உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விவகாரம்: விசாரணையில் சர்ச்சைக்குரிய ஆறு விடயங்கள் இரண்டை கண்டறிந்து உறுதிப்படுத்தியுள்ளோம்

உரிய முறையில் மர்மங்களை அவிழ்ப்போம் என்கிறார் ஜனாதிபதி

0 87

(எம்.வை.எம்.சியாம்)
உயிர்த்த ஞாயி­று­ தி­னத்­தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டதில் இருந்து ஐந்­தரை வரு­டங்கள் உண்­மை­யான சூத்­தி­ர­தா­ரியை மூடி மறைக்­கவே விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. எனினும் கடந்த ஆறு மாதத்­திற்குள் விசா­ர­ணைகள் மீள ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. அதில் சர்ச்­சைக்­கு­ரிய 6 விட­யங்­களை நாம் கண்­ட­றிந்­துள்ளோம். அவற்றுள் இரண்டு விட­யங்கள் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளன. அதில் எவ்­வா­றான மர்­ம­மான விட­யங்­கள் இருந்­தாலும் அதனை அவிழ்க்க வேண்­டிய முறையில் நாம் அவிழ்ப்போம். அனைத்­திற்கும் நாம் நீதியை நிலை­நாட்­டுவோம் என ஜனா­தி­பதி அநு­ர­ கு­மார திசா­நா­யக்க தெரி­வித்தார்.

கம்­ப­ஹாவில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற தேசிய மக்கள் சக்­தியின் தேர்தல் பிரச்­சார கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி
உயிர்த்த ஞாயி­று­தி­னத்­தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்டு 6 வரு­டங்கள் கடந்­துள்­ளன. இந்த 6 வரு­டங்­களில் ஐந்­தரை வரு­டங்கள் எதற்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டது. 2019 ஏப்ரல் 21 ஆம் திக­தி­யி­லி­ருந்து தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டதில் இருந்து ஐந்­தரை வரு­டங்கள் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை மூடி­ம­றைக்­கவே நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. 6 வரு­டங்கள் கழிந்து உள்­ளன.ஆனால் ஐந்­தரை வரு­டங்கள் எதற்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. தாக்­கு­தலின் சூத்­தி­ர­தா­ரி­களை மறைப்­ப­தற்கும் ஒழிப்­ப­தற்கும் சாட்­சி­களை மூழ்­க­டிக்­கப்­ப­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. விசா­ர­ணை­களின் திசை­களை மாற்­று­வ­தற்கு முயற்­சித்­துள்­ளனர். உண்­மையில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டிய பகு­தி­களை கைவிடும் நோக்­கி­லேயே இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. தாக்­குதல் இடம்­பெற்று 6 வரு­டங்கள் கடந்­துள்ள போதிலும் அதில் ஐந்­தரை வரு­டங்கள் விசா­ர­ணை­களை குழப்பிய­டிக்­கவே நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

எனினும் கடந்த 6 மாத கால­மா­கவே விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. அதில் பலன் உள்­ளது. தீர்க்­கப்­பட வேண்­டிய பல விடயங்கள் இருப்­ப­தாக நாம் பல தட­வைகள் மேடை­களில் கூறினோம். அதில் 6 சந்­தர்ப்­பங்­களை குறிப்­பிட்­டுள்ளோம்.அந்த 6 விட­யங்­களில் இரண்டு விட­யங்கள் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளன.

வவு­ண­தீ­வுக்கு சென்று ஜெக்­கட்­டுக்­களை அங்கு போட்­ட­வர்கள் யார்? F.B.I. க்கு ஒரு இரகசிய குறியீட்டை வழங்கியது. சந்தேகத்துக்குரிய அந்த தொலைபேசி யாருடையது என தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழைய விடயங்களாக இருந்தாலும் அதனை அவிழ்க்க வேண்டிய முறையில் அதனை அவிழ்ப்போம். இவை அனைத்திற்கும் நாம் நீதியை நிலைநாட்டுவோம் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.