காஸாவின் பெரும்பகுதியை விழுங்கும் இஸ்ரேல் அன்றிருந்த காஸா இன்றில்லை

0 81

எம்.ஐ.அப்துல் நஸார்

காஸாவின் தெற்கு நக­ர­மான ரபாவை துண்­டித்து, அப் பிர­தே­சத்தை பல பகு­தி­க­ளாகப் பிரிக்கும் மற்­று­மொரு இரா­ணுவ நட­வ­டிக்­கை­யினை பூர்த்தி செய்­துள்­ள­தாக இஸ்ரேல் கடந்த வார இறு­தியில் அறி­வித்­தது.

காஸா பகு­தியில் இஸ்ரேல் தொடர்ந்து தனது இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை தீவி­ரப்­ப­டுத்தி வரு­கி­றது. இதன் கார­ண­மாக, குண்­டு­வீச்­சுகள் தொடரும் அதே வேளை, காசாவின் 2.3 மில்­லியன் மக்­களில் அதி­க­மானோர் எப்­போதும் மிகவும் சன­நெ­ரி­ச­லுக்குள் வாழ வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டுள்­ளது.

கடந்த சனிக்­கி­ழமை, இஸ்­ரேலின் பாது­காப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், தெற்கு காசா பகு­தியில் இஸ்­ரே­லிய பாது­காப்புப் படைகள் பெரிய நிலப்­ப­ரப்பைக் கைப்­பற்­றி­ய­தாகக் தெரி­வித்தார்.

ரபா மற்றும் கான் யூனிஸ் இடையே காஸாவைக் கடக்கும் மொராக் பகு­தியை இஸ்­ரே­லிய பாது­காப்புப் படை தற்­போது கைய­கப்­ப­டுத்­தி­யுள்­ளது, இது பில­டெல்­பியா மற்றும் மொராக்­கிற்கும் இடை­யி­லான முழுப் பகு­தி­யையும் இஸ்­ரே­லிய பாது­காப்பு வல­யத்தின் ஒரு பகு­தி­யாக மாற்­று­கி­றது’ என்று காட்ஸ் அறிக்­கை­யொன்றில் தெரி­வித்தார்.

எக்ஸ் தளத்தில் அவர் இட்ட பதிவில் ‘காசா சிறி­ய­தா­கவும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் மாறும், மேலும் அதன் குடி­யி­ருப்­பா­ளர்­களில் அதி­க­மானோர் சண்டை நடக்கும் பகு­தி­க­ளி­லி­ருந்து வெளி­யேற வேண்­டிய கட்­டாயம் ஏற்­படும்’ என அவர் மேலும் தெரி­வித்தார். யுத்­தத்தை நிறுத்­து­வ­தற்கு ஹமாஸை அகற்ற வேண்டும்’ என பாலஸ்­தீ­னர்­களை அவர் வலி­யு­றுத்­தினார்.

இஸ்­ரே­லிய அர­சாங்கம் அதன் தாக்­கு­தலை தீவி­ரப்­ப­டுத்­தவும், காஸாவின் பெரும்­ப­கு­தியைக் கைப்­பற்­றவும் உறு­தி­பூண்­டுள்ளதாக பல நாடு­களால் பயங்­க­ர­வாதக் குழு­வாக பெய­ரி­டப்­பட்­டுள்ள ஹமாஸ், மீத­முள்ள 59 பண­யக்­கை­தி­களை விடு­விக்­கவும், அவர்­களில் 24 பேர் உயி­ருடன் இருப்­ப­தாக நம்­பப்­படும் புதிய போர்­நி­றுத்த விதி­மு­றை­களை ஏற்­றுக்­கொள்­ளவும் அழுத்தம் கொடுத்­துள்­ளது.

பாதிக்­கப்­படும் பொது­மக்கள்
மீண்டும், காஸாவின் பொது­மக்கள் பாதிப்­புக்­களை எதிர்­நோக்கி வரு­கின்­றனர். யுத்­தத்­திற்கு முன்னர், காஸாவின் தென் பகு­தி­யி­லுள்ள ரபா ஆளுநர் பிர­தே­சத்தில் சுமார் 200,000 பேர் வசித்து வந்­தனர்.

ஜன­வரி மாதம் தற்­கா­லிக யுத்த நிறுத்தம் அமு­லுக்கு வந்த பின்னர் அப்துல் ரஹ்மான் தாஹா ரபாவில் உள்ள தனது பகு­திக்குத் திரும்­பி­ய­போது, ‘வீட்டின் ஒரு சிறிய பகுதி மட்­டுமே எஞ்­சி­யி­ருப்­பதைக் கண்டார்’ அந்தக் குடும்பம் அவர்­களின் முந்­தைய வீட்டின் இடி­பா­டு­க­ளுக்குள் தங்­கி­யி­ருந்­தது. ஏப்ரல் மாத ஆரம்­பத்தில், இஸ்­ரே­லிய இரா­ணுவம் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு இட­மாற்ற உத்­த­ர­வு­களை பிறப்­பித்­தது, மேலும் தாஹா­வுக்கும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்கும் மீண்டும் வெளி­யேற வேண்­டிய கட்­டாயம் ஏற்­பட்­டது.

ரபா கிட்­டத்­தட்ட முழு­மை­யாக அழிக்­கப்­பட்­டுள்­ளது. மிகக் குறைந்த வீடு­களே எஞ்­சி­யுள்­ளன. தெருக்கள் ஏற்­க­னவே இடிந்து போயுள்­ளன, அவை மீண்டும் கட்­டப்­பட வேண்டும். தற்போது அவர்கள் தேவை முடிந்த பின்னர் மீத­முள்­ள­வற்றை அழிக்கப் போகி­றார்கள்,’ என்று தாஹா கூறினார், அவர் தற்­போது கான் யூனிஸில் ஒரு கூடா­ரத்தில் மிகவும் சிர­மத்­திற்கு மத்­தியில் வசித்து வரு­கிறார்.

மார்ச் மாத ஆரம்­பத்தில் யுத்த நிறுத்­தத்தின் முதல் கட்டம் முடி­வ­டைந்­ததன் பின்னர், இஸ்­ரே­லிய அர­சாங்கம் காஸா­விற்கு எரி­பொருள், உணவு, வர்த்­தக மற்றும் மனி­தா­பி­மான விநி­யோ­கங்­களை நிறுத்­தி­யது. ‘யுத்தம் ஆரம்­ப­மா­ன­தி­லி­ருந்து 18 மாதங்­களில் இல்­லாத அள­வுக்கு மனி­தா­பி­மான நிலைமை தற்­போது மிக மோச­மாக இருக்­கலாம்’ என்று ஐக்­கிய நாடுகள் சபை திங்­க­ளன்று எச்­ச­ரித்­தது.

‘யுத்தம் முடிந்­து­விட்­டது என்று நாங்கள் நினைத்தோம் ஆனால், அது பழி­வாங்­க­லுடன் மீள ஆரம்­ப­மா­கி­யுள்­ளது, 24 மணி நேரமும் இடை­வி­டாமல் இரத்தம் சிந்­தப்­ப­டு­கின்­றது,’ என் அபூ தாஹா தெரி­வித்தார். ‘ தொடர்ந்தும் குழப்ப நிலை காணப்­ப­டு­கின்­றது. உள்­நாட்டு பாது­காப்பு நிலைமை மோச­ம­டையத் தொடங்­கு­கி­றது. இது ஒரு பயங்­க­ர­மான உணர்­வினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.’ எனவும் அவர் தெரி­வித்தார்.

மார்ச் மாதத்தில் இஸ்­ரே­லிய இரா­ணுவம் தாக்­கும்­போது பாலஸ்­தீன மக்கள் ரபா­வி­லி­ருந்து கான் யூனி­ஸுக்கு ஓடி­னார்கள்.

51 வய­தான பாலஸ்­தீனர் ஒருவர் தனது சொந்த ஊர் தற்­போது ஒரு ‘பாது­காப்பு சூனிய வல­யத்தின்’ ஒரு பகு­தி­யாக மாறி­விட்­ட­தாக கவ­லைப்­ப­டு­கிறார். புதி­தாக உரு­வாக்­கப்­பட்ட மொராக் நுழைவுப் பிர­தேசம், கிழக்­கி­லி­ருந்து மேற்­காக சுமார் 12 கிலோ­மீட்டர் (7 மைல்) நீள­முள்ள ஒரு நில வழித்­த­ட­மாகும். இது கான் யூனி­ஸி­லி­ருந்தும் ரபா­வையும் அதன் அண்டை நாடான எகிப்­து­ட­னான எல்லைக் கட­வை­யையும் துண்­டிக்­கி­றது.

மொராக் என்­பது 2005 இல் அகற்­றப்­பட்ட முந்­தைய இஸ்­ரே­லிய குடி­யேற்­ற­மொன்றின் பெய­ராகும். அதேபோல் மத்­திய காஸாவில் உள்ள நெட்­சாரிம் நுழைவுப் பிர­தேசம், இது வடக்கு காசா­வி­லி­ருந்து தெற்குப் பகு­தியைப் பிரிக்­கி­றது. சோதனைச் சாவ­டிகள் மூலம் இரு பகு­தி­க­ளுக்கும் இடை­யி­லான மக்கள் நட­மாட்­டத்­தினை இஸ்­ரே­லிய பாது­காப்புப் படை கட்­டுப்­ப­டுத்­து­கி­றது. யுத்த நிறுத்­தத்தின் போது இரா­ணுவம் இப்­ப­கு­தியை விட்டு வெளி­யே­றி­யது, ஆனால் மார்ச் மாதத்தில் மீண்டும் அங்கு குவிக்­கப்­பட்­டுள்­ளது.

இஸ்ரேல் எங்­களை எமது வீடு­க­ளுக்கு மீளத் திரும்­பு­வதைத் தடுப்­ப­தற்­காக ‘மிரட்­டவும் அர­சியல் அழுத்­தத்தை ஏற்­ப­டுத்­தவும்’ விரும்­பு­கி­றது என அபு தாஹா நம்­பு­கிறார். இருப்­பினும், ‘பிரச்­சனை என்­ன­வென்றால், காஸாவின் எதிர்­காலம் எப்­படி இருக்­கப்­ போ­கின்­றது என்­பது தெரி­ய­வில்லை’ எனவும் அவர் தெரி­வித்தார்.

இஸ்­ரே­லிய அர­சாங்கம் காஸாவில் அடுத்த நாளுக்­கான எந்தத் திட்­டங்­க­ளையும் பகிர்ந்து கொள்­ள­வில்லை, மேலும் அதன் நகர்­வு­களை ஹமாஸ் மீதான அதன் அதி­க­பட்ச அழுத்த மூலோ­பா­யத்தின் ஒரு பகு­தி­யாக சித்­த­ரித்­துள்­ளது. இஸ்­ரே­லிய அர­சாங்கம் நீண்­ட­கால இரா­ணுவக் கட்­டுப்­பாட்­டிற்­கான அடித்­த­ளத்தை அமைத்து வரு­வ­தாக மனித உரி­மைகள் குழுக்கள் கூறு­கின்­றன. இஸ்­ரே­லு­ட­னான காஸா எல்லைப் பகு­தியை பல்­வேறு பகு­தி­க­ளாகப் பிரிப்­பதன் மூலம், ஏற்­க­னவே உள்ள சூனியப் பிர­தே­சத்தை விரி­வு­ப­டுத்­து­கின்­றது.

மக்­களின் புதிய இடம்­பெ­யர்வு
அண்­மைய தாக்­கு­தலால் புதி­தாக இடம்­பெ­யர்ந்த சுமார் 400,000 பேரில் அபு தாஹாவும் ஒருவர் என ஐக்­கிய நாடுகள் சபையின் மனி­தா­பி­மான விவ­கா­ரங்­க­ளுக்­கான ஒருங்­கி­ணைப்பு அலு­வ­லகம் (UNOCHA) தெரி­வித்­துள்­ளது. ஜன­வ­ரியில் யுத்த நிறுத்­தத்தின் போது லட்­சக்­க­ணக்­கான இடம்­பெ­யர்ந்த மக்கள் தெற்­கி­லி­ருந்து வடக்கு நோக்கித் திரும்ப முடிந்­தாலும், தற்போது பலர் மேற்கு நோக்கிச் செல்­லு­மாறு இஸ்­ரே­லிய இரா­ணு­வத்தால் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய நாடுகள் சபையின் மனி­தா­பி­மான விவ­கா­ரங்­க­ளுக்­கான ஒருங்­கி­ணைப்பு அலு­வ­ல­கத்தின் கூற்­றுப்­படி, கிட்­டத்­தட்ட 70 வீத­மான பிர­தே­சங்கள் ‘இட­மாற்ற உத்­த­ரவு’ அல்­லது ‘தடை­செய்­யப்­பட்ட’ வல­யங்­க­ளாகப் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன, அங்கு மனி­தா­பி­மான குழுக்கள் தங்கள் இயக்­கங்­களை ஒருங்­கி­ணைக்க வேண்டும் என இஸ்­ரே­லிய அதி­கா­ரிகள் கோரு­கின்­றனர். இஸ்­ரே­லிய இரா­ணுவம் பல­முறை இந்த வெளி­யேற்­றங்கள் பொது­மக்­களை தீங்கு விளை­விக்­காமல் இருக்க வேண்டும் என்று கூறி வரு­கி­றது, மேலும் சிலர் பாலஸ்­தீன போரா­ளிகள் அண்­மையில் இஸ்­ரே­லுக்குள் ரொக்­கெட்­டு­களை வீசிய பகு­தி­களை குறி­வைத்­துள்­ளனர்.

ஒரு திட்­டத்தை வலுக்­கட்­டா­ய­மாக மாற்­று­வ­தற்கு சமம் என ஐ.நா. குறிப்­பிடும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் டிரம்பின் சர்ச்­சைக்­கு­ரிய ‘இட­மாற்றத் திட்டம்’ தொடர்பில் கருத்து வெளி­யிட்­டுள்ள இஸ்­ரே­லிய பாது­காப்பு அமைச்சர் காட்ஸ் 2.3 மில்­லியன் காஸா மக்­களுள் ‘ஆர்­வ­முள்ள அனை­வ­ருக்கும்’ ஏனைய நாடு­க­ளுக்கு ‘தன்­னார்வ அடிப்­ப­டையில் செல்ல விரும்­பு­ப­வர்­க­ளுக்கு’ அனு­ம­தி­ய­ளிக்­கப்­படும் என்று வார இறு­தியில் மீண்டும் வலி­யு­றுத்­தினார்.

விரி­வாக்­கப்­பட்ட சூனியப் பிர­தேசம் கிரா­மங்கள் மற்றும் விவ­சாய நிலங்­களை உள்­ள­டக்­கி­யுள்­ளது.

பிர­தே­சத்தின் இட­மாற்றம் மற்றும் பிரிப்­புக்கு மேல­தி­க­மாக, இஸ்ரேல் படிப்­ப­டி­யாக காஸாவின் உள்ளே ஏற்­க­னவே இருக்கும் சூனியப் பிர­தே­சத்தை மேலும் விரி­வு­ப­டுத்­தி­யுள்­ளது, இது வடக்­கி­லி­ருந்து கிழக்கில் இஸ்­ரே­லு­ட­னான எல்லைப் பகு­தியில் எகிப்தின் தெற்கு எல்லை வரை நீண்­டுள்­ளது.

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பாலஸ்­தீன பிர­தே­சங்­களில் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்ள முன்னாள் இஸ்­ரே­லிய பாது­காப்புப் படை வீரர்­களின் சாட்­சி­யங்­களை சேக­ரிக்கும் ‘பிரேக்கிங் தி சைலன்ஸ்’ அமைப்பு கடந்த வாரம் ஒரு அறிக்­கையை வெளி­யிட்­டது, அதில் அவர்கள் சூனியப் பிர­தே­சத்தில் வீடுகள், உள்­கட்­ட­மைப்பு மற்றும் விவ­சாய நிலங்­களை முறை­யாக அழிப்­பது என விவ­ரிக்­கின்­றனர். அந்தப் பகு­திகள் தற்­போது பெரும்­பாலும் பாலஸ்­தீ­னர்­க­ளுக்கு தடை­செய்­யப்­பட்ட பகு­தி­யாகக் காணப்­ப­டு­கின்­றது என அவர்கள் கூறு­கி­றார்கள்.

‘விவ­சாய நிலங்கள், கல்­ல­றைகள், கைத்­தொழில் பகு­திகள், வீடுகள் என அனைத்­தையும் நாங்கள் இடித்தோம். அது எங்­க­ளுக்கு அதிக பாது­காப்பைத் தரும் என இஸ்­ரே­லிய பாது­காப்புப் படை கரு­து­கின்­றது. ஏனென்றால் ஹமாஸ் அல்­லது இஸ்­லா­மிய ஜிஹாத் நெருங்கி வரு­வதை நாம் அவ­தா­னிக்க முடியும்,’ என பிரேக்கிங் தி சைலன்ஸ்- இன் முகா­மைத்­துவப் பணிப்­பாளர் நடவ் வெய்மன் தெரி­வித்தார்.

தற்­போது சூனியப் பிர­தே­சத்தில் சேர்க்­கப்­பட்­டுள்ள நிலத்தின் பெரும்­ப­குதி முன்னர் விவ­சாய நில­மாக இருந்­த­வை­யாகும், இதன் கார­ண­மாக நீண்­ட­கால தாக்­க­மாக காஸா அதன் சொந்த உணவு உற்­பத்­தியில் சில­வற்­றை­யா­வது மீண்டும் உற்­பத்தி செய்ய முடி­யுமா என்ற கேள்வி எழு­கின்­றது. பிரேக்கிங் தி சைலன்ஸ் நிறு­வ­னத்தின் மதிப்­பீ­டு­க­ளின்­படி, சில பகு­தி­களில் சூனியப் பிர­தேசம் 2.5 கிலோ­மீட்டர் (1.6 மைல்) வரை அக­ல­மாக உள்­ளது, கிழக்கு காஸா நக­ரத்தில் உள்ள ஷெஜையா போன்ற நகர்ப்­புற பகு­திகள் வரை செல்­கின்­றது..

‘எல்­லைக்கு அரு­கி­லுள்ள அனைத்து பகு­தி­களும் – வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு – கைப்­பற்­றப்­பட்டு பீரங்கி குண்­டு­வீச்­சுக்கு உள்­ளா­கி­யுள்­ளன. காஸா பகு­திக்குள் உள்ள அனைத்து பகு­தி­களும் வான்­வழி குண்­டு­வீச்­சுக்கு உள்­ளா­கி­யுள்­ளன. தப்­பிக்க வழி இல்லை,’ என 43 வய­தான பலஸ்­தீன பெண்­ணொ­ருவர் மேற்கு காஸா நக­ரத்­தி­லி­ருந்து தொலை­பேசி மூலம் சர்­வ­தேச ஊட­க­மொன்­றிடம் தெரி­வித்தார். அங்கு அவ­ரது குடும்பம் தற்­போது உற­வி­னர்­க­ளுடன் தங்­கி­யுள்­ளது.

‘சந்­தையில் துப்­பு­ரவுப் பொருட்கள் இல்லை, குடிநீர் இல்லை, போது­மான உணவு இல்லை, எரி­வாயு இல்லை, மேலும் சுகா­தார நிலைமை மோச­மாக உள்­ளது’ என தனது குடும்­பத்­திற்கு அதி­க­ரித்து வரும் கடி­ன­மான தின­சரி போராட்­டத்தை விளக்­கினார்.

‘தற்­போ­தைய காஸா முன்பு இருந்த காஸா அல்ல. எமது குழந்­தை­க­ளுக்­கா­கவும் சிறந்த எதிர்­கா­லத்­திற்­கான நம்­பிக்­கை­யு­டனும் நாங்கள் உயிர்வாழ முயற்சிக்கிறோம்,’ என அவர் மேலும் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.