10 காதி பிரிவுகளுக்கு விண்ணப்பம் கோரல்

0 71

(உக்­கு­வளை நிருபர்)
நீதிச்­சேவை ஆணைக்­குழு வெற்­றி­ட­மா­க­வுள்ள 10 காதி பிர­தேச பிரி­வு­க­ளுக்குத் தகு­தி­யுள்ள புதிய காதி நீத­வான்­களை நிய­மிப்­ப­தற்­கான விண்­ணப்­பங்­களைக் கோரி­யுள்­ளது. இதன்­படி, பதுளை, மாத்­தளை, உடத்தலவின்ன (உட, மெத, பாத்த தும்­பறை),பேரு­வளை, மாவ­னல்ல, யாழ்ப்­பாணம், கொழும்பு தெற்கு, புத்­தளம், காத்­தான்­குடி, சம்­மாந்­துறை ஆகிய காதி­ நீ­தி­வான்கள் பிரி­வு­க­ளுக்கு விண்­ணப்பம் கோரப்­பட்­டுள்­ளது.

40 வய­துக்­கு­ மேற்­பட்ட திரு­ம­ண­மான இஸ்லாமிய சமயம் தொடர்பான அறிவைக் கொண்ட முஸ்லிம் ஆணா­கவும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட பல்­க­லை­க்க­ழ­க­மொன்றில் பட்­டம்­பெற்ற அல்லது முஸ்லிம் சமய கலாசார விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து மெளலவி சான்றிதழ் பெற்ற அல்லது கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அல் ஆலிம் சான்றிதழ் பெற்ற அல்லது சட்டத்தரணி அல்லது அதற்குச் சமனான தகைமையுள்ளவர்கள் மற்றும் உத்தியோகத்தர் தரத்திலிருந்து ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்களும் விண்ணப்பிக்கலாம். தற்சமயம் பொதுச் சேவையில் நிரந்தரமாகப் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பதாரர்கள் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பில் சிறந்த அறிவைக் கொண்டிருத்தல் வேண்டும்.

காதி நீதிவான் குறித்த நிர்வாக எல்லைப் பகுதியில் நிரந்தரமாக வதிபவராக இருப்பது கட்டாயமானதாகும்.

மாதாந்தக் கொடுப்­ப­ன­வாக ரூபா 7500 உடன் உத­வி­யாளர் சேவை மற்றும் எழு­து­க­ரு­வி­க­ளுடன் அஞ்சல் செல­வு­க­ளுக்­காக மேலும் 6250 ரூபாவும் வழங்­கப்­படும். இது­ கு­றித்த மேல­திக தக­வல்­க­ளுக்கும் விண்­ணப்­பங்­க­ளுக்கும் கடந்த மார்ச் 28 இல் வெளி­வந்த அரச வர்த்­த­மானப் பத்­தி­ரி­கையில் பார்­வை­யி­டலாம். விண்ணப்ப படிவத்தை சிரேஷ்ட உதவிச் செய­லாளர், நீதிச்­சேவை ஆணைக்­குழு, நீதிச்­சேவை ஆணைக்­குழு செயலகம், த.பெ. இல 573, கொழும்பு 12 எனும் முகவரிக்கு ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்ப வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.