அன்று பலஸ்தீனுக்காக பேசிய ஜனாதிபதி அநுர இன்று முஸ்லிம் இளைஞரை கைது செய்துள்ளார்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சாடல்; ஐ.ம.ச.விடம் இரட்டை நிலைப்பாடில்லை எனவும் தெரிவிப்பு

0 68

பலஸ்­தீன மக்கள் சார்­பாக நமது நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குரல் எழுப்­பிய சம­யத்தில் தற்­போ­தைய ஜனா­தி­பதி அநுர குமார திஸா­நா­யக்க, அவ­ரை தடுப்புக் காவலில் வைக்கும் பத்­தி­ரத்தில் கையொப்­ப­மிடும் அள­வுக்கு கீழ்த்­த­ர­மாக நடந்­துள்ளார் என எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாஸ தெரி­வித்தார்.

அக்­க­ரைப்­பற்று பிர­தே­சத்தில் நேற்­று­முன்­தினம் இடம்­பெற்ற மக்கள் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச இவ்­வாறு தெரி­வித்தார்.

இங்கு மேலும் உரை­யாற்­று­கையில், உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் அதி­கா­ரத்தை கைப்­பற்றும் கட்­சிகள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்தே குறித்த மன்­றங்­க­ளுக்கு நிதி வழங்­குவோம் என ஜனா­தி­பதி அநுர குமார திஸா­நா­யக்க கருத்து வெளி­யிட்­டி­ருக்­கிறார். ஜனா­தி­பதி அவ்­வாறு கூறி­னாலும் ஐக்­கிய மக்கள் சக்தி வெற்றி பெறும் உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் ஊடாக வழங்­கப்­படும் சேவைக்­கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்வேன்.
இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி வேறு­பா­டின்றி நாட்டு மக்­க­ளுக்கு சேவை­யாற்­று­வ­தற்­கா­கவே ஜனா­தி­பதி நிய­மிக்­கப்­ப­டு­கின்றார். அவ்­வாறு இல்­லாது ஜேவி­பிக்கு மாத்­திரம் சேவை­யாற்­று­வ­தற்­காக நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. ஜனா­தி­ப­தி­யா­னவர் கட்சி, சாதி, இனம், மதம் பாராமல் அனை­வ­ருக்கும் சம­மான சேவையை வழங்க வேண்டும். ஜனா­தி­பதி அநுர குமார திஸா­நா­யக்க தெரி­வித்த கருத்தை வன்­மை­யாக கண்­டிக்­கிறேன். இவ்­வா­றான கீழ்த்­த­ர­மான அர­சியல் அச்­சு­றுத்­தல்­களை கண்டு சளைக்க வேண்டாம்.

அத்­தோடு, சமீ­பத்தில், நமது நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பலஸ்­தீன மக்கள் குறித்து அவர் கரு­திய கருத்தை ஸ்டிக்கர் ஒட்டி வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார். அவ்­வி­ளைஞர் பலஸ்­தீன மக்கள் சார்­பாக தனது கருத்­துக்­களை முன்­வைத்த போது ஜனா­தி­பதி அநுர குமார திஸா­நா­யக்க பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தினை பிர­யோ­கித்து கைது செய்தார். ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தாச கூட பலஸ்­தீன மக்­க­ளுக்கு ஆத­ர­வாக முன்­நின்றார். ஆத­ர­வான நிலைப்­பா­டு­களை எடுத்தார். பலஸ்­தீன மக்­க­ளுக்கு எதி­ராக அரச பயங்­க­ர­வாதம் முன்­னெ­டுக்­கப்­பட்ட சம­யங்­களில், பாரிய படு­கொ­லைகள் இடம்­பெற்ற சந்­தர்ப்­பங்­களில், அப்­போது எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்த அநுர குமார திஸா­நா­யக்க குரல் எழுப்­பினார். இன்று பலஸ்­தீன மக்கள் சார்­பாக நமது நாட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் குரல் எழுப்­பிய சம­யத்தில் தற்­போ­தைய ஜனா­தி­பதி அநுர குமார திஸா­நா­யக்க, அவ­ரை தடுப்புக் காவலில் வைக்கும் பத்­தி­ரத்தில் கையொப்­ப­மிடும் அள­வுக்கு கீழ்த்­த­ர­மாக நடந்­துள்ளார்.

ஐக்­கிய மக்கள் சக்­தி­யிடம் இரட்டைக் கொள்­கை­களும் இரட்டை நாட­கங்­களும் இல்லை. ஐக்­கிய மக்கள் சக்தி பலஸ்­தீன மக்­க­ளுக்­காக நின்­றது. இஸ்­ரே­லிய அரசும் பலஸ்­தீன அரசும் ஒற்­று­மை­யாக இருக்க வேண்டும்.

ஜே.வி.பி அர­சாங்­கத்­திற்கு பொய் சொல்­லவும் ஏமாற்­றவும் மட்­டுமே தெரியும். அன்று தேர்தல் மேடையில் சொன்­னதை இன்று செய்ய முடி­யாது புலம்­பிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். இன்று மக்களுக்கு வறுமையும், அசௌகரியமும் அதிகரித்துள்ளன. இவ்வாறான நிலையில் வறுமையை ஒழிக்கும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும். இதற்கான வலுவான முறையான வேலைத்திட்டமொன்று அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.