இமாம், முஅத்தின்களுக்கு அடிப்படை சம்பளம் நிர்ணயம் செய்யப்படுமா?

0 109

ராஜன் நசீர்தீன் நமடகஹவத்த,
கலேவெல.

ஜும்ஆ மஸ்­ஜி­துகள், தக்­கி­யாக்­களில் கடமை புரியும் பேஷ் இமாம் முஅத்­தின்­களின் சேவைக்­காக வழங்­கப்­படும் சம்­ப­ள­மா­னது ஒவ்­வொரு மஸ்­ஜித்­க­ளுக்­கு­மி­டையில் வேறு­பட்ட அள­வு­டை­ய­தா­கவே இருக்­கின்­றது.இவ்­வ­ள­வுதான் என நிர்­ணயம் செய்யப்படாத நிலையில் இமாம்­களும் முஅத்­தின்­களும் ஏதோ ஒரு தொகையை சம்­ப­ள­மாக எடுத்துக் கொண்டு தம­து ­க­ட­மை­களை செய்­கின்­றனர். இவ்­வாறு கொடுக்­கப்­படும் சம்­பளத் தொகை போது­மா­னதா? இச்­சம்­ப­ளத்தில் நாம் திருப்தி அடைய முடி­யுமா? பொது­வாக 25 முதல் 40 ஆயிரம் ரூபா அள­வி­லேயே இமாம் முஅத்­தின்­களின் சம்­பளம் இருக்­கின்­றது.(இச் சம்­ப­ளத்­தொகை சில பள்ளிவாசல்களில் வேறு படலாம்.) இன்­றைய பொரு­ளா­தார நிலையில் இது போது­மா­ன­தல்ல என்­பது யாவரும் அறிந்த உண்மை.

நாட்டில் உள்ள தகு­தி­யான ஆலிம் உல­மாக்கள் எல்­லோரும் உலமா சபையின் கீழ் அல்­லது இது போன்ற ஒரு நிறு­வன அமைப்பின் கீழ் பதிவு செய்­யப்­பட வேண்டும். இவ்­வாறு சட்­டப்­படி பதிவு செய்­யப்­பட்­ட­வர்­களே மஸ்­ஜி­துக­ளுக்கு நிய­மிக்கப்பட வேண்டும். மஸ்ஜித் நிரு­வாகம் உல­மா­சபை அல்­லது இது போன்ற ஒரு நிறு­வ­னத்­திடம் விண்­ணப்­பித்து தங்­க­ளது மஸ்­ஜி­துக்­கான பேஸ்­ இ­மாம்­களை பெற்றுக் கொள்ள வேண்டும். இமாம்­க­ளுக்கு நிய­ம­னக்­க­டிதம் வழங்­கப்­பட்டு முறை­யாக மஸ்­ஜி­க­ளுக்கு இமாம் முஅ­தின்கள் நிய­மிக்­கப்­பட வேண்டும். இவ்­வாறு இமாம் முஅத்தின் நிய­மிக்­கப்­படும் போது அவர்­க­ளுக்­கான அடிப்­படை சம்­பளம் நிர்­ணயம் செய்­யப்­பட வேண்டும். உல­மாக்கள் தரம் 1/2/3 என அவர்கள் பெற்றுக் கொண்­டுள்ள பட்­டங்­களின் அடிப்­ப­டையில் வகைப்­ப­டுத்­தப்­பட வேண்டும். தரப்­ப­டுத்­த­லுக்­கேற்ப சம­பளத் தொகை நிர்­ணயம் செய்­யப்­பட வேண்டும்.
முறை­யான நிய­ம­ன­மற்ற இமாம்கள் முஅத்­தின்கள் மஸ்­ஜி­துக­ளுக்கு இணைத்­துக்­கொள்ளப் படு­வதால் இங்கு இரு பக்­கத்­திலும் பொறுப்புக் கூறுதல் என்­பது இல்­லாத நிலையே காணப்­ப­டு­கின்­றது.பாது­காப்பும் இவ்­வாறே. மாறாக இன்று மஸ்­ஜி­துக­ளுக்கு இமாம்­களை சேர்த்துக் கொள்­வதில் மஸ்ஜித் நிரு­வாகம் நிர்­ணயம் செய்யும் தொகையே மாதச் சம்­ப­ள­மாக அமை­கின்­றது. இந்­நிலை மாற வேண்டும்.

உல­மா­சபை போன்ற நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து நிய­ம­னங்கள் வழங்­கப்­பட்டு மஸ்­ஜி­துக­ளுக்கு இமாம் முஅத்­தின்கள் நிய­மிக்­கப்­படும் போது இரு பக்­கத்­திலும் பொறுப்புக் கூறுதல் என்­பது அமைந்து விடும்.மஸ்ஜித் நிரு­வா­கத்தால் இமாம் முஅத்­தின்­க­ளுக்கு ஏதா­வது அசௌ­க­ரி­யங்கள் அநி­யா­யங்கள் நடை பெற்றால் அது தொடர்­பான பொருத்­த­மான தீர்­மா­னங்­களை பெற்றுக் கொள்ள முடியும். அது போல் இமாம் முஅத்தின் ஆகி­யோரால் பொறுப்­பற்ற விதத்தில் கடமை பொடுபோக்­குகள் இடம்­பெறும் போது மஸ்ஜித் நிரு­வா­கமும் நியா­யங்­களை பெற்­றுக்­கொள்ள முடியும். மஸ்ஜித் நிரு­வா­கங்கள் இமாம் முஅத்­தின்கள் தங்­க­ளுக்கு ஒத்­து­வ­ராது என கருதும் போது அவர்­களை உடனே மஸ்­ஜிதை விட்டு துரத்தி விடு­வதும் மாறாக அவர்கள் தங்­க­ளுக்கு வச­தி­யான தோது­வான வேறு மஸ்ஜித் கிடைக்கும் போது சொல்­லாமல் கொள்­ளாமல் வில­கிச்­சென்று விடு­வதும் என ­நி­கழ்­வுகள் நடைபெறுகின்றன. இவற்றுக்கு முறையான நிய­ம­னத்­தி­னூ­டாக தீர்­வு­களை பெற்றுக் கொள்ள முடியும்.

உல­மாக்கள் மஸ்­ஜி­துகளை தேடி அலைந்து திரி­வதும் அல்­லது அவர்கள் இடை­ந­டுவில் விலக்­கப்­பட்டு அலைக்­க­ழிக்­கப்­ப­டு­வதும் நிறுத்­தப்­பட வேண்டும். அது போல் ­மஸ்ஜித் நிரு­வா­கிகள் தங்கள் கருத்­துக்­க­ளுக்கு ஒத்துப் போகும் ஆலிம்­களைத் தேடி அலை­வ­து­மான தொல்­லையில் இருந்து விடு­பட ஒரு அமைப்பின் கீழ் பொருத்­த­மான முறையில் நிய­ம­னங்கள் வழங்கப் படும் போது மஸ்­ஜித்­க­ளுக்கு பொருத்­த­மான இமாம் முஅத்­தின்­களை நிய­மித்துக் கொள்ள முடியும். இவ்­வா­றாக நிய­மன அடிப்­ப­டையில் அடிப்­படை சம்­ப­ளத்­துடன் நிய­மனம் பெற்று மஸ்ஜித் களுக்கு கட­மைக்குச் செல்லும் இமாம் முஅத்­தின்கள் மரி­யா­தை­யுடன் தங்கள் கட­மையை செய்ய முடியும்.

நிச்­ச­ய­மாக உல­மாக்கள் சமூ­கத்தில் உயர் அந்­தஸ்தில் வைக்­கப்­ப­ட­வேண்­டி­ய­வர்கள்.அதிலும் மஸ்­ஜித்­களில் கடமை புரி­ப­வர்கள் மேலும் கௌர­வத்­து­டனும் மரி­யா­தை­யு­டனும் நடத்­தப்­பட வேண்­டி­ய­வர்கள்.தமது தகுதிக்கேற்ப சம்­பந்­தப்­படும் இமாம் முஅத்­தின்­களும் முறை­யாக நடந்து கொள்ள வேண்டும் என்­பதும் இங்கு குறிப்­பிட வேண்­டிய ஒன்­றாகும். அந்த வகையில் இன்று குறைந்­தது 75 முதல் 80 ஆயிரம் ரூபா வரை­யான அடிப்­படைச் சம்­பளம் இமாம் முஅத்­தின்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்டும். அவர்­களின் வேறு கொடுப்­ப­ன­வுகள் இதற்குள் அடங்­காது.

அரச தனியார் துறையில் சேவை செய்யும் ஊழி­யர்­க­ளுக்கு அவர்­க­ளது தொழி­லுக்கும் சம்­ப­ளத்­துக்கும் உத்­த­ர­வாதம் கிடைக்­கின்­றது. மஸ்­ஜித்­களில் கடமை புரியும் இமாம் முஅத்­தின்­களின் தொழி­லுக்கோ சம்­ப­ளத்­திற்கோ எந்த உத்­த­ர­வா­த­மு­மில்லை. அவர்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­படும் போது எங்கும் முறை­யிட முடி­யாத நிலையில் வேறு மஸ்­ஜி­துக்கு சென்று விடு­கி­றார்கள். இவ்­வாறு இவர்கள் இட­மாறிச் செல்லும் போது அங்கு அவர்­களின் சேவை முத­லி­லிருந்தே பார்க்­கப்­ப­டு­கின்­றது. அவர்­க­ளுக்­கான சேவைக்­கால எந்தக் கொடுப்­ப­ன­வு­களும் இல்லை.சேவைக்­கால சம்­பள அதி­க­ரி­பு­களும் இல்லை. போகு­மி­ட­மில்­லாத போது எவ்­வ­ளவு சம்­ப­ள­மா­னாலும் பரா­வா­யில்லை என ஆலிம்கள் மஸ்­ஜித்­களில் கட­மை­யாற்ற வேண்­டி­யுள்­ளது. சில இமாம்கள் பேஷ் இமாம் தொழிலில் இருந்தே தங்­களை விடு­வித்துக் கொண்டு வேறு தொழில்­க­ளுக்குச் சென்றுவிடு­கி­றார்கள்.

மஸ்ஜித் நிரு­வா­கங்கள் தங்­க­ளுக்­கான வரு­மானம் குறைவு என கடமை புரியும் இமாம் முஅத்­தின்­க­ளுக்­கான சம்­ப­ளத்தை குறைத்துக் கொடுக்க முடி­யாது. குறை­வான சம்­பளம் என்­பதால் வெளி­ப­்படை­யா­கவோ மறை­மு­க­மா­கவோ இமாம் முஅத்­தின்கள் விரும்­பியோ விரும்­பா­மலோ ஊர்­மக்­க­ளிடம் கைநீட்ட வேண்டி ஏற்­ப­டு­கின்­றது. அல்­லது கடன் பெற வேண்டி ஏற்­ப­டு­கின்­றது.

வரு­டத்­திற்கு இரு­முறை பெரு நாட்­களில் ஓரிரு இலட்­சங்­களை சேர்த்துக் கொடுத்து விட்டு ஊரார் இமாம் முஅத்தின் விட­யத்தில் திருப்­தி­ய­டைந்து விடு­கின்­றனர். இதனால் இமாம் முஅத்­தின்கள் வேறு பள்­ளியில் சம்­பளம் கொஞ்சம் கூட கிடைக்­கு­மென்றால் விலகிச் செல்­வதில் குறி­யாக இருக்­கின்­றனர். பிரச்­சி­னைகள் தீர்க்கப்படாத போது பொறுப்­புக்கள் சரி­யாக நிறை­வேற்­றப்­படும் என எதிர்­பார்க்க முடி­யாது.

இங்கு முன்­வைக்­கப்­படும் கருத்­துக்­க­ளுடன் உடன்­ப­டு­ப­வர்­களும் இருக்­கலாம். முரண்­ப­டு­ப­வர்­களும் இருக்­கலாம். தங்­க­ளது மஸ்­ஜித்­களில் இமாம் முஅத்­தின்கள் முறை­யாக கவ­னிக்­கப்­ப­டு­கி­றார்கள் என கருதும் நிரு­வா­கங்­களும் இருக்கலாம். இங்கு முன் வைக்கப்படும் பிரதான கருத்தாவது உலமாக்கள் ஒரு குவி மையத்தில் இணைக்கப்பட்டு அவர்களுக்கு இமாம் முஅத்தின் நியமனம் முறையாக வழங்கப்பட்டு மஸ்ஜிதுகளுக்கு நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் கண்காணிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு முறையான பொருத்தமான சம்பளத் திட்டம் வகுக்கப்பட வேண்டும்.

நபிமார்களின் வாரிசான உலமாக்கள் கண்ணியமான முறையில் தங்களின் கடமைகளை மஸ்ஜித்களில் நிறை வேற்றுவதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும் என்பதாகும். இவ்விடயங்கள் குர்ஆன் மத்ரசா, அரபு மத்ரசா ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.