மாணவ சமூகத்தின் உடல், உள நெருக்கீடுகள்

GSHS ஆய்வின் திடுக்கிடும் புள்ளிவிவரத் தகவல்கள்

0 122

எஸ்.ஏ.எம். றிஸ்வி (SLEAS)பிரதிக்கல்விப் பணிப்பாளர்
வலயக்கல்விப் பணிமனை, மாகோ

இன்­றைய உலகம் 5.0 கைத்­தொழில் புரட்­சியின் (industry 5.0 revolution) புது­மை­களின் மாற்­றங்­க­ளோடு இயங்­கிக்­கொண்­டி­ருக்­கி­றது. மனிதன் Global citizen ஆகவும், சமூகம் Online community ஆகவும் மாறி­யி­ருக்­கி­றது. இன்று வளரும் பரம்­பரை Alpha Gen கடந்து Beta Gen என தற்­போது அறி­மு­க­மா­யி­ருக்­கி­றது. அவர்­க­ளது நடத்­தை­களும் இயல்­பு­களும் வித்­தி­யா­ச­மா­னவை. இன்­றைய உலகம் phygital world என அழைக்­கப்­ப­டு­கி­றது. 5.0 கைத்­தொழில் புரட்­சியின் விளைவால் Artificial intelligence (AI செயற்கை நுண்ண­றிவு) என்­பது இன்று அனைத்து துறை­யிலும் தவிர்க்க முடி­யாத ஒரு விட­ய­மாக மாறி­யி­ருக்­கி­றது.

இதன் விளை­வாக உலகம் அனைத்து துறை­க­ளிலும் பெருந்­த­ரவுத் தொகு­தி­களை (Big Data) மையப்­ப­டுத்தி Human- robotic Combination இணைந்து இயங்க துவங்­கி­யி­ருக்­கி­றது. இவ்­வா­றான தொழி­நுட்ப வளர்ச்சி ஒரு புறம் சாத­க­மான நிலை­யினை ஏற்­ப­டுத்தும் அதே வேளையில் மறு­புறம் மனித குலத்தின் இருப்­பிற்கு அச்­சு­று­த­்­த­லாக அமைந்­து­வ­ரு­கி­றது.
அவுஸ்­தி­ரே­லிய நாட்டின் நீரி­ழிவு நோய் தொடர்­பான ஆய்­வு­களை மேற்­கொண்டு வரும் பேரா­சிரியர் போல் ஸிம்மிட் (paul zimmet professor of Monash university)உல­க­ளா­விய ரீதியில் வேக­மாக பரவி வரும் நீரி­ழிவு நோயின் கார­ண­மாக தற்­போது வாழும் பரம்­பரை தமது பெற்­றோ­ருக்கு முன்னால் இறந்து மடியும் (This is the first generation where children may die before their parents) அபாய நிலை­யினை எதிர்­கொள்ளும் என அவ­ரது ஆய்வில் அடை­யா­ளப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார். இது இன்­றைய வளரும் பிள்­ளை­களின் ஆரோக்­கியம் ஆயுள் தொடர்பில் பெரும் அவ­தா­னத்­துக்­கு­ரிய விட­ய­மாகும்.

எனவே இவ்­வா­றான பின்­ன­ணி­யுடன் எமது வளரும் பிள்­ளைகள் மாணவ பரம்­ப­ரையின் உட­லா­ரோக்­கியம் உள ஆரோக்­கியம் தொடர்பில் கவனம் செலுத்தும் போது பெரும் ஆபத்­தான சமிக்­ஞைகள் வெளிப்­ப­டு­வது கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும். இது தொடர்பில் விழிப்­பு­ணர்வு கலந்­து­ரை­யா­டல்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டி­யது காலத்தின் தேவையாகும். இதற்கு ஆதா­ர­மாக பின்­வரும் ஆய்வின் முடி­வுகள் எமது அவ­தா­னத்­துக்­கு­ரி­யது.

உலக சுகா­தார நிறு­வனம் (WHO) குடும்ப சுகா­தார பணி­யகம் மற்றும் கல்வி அமைச்சின் இணை முயற்­சி­யினால் மேற்­கொள்­ளப்­பட்ட Global School-based Student Health Survey – 2024 (GSHS 2024) அறிக்கை, இந்த துறையில் முக்­கி­ய­மான புள்­ளி­வி­வ­ரங்­க­ளையும், சவால்­க­ளையும் வெளிக்­கொ­ணர்­கி­றது.

இந்த ஆய்வின் முதன்மை நோக்கம், 13 முதல் 17 வய­துக்­குட்­பட்ட மாண­வர்­களின் உடல்­நிலை, மன­நிலை, உணவுப் பழக்­க­வ­ழக்­கங்கள், உடற்­ப­யிற்சி, போதைப்­பொருள் பயன்­பாடு, பாலியல் விழிப்­பு­ணர்வு, சமூக ஊடக பயன்­பாடு மற்றும் பெற்றோர் பங்­கேற்பு போன்ற பல துறை­களை ஆராய்­வ­தாகும். இந்த ஆய்­விற்­கான மாதி­ரி­களாக 40 அரச பாட­சா­லை­க­ளி­லி­ருந்து 2,912 மாண­வர்கள் தேர்வு செய்­யப்­பட்­டனர். இறு­தியில் 2,585 மாண­வர்­களின் தர­வுகள் ஆய்­வுக்குப் பயன்­பட்­டன. இந்த ஆய்வில் முக்­கிய விட­யங்கள் தொடர்பில் எமது அவ­­தா­னத்­திற்கு கொண்­டு­வ­ரு­வது நாளைய எமது வளரும் பரம்­பையின் ஆரோக்­கி­ய­மான வளர்ச்­சிக்கு உறு­து­ணை­யாக அமையும்.

கல்வி அமைச்சின் உத்­தி­யோக பூர்வ அறிக்­கை 2023 இன் (2024) பிர­காரம் இலங்­கையில் உள்ள 10,096 அரச பாட­சா­லை­களில் 3,882, 688 மாண­வர்கள் கற்வி கற்று வரு­கின்­றனர். எனவே இவர்­க­ளது ஆரோக்­கியம் உடல் நிலை என்­பன தொடர்பில் கவனம் செலுத்த வேண்­டி­யது அனை­வ­ரினதும் தலை­யாய கட­மை­யாகும். இலங்கை மக்­கள்­தொ­கை­யான 2.14 கோடியில், சுமார் ஐந்தில் ஒரு பகுதி (33 இலட்சம்) 10 முதல் 19 வய­துக்­குட்­பட்ட மைய­வ­யது (adolescent) வய­தி­னரைக் கொண்­டுள்­ளனர் (இலங்கை மக்கள் தொகை மற்றும் புள்­ளி­வி­வரத் திணைக்­களம், 2015). இவர்­களில் 71% பாட­சா­லைக்கு செல்­வோ­ராக காணப்­ப­டு­கின்­றனர்.

இலங்­கையின் அரசு மருத்­து­வ­ம­னை­களில் பதி­வாகும் மொத்த இறப்­பு­களில் சுமார் பாதி தொற்றா நோய்கள், நீண்­ட­கால நோய்கள் (NCDs) மூலம் ஏற்­ப­டு­பவை. இதய நோய்கள், புற்­றுநோய், நுரை­யீரல் நோய்கள் மற்றும் நீரி­ழிவு நோய் ஆகி­யவை இதில் பிர­தா­ன­மா­னவை. குறிப்­பாக, இரத்த ஓட்டக் குறை­பாடு கார­ண­மான இதய நோய் இறப்­பு­களில் 15.3% ஆகவும், புற்­றுநோய் 12.3% ஆகவும், மூளைத்­து­டிப்புக் குறை­பாடு 8.5% ஆகவும், இரத்த அழுத்தம் தொடர்­பான நோய்கள் 1.2% ஆகவும், நீரி­ழிவு நோய் 1.4% ஆகவும் பதி­வா­கி­யுள்­ளது. ஒன்­றரை வய­திற்­குட்­பட்ட குழந்­தை­களைத் தவிர, அனைத்­து­வ­ய­தி­ன­ரி­டையே காய­ம­டைதல் (traumatic injuries) என்­பது மருத்­து­வ­ம­னைக்கு அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தற்­கான முதன்மை கார­ண­மாக அமை­கி­றது. எனவே இவ்­வா­றான நோய்கள் ஏற்­ப­டு­வ­தற்கு அவற்றை தடுப்­ப­தற்கு பாடசாலை காலத்­தி­லேயே மாண­வர்கள் அறி­வூட்­டப்­பட வேண்டும். பாட­சாலை இதற்­கான ஒழுங்­கு­களை சரி­யாக மேற்­கொ­ண்டால் எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான ஆபத்­துக்­களை விட்டு இளம் சமூ­கத்தை பாது­காக்க முடியும். அந்த வகையில் GSHS 2024 ஆய்வில் சொல்­லப்­பட்ட சில விட­யங்கள் இங்கு சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.

உணவு பாது­காப்பும் ஊட்­டச்­சத்து குறை­பாடும்
(Food security Malnutrition)
பாட­சா­லைக்குச் செல்லும் தரம் 8–13 வரைக்­குட்­பட்ட ஆய்­விற்கு தெரிவு செய்­யப்­பட்ட மாண­வர்­களில் உணவு பெறு­வ­தற்கு வச­தி­யின்­மை­யினால் 4.3 வீத­மான மாண­வர்கள் தொட­ராக அல்­லது விட்­டு­விட்டு உண­வின்றி (பசி­யான நிலையில்) பாட­சா­லைக்கு சமு­க­ம­ளிக்­கின்­றனர். 2016 ஆம் ஆண்டு இந்­நிலை 3.1% என்ற நிலையில் இருந்து 2024 இல் அதி­க­ரித்த நிலை காணப்­ப­டு­கி­றது. 13–15 வய­துக்­குட்­பட்ட ஆண் மாண­வர்­க­ளி­டமே உண­வு உண்ணாத, உணவை பெறு­வ­தற்கு வச­தி­யற்ற நிலை அதி­க­ரித்துக் காணப்­ப­டு­கி­றது.

4.3 வீத­மான மாண­வர்கள்
தொட­ராக அல்­லது விட்­டு­விட்டு உண­வின்றி (பசி­யான நிலையில்) பாட­சா­லைக்கு சமு­க­ம­ளிக்­கின்­றனர். 2016 ஆம் ஆண்டு இந்­நிலை 3.1% என்ற நிலையில் இருந்து 2024 இல் அதி­க­ரித்த நிலை
காணப்­ப­டு­கி­றது.

 

இதன் கார­ண­மாக மாண­வர்­களின் வய­திற்­கேற்ப காணப்­பட வேண்­டிய உடல் திணி­வுச்­சுட்டியில் (BMI) மாற்­றங்கள் காணப்­ப­டு­வ­தாக ஆய்வில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. 21.4% மாண­வர்கள் குறைந்த உடல் எடை­யுடன் (underweight)இருந்­தனர், மேலும் 12.1% அதிக உடல் நிறை­யுடன் (overweight) இருந்­தனர். இதில் 3% மாண­வர்கள் அதீத உடற் பரு­ம­னுடன் இருந்­தனர். ஆண் மாண­வர்கள் பெண் மாண­வி­களை விட அதிக அளவில் குறைந்த எடை­யுடன் காணப்­பட்­டனர். இதற்கு கார­ண­மாக மாண­வர்­களின் உணவுப் பழக்­க­வ­ழக்­கங்கள் குறிப்­பி­டத்­தக்­கது. எடுத்­துக்­காட்­டாக ஆய்­வுக்­குட்­பட்ட காலத்தில், 24.9% மாண­வர்கள் கடந்த வாரத்தில் ஒரு பழமேனும் சாப்­பி­ட­வில்லை. 3.1% மாண­வர்கள் காய்­கறி சாப்­பி­ட­வில்லை. அத்­தோடு, 28% மாண­வர்கள் தினமும் சர்க்­கரை கலந்த பானங்­களை குடிப்­பதை வழக்­கமாகக் கொண்­டுள்­ளனர். 40.9% மாண­வர்கள் அதிக சர்க்­கரை உண­வு­களை அன்­றாடம் எடுத்­துக்­கொண்­டனர். 70.4 வீத­மான மாண­வர்கள் உண­வ­கங்­களில், வீதி­யோ­ரக்­க­டை­களில் உணவை எடுத்­து ­வ­ரு­கின்­றனர். 1.8 வீத­மான பிள்­ளைகள் உண­வின்மை கார­ண­மாக காலை உணவை தவிர்த்­து­ வ­ரு­கின்­றனர். இந்த நிலைமை, மாண­வர்­களின் ஆரோக்­கியம் உட்­பட கல்வி நட­வ­டிக்­கை­க­ளிலும் பெரும் தடை­யாக இருக்கும் என்­பதில் ஐய­மில்லை.

உடற்­ப­யிற்சி மற்றும் செய­லி­ழப்பு
(Physical inactivity)
மாண­வர்­களின் உடல், உள வள­ர்ச்­சிக்கு தேவை­யான வய­திற்கு ஏற்றாற் போல உடற்­ப­யிற்­சிகளில் ஈடு­ப­டாமை அவர்­க­ளது ஆரோக்­கியத்தில் பெரும் பாதிப்­புக்­களை ஏற்­ப­டு­த்­தி­யி­ருப்­பதை மேற்­படி ஆய்வின் தர­வுகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன. 88.1% மாண­வர்கள் பரிந்­து­ரைக்­கப்­படும் தின­சரி 60 நிமிட உடற்­ப­யிற்­சியைச் செய்­தி­ருக்­க­வில்லை.

பெண்கள் 90.5% உடற்­ப­யிற்­சி­களில் ஈடு­ப­ட­வில்லை. 22.5 வீத மாண­வர்கள் மாத்­தி­ரமே வாரத்தில் இரண்டு தடவை அல்­லது மூன்று தடவை மேற்­படி உடற்­ப­யிற்­சி­களில் ஈடு­ப­டு­கின்­றனர். 2016ஆம் ஆண்டில் 69.4% ஆக இருந்த நிலையில், வாரந்­தோறும் உடற்­கல்வி வகுப்­பு­களில் பங்­கேற்பது 2024ஆம் ஆண்டில் 50.6%ஆக குறைந்­துள்­ளது. இளைய மாண­வர்கள் (13–15 வய­தி­னர்கள்) 54.6% என்ற உயர்ந்த பங்­கேற்பை காட்­டி­னாலும், வயது அதி­க­மான மாண­வர்கள் (16–17 வய­தி­னர்கள்) 39.8% மட்­டுமே பங்­கேற்­றனர். இது ஒன்­பதாம் தரத்­திற்கு பிந்­தைய காலத்தில் கட்­டாய உடற்­கல்வி வகுப்­புகள் நிறுத்­தப்­ப­டு­வதால் ஏற்­பட்­ட­தாகும் என ஆய்வில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. 43.9% மாண­வர்கள் தினமும் மூன்று மணி நேரத்­திற்கு மேல் அமர்ந்த நிலை­யி­லேயே இருக்­கின்­றனர். மொத்த மாண­வர்­களில் 43.9% பேர் (பாட­சாலை நேரம், வீட்டு வேலை மற்றும் தூக்க நேரத்தைத் தவிர்த்து) தினமும் மூன்று மணி நேரம் அல்­லது அதற்கு மேல் அமர்ந்தோ அல்­லது படுத்த நிலை­யி­லேயோ இருக்­கின்­றனர். இதில் 16–17 வய­து­டைய மாண­வர்கள் 56.8% என மிக அதிக அளவில் அமர்ந்த நிலை­யி­லி­ருந்­துள்­ளனர், 13–15 வய­து­டைய மாண­வர்கள் 39.2% மட்­டுமே sedentary நிலையில் இருந்­தனர் மேலும், மாண­வர்­களில் 88.7% பேர் தினமும் ஒரு மணி நேரத்­திற்கு மேல் பிரத்­தி­யேக வகுப்­பு­களில் அமர்ந்து இருப்­ப­தாக தெரி­வித்­துள்­ளனர். இது வய­தான மாண­வர்கள் (93.6%) மத்­தியில் சிறிய வய­தி­னரை (86.7%) விட முக்­கி­ய­மான நிலை­மை­யாகக் காணப்­ப­டு­கி­றது.

கை வாய் சுகா­தார தூய்மை
பழக்­க­வ­ழக்­கங்கள் (Hygiene and Oral health practices)
இந்த ஆய்வு, உணவு உண்­ப­தற்கு முன்னர் கைச்­சுத்தம் மற்றும் வாய்ச் சுத்தம் தொடர்­பான பழக்­கங்­களை வெளிக்­கொ­ணர்­கி­றது. ஆய்­வுக்­குட்­பட்ட கடந்த 30 நாட்­களில் பாட­சா­லையில் சாப்­பிடும் முன் ஒரு­போதும் கைகளைக் கழு­வ­வில்லை என 10.1% மாண­வர்கள் தெரி­வித்­துள்­ளனர். கைகளை சுத்தம் செய்­த­வர்கள் மத்­தியில் 68.9% மட்­டுமே ஓடும் நீரை பயன்­ப­டுத்­தி­யுள்­ளனர், இது சரி­யான தூய்மையான பழக்­கங்­களில் குறை­பா­டு­களை காட்­டு­கி­றது. மேலும் கவ­லைக்­கி­ட­மான விஷ­ய­மாக, 5.9% மாண­வர்கள் கழிப்­ப­றையை பயன்­ப­டுத்­திய பிறகு ஒரு­போதும் கைகளைச் சுத்தம் செய்­வ­தில்லை என தெரி­வித்­துள்­ளனர்; இது 2016 இல் பதி­வான 2.7% அள­வை­விட இரு­ம­டங்கு அதிகம். கூடு­த­லாக, 4.3% மாண­வர்கள் தங்கள் பாட­சா­லை­களில் கழிப்­ப­றைகள் இல்­லை­யென தெரி­வித்­துள்­ளனர்.

கடந்த 30 நாட்­களில்
பாட­சா­லையில் சாப்­பிடும் முன் ஒரு­போதும்
கைகளைக் கழு­வ­வில்லை என 10.1% மாண­வர்கள்

தெரி­வித்­துள்­ளனர்.

மாண­வர்­களில் 95% பேர் தினமும் குறைந்­தது ஒரு­மு­றை­யா­வது பல் துலக்­கு­வ­தாகக் கூறி­னாலும், பரிந்­து­ரைக்­கப்­பட்ட இரு­முறை துலக்கும் பழக்­கத்தை 47.8% மட்­டுமே பின்­பற்­று­கி­றார்கள். பல் துலக்கும் மாண­வர்­களில் 66.1% பேர் மட்டும் பள­ப­ளப்­பான பல் ஆரோக்­கி­யத்­திற்கு முக்­கி­ய­மா­னது எனக் கரு­தப்­படும் fluoride பற்­பசை பயன்­ப­டுத்­து­வ­தாக தெரி­வித்­துள்­ளனர்.

வாய்ச் சுகா­தாரப் பிரச்­ச­ினைகள் கார­ண­மாக 6.6% மாண­வர்கள் பாட­சா­லைக்கு வர­வில்லை எனக் கூறி­யுள்­ளனர், இதில் ஆண்கள் (7.6%) பெண்­களை (5.6%) விட அதி­க­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 2016 ஆம் ஆண்டில், குறைந்­தது ஒரு­முறை தினமும் பல் துலக்­கிய மாண­வர்­களின் விகிதம் சற்று அதி­க­மாக (97%) இருந்­தது.

உள­நல நெருக்­கீ­டுகள் மற்றும்
உள­வியல் சவால்கள் (Mental health)
வய­திற்கு ஏற்­றாற்போல் நண்­பர்கள் இல்­லாத மாண­வர்­களின் சத­வி­கிதம் 2016ஆம் ஆண்டில் 5.6% இலிருந்து, 2024ஆம் ஆண்டில் 7.5% ஆக உயர்ந்­துள்­ளது. கடந்த 12 மாதங்­களில் தனிமை உணர்ந்த மாண­வர்கள் 2016 இல் 9% இருந்த நிலையில், 2024இல் தனிமையில் இது 22.4% ஆக உயர்ந்­துள்­ளது. உள நெருக்­கீ­டுகள் மனச்­சோர்வின் கார­ண­மாக தூங்க முடி­யாத நிலைமை 11.9% மாண­வர்­க­ளிடம் காணப்­ப­டு­கி­றது. இது 2016 இல் இருந்த 4.6% அள­வுடன் ஒப்­பிட்டால் அதி­க­ரித்­துள்­ளது. மேலும், 18% மாண­வர்கள் மனச்­சோர்வு குறித்த அறி­கு­றி­களை (Depressive symptoms) தெரி­வித்­துள்­ளனர். இதில், 16–17 வயதுப் பிரிவில் அதி­க­மானோர் (26.3%) பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

துன்­பு­றுத்தல் மற்றும் தற்­கொலை சிந்­தனை முயற்சி
(Bullying, Suicidal ideation and attempts)

கடந்த 12 மாதங்­களில் பாட­சாலை வளா­கத்­திற்குள் 18.9% மாண­வர்கள் துன்­பு­றுத்­தலை அனு­ப­வித்­துள்­ளனர், பாட­சாலை சூழ­லுக்கு வெளியே 8.8% மாண­வர்கள் துன்­பு­றுத்­தப்­பட்­டுள்­ளனர். மொத்­த­மாக 21.9% மாண­வர்கள் துன்­பு­றுத்­த­லுக்­குள்­ளா­கி­யுள்­ளனர். தற்­கொலை சிந்­தனை (Suicidal ideation) மற்றும் முயற்­சிகள் தற்­கொலை குறித்து சிந்­தித்த மாண­வர்­களின் சத­வி­கிதம் 2016 இல் 9.4% இருந்து, 2024 இல் 15.4% ஆக உயர்­வ­டைந்­துள்­ளது. தற்­கொலை முயற்சி செய்­த­வர்கள் 6.8% இருந்து 9.1% ஆக உயர்ந்­துள்­ளனர்.

பெண்கள் 17.1% என்ற அளவில் தற்­கொலை சிந்­த­னை­யுடன் இருப்­ப­தாக தெரி­வித்­துள்­ளனர், இது ஆண்­களை விட (13.6%) குறிப்­பி­டத்­தக்களவு உயர்­வாக உள்­ளது.16–17 வயதுப் பிரிவில் உள்ள மாண­வர்கள் 20.7% ஆக தற்­கொலை சிந்­த­னையில் தூண்­டப்­பட்­டுள்­ளனர் என தெரி­வித்­துள்­ளனர், இது 13–15 வயதுப் பிரிவில் உள்­ள­வர்­களின் 13.4% என்ற அள­வுடன் ஒப்­பிட்டால் மிக அதி­க­மாக உள்­ளது. மாண­வர்கள் (36.2%) தீவிர மன அழுத்தம் மற்றும் உள­வியல் நெருக்­க­டி­க­ளுக்கு உட்­பட்­டுள்ள நிலை­யிலும் சரி­யான உள ஆற்­றுப்­ப­டுத்தல் சேவை­களைப் பெற­ாத நிலை காணப்­ப­டு­கி­றது.

போதைப் பொருள் மற்றும்
புகை­யிலை பாவனை
2016- ஆம் ஆண்டில் 6.4% இருந்த சிகரெட் புகைத்துப் பார்த்த மாண­வர்கள் வீதம், 2024- இல் இரு­ம­டங்­காக 12.8% அதி­க­ரித்­துள்­ளது. ஆண்கள் (21.3%) சிகரெட் புகைத்த பங்கு பெண்­க­ளுடன் (5.1%) ஒப்­பி­டு­கையில் அதி­க­மாக இருந்­தது. சிகரெட் புகைத்துப் பார்த்த மாண­வர்­களில் 34.7% பேர் 14 வய­துக்கு முன்னே புகைத்­தலில் ஈடு­பட ஆரம்­பித்­துள்­ளனர். மின்­னணு சிகரெட் (e-–cigarette) பாவிப்பதாக 5% மாண­வர்கள் கூறி­யுள்­ளனர். 7.3% மாண­வர்கள் புகை­யில்லா புகைப்­பொ­ருட்­களை பயன்­ப­டுத்­தி­யுள்­ளனர். 5% மாண­வர்கள் மின்­னணு சிகரெட் பயன்­ப­டுத்­தி­யுள்­ளனர். 5.3% மாண­வர்கள் கடந்த 30 நாட்­களில் மது­பானம் அருந்­தி­யுள்­ளனர். 3.1% மாண­வர்கள் கஞ்சா போன்ற போதை மருந்­து­களை பயன்­ப­டுத்­தி­யுள்­ளனர். இத்­த­கைய பழக்­கங்கள், மாண­வர்­களின் கல்வி, உடல்­நலம், சமூக உற­வுகள் மற்றும் எதிர்­கால வாழ்க்­கையை மிகப்­பெ­ரு­ம­ளவில் பாதிக்­கக்­ கூ­டி­யவை.

பாலியல் துன்­பு­றுத்தல் மற்றும் இணை­ய­வழி பாலியல்
வன்­மு­றைகள் (Sexual harassment and dating violence)
23.8 வீத­மான மாண­வர்கள் உடல் ரீதி­யான தாக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர். பாலியல் துன்­பு­றுத்­தலும் காதல் தொடர்­பான வன்­மு­றையும் குறித்து பதி­ல­ளித்த மாண­வர்­களில் 6.1% பேர் வேண்­டாத (unwanted) பாலியல் செயல்­களில் ஈடு­பட கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். இதில் ஆண்கள் (7.5%) பெண்­களை (4.7%) விட அதி­க­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 10.1% பேர் காதல் தொடர்­பான வன்­மு­றை­களை எதிர்­கொண்­டுள்­ளனர். இதில் ஆண்கள் (12.7%) மற்றும் இளைய மாண­வர்கள் (11.8%) பெண்கள் (7.5%) மற்றும் மூத்த வய­தினர் (6.5%) ஒப்­பி­டு­கையில் குறிப்­பி­டத்­தக்க அளவில் அதி­க­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இணையம் மூலம் பாலியல் துன்­பு­றுத்தல் – மாண­வர்­களில் 6.9% பேர் இந்த வகை­யான துன்­பு­றுத்­தலை அனு­ப­வித்­துள்­ள­தாக தெரி­வித்­துள்­ளனர். டிஜிட்டல் தளங்­க­ளுடன் தொடர்­பு­டைய ஆபத்­துகள் அதி­க­ரித்­தி­ருக்கிறது. இதில் ஆண்கள் (9.2%) பெண்­களை (4.7%) விடவும், இளைய வயது மாண­வர்கள் (7.3%) மூத்­த­வர்­களை (6%) விடவும் அதி­க­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 47.9% மாண­வர்கள் ஆசி­ரி­யர்­களால் உடல் துன்­பு­றுத்­த­லுக்கு உள்­ளா­கி­ய­தாக தெரி­வித்­துள்­ளனர். இதில் ஆண்கள் (59.3%) பெண்­களை (37%) விட முக்­கி­ய­மாக அதி­க­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

கைய­டக்க தொலை­பேசி மற்றும்
சமூக ஊடக பயன்­பாடு
கைய­டக்க தொலை­பேசி மற்றும் சமூக ஊட­கங்கள் அல்­லது இணைய தொடர்பு மற்றும் இணைய உலா­வ­லுக்­காக தினமும் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவதாக 28.4% மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் ஆண்கள் (31.3%) பெண்களை (25.5%) விட அதிகமாக பயன்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளன. 16–17 வயதுடைய மாணவர்கள் (40.6%) 13–15 வயதுடையவர்களை (23.3%) விட அதிகமாக பயன்படுத்துகிறார்கள் ஆனால், 74.7% மாணவர்கள், சமூக ஊடக பயன்பாட்டிற்கு பெற்றோர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் என்று கூறியுள்ளனர். இதில் பெண்கள் (76.9%) ஆண்களை (72.4%) விட குறுகிய அளவில் அதிக கட்டுப்பாடுகளை எதிர்கொண்டுள்ளனர். மேலும் இளைய மாணவர்கள் (75.3%) 16–17 வயது மாணவர்களை (73.1%) விட அதிகமாக பெற்றோர் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
எனவே மேற்­படி ஆய்வின் முடி­வு­களை வைத்து நோக்­கு­கையில் எமது பாட­சா­லை­களில் மாண­வர்­களின் உடல் உள ரீதி­யான ஆரோக்­கியம் பாதிப்­புக்­குள்­ளா­யி­ருப்­பது அவ­தா­னத்­துக்­கு­ரிய விட­ய­மாகும். மேற்­படி புள்ளி விப­ரங்­களின் வெளிப்­பா­டுகள் எமது பாட­சாலை மாண­வர்­க­ளிலும் இருப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் காணப்­ப­டு­கி­றது. எனவே அதிபர் உட்­பட ஆசி­ரி­யர்கள் பெற்­றோர்கள் பாட­சா­லையின் ஏனைய பங்­கா­ளிகள் இது குறித்து சிந்­திப்­ப­துடன் விழிப்­புணர்வு நிகழ்­வு­களை நடாத்த வேண்­டி­யது காலத்தின் கட்­டா­ய­மாகும். அவ்­வாறே பாட­சா­லையின் கற்றல் -கற்­பித்தல் செயற்­பா­டு­க­ளுக்கு அப்பால் பாட­சா­லையின் முறை­சாராக் கலைத்­திட்­டங்­களின் ஊடாக மாண­வர்­களின் உள­ரீ­தி­யான விருத்­திக்­கான பங்­க­ளிப்­புக்­களை அதிகம் மேற்­கொள்ள வேண்­டிய தேவையும் காணப்­ப­டு­கி­றது. இது குறித்து கல்விச் சமூகம் விரி­வான கலந்துரையாடல்கள் திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டியது இன்றியாமையாது என்பது எனது அபிப்பிராயம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.