தேர்தல் முடியும் வரை பள்ளிவாசல்களில் நம்பிக்கையாளர் தெரிவை இடைநிறுத்துக

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவிப்பு

0 92

உள்­ளூ­ராட்­சி ­மன்றத் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ள­ நி­லையில் பள்­ளி­வா­சல்­களில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள புதிய நம்­பிக்­கை­யாளர் தெரி­வினை தேர்தல் முடி­யும்­வரை இடை­நி­றுத்­து­மாறு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் அனைத்து பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் அனுப்­பி­வைத்­துள்ள கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
நடை­பெ­ற­வி­ருக்கும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் 2025 கார­ண­மாக அனைத்து பதிவு செய்­யப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சல்கள், தக்­கி­யாக்கள் மற்றும் சாவி­யாக்­களில் நடை­பெற ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள புதிய நம்­பிக்­கை­யாளர் தெரி­வினை தேர்தல் முடி­யும்­வரை இடை­நி­றுத்­து­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கி­றீர்கள்.

நம்­பிக்­கை­யா­ளர்­களின் பத­விக்­காலம் முடி­வுற்­றி­ருப்பின் புதிய தெரிவு நடை­பெ­றும்­வரை தற்­போ­தைய நம்­பிக்­கை­யா­ளர்கள் நம்­பிக்கைப் பொறுப்­பா­ளர்­க­ளாக செயற்­ப­டு­மாறு உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் முடி­வுற்­ற­வுடன் நம்­பிக்­கை­யாளர் பத­விக்­காலம் முடி­வுற்­றுள்ள சகல பள்­ளி­வா­சல்கள், தக்­கி­யாக்கள் மற்றும் சாவி­யாக்­க­ளிலும் நம்­பிக்­கை­யாளர் தெரிவை நடாத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கி­றீர்கள் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இக்­க­டி­தத்தின் பிர­திகள், வக்பு சபையின் தலை­வ­ருக்கும் உறுப்­பி­னர்­க­ளுக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­துடன் திணைக்­க­ளத்தின் சகல கள உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.