உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளின் ஆறாம் ஆண்டு: நீதிக்காக ஏங்கும் பாதிக்கப்பட்டவர்களும் முஸ்லிம் சமூகமும்!

0 53

ஹில்மி அகமட்

இலங்­கையை உலுக்­கிய 2019 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்­டு­வெ­டிப்­பு­களின் ஆறாம் ஆண்டு நிறை­வ­டையும் இந்த துய­ர­மான நாளில், பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும், தொடர்ச்­சி­யாக கூட்டுப் பழியின் சுமையைச் சுமந்து கொண்­டி­ருக்கும் முஸ்லிம் சமூ­கத்­திற்கும் நீதி இன்னும் எட்­டாக்­க­னி­யா­கவே உள்­ளது. இந்த கோர­மான சம்­ப­வத்தால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள், அவர்­களின் குடும்­பங்கள் மற்றும் அனை­வ­ரு­டனும் ஒவ்­வொரு இலங்­கை­யரும் தமது மன­மார்ந்த அனு­தா­பங்­க­ளையும், அசைக்க முடி­யாத ஒற்­று­மை­யையும் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர். இருந்தும், மைத்­தி­ரி­பால சிறி­சேன முதல் கோட்­டா­பய ராஜ­பக்ஷ மற்றும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வரை­யி­லான அடுத்­த­டுத்த அரச தலை­வர்கள் இந்த கொடூ­ர­மான பயங்­க­ர­வாதச் செயல் குறித்து நம்­ப­க­மான பதில்­களை வழங்கத் தவ­றி­விட்­டனர்.

இப்­போது, ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்­க­வுக்கு இந்த மௌனத்­தையும் தண்­ட­னை­யின்­மை­யையும் உடைக்க ஒரு வாய்ப்பு கிடைத்­துள்­ளது. ஓர­ளவு கல்வி அறிவே கொண்ட தீவி­ர­வா­தி­யான சஹ்ரான் ஹாஷி­மையும், மூளைச்­ச­லவை செய்­யப்­பட்ட தற்­கொலைப் படை அங்­கத்­த­வர்­க­ளான அவ­னது குழு­வையும் தீவி­ர­ம­ய­மாக்­கிய அர­சியல் மற்றும் புல­னாய்வு அதி­கா­ரி­களை இனங்­கண்டு ஜனா­தி­பதி நீதியின் முன் நிறுத்த வேண்டும். (மேலும், சஹ்ரான் ஹாஷிம், இலங்கை புல­னாய்­வுத்­து­றைக்கு விடு­தலைப் புலி­களின் நட­வ­டிக்­கைகள் குறித்து தகவல் வழங்­கு­ப­வ­ரா­கவும் அதற்­காக ஊதியம் பெற்­றி­ருக்­கலாம் என்றும் சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றது.)

ஒரே நேரத்தில், நன்கு ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட இந்த குண்­டு­வெ­டிப்­பு­களை போதிய நிபு­ணத்­துவம் இல்­லா­த­வர்­களால் நிகழ்த்­தி­யி­ருக்க முடி­யாது. உல­க­ளா­விய செயற்­பாட்டு வலை­ய­மைப்பைக் கொண்­டி­ருந்த விடு­தலைப் புலி­களே இத்­த­கைய நுணுக்­க­மான, ஒத்­தி­சை­வான தாக்­கு­தலை நடத்­தி­ய­தில்லை. இந்த கொடூரச் செயல்­களில் வெளி­நாட்டு புல­னாய்வு நிபு­ணர்கள் மற்றும் முக­வர்­களின் ஒத்­து­ழைப்பு இருந்­தி­ருக்­கலாம். ஒரு சுயா­தீ­ன­மான, சர்­வ­தேச விசா­ரணை மட்­டுமே இந்த படு­கொ­லை­களின் பின்­ன­ணியில் உள்ள சூத்­தி­ர­தா­ரி­களை முழு­மை­யாக வெளிக்­கொ­ணர முடியும்.

இந்த தாக்­கு­தல்­களில் 45 வெளி­நாட்டு பிர­ஜைகள் மற்றும் மூன்று பொலிஸ் அதி­கா­ரிகள் உட்­பட 270 பேர் உயி­ரி­ழந்­தனர், மேலும் 500க்கும் மேற்­பட்டோர் காய­ம­டைந்­தனர். இஸ்­லாத்தை தவ­றாக பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய தனி­ந­பர்­களால் இந்த கொடூ­ர­மான குற்­றங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டதை நாம் ஆழ்ந்த வருத்­தத்­துடன் ஒப்­புக்­கொள்­கிறோம். அவர்­களின் செயல்கள் இஸ்­லா­மிய போத­னை­க­ளுக்கு முற்­றிலும் முர­ணா­னவை, மேலும் ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்­தாலும் சந்­தே­கத்­திற்கு இட­மின்றி கண்­டிக்­கப்­ப­டு­பவை.

இஸ்­லாத்தில், போர் காலங்­க­ளி­லும்­கூட பெண்கள், குழந்­தைகள் மற்றும் போரில் ஈடு­ப­டா­த­வர்கள் உட்­பட அப்­பாவி மக்­களைக் கொல்­வது கண்­டிப்­பாக தடை­செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­வர்கள் முஸ்லிம் சமூ­கத்தால் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­வர்கள், மேலும் அவர்­க­ளுக்கு இஸ்­லா­மிய மரணச் சடங்­குகள் கூட மறுக்­கப்­பட்­டன. அவர்­களின் செயல்கள் இஸ்­லா­மிய மதத்­தையோ, அதன் விழு­மி­யங்­க­ளையோ அல்­லது அதன் மக்­க­ளையோ பிர­தி­ப­லிக்­க­வில்லை.

அர­சியல் அழுத்­தங்­களால் பாதிக்­கப்­ப­டாத ஜனா­தி­பதி அநுர குமார
திசா­நா­யக்க, இப்­போது துணிச்­ச­லுடன் செயல்­பட வேண்டும். அவர் நம்­ப­க­மான உள்­நாட்டு பொறி­முறை மூல­மா­கவோ அல்­லது சர்­வ­தேச தலை­யீட்டை கோரு­வதன் மூல­மா­கவோ நீதியை நிலைநாட்ட வேண்டும்.

இது, இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றில் மிகவும் இருண்ட நாட்­களில் ஒன்­றாகும். சொல்­லொண்ணா துய­ரமும், அவ­மா­னமும் நிறைந்த நாள். சிங்­க­ள -­பௌத்த தீவி­ர­வாத சக்­திகள், இந்தத் துயரச் சம்­ப­வத்தைப் பயன்­ப­டுத்தி, 21 இலட்சம் முஸ்­லிம்கள் மீது பயத்­தையும், சந்­தே­கத்­தையும் பரப்பி, அவர்­களைத் தவ­றாக பயங்­க­ர­வா­தி­க­ளாக முத்­திரை குத்­தி­னார்கள். நீர்­கொ­ழும்பு, குளி­யாப்­பிட்­டிய மற்றும் அதனைச் சுற்­றி­யுள்ள பகு­தி­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பர­வ­லான தீவைப்பு, கொள்ளை மற்றும் வன்­முறைச் சம்­ப­வங்கள் அரங்­கேற்­றப்­பட்­டன. பல முஸ்­லிம்­களின் வாழ்­வா­தா­ரங்கள் அழிக்­கப்­பட்­டன.

நாடு ஒன்­றி­ணைந்து, அமைதி, நீதி மற்றும் ஆற்றுப்­ப­டுத்­து­வ­தற்­கான நமது கூட்டு உறு­திப்­பாட்டை மீண்டும் உறு­திப்­ப­டுத்த வேண்டும். அனைத்து வகை­யான பயங்­க­ர­வாதம், தீவி­ர­வாதம் மற்றும் மத வெறுப்பு ஆகி­ய­வற்­றையும் நாம் திட்­ட­வட்­ட­மாக கண்­டிக்க வேண்டும். ஆனால் அதை­விட முக்­கி­ய­மாக, தாக்­கு­தல்கள் குறித்து முழு­மை­யான விசா­ரணை நடத்­தவும், உண்­மை­யான சூத்­தி­ர­தா­ரிகள் நீதியின் முன் நிறுத்­தப்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்­தவும் நாடு ஒரு கணம் கூட தாம­திக்­கக்­கூ­டாது. இந்த விசா­ர­ணையில் குண்­டு­வெ­டிப்பு துய­ரத்­திற்குப் பின்னர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பௌத்த தீவி­ர­வாத வன்­மு­றையும் உட­ன­டி­யாக விசா­ரிக்­கப்­பட வேண்டும். கர்­தி­னாலின் விவே­க­மான அழைப்பே ஆயி­ரக்­க­ணக்­கான முஸ்லிம் உயிர்­களைக் காப்­பாற்­றி­யது.

கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை, உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் குறித்து நம்­ப­க­மான மற்றும் பக்­கச்­சார்­பற்ற விசா­ர­ணையை நடத்­தும்­படி இலங்கை அர­சாங்­கத்தை தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கிறார். இருந்தும், ஆறு ஆண்­டுகள் கடந்தும் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க எந்த விசா­ர­ணையும் நடை­பெ­ற­வில்லை, மேலும் இந்த சோகத்தின் உண்­மை­யான சூத்­தி­ர­தா­ரிகள் அடை­யாளம் காணப்­ப­டா­மலும் தண்­டிக்­கப்­ப­டா­மலும் உள்­ளனர்.
அச்­சத்தை ஏற்­ப­டுத்­தவும், இன வன்­மு­றையைத் தூண்­டவும், முஸ்லிம் பொரு­ளா­தா­ரத்தை சீர்­கு­லைக்­கவும், மதப் பிள­வு­களை ஆழப்­ப­டுத்­தவும் இந்த தாக்­குதல் அர­சியல் ஆதா­யத்­திற்­காக திட்­ட­மி­டப்­பட்­ட­தாக இப்­போது பல இலங்­கை­யர்கள் உறு­தி­யாக நம்­பு­கின்­றனர். நூற்­றுக்­க­ணக்­கான அப்­பாவி முஸ்­லிம்கள் கைது செய்­யப்­பட்டு விசா­ர­ணை­யின்றி நீண்­ட­காலம் தடுத்து வைக்­கப்­பட்­டனர், இது குடும்­பங்­க­ளுக்கும் சமூ­கங்­க­ளுக்கும் பெரும் துன்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

இன்று வரை நீதியோ, பொறுப்­புக்­கூ­றலோ வழங்­கப்­ப­ட­வில்லை. பல விசா­ரணை ஆணைக்­கு­ழுக்கள் அமைக்­கப்­பட்ட போதிலும், கிறிஸ்­தவ மற்றும் முஸ்லிம் சமூ­கங்கள் உள்­நாட்டு நீதி பொறி­மு­றை­களில் நம்­பிக்­கையை இழந்­து­விட்­டன. அத­னால்தான் கர்­தினால் ரஞ்சித் ஆண்­ட­கையின் சர்­வ­தேச விசா­ர­ணைக்­கான அழைப்பு – அது வெளிப்­ப­டைத்­தன்மை, நியாயம் மற்றும் மதம் அல்­லது இன வேறு­பா­டின்றி அனைத்து பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும் நீதியை உறுதி செய்­வது – ஆழ­மான எதி­ரொ­லியை ஏற்­ப­டுத்­து­கி­றது.
ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க பதவி ஏற்­ற­வுடன் 21/4 பயங்­க­ர­வாத தாக்­கு­தலை விசா­ரிக்க ஸ்கொட்­லாந்தில் இருந்து நிபு­ணர்­களை அழைத்து வரு­வ­தாக உறு­தி­ய­ளித்தார். எனினும், அவ­ரது ஜனா­தி­பதி பத­வியின் சில மாதங்­க­ளி­லேயே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற அழுத்தத்திற்கு பணிந்து, இந்த வாக்குறுதியை கைவிட்டது போல் தெரிகிறது.

இது­போன்ற அர­சியல் அழுத்­தங்­களால் பாதிக்­கப்­ப­டாத ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்க, இப்­போது துணிச்­ச­லுடன் செயல்­பட வேண்டும். அவர் நம்­ப­க­மான உள்­நாட்டு பொறி­முறை மூல­மா­கவோ அல்­லது சர்­வ­தேச தலை­யீட்டை கோரு­வதன் மூல­மா­கவோ நீதியை நிலைநாட்ட வேண்டும்.

நாம் இழந்த உயிர்களையும், தொடரும் வேதனையையும் நினைவுகூரும் இந்த வேளையில், இலங்கையர்களாகிய நாம் நம்பிக்கையையும் புரிதலையும் கட்டியெழுப்ப ஒன்றிணைவோம். – நம்மைப் பிரிக்க முயல்பவர்களை எதிர்ப்போம். வெறுப்புடனும் சந்தேகத்துடனும் அல்ல, அமைதி, கருணை, உண்மை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு எதிர்காலத்தை உருவாக்குவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை கௌரவிப்போம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.