உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள்: ஆணைக்குழு அறிக்கையை ஆராய சிறப்பு பொலிஸ் குழு

தலைவராக அசங்க கரவிட்ட ஷானி அபேசேகரவும் உள்ளடக்கம்

0 59

(எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறு தின பயங்­க­ர­வாதத் தாக்­குதல் தொடர்­பான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்கை ஜனா­தி­ப­தியால் பொலி­ஸா­ருக்கு கைய­ளிக்­கப்­பட்­டுள்ள நிலையில், அந்த அறிக்­கையை ஆராய்ந்து அடுத்த கட்ட நட­வ­டிக்கை தொடர்பில் தீர்­மா­னிக்க சிறப்பு பொலிஸ் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

2025 ஏப்ரல் 22 ஆம் திக­தி­யி­டப்­பட்ட கடிதம் ஊடாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த வீர­சூ­ரிய இக்­கு­ழுவின் தனது பிர­தி­நி­தி­யா­கவும் தலை­வ­ரா­கவும் குற்றப் புல­ன­யவுத் திணைக்­களம் மற்றும் நிதிக் குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் ஆகி­ய­வற்­றுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கர­விட்­டவை நிய­மித்­துள்ளார். அதன்­படி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கர­விட்ட இக்­கு­ழுவின் ஏனைய உறுப்­பி­னர்­களை நிய­மிக்கும் அதி­க­ரத்தை பெற்­றுள்ளார்.

பொலிஸ் மா அதி­பரின் கடிதம் பிர­காரம், ஒரு மாத காலத்­துக்குள் இவ்­வ­றிக்­கையை ஆராய்ந்து அடுத்த கட்டம் தொடர்பில் விஷேட அறிக்­கை­யொன்­றினை பொலிஸ் மா அதி­ப­ருக்கு அளிக்க அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

அதன்­படி, குறித்த விசா­ரணை அறிக்­கையை ஆய்வு செய்­வ­தற்­காக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கர­விட்ட தலை­மை­யி­லான குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் புத்­திக மன­துங்க தெரி­வித்தார்.

உயிர்த்த ஞாயிறு தின பயங்­க­ர­வாதத் தாக்­குதல் தொடர்­பான வர­வி­ருக்கும் விசா­ர­ணைகள் குறித்து ஊட­கங்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் இந்தக் கருத்தை வெளி­யிட்டார்.

குழுவின் மற்ற உறுப்­பி­னர்கள் பின்­வ­ரு­மாறு:
பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிய­சேன அம்­பா­வில- குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம்
சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்­தி­யட்சர் இமேஷா முத்­து­மாலி பணிப்­பாளர் குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம்

சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் எச்.டி.கே.எஸ். பெரேரா பணிப்­பாளர், பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரிவு
எனினும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கர­விட்ட பின்னர் இந்த குழுவின் மற்­றொரு உறுப்­பி­ன­ராக மத்­திய குற்ற விசா­ரணை பணி­ய­கத்தின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஷானி அபே­சே­க­ர­வையும் நிய­மித்­துள்ளார். ஷானி அபே­சே­க­ரவை ஆரம்­பத்தில் நிய­மிக்­காம தொஅர்பில் பல்­வேறு அதி­ருப்­திகள் எழுந்த நிலையில், பின்னர் அவர் அக்­கு­ழுவில் உள்­வ­னக்­கப்பட்­டுள்ளார்.

இந்த நிலையில் ஜனா­தி­பதி ஆணைக்­குழு அறிக்­கையை ஆய்வு செய்ய பல துணைக் குழுக்­களை இந்தக் பிர­தான குழு அமைக்கும் எனவும் இதன்­போது வெளிப்­படும் புதிய விட­யங்கள் குறித்து விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­க­பப்டும் எனவும் என்று பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் தெரி­வித்தார்.

இந்த விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்கை 66,000–67,000 பக்­கங்­க­ளுக்கு இடையில் இருப்­பதால், தற்­போது நிறுவப்பட்ட குழுக்களால் அறிக்கை ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் விசாரணைகள் தொடங்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.