உள்ளூராட்சி மன்ற தேர்தல் தபால் மூலமான வாக்கெடுப்பு இன்று

0 71

(இரா.ஹஷான்)
உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­கான தபால்­மூல வாக்­கெ­டுப்பு இன்று நடை­பெ­ற­வுள்­ளது. வாக்­க­ளிப்­புக்கு தகுதி பெற்­றுள்ள சகல அரச உத்­தி­யோ­கஸ்­தர்­களும் வாக்­க­ளிக்க வேண்டும் என்று தேர்­தல்கள் ஆணைக்­குழு வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

தபால்­மூல வாக்­க­ளிப்பின் போது இய­லு­மான வரையில் அலு­வ­லக அடை­யாள அட்­டையை ஆள­டை­யாள உறு­திப்­ப­டுத்­த­லுக்கு சமர்ப்­பிப்பதை தவிர்த்துக் கொள்­ளு­மாறும், உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட ஆள­டை­யா­ளத்தை சமர்ப்­பிக்­கு­மாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­கான வாக்­கெ­டுப்பு 2025.05.06 ஆம் (செவ்­வாய்க்­கி­ழமை) திகதி நடை­பெ­ற­வுள்­ளது. 339 உள்­ளூராட்சி மன்ற அதி­கார சபை­க­ளுக்­கான தபால்­மூல வாக்­கெ­டுப்பு இன்றும், நாளையும் நடை­பெ­ற­வுள்­ளது. அத்­துடன் எதிர்­வரும் வாரம் திங்­கட்­கி­ழமை மற்றும் செவ்­வாய்க்­கி­ழமை தபால்­மூல வாக்­கெ­டுப்பு நடை­பெ­ற­வுள்­ளது.
இம்­முறை 339 உள்­ளூ­ராட்சி மன்றத் அதி­கார சபை­க­ளுக்கு தபால்­ மூல வாக்­க­ளிப்­புக்கு சுமார் 648,495 அரச உத்­தி­யோ­கஸ்த்­தர்கள் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். ஆகவே தகுதி பெற்­றுள்­ள­வர்கள் தவ­றாமல் வாக்­க­ளிக்க வேண்டும் என்று தேர்­தல்கள் ஆணைக்­குழு வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

ஸ்ரீ தலதா வழி­பாட்டு யாத்­தி­ரையில் பாது­காப்பு நிமித்தம் சேவையில் ஈடு­பட்­டுள்ள பொலிஸார் மற்றும் பாது­காப்பு தரப்­பி­ன­ருக்கு கண்டி உயர் மகளிர் கல்­லூ­ரியில் விசேட வாக்­க­ளிப்பு மத்­திய நிலையம் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

எதிர்­வரும் மாதம் 6 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள வாக்­கெ­டுப்­புக்­கு­ரிய உத்­தி­யோ­க­பூர்வ வாக்­காளர் அட்­டை­களை எதிர்­வரும் 30 ஆம் திக­திக்குள் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவில் ஒப்­ப­டைப்­ப­தாக அரச அச்­சகத் திணைக்­களம் குறிப்­பிட்­டுள்­ளது.

ஒரு­சில உள்­ளூ­ராட்­சி ­மன்றத் அதி­கா­ர­ச­பைகள் தொடர்பில் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் வழங்­கிய உத்­த­ர­வுக்கு அமைய வாக்காளர் அட்டைகளை மீண்டும் அச்சிட நேரிட்டதால் இந்த தாமதம் ஏற்பட்டதாகவும், வாக்காளர்களுக்கு தாமதமில்லாமல் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் என்று அரச அச்சகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.