­னியார் திருத்­த­லத்தில் விசேட ஆரா­தனை மற்றும் இறந்த ஆன்­மாக்­களை நினை­வு­கூரும் நிகழ்வு காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை அனுஷ்­டிக்­கப்­பட்­டது. 2019 ஏப்ரல் 21ஆம் திக­தி­யன்று முத­லா­வது குண்­டு­வெ­டிப்புச் சம்­பவம் நடந்­தே­றிய 8.45 மணிக்கு ஆலய மணி­யோசை எழுப்­ப­ப்பட்டு 2 நிமிட மெளன அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது.

இதை­ய­டுத்து, குண்­டுத்­தாக்­கு­தலில் பலி­யா­ன­வர்­க­ளுக்கு மெழு­கு­திரி ஏற்றி அஞ்­சலி செலுத்தும் நிகழ்வு நடை­பெற்­றது. மெல்கம் கர்­தினால் ரஞ்சித் ஆண்­டகை, இலங்­கைக்­கான வத்­திக்கான் பிர­தி­நிதி பிறயன் உடைக்வே, துணை ஆயர் அன்ரன் ரஞ்சித், கத்­தோ­லிக்க ஆயர் பேரவை தலைவர் ஆயர் ஹெரல்ட் அன்­தனி பெரேரா, ஓமல்பே சோபித்த தேரர், அஷ்ஷெய்க் மசூக் சஜீர், பொன்­னம்­ப­ல­வ­னேஸ்­வரர் ஆலய பிர­தம குருக்கள் சிவ­சுரேஷ் உள்­ளிட்ட மதத்­த­லை­வர்­களும், வெளி­நாட்டு பிர­தி­நி­திகள் மற்றும் பலி­யான உற­வி­னர்கள் சார்­பிலும் இரண்டு பேர் மெழுகு­திரி ஏற்றி அஞ்­சலி செலுத்­தி­யி­ருந்­தனர்.

சர்வ மத பிரார்த்­தனை
அஞ்­சலி செலுத்தும் நிகழ்வை தொடர்ந்து பலி­யா­னோரின் ஆன்ம இளைப்­பாற்­றிக்­கா­கவும், நோயுற்­ற­வர்­களின் உடற் சுகத்­துக்­கா­கவும் சர்­வ­மத பிரார்த்­த­னையும் நடை­பெற்­றது. இதில் பெளத்த மத பிரார்த்­த­னையை ஓமல்பே சோபித்த தேரரும், இந்­து­மத பிரார்த்­த­னையை சிவ­சுரேஷ் குருக்­களும், இஸ்­லா­மிய பிரார்த்­த­னையை அஷ்ஷெய்க் மசூக் சஜீரும் செய்­தி­ருந்­தனர்.

விசு­வா­சி­களின் சாட்­சி­க­ளாக பிர­க­டனம்
கொழும்பு கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் திருத்­தலம் மற்றும் நீர்­கொ­ழும்பு கட்­டு­வப்­பிட்டி புனித செபஸ்­தியார் தேவா­லயம் ஆகி­ய­வற்றில் இடம்­பெற்ற குண்­டுத்­தாக்­கு­தலில் உயி­ரி­ழந்த கத்­தோ­லிக்க விசு­வா­சிகள் 167 பேரை விசு­வா­சத்தின் சாட்­சி­க­ளாக வத்­திக்கான் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளது.

கத்­தோ­லிக்க திருச்­ச­பையின் தலைமை பீட­மான வத்­திக்கான், குண்­டுத்­தாக்­கு­தல்­களில் தேவா­ல­யங்­களில் பலி­யான கத்­தோ­லிக்க விசு­வா­சிகள் பட்­டி­யலில் 167 பேர் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இணைக்­கப்­பட்­டுள்­ள­தாக மெல்கம் கர்­தினால் ரஞ்சித் ஆண்­டகை அறி­வித்தார்.

சகல சமூ­கங்­க­ளுக்கும்
வைக்­கப்­பட்ட தாக்­கு­த­லாகும்
உயிர்த்த ஞாயிறு தின குண்­டுத்­தாக்­கு­த­லா­னது, கிறிஸ்­தவ தேவா­ல­யங்­க­ளுக்கு மாத்­திரம் வைக்­கப்­பட்ட ஒன்­றல்ல. மாறாக இந்த நாட்டில் உள்ள சகல வணக்க ஸ்தலங்­க­ளுக்கும் சமூ­கங்­க­ளுக்கும் வைக்­கப்­பட்ட குண்­டுத்­தாக்­கு­த­லாகும் என ஓமல்பே சோபித்த தேரர் தெரி­வித்தார்.

இந்த குண்டுத் தாக்­கு­தலில் பலி­யா­ன­வர்­களின் ஆன்மா சாந்­தி­ய­டைய வேண்டும் என்றும், உடற்­சு­க­வீ­முற்­ற­வர்கள் விரைவில் நற்­சுகம் பெற­வேண்­டியும் பிரார்த்­திப்­ப­தாக சிவ­சுரேஷ் குருக்கள் தனது உரையில் குறிப்­பிட்டார்.

மெள­லவியின் உருக்கமான உரை
கொழும்பு மறை­மா­வட்ட பேராயர் மெல்கம் கர்­தினால் ரஞ்சித் ஆண்­டகை முஸ்லிம் மக்கள் மத்­தியில் நன்மதிப்பை பெற்­ற­வ­ரா­க­வும் சமா­தானத் தூது­வ­ரா­கவும் திகழ்­கிறார். நாம் மர­ணிக்கும் வரையில் அவ­ருக்­கான நன்­ம­திப்பு முஸ்லிம் சமூ­கத்­தினர் மத்­தியில் குறை­வ­டை­யாது என மசூக் சஜீர் மெள­லவி நன்றிப் பெருக்­குடன் கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறு­கையில்,
“உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்டு 6 வரு­டங்கள் கடந்­துள்­ளன. ஆனால் இன்று வரை நீதியைக் கோரி போராடிக் கொண்­டி­ருக்­கிறோம். அதி­கா­ரத்தைக் கைப்­பற்­று­வ­தற்­கா­கவோ அல்­லது அந்த அதி­கா­ரத்தை தக்க வைத்­துக்­கொள்­வ­தற்­கா­கவோ இந்த மிலேச்­ச­த­ன­மான தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக அன்றும் இன்றும் அர­சியல் மேடை­களில் பேசப்­பட்டு வரு­கி­றது.

ஒரு­வனை அநி­யா­ய­மாக கொலை செய்­தவன் முழு மனித சமூ­கத்­தையும் கொலை செய்­தவன் போன்­றவன் ஆவான் என இஸ்லாம் கூறுகிறது.

கிறிஸ்­த­வர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் மத்­தியில் பிள­வு­களை ஏற்­ப­டுத்த வேண்டும் என்­பது உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை திட்­ட­மிட்டவர்­களின் பிர­தான நோக்­க­மாக இருக்­கலாம். அனை­வரும் முரண்­பட்­டுக்­கொள்ள வேண்டும் என்­ப­தற்­கா­கவே இந்தத் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக நினைக்­கிறேன். எவ்­வா­றா­யினும் ஒரு பகு­தி­ய­ளவு அவர்­க­ளது நோக்­கத்தை நிறை­வேற்­றிக்­கொண்­டனர். இருப்­பினும் முழு­மை­யாக அவர்­க­ளது நோக்கம் நிறை­வே­ற­வில்லை.

குண்­டு­தாக்­கு­தலை தொடர்ந்து தாக்­கு­தல்­தா­ரி­களின் பெயர்கள் அறி­விக்­கப்­பட்­டன. அதில் சஹ்ரான் உள்­ளிட்­ட­வர்­களின் பெயர்கள் குறிப்­பி­டப்­பட்­டன.இதைக்­கேட்டு நாம் கலக்­க­ம­டைந்தோம். அடுத்து என்ன நடக்­கப்­போ­கி­றது என்று பதற்­ற­ம­டைந்தோம். தீவி­ர­வா­தி­களின் நோக்கம் வெற்றி பெறுமா என கலக்­க­ம­டைந்த போது சமா­தான தூது­வ­ராக பேராயர் மெல்கம் கர்­தினால் ரஞ்சித் ஊட­கங்­க­ளுக்கு முன்னால் வந்து இந்த தாக்­கு­த­லுக்கும் முஸ்லிம் சமூ­கத்­துக்கும் எந்­த­வித தொடர்பும் கிடை­யாது. இதன் பின்­ன­ணியில் அர­சியல் சூழ்ச்சி உள்­ளது. ஆகவே கத்­தோ­லிக்­கர்கள் கலக்­க­ம­டைய வேண்டாம் என்ற வர­லாற்று சிறப்­பு­மிக்க கூற்றை முன்­வைத்தார்.

இவரின் தலை­மைத்­து­வத்தை கத்­தோ­லிக்க மதத்­தினர் எந்­த­ளவு மதித்­தனர் என்­பதை நாம் கண்டு வியப்­ப­ம­டைந்தோம். கர்­தினால் ஆண்­டகை முஸ்லிம் மக்கள் மத்­தியில் பெரும் நன்­ம­திப்பை பெற்­ற­வ­ராக விளங்­கு­கிறார். நாங்கள் இறந்­தாலும் அந்த மதிப்பு அவ­ருக்கு இருக்கும். முஸ்லிம் சமூ­கத்­தினர் அனை­வரும் அவ­ருக்கு நன்­றிக்­கடன்பட்­டுள்­ளனர். கர்­தினால் ஆண்­ட­கையை எப்­போ­தா­வது கண்டால் அவரை முத்­த­மிட வேண்டும் என நினைத்தேன். அதற்­கான வாய்ப்பு கடந்த வருடம் நீர்­கொ­ழும்பில் கிடைத்­தது. முஸ்லிம் மக்­களின் சார்பில் நன்­றியை வெளிப்­ப­டுத்தும் வகையில் அவரை முத்­த­மி­ட்டேன். கர்­தினால் தேசிய சொத்து.

உயிர்த்­த ­ஞா­யிறு தாக்­குதல் கார­ண­மாக முழு சமூ­கமும் பாதிக்­கப்­பட்­டது. தலை­கு­னிய நேரிட்­டது. முஸ்லிம் என்ற கார­ணத்­தினால் ஒட்டு மொத்த முஸ்­லிம்­களின் வீடு­களும் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டன. வீட்டில் பாண் வெட்­டு­வ­தற்கு கூட கத்தி இருக்­க­வில்லை. பாரிய சவால்­களை கடந்து வந்­துள்ளோம். இந்த குண்­டு­த் தாக்­கு­த­லினால் உயி­ரி­ழந்த அனை­வரும் மோட்சம் அடைய வேண்டும் என்று பிரார்த்­திக்­கிறேன். அத்­துடன் உயி­ரி­ழந்­த­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கும் பொறுமை குணம் தொடர வேண்டும் என பிரார்த்­திக்­கிறேன். அநீ­திக்கு எதி­ராக ஒன்­றி­ணைவோம்” என்றார்.

முத்­த­மிட்ட மெள­லவி
இந்­நி­கழ்வில் பங்­கேற்ற சஜீர் மெள­லவி, கத்­தோ­லிக்க மக்­க­ளுக்கு மரி­யாதை செலுத்தும் வகையில், மெல்கம் கர்­தினால் ரஞ்சித் ஆண்­ட­கையை கட்­டி­ய­ணைத்து தலையில் முத்­த­மிட்ட சம்­பவம் அங்­கி­ருந்த பல­ரையும் நெகிழ்ச்­சி­யடைச் செய்­தது.

 

இந்­நி­கழ்வில் ஐ.நா.வின் இலங்கை பிர­தி­நி­திகள், சர்வமதத் தலை­வர்கள், அருட் தந்­தை­யர்கள், அருட் சகோ­த­ரிகள், பலி­யா­னோரின் குடும்ப அங்­கத்­த­வர்கள் மற்றும் வெளி­நாட்டு உயர்ஸ்­தா­னி­கர்கள் என பலரும் கலந்­து­கொண்­டனர்.

கர்­தினால் உரை
பாரா­ளு­மன்ற நூல­க­த்தில் வைக்­கப்­பட்­டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு அறிக்­கையை பாரா­ளு­மன்றில் சமர்­ப்பித்து, யாருக்கும் அடி­ப­ணி­யாது நாட்டு மக்­களின் நலன்­களில் அக்­கறை கொண்டு நீதியை நிலை­நாட்­டு­வ­தற்கு தேவை­யான விட­யங்­களை செயற்­ப­டுத்­த­வேண்டும் என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்­தினால் ரஞ்சித் ஆண்­டகை அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­தினார்.

உயிர்த்த ஞாயிறு தின குண்­டுத்­தாக்­குதல் தொடர்­பான உண்­மையை மறைப்­ப­தற்கு கடந்த கால அர­சியல் தலை­வர்கள் முன்­னெ­டுத்த முயற்­சியை இன்றும் செயற்­ப­டுத்­திக்­கொண்டு, தோற்­றுப்­போன அர­சியல் சக்­தி­களின் செயற்­பா­டு­க­ளுக்கு அடி­ப­ணிந்த பல்­வேறு வித­மான அரச நிறு­வ­னங்கள் இன்­னமும் செயற்­பட்டு வரு­கின்ற மோச­மான நிலைமை காணப்­பட்டு வரு­வ­தாக பேராயர் சுட்­டிக்­காட்­டினார்.

ஈஸ்டர் தாக்­கு­தல்­க­ளுக்கு பொறுப்­பா­ன­வர்கள் மிக விரைவில் நீதியின் முன் நிறுத்­தப்­ப­டு­வார்கள் என்று நம்­பிக்­கை­யுடன் எதிர்­பார்க்­கிறேன். இந்த உயிர்த்த ஞாயிறு தின குண்­டுத்­தாக்­குதல் தொடர்பில் தற்­போ­தைய அர­சாங்­கத்துக்கு முக்­கிய விட­யங்கள் தொடர்பில் அறி­வித்­துள்ளேன். இந்த விட­யங்கள் தொடர்பில் அர­சாங்கம் அதிக கவனம் எடுக்க வேண்டும்.

முத­லா­வது, உயிர்த்த ஞாயிறு தின குண்­டுத்­தாக்­குதல் தொடர்­பான ஜனா­தி­பதி விசா­ர­ணைக்­கு­ழுவின் அறிக்­கையை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்து கூடிய விரைவில் அதனை மக்கள் மயப்­ப­டுத்த வேண்டும்.

இரண்­டா­வது, மேல­திக விசா­ர­ணைகள் மற்றும் வழக்­கு­களை மேற்­பார்­வை­யிட பூரண அதி­காரம் மிக்க சுயா­தீன வழக்­க­றிஞர் அலு­வ­லகம் ஒன்றை நிறு­வு­வது அவ­சியம்.

மூன்­றா­வது, தாக்­கு­தலின் பின்­ன­ணியில் உள்ள அனைத்து சக்­தி­க­ளையும் விசா­ரித்து, உண்­மையை நாட்­டுக்கு வெளிப்­ப­டுத்தி, குற்றம் சாட்­டப்­பட்­ட­வர்­களை அவர்­களின் பதவி நிலை­களை பொருட்­ப­டுத்­தாமல் சட்­டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

நான்­கா­வது 2019 ஆம் செப்­டெம்பர் 21 இல் நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு அறிக்­கையின் சகல பரிந்­து­ரை­க­ளையும் செயற்­ப­டுத்­த வேண்டும்.

ஐந்­தா­வது, இரா­ணுவப் புல­னாய்வுப் பிரி­வுக்கும் தீவி­ரவாதக் குழுத்­த­லைவர் சஹ்ரான் ஹாஷி­முக்கும் இடை­யி­லான உறவு குறித்தும் இங்­கி­லாந்தில் ‘செனல் 4’இல் ஒளி­ப­ரப்­பான நிகழ்ச்சி குறித்து முழு­மை­யான விசா­ரணை நடத்த வேண்டும். அதில் முக்­கிய சாட்­சி­யாக விளங்­கிய அசாத் மௌலா­னாவின் சாட்­சி­யங்கள் குறித்து ஆழ­மான விசா­ரணை நடத்த வேண்டும்.

ஆறா­வது, இவ்­வி­டயம் குறித்து கடந்த அர­சாங்­கத்தின் இமாம் குழுவின் அறிக்­கையை நாம் ஏற்­றுக்­கொள்ளமாட்டோம். பிர­தான சாட்­சி­யாக விளங்­கிய அசாத் மெள­லா­னாவிடம் எந்­த­வொரு விசா­ர­ணையும் நடத்­தாமல் முடி­வுக்கு வந்­துள்­ள­மையை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இது­வொரு அர­சியல் பின்­ன­ணியின் தேவை­களை மையப்­ப­டுத்­திக்­கொண்ட கண்­கட்டு வித்­தை­யாகும்.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு வழி­வ­குத்த சகல ரக­சிய சதித்­திட்­டங்­க­ளுக்கும் பின்னால் இருந்த சட்­ட­வி­ரோத கலா­சா­ரத்­தையும், அதைத் தூண்­டிய விட­யங்­க­ளையும் இந்­நாட்­டி­லி­ருந்து முற்­றாக அகற்­று­வ­தற்கு தேவை­யான சட்ட திட்­டங்­களை இயற்­றும்­படி கேட்­டுக்­கொள்­கின்றேன்.

அதன் மூலம், நாட்டு மக்­களின் மனித உரி­மை­களை பாது­காப்­ப­தற்கும் பலப்­ப­டுத்­து­வ­தற்கும் தேவை­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும்.

ஏழா­வது, நாட்டில் உள்ள அர­சியல் அதி­கா­ரத்தில் உள்­ள­வர்கள் நாட்டு மக்­களின் சேவ­கர்­களே தவிர அதி­கா­ர­மிக்­க­வர்கள் அல்லர். தமக்கு வாக்­க­ளித்த மற்றும் வாக்­க­ளிக்­காத நாட்டின் சகல குடி­மக்­க­ளையும் காப்­பாற்றி, சமூ­கத்­துக்குள் சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­தவும், நாட்டில் வன்­மு­றை­களை தோற்­று­விக்­காமல் பார்த்­துக்­கொள்ள வேண்­டி­யது ஆட்­சி­யா­ளர்­களின் பொறுப்­பாகும். இதற்­காக எமது நாட்டில் புதி­ய­தொரு கலா­சா­ரத்தை நோக்கி செல்­வ­தற்­கான வழி­வ­கை­கைளை ஏற்­ப­டுத்த வேண்டும்.

இந்­நாட்டில் இன­வாதம், மத­வாதம் பேசிக்­கொண்டு நாட்டில் வன்­மு­றை­க­ளையும் ஏற்­ப­டுத்தி நாட்டின் நற்­பெய­ருக்கு களங்கம் விளை­விப்­போ­ரையும், நாட்டை இரத்த வெள்­ள­மாக மாற்றும் அமைப்­புக்­க­ளையும் இல்­லாமல் செய்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைளை எடுக்க வேண்டும். அர­சியல் மற்றும் குண்டர் சக்­தி­களை அம்­ப­லப்­ப­டுத்தி, தேவை­யான அர­சி­ய­ல­மைப்பு மற்றும் சட்ட மாற்­றங்­களைச் செய்­வதன் மூலம், கொலைகள், காணாமல்ஆக்கப்பட்டோர், வெள்ளை வேன்கள், சித்­தி­ர­வதைக் கூடங்கள், பாதாள உலக நட­வ­டிக்­கைகள், தனியார் படைகள் போன்­ற­வற்றின் மூலம் நமது நாட்டு வர­லாற்றைக் கறைபடுத்­தி­ய­வர்­களை நீதியின் முன் நிறுத்­து­வ­தற்கு அர­சாங்கம் விரைவில் நட­வ­டிக்கை எடுக்கும் என்ற நம்­பிக்­கையில் நாட்டு மக்கள் காத்­துக்­கி­டக்­கின்­றனர்.
தற்­போ­தைய சட்­டங்கள் நீதியை நிலை­நாட்­டவும், நாட்டை சுத்­தப்­ப­டுத்­தவும் போது­மா­ன­தாக இல்­லா­விட்டால், நாம் செய்ய வேண்­டி­யது அந்தச் சட்­டங்­களை மாற்ற தைரியத்தைப் பெறு­வ­துதான்.

இந்த நாட்டின் பொதுமக்கள் தற்போதைய அரசாங்கத்தை உற்சாகமாக ஆதரித்துள்ளனர் என்பது தெளிவாகிறது. அதன்படி, பயங்கரவாதத்தைத் தூண்டிய இந்த ஜனநாயக விரோத மற்றும் அரசியல் ரீதியாக ஊக்கமளிக்கும் செயல்கள் அனைத்தையும் நமது சமூகத்திலிருந்து தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த அக்டோபர் 6 ஆம் திகதியன்று கட்டுவப்பிட்டி தேவாலயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதியளித்தபடி, இந்தத் தாக்குதலின் உண்மையான பின்னணியை கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட அனைவரையும் நீதியின் முன் நிறுத்துவீர்கள் என நாம் நம்புகிறோம். இந்த நாட்டை சுதந்திரம் மிக்க நாடாக மாற்ற வேண்டியது அவசியமாகும்” என்றார்.

பலத்த பாதுகாப்பு
இந்த நினைவுதின நிகழ்வுகளுக்காக கொச்சிக்கடை மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த பாதுகாப்பு பணிகளில் பொலிஸ் மற்றும் முப்படையினர் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், பல வீதிகள் முற்றாகவும், பகுதியளவிலும் மூடப்பட்டிருந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல்களும் காணப்பட்டிருந்தன.

கட்டுவப்பிட்டி தேவாலயத்திலும்
நினைவு கூரல் நிகழ்வுகள்
நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் காலை 8.15 மணிக்கு கொழும்பு மறை மாவட்ட துணை ஆயர்களான மெக்ஸ்வல் சில்வா மற்றும் ஜே.டீ. என்தனி ஆண்டகை ஆகியோர் தலைமையில் விசேட ஆராதனைகள் மற்றும் ஆன்ம இளைப்பாற்றிற்கான நிகழ்வுகள் ஒப்புக் கொடுக்கப்பட்டன.- Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.