டேன் பிரியசாத் சுட்டுக் கொலை

பின்னணியில் கஞ்சிபானை இம்ரானின் குழு விசாரணைக்கு 6 பொலிஸ் குழுக்கள்; மூவர் கைது துப்பாக்கிதாரிகள் அடையாளம் காணப்பட்டனர் தந்தை , மகனுக்கு வெளிநாட்டு பயண தடை

0 114
  • பின்னணியில் கஞ்சிபானை இம்ரானின் குழு
  • விசாரணைக்கு 6 பொலிஸ் குழுக்கள்; மூவர் கைது
  • துப்பாக்கிதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்
  • தந்தை , மகனுக்கு வெளிநாட்டு பயண தடை

எப்.அய்னா
சிங்­கள தேசிய இயக்கம் என்ற அமைப்பின் ஒருங்­கி­ணைப்­பா­ள­ராகப் பணி­யாற்­றிய, பொது ஜன பெர­மு­னவின் கொலன்­னாவ நகர சபை வேட்­பாளர் டேன் பிரி­யசாத் சுட்டுக் கொல்­லப்­பட்­டுள்ளார்.

நேற்று முன் தினம் இரவு நடந்த துப்­பாக்கிச் சூட்டில் படுகாய­ம­டைந்து கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அன்­றைய தினம் இரவு 11.20 மணி­ய­ளவில் அவர் உயி­ரி­ழந்­த­தாக கொழும்பு தேசிய வைத்­தி­ய­சாலை தெரி­வித்­தது.
வெல்­லம்­பிட்டி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட சால­முல்ல பகு­தியில் அமைந்­துள்ள லக்­சந்த செவன தொடர்­மாடி குடி­யி­ருப்பில் 6 ஆவது மாடியில் அமைந்­துள்ள அவ­ரது வீட்­டுக்கு கைத்­துப்­பாக்­கி­யுடன் நுழைந்த அடை­யாளம் தெரி­யாத துப்­பாக்­கி­தா­ரிகள் அவரை இரவு 9.05 மணி­ய­ளவில் சுட்­டு­விட்டு தப்பிச் சென்­றுள்­ளனர். நண்­பர்­க­ளுடன் மது விருந்­தொன்­றினை வீட்­டோடு ஒட்­டி­யுள்ள திறந்த வெளிப் பகு­தியில் நடாத்­திக்­கொண்­டி­ருந்தபோது இந்த துப்­பாக்கிச் சூடு நடாத்­தப்­பட்­டுள்­ளது.

மோட்டார் சைக்­கிளில் வந்த இரண்டு அடை­யாளம் தெரி­யாத நபர்கள், தொடர்­மாடி குடி­யி­ருப்பின் படிக்­கட்­டுக்­களால் 6 ஆவது மாடி வரை சென்று இந்த துப்­பாக்கிச் சூட்டை நடாத்­தி­விட்டு, அதே வழி­யாக தப்பிச் சென்­றுள்­ளனர். துப்­பாக்கிச் சூட்டில் காய­ம­டைந்த டேன் பிரி­யசாத், கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயி­ரி­ழந்­த­தாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை வெளி­யிட்­டுள்­ளது.

கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் தக­வல்கள் பிர­காரம், டேன் பிரி­ய­சாத்தின் தோள்­பட்டை பகு­தியில் இரண்டு தோட்­டாக்­களும் மார்பு பகு­தியில் இரண்டு தோட்­டாக்­களும் பாய்ந்­தி­ருந்­த­தா­கவும் காலிலும் துப்­பாக்கிச் சூட்டு காயம் இருந்­த­தா­கவும் அறிய முடி­கின்­றது.

இந்த துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வத்தில் மது விருந்தில் இருந்த மற்­றொ­ருவர் சிறிய காயங்­க­ளுடன் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.

இந்த நிலையில் குறித்த சம்­பவம் தொடர்பில் வெல்­லம்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தை மையப்­ப­டுத்தி, கொழும்பு தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் மாரப்­ப­னவின் கட்­டுப்­பாட்டில் 6 பொலிஸ் குழுக்கள் நிய­மிக்­கப்­பட்டு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. அந்த விசா­ர­ணை­க­ளுக்கு உளவுப் பிரி­வி­னரின் உத­வியும் பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யி­னரின் உத­வியும் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­தது.

அதன்­படி நேற்று மாலை­யாகும் போதும், துப்­பாக்கிச் சூட்டை முன்­னெ­டுத்த துப்­பாக்­கி­தா­ரி­களை அடை­யாளம் கண்­டுள்­ள­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார். சி.சி.ரி.வி. மற்றும் இதர சாட்­சி­களின் பிர­காரம் துப்­பாக்­கி­தா­ரி­களை அடை­யாளம் கண்­டுள்­ள­தா­கவும் அவர்­களை கைது செய்ய சிறப்பு நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ள­தா­கவும் அந்த அதி­காரி குறிப்­பிட்டார்.

இத­னை­விட இந்த துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வத்­துக்கு உதவி ஒத்­தாசை புரிந்­தார்கள் என்ற சந்­தே­கத்தில் சந்­தேக நபர்கள் மூவ­ரையும் பொலிஸார் கைது செய்­துள்­ளனர். அவர்­க­ளிடம் வெல்­லம்­பிட்­டிய பொலிஸார் விசா­ரணை செய்து வரு­வ­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் புத்­திக மன­துங்க தெரி­வித்தார்.

போதைப் பொருள் பின்­னணி:
இது­வ­ரையில் பொலிஸார் முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­களில் டேன் பிரி­ய­சாத்தின் கொலை­யுடன் வெளி­நா­டொன்றில் இருப்­ப­தாக சந்­தே­கிக்­க­ப்படும் கஞ்­சி­பானை இம்­ரானின் பாதாள உலக குழு தொடர்­பு­பட்­டுள்­ளமை தெரி­ய­வந்துள்­ள­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் அதி­காரி ஒருவர் கூறினார். இது குறித்த சில குரல் பதி­வுகள் பொலிஸ் உளவுப் பிரி­வி­ன­ருக்கு கிடைக்கப் பெற்­றுள்­ள­தா­கவும் அவற்றை மையப்­ப­டுத்தி மேல­திக விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

போதைப் பொருள் கடத்தல் வர்த்­த­கத்தில் ஏற்­பட்ட தக­ராறு இந்த கொலைக்­கான கார­ணி­யாக இருக்க வேண்டும் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர். டேன் பிரி­யசாத் இந்த ஆண்டின் ஆரம்­பத்தில் டுபாய் சென்று திரும்­பிய பின்னர், போதைப் பொருள் கடத்தல் குழு­வொன்­றுக்கு மிக நெருக்­க­மாக செயற்­பட்­டுள்­ளமை தொடர்­பி­லான தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில், அத­னோடு தொடர்­பு­பட்ட பிரச்­சினை ஒன்று கொலைக்­கான காரணம் என நம்­ப­ப்ப­டு­கின்­றது.

வேட்­பாளர் டேன் :
கொலை செய்­யப்­பட்ட டேன் பிரி­யசாத், 2025 உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் இலங்கை பொது­ஜன பெர­மு­னவின் கொலன்­னாவ நகர சபைக்­காக மீதொட்­ட­முல்ல தொகு­திக்­கான பட்­டியல் வேட்­பா­ள­ராக வேட்­பு­ம­னுக்­களை சமர்ப்­பித்­தி­ருந்தார் என அக்­கட்­சியின் பொதுச் செய­லா­ளரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சட்­டத்­த­ரணி சாகர காரி­ய­வசம் தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன் டேன் பிரி­ய­சாத்தின் மர­ணத்தைத் தொடர்ந்து எடுக்க வேண்­டிய அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கைகள் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்­கப்­ப­ட­வில்லை என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

“இதற்கு அர­சாங்கம் பொறுப்­புக்­கூற வேண்டும். ஒவ்­வொரு நாளும், வெவ்­வேறு இடங்­களில் இரண்டு அல்­லது மூன்று பேர் சுட்டுக் கொல்­லப்­ப­டு­கி­றார்கள். இவற்றை உள்­ளக மோதல்கள் எனக் கூறி அர­சாங்கம் எளிதில் கை கழு­வு­கி­றது. நான் கொல்­லப்­பட்­டாலும், அவற்றை உட் கட்சி மோதல்­க­ளாக சித்­த­ரிக்க முடியும். அவர்கள் மிகவும் வெட்­க­மற்ற வேலையைச் செய்­கி­றார்கள்.’ என சாகர காரி­ய­வசம் குறிப்­பிட்­டுள்ளார்.

எவ்­வா­றா­யினும் டேன் பிரி­ய­சாத்தின் கொலை தொடர்­பாக தேவை­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக பொது மக்கள் பாது­காப்பு பிரதி அமைச்சர் சட்­டத்­த­ரணி சுனில் வட்­ட­கல குறிப்­பிட்டார்.

“ஒரு கொலை நடந்­துள்­ளது. பொது மக்கள் பாது­காப்பு அமைச்சு இது தொடர்­பாக தேவை­யான முடி­வு­களை எடுத்­துள்­ளது. இது தொடர்­பாக சிறப்பு தலை­யீ­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. வெல்­லம்­பிட்டி பொலி­ஸாரின் தலை­மையில் கிடைக்கப் பெற்­றுள்ள உளவுத் தக­வல்­களின் அடிப்­ப­டையில் சில நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. விசா­ர­ணைகள் நடந்து வரு­கின்­றன.’ என சுனில் வட்­ட­கல தெரி­வித்­துள்ளார்.

நீதி­மன்றில் அறிக்கை சமர்ப்­பித்த பொலிஸ் :
இந்த நிலையில், இந்தச் சம்­பவம் தொடர்பில் வெல்­லம்­பிட்டி பொலிஸார் நேற்று (23) கொழும்பு நீதிவான் நீதி­மன்றில் முதல் தகவல் அறிக்­கையை தாக்கல் செய்­தனர்.
இந்தக் குற்­றத்தில் தந்தை ஒரு­வரும் அவ­ரது மகனும் ஈடு­பட்­டி­ருப்­ப­தாக சந்­தே­கிப்­ப­தாக வெல்­லம்­பிட்டி பொலிஸார் நீதி­மன்­றுக்கு தெரி­வித்­தனர்.

அதன்­படி, தந்தை மற்றும் மக­னான பந்­துல பியால் மற்றும் மாதவ சுதர்­ஷன ஆகியோர் வெளி­நாடு செல்­வ­தற்கு தடை விதிக்கும் உத்­த­ரவைப் பிறப்­பிக்­கு­மாறும், அவர்­களின் தொலை­பேசி பதி­வு­களை பெற்­றுக்­கொள்ள உத்­த­ரவைப் பிறப்­பிக்­கு­மாறும் பொலிஸார் நீதி­மன்­றத்தைக் கோரினர்.

அதன்­படி, கொழும்பு மேல­திக நீதிவான் ஹர்­ஷன கெக்­கு­னா­வல அந்தக் கோரிக்­கையை ஏற்­றுக்­கொண்டு, குடி­வ­ரவு மற்றும் குடி­ய­கல்வு கட்­டுப்­பாட்­டாளர் மற்றும் பிற அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­வு­களை பிறப்­பித்து வெளி­நாட்டு பயணத் தடையும் விதித்தார்.
குறித்த இருவர் தொடர்­பிலும் நீதி­மன்­றுக்கு விட­யங்­களை முன் வைத்த வெல்­லம்­பிட்­டிய பொலிஸார், இறந்­த­வரின் சகோ­த­ர­ரான திலின பிரசாத் சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு வெட்டிக் கொல்­லப்­பட்­ட­தா­கவும், இது தொடர்­பாக குறித்த தந்தை மற்றும் மகன் மீது நீதி­மன்­றத்தில் வழக்கு நிலு­வையில் இருப்­ப­தா­கவும் தெரி­வித்­தனர்.

அத்­துடன் டேன் பிரி­ய­சாத்தின் கொலை சம்­பவம் தொடர்­பாக சுமார் 10 பேரிடம் வாக்­கு­மூ­லங்கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும், மேலும் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு வரு­வ­தா­கவும் பொலிஸார் நீதி­மன்­றத்தில் தெரி­வித்­தனர்.

டுபாயில் டேன் இறந்­த­தாக வந்த வதந்தி:
முன்­ன­தாக கடந்த ஜன­வரி 29 ஆம் திகதி, டேன் பிரி­யாசாத் டுபாயில் ஒரு கார் விபத்தில் இறந்­து­விட்­ட­தாக செய்தி பர­வி­யது. அவர் இறந்­து­விட்­ட­தாக சமூக ஊட­கங்­களில் பல பதி­வுகள் வெளி­யி­டப்­பட்­டன. இருப்­பினும், அவர் இறந்­து­விட்­ட­தாக வெளி­யான அந்த தக­வல்கள் பொய் என தெரி­ய­வந்­தது.

இவ்­வா­றான பின்­ன­ணியில், கடந்த பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி டுபாயில் இருந்து இலங்­கைக்கு வந்த டேன் பிரி­யசாத், கல்­க­முவ நீதிவான் நீதி­மன்­றத்தில் நிலு­வையில் உள்ள வழக்கு தொடர்­பாக பிறப்­பிக்­கப்­பட்ட வெளி­நாட்டு பயணத் தடையின் கீழ் கட்­டு­நா­யக்க பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் வைத்து சி.ஐ.டி.யினரால் கைது செய்­யப்­பட்டார்.

கைது செய்­யப்­பட்ட டேன் பிரி­யசாத் மேல­திக விசா­ர­ணைக்­காக நிக்­க­வ­ரட்­டிய வலய குற்ற தடுப்பு பிரி­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டார்.

2024 ஆம் ஆண்டு போதைப்­பொருள் கடத்­தல்­கா­ரரை கைது செய்ய வேண்டாம் என்று நன்­னே­ரியா பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரிக்கு அழுத்தம் கொடுத்­த­தற்­காக நிக்­க­வெ­ரட்­டிய வலய பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவு அவ­ருக்கு எதி­ராக விசா­ர­ணையை முன்­னெ­டுத்­துள்­ளது. இது தொடர்­பாக, கல்­க­முவ நீதிவான் நீதி­மன்றம் பிறப்­பித்த இரண்டு உத்­த­ர­வு­க­ளின்­படி அவர் கைது செய்­யப்­பட்­டி­ருநதார். பின்னர் விளக்­க­ம­றி­யலில் இருந்த அவர், பிணையில் விடு­விக்­கப்பட்­டி­ருந்தார்.

டேன் மீதான ஏனைய குற்­றச்­சாட்­டுக்கள்:
டேன் பிரி­யசாத் இன­வாத கருத்­துக்­களைப் பரப்­பு­வ­தாக பல்­வேறு தரப்­பி­ன­ராலும் அடை­யா­ள­ப்படுத்­தப்­பட்டு குற்றம் சுமத்­தப்பட்­டுள்­ளது. அது தொடர்பில் பல்­வேறு முறைப்­பா­டு­களும் பொலிஸ் புத்­த­கங்­களில் பதி­வா­கி­யுள்­ளன.

கடந்த 2022 மே 9 ஆம் திகதி அன்று கொழும்பின் காலி முகத்­தி­டலில் நடை­பெற்ற அமை­தி­யான போராட்­டத்தின் மீதான தாக்­குதல் வழக்கில் (அர­கல மீதான தாக்­குதல்) டேன் பிரி­யசாத் 6வது சந்­தேக நப­ராக பெய­ரி­டப்­பட்­டுள்ளார்.

இத­னை­விட கல்­கிசை பகு­தியில் ரோஹிங்­கியா அக­திகள் வசிக்கும் கட்­டி­டத்­திற்கு அருகில் ஒழுங்­கீ­ன­மாக நடந்து கொண்­ட­தற்­காக டேன் 2017 ஆம் ஆண்டு கைது செய்­யப்­பட்டார்.

மீதொட்­ட­முல்ல பகுதியில் முஸ்லிம் நபரொருவரை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அவர் 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதனைவிட நாட்டில் நடந்த பல வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக டேன் பிரியசாத் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டார்.

நீதி­மன்றம் விதித்த பயணத் தடை கார­ண­மாக, செப்­டம்பர் 2024 இல் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­லி­ருந்து வெளி­நாடு செல்ல முயன்­ற­போது குடி­வ­ரவு அதி­கா­ரி­களால் அவர் திருப்பி அனுப்­பப்­பட்ட சம்­ப­வமும் பதிவாகியிருந்தது.

சகோதரரின் கொலை
இதற்கிடையில், கடந்த 2022 ஆம் ஆண்டில், டேன் பிரியசாத்தின் சகோதரர் திலின பிரியசாத் ஒருகொடவத்த மேம்பாலம் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். போதைப் பொருள் கடத்தல் பிரச்சினையில் அக்கொலை நடந்திருந்ததாக பின்னர் தெரியவந்தது. அக்கொலைக்கும் டேன் பிரியசாத் இப்போது கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும் இடையே தொடர்புகள் இருக்கின்றனவா எனவும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.