இஸ்ரேலின் முகவராக அரசாங்கம்

தேர்தல் பிரசாரத்திற்கு கிழக்கிற்கு சென்ற ஜனாதிபதி குழப்பமடைந்துள்ளார் எனவும் முஜிபுர் ரஹ்மான் சாடல்

0 65

(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பலஸ்தீனுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட தேசிய மக்கள் சக்தி இன்று அது தொடர்பில் மௌனம் காக்கிறது. இந்த அரசாங்கம் தற்போது இஸ்ரேலின் முகவராக மாறியிருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்­பி­லுள்ள ஐக்­கிய மக்கள் சக்தி அலு­வ­ல­கத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் இதனைத் தெரி­வித்த அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திஸா­நா­யக்க கிழக்கு மாகா­ணத்தில் அர­சியல் கூட்­டங்­க­ளுக்கு செல்லும் போது சற்று கல­வ­ர­ம­டை­கின்றார். பலஸ்­தீ­னுக்கு ஆத­ர­வாக ஸ்டிக்கர் ஒட்­டி­யமை தொடர்பில் அண்­மையில் கைது செய்­யப்­பட்ட இளைஞர் எந்­த­வொரு பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளு­டனும் தொடர்­பற்­றவர் என்று ஜனா­தி­பதி குறிப்­பி­டு­கின்றார். ஆனால் அதற்கு முர­ணான கருத்தை பொது மக்கள் பாது­காப்பு அமைச்சர் குறிப்­பி­டு­கின்றார்.

எனினும் அந்த இளைஞன் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்தும் வகையில் செயற்­பட்­டுள்­ள­தாகக் குறிப்­பிட்டு நிபந்­த­னை­களின் அடிப்­ப­டையில் ஜனா­தி­பதி கையெ­ழுத்­திட்ட பின்­னரே அவர் விடு­விக்­கப்­பட்­டுள்ளார். குறித்த இளை­ஞ­னுக்கு பயங்­க­ர­வாத செயற்­பாடுகளுடன் எந்த தொடர்பும் இல்லை எனில் எதற்­காக வாராந்தம் குற்­றத்­த­டுப்பு பிரிவில் கையெ­ழுத்­தி­டு­மாறு பணிப்­புரை விடுக்­கப்­பட்­டுள்­ளது?

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்னர் பலஸ்­தீ­னுக்கு ஆத­ர­வாக கருத்து வெளி­யிட்ட தேசிய மக்கள் சக்தி இன்று அது தொடர்பில் மௌனம் காக்­கி­றது. ஆனால் அக்­க­ரைப்­பற்று போன்ற பிர­தே­சங்­களில் வீசா இன்றி இஸ்­ரே­லி­யர்கள் வர்த்­த­கத்தில் ஈடு­ப­டு­வது குறித்து இந்த அர­சாங்­கத்தால் எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. கொழும்பில் சட்டவிரோ­த­மாக மத வழி­பாட்டுத் தலங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

இவை தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் இல்­லையா? ஜனா­தி­ப­தியின் கூற்­றுப்­படி பலஸ்­தீ­னுக்கு ஆத­ர­வாக செயற்­ப­டு­வது மாத்­தி­ரமே தற்­போது தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக அமைந்­துள்­ளது. 6 மாதங்கள் என்ற குறு­கிய காலத்­துக்குள் ஜனா­தி­ப­தியின் மாற்­றங்கள் ஆச்­ச­ரி­ய­ம­ளிக்­கின்­றன. பலஸ்தீன் என்ற பெயரைக் கூட உச்­ச­ரிக்க மறுக்­கு­ம­ள­வுக்கு ஜனா­தி­பதி மாறி­யி­ருக்­கின்றார்.

இந்த அர­சாங்கம் தற்­போது இஸ்­ரேலின் முக­வ­ராக மாறி­யி­ருக்­கி­றது. பயங்­க­ர­வாத தடை சட்­டத்தை நீக்­கு­வ­தற்கு அமைச்­ச­ரவை உப குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக பிர­தமர் ஹரிணி அம­ர­சூ­ரிய தெரி­வித்­தி­ருக்­கின்றார். ஆனால் அந்த குழு பயங்­க­ர­வாத தடைச்சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­காக நியமிக்கப்பட்டுள்ளதேயன்றி அதனை நீக்குவதற்காக அல்ல. பொய் கூறி மக்களை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.