உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள்: இந்தியா அறிவிக்க முன்னரே இலங்கை அறிந்திருந்ததா?

0 54

எப்.அய்னா

கடந்த 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்­டக்­க­ளப்பு ஆகிய இடங்­களில் 8 தொடர் குண்­டு­வெ­டிப்புச் சம்­ப­வங்கள் பதி­வா­கின. இந்த தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களால், 30 வெளி­நாட்­ட­வர்கள் உட்­பட 268 பேர் கொல்­லப்­பட்­ட­துடன், 27 வெளி­நாட்­ட­வர்கள் உட்­பட 594 பேர் காய­ம­டைந்­தனர்.

இந்த பயங்­க­ர­வாத தாக்­குதல் குறித்த பூரண புதிய விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில், இத்­த­கைய தாக்­கு­த­லொன்று நடாத்த திட்­ட­மி­டப்­ப­டு­வ­தாக இந்­தி­யாவில் இருந்து அப்­போ­தைய தேசிய உளவுத் துறை பணிப்­பாளர் நிலந்த ஜய­வர்­த­ன­வுக்கு கிடைக்கப் பெற்­ற­தாக கூறப்­படும் தகவல், அதற்கு முன்­னரே அவ­ருக்கு அவரின் கீழ் செயற்­பட்ட அதி­கா­ரிகள் ஊடாக சேக­ரிக்­கப்­பட்டு வழங்­கப்­பட்­டி­ருந்­ததா என்ற சந்­தேகம் எழுந்­துள்­ளது. அவ்­வாறு இலங்­கையின் எஸ்.ஐ.எஸ். எனப்­ப‌டும் தேசிய உளவுத் துறை ஊடாக சேக­ரிக்­கப்­பட்ட தகவல், எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­காது அந்த உள­வுத்­து­றையின் உயர் மட்­டத்தால் மூடி மறைக்­கப்­பட்­டதா என்ற‌ கேள்வி புதிய விசா­ர­ணை­களில் எழுந்­துள்­ளது.

சஹ்ரான் ஹாஷீம் கும்­ப­லோடு உள்­நாட்டில் உள­வுத்­து­றை­யினர் ஏற்­ப­டுத்­திக்­கொண்­டி­ருந்த நெருக்கம் மற்றும் உறவு உள்­ளிட்­டவை தொடர்பில் பல்­வேறு விட­யங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில், அது குறித்து சிறப்பு விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

குறிப்­பாக, 2018 நவம்பர் மாதம் மட்­டக்­க­ளப்பு, வவு­ண­தீவு பகு­தியில் இரு பொலி­ஸாரை கொலை செய்து அவர்­களின் ஆயு­தங்­களை சஹ்ரான் கும்பல் கொள்­ளை­யிட்­டமை 2019 ஏப்ரல் 21 தாக்­கு­தலின் பின்னர் விசா­ர­ணையில் வெளிப்­பட்­டது. எனினும் அது­வரை அக்­கொ­லைகள் விடு­தலைப் புலி ஆத­ர­வா­ள‌ர்­களால் செய்­யப்­பட்­ட­தா­கவே காண்­பிக்­கப்­பட்­டது. அவ்­வாறு காண்­பிப்­ப­தற்­காக போலி­யான சான்­று­களை உரு­வாக்க அரச உளவுச் சேவை மற்றும் இரா­ணுவ உள‌வுப் பிரிவு ஆகி­யவை முன்­னின்று செயற்­பட்­டுள்­ள­தாக சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது. இரா­ணுவ உளவுப் பிரிவு அப்­போது குறித்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த சி.ஐ.டி. அதி­கா­ரி­களை திசை திருப்ப வழங்­கிய உளவு அறிக்­கைகள் இது தொடர்­பி­லான சந்­தே­கத்தை உரு­வாக்­கி­யி­ருந்­தது.

அதன்­படி இடம்­பெறும் புதிய விசா­ர­ணை­களில் தற்­போது, குறித்த பொலி­ஸாரின் கொலையை திசை திருப்ப ஜக்கட் ஒன்று அடங்­கிய பாட­சாலை பையை சம்­பவ இடத்­துக்கு அருகே மறைத்து வைத்து நாட­க­மா­டி­யமை தொடர்­பி­லான விட­யத்­துக்­காக அரச உளவுச் சேவையின் மட்­டக்­க­ளப்பு பிராந்­தி­யத்தில் கட­மை­யாற்­றிய பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒருவர் கைது செய்­யப்­பட்டு தடுப்புக் காவலின் கீழ் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்றார்.

குறித்த பொலிஸ் கான்ஸ்­டபிள் உள்­ளிட்டோர், குறித்த ஜக்கட் மீட்­கப்­பட முன்­னைய நாள், அப்­போதும் முன்னாள் புலிகள் இயக்க உறுப்­பினர் ஒரு­வரின் வீட்­டுக்கு தேடுதல் எனும் பெயரில் சென்று அதனை எடுத்­தி­ருப்­ப­தாக நம்­பப்­ப­டு­கின்­றது. பின்னர் அது வவு­ண­தீவு பொலிஸார் கொலை செய்­யப்­பட்ட இடத்­துக்கு அருகே மறைத்து வைக்­கப்­பட்டு, அது தொடர்பில் சி.ஐ.டி.அதி­கா­ரி­க­ளுக்கும் அரச உளவுச் சேவை­யி­னா­லேயே தக­வலும் அளிக்­கப்­பட்­டுள்­ளது. இது குறித்த விசா­ர­ணை­களில் பல்­வேறு தக­வல்கள் அம்­ப­ல­மாகி வரு­கின்­றது.

இது ஒரு புறம் இருக்க, அண்­மையில் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்பில் அடிக்­கடி உச்­ச­ரிக்­கப்­பட்ட ஒரு புனைப் பெயரைக் கொண்ட உளவுத் துறை பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வ­ரிடம் சிறப்பு விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அந்த விசா­ர­ணை­களின் பின்னர், இந்­தியா தகவல் வழங்க முன்­னரே சஹ்ரான் கும்பல் தாக்­குதல் நடாத்தப் போகும் தக­வல்கள் இலங்கை உளவுத் துறை­யிடம் இருந்­தது என நம்பும் வண்­ண­மான சில தக­வல்கள் வெளிப்­பட்­டுள்­ளன. அது தொடர்பில் தொடர்ச்­சி­யான விசா­ர­ணைகள் நடக்­கின்­றன.

குறிப்­பாக சஹ்ரான் கும்பல் தாக்­குதல் ஒன்­றுக்கு தயா­ரா­வது குறித்த உளவுத் தகவல் சேக­ரிக்­கப்­பட்டு தேசிய உளவுத் துறையின் உயர் அதி­காரி ஒரு­வ­ருக்கு வழங்­கப்­பட்ட பின்னர் அதற்கு அப்பால் அந்த தகவல் தொடர்பில் நட­வ­டிக்கை எடுப்­பது முடக்­கப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு தகவல் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இது குறித்து தற‌்­போது மேல­திக விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன.

இவ்­வா­றான பின்­ன­ணியில் தான் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­க­ளுடன் இலங்­கையின் தேசிய உளவுத் துறைக்கும், இரா­ணுவ உளவுப் பிரி­வுக்கும் மிக நெருங்­கிய தொடர்­புகள் இருக்­கின்­றன என்ற குற்­றச்­சாட்டு வலுத்து வரு­கின்­றது.

இலங்­கையின் உளவுத் துறை, இந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­க­ளோடு தொடர்­பு­பட்­டது என்­பதை நம்­பு­வ­தற்­கான மற்­றொரு முக்­கிய ஆதா­ரமே குண்­டு­தாரி ஜமீல். 2015 ஆம் ஆண்டு முதல் ஜமீல் தொடர்பில் உளவுப் பிரி­வுகள் கவனம் செலுத்தி வந்­துள்­ள­தாக‌ ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவில் தெரி­ய­வந்­தது. இந்த தாக்­கு­த­லுக்கு முன்னர் ஜமீல் தொடர்பில் ஆராய்தல்/ விசா­ரணை செய்தல்/ கண்­கா­ணித்தல் ஆகி­யன, அரச உளவுச் சேவை, இரா­ணுவ உளவு பணிப்­பாளர் சபை, பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைகள் குறித்த விசா­ரணை பிரிவு ( டி.ஐ.டி.) ஆகிய நிறு­வ­னங்­களால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

அவ்­வாறு ஜமீல் தொடர்­பாக விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டாலும், அவர் மூலம் இந்தத் தாக்­குதல் குறித்த முன்­கூட்­டிய எச்­ச­ரிக்­கை­களைப் பெற்­றுக்­கொள்­ளவோ அல்­லது தாக்­கு­தலைத் தடுக்­கவோ முடி­யாமல் போயுள்­ள­மை­யா­னது உளவுத் துறை­களின் செயற்­பாடு தொடர்பில் பாரிய சந்­தே­கங்­க­ளுக்கு வழி வகுக்­கின்­றது.

கடந்த 2019 ஏப்ரல் 20 அன்று மாலை, ஜமீல் தாஜ் சமுத்ரா ஹோட்­டலில் ஒரு அறையை முன்­ப­திவு செய்­தி­ருந்தார். 2019 ஏப்ரல் 20 அன்று நள்­ளி­ரவு 12 மணிக்குள் முன்­ப­திவு செய்­யப்­பட்ட அறை­களின் பட்­டி­யலை குறித்த ஹோட்­டலின் பாது­காப்பு முகா­மை­யாளர் 21 ஆம் திகதி காலை அரச உளவுச் சேவை மற்றும் ஜனா­தி­பதி பாது­காப்புப் பிரி­வுக்கும் அனுப்­பி­யி­ருந்தார். அதன்­படி, அரச உளவுச் சேவை அன்று காலை, இந்தப் பட்­டி­யலில் தாம் தகவல் சேக­ரித்­து­வரும் ஜமீல் இருந்­ததை அடை­யாளம் காணாமை அல்­லது கண்டும் காணாமல் இருந்­தமை மிகப் பெரும் கேள்­வி­யாக உள்­ளது.

கடந்த 2019 ஏப்ரல் 21 அன்று காலை, ஜமீல் தாஜ் சமுத்ரா ஹோட்­ட­லுக்குத் திரும்பி (குண்டு வெடிக்­கா­த­தாலோ அல்­லது வேறு ஏதேனும் கார­ணத்­தாலோ) ஹோட்­டலை விட்டு வெளி­யே­று­வ­தற்கு சற்று முன்பு, காலை 8.51 மணிக்கும் 8.54 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில், அவ­ருக்கு தொலை­பேசி அழைப்­பொன்று வந்­தமை சிசி­டிவி கெமரா பதி­வு­களில் உள்­ளது. அவ்­வாறு ஜமீ­லுக்கு அழைப்­பினை எடுத்த அந்த நபர் யார் என்­பது இன்னும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. இவ்­வா­றான நிலையில், பிள்­ளையான் எனும் சிவ­னே­ச­துரை சந்­தி­ர­காந்­தனின் ஊடகப் பேச்­சா­ள­ராக இருந்த அசாத் மெள­லான செனல் 4 தொலைக்­காட்­சிக்கு அளித்த பேட்டில் கூறிய விட­யங்­க­ளோடு இந்த தொலை­பேசி அழைப்பை ஒப்­பீடு செய்யும் போது அது இரா­ணுவ உள­வுத்­து­றையின் ஒரு­வ­ரது அழைப்­பா­கவோ அல்­லது அசாத் மெள­லா­னாவின் அழைப்­பா­கவோ கூட இருப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் அதி­க­மாகும்.

அத்­துடன் 2019 ஏப்ரல் 19 அன்று ஜமீல் தனது வீட்டை விட்டு வெளி­யே­று­கின்ற சிசி­டிவி காட்­சி­களை, 2019 ஏப்ரல் 21 அன்று மாலை பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரிவின் அதி­கா­ரிகள் ஆய்வு செய்­துள்­ளனர். அத்­துடன் அந்தக் காட்­சிகள் அடங்­கிய டி.வி.ஆர் இயந்­தி­ரத்தை பயங்­க­ர­வாத தடுப்பு பிரிவின் அதி­கா­ரிகள் எடுத்துச் சென்­றுள்­ளனர். அவ்­வாறு எடுத்துச் செல்லும் போது 2019 மார்ச் 31 முதல் ஏப்ரல் 21 மாலை இயந்­திரம் அகற்­றப்­படும் வரை­யி­லான காட்­சிகள் பதி­வா­கி­யி­ருந்­துள்­ளது. எடுத்துச் செல்­லப்­பட்ட DVR-இல் இருந்து 2019 ஏப்ரல் 19, அன்று காலை 8:00 மணி முதல் 2019 ஏப்ரல் 21, அன்று பிற்­பகல் 2:30 மணி வரை­யி­லான காணொளிப் பதி­வுகள் மட்டும் இல்லை என்­பது ஜனா­தி­பதி ஆணைக் குழுவில் தெரி­ய­வந்­தது. DVR எடுத்துச் செல்­லப்­பட்டு விசா­ரணை நடத்­தப்­பட்­ட­போது குறித்த வீடியோ காட்­சிகள் அழிந்­தி­ருக்­கலாம் என்று அதி­கா­ரிகள் ஆணைக் குழு முன் கூறி­யி­ருந்­தனர். ஆரம்­பத்தில் குறித்த காட்­சிகள் இருந்­துள்ள நிலையில், பின்னர் ஜமீல் வீட்டை விட்டு வெளி­யே­றிய நாளி­லி­ருந்து பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரிவு அதி­கா­ரிகள் இயந்­தி­ரத்தை அகற்றும் வரை­யி­லான பகுதி மட்டும் அழிக்­கப்­பட்­டுள்­ளது. ஜமீலை வேவு­பார்த்த அல்­லது பின் தொடர்ந்த பயங்­க­ர­வாதம் தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­க­வல்ல பிர­தான நிறு­வ­னமே பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவு. எனவே அவர்­க­ளது இந்த நட­வ­டிக்கை மிக்க சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

2019 ஏப்ரல் 21, அன்று நடந்த தொடர் குண்­டு­வெ­டிப்புத் தாக்­கு­தல்­களின் சிறிது நேரத்­துக்கு பிறகு, இரா­ணுவ உளவுத் துறை பணிப்­பாளர், இரா­ணுவ உளவுத் துறை அதி­கா­ரிகள் குழுவை ஜமீலின் வீட்­டிற்கு அனுப்­பி­ய­தாக ஜனா­தி­பதி ஆணைக் குழுவில் தெரி­ய­வந்­தது. அத்­துடன் எப­னிசர் பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் ஜமீலைச் சோத­னை­யிட்ட தனியார் பாது­காப்பு அதி­கா­ரியை, புல­னாய்வு அதி­கா­ரிகள் தொலை­பே­சியில் அழைத்து, ஹேவ்லாக் புத்தர் சிலைக்கு அருகில் வரு­மாறு அறி­வு­றுத்­தி­ய­தா­கவும் ஜனா­தி­பதி ஆணைக் குழுவில் தெரி­ய­வந்­தது. அந்த தனியார் பாது­காப்பு அதி­காரி அங்கு சென்­ற­போதும், சம்­பந்­தப்­பட்ட குழு­வினர் வரா­மையால், அவர்கள் ஆபத்தை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கி­றார்­களா என்ற சந்­தேகம் எழுந்­த­தா­கவும், அந்த‌ பாது­காப்பு அதி­காரி உட­ன­டி­யாக வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்­திற்குச் சென்­ற­தா­கவும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது.

ஜமீல் உறுப்­பி­ன­ராக இருந்த (மேலும் மூன்று குண்­டு­தா­ரிகள் உறுப்­பு­ரிமை வகித்த) ஜே.எம்.ஐ. அமைப்­புக்கு சுரேஷ் சலே உள­வுத்­துறை பணிப்­பா­ள­ராக இருந்த போது, இரா­ணுவ உளவுத் துறை முகவர் ஒரு­வரை அனுப்­பி­யுள்­ள­துடன், அந்த முக­வ­ருக்கு ஜே.எம்.ஐ. உறுப்­பி­ன­ராக இருந்­து­கொண்டு அந்த அமைப்பில் கலந்­து­ரை­யா­டல்­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக வெளி­நாட்டு உள­வுத்­துறை ஒன்றின் ஒத்­து­ழைப்­புடன் இரா­ணுவ உள­வுத்­துறை பணிப்­பாளர் சபை­யினால் வீடொன்று பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டி­ருந்­த­தாக ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவில் வெளிப்­ப‌­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அதில் சில கலந்­து­ரை­யா­டல்கள் ஒலிப்­ப­திவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் விசா­ர­ணை­களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

2018 டிசம்பரில் சஹ்ரான் இந்தியாவிற்கு பயணம் செய்ததாக இராணுவ உளவுத்துறை பணிப்பாளர் சபை இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு கவுன்சிலுக்குத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஆணைக் குழுவில் தெரியவந்தது.

இந்த அனைத்து விட­யங்­க­ளையும் ஒன்று சேர்த்து பார்க்கும்போது, இலங்­கையின் தேசிய உளவுத்துறை மற்றும் இரா­ணுவ உளவுத்துறை ஆகி­யன சஹ்ரான் ஹாஷிமின் கும்பல் தொடர்பில் பூரண அறி­வுடன் செயற்­பட்­டி­ருப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் மிக அதிகம். அது மட்­டு­மல்­லாமல், உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் குறித்த தக­வல்­களை முன் கூட்­டியே நேர­டி­யாக அவர்கள் பெற்­றி­ருப்­ப­தற்­கான வாய்ப்­புக்­களும் மிக அதி­க­மாகும்.
அப்­ப­டி­யானால், இந்த உளவுத் துறைகள், தம் வசம் தக­வல்­களை வைத்­துக்­கொண்டும் குறித்த தாக்குதல்களை தடுக்க போதிய நடவடிக்கைகளை எடுக்காதது ஏன், யாரின் தேவைக்காக என்ற கேள்விக்கான பதிலே, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை அடையாளம் காட்டப் போகும் மிகப் பெரும் சான்றாக அமையப் போகிறது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.