தேர்தல் சட்டத்தை மீறி சுவரொட்டிகள் ஒட்டியோருக்கு அபராதம் விதிப்பு

0 44

தேர்தல் சட்ட விதி­களை மீறி சுவ­ரொட்­டிகள் ஒட்­டிய குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்ட மூவ­ருக்கும் ஒரு லட்­சத்து இரு­ப­தா­யிரம் ரூபாய் (120,000) தண்­டப்­பணம் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

தேர்தல் சட்ட விதி­களை மீறி மட்­டக்­க­ளப்பு ஏறாவூர் பிர­தே­சத்தில் சுவ­ரொட்­டிகள் ஒட்­டி­னார்கள் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் மூவர், நேற்­று­முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை அதி­காலை ஏறாவூர் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டனர்.

குறித்த சந்­தேக நபர்­களை செவ்­வாய்க்­கி­ழமை ஏறாவூர் சுற்­றுலா நீதவான் நீதி­மன்ற நீதவான் முன்­னி­லையில் ஆஜர் செய்த போது சந்­தேக நபர்கள் குற்­றத்தை ஒப்புக் கொண்­டதால் தலா நாற்­ப­தா­யிரம் வீதம் மூவ­ரையும் ஒரு இலட்­சத்து இரு­ப­தா­யிரம் ரூபாய் தண்டப் பணம் செலுத்­து­மாறு நீதவான் உத்­த­ரவு பிறப்­பித்தார்.

அதி­காலை வேளையில் வீதி­யோர சுவர்­களில் சுவ­ரொட்­டி­களை ஒட்டிக் கொண்­டி­ருக்கும் போது இரவு நேர ரோந்து நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்த பொலிஸ் குழு­வினர் அவர்­களை கைது செய்­தனர். குறித்த சந்­தேக நபர்­க­ளி­ட­மி­ருந்து ஒரு தொகுதி சுவ­ரொட்­டிகள் கைப்­பற்­றப்­பட்­டன. இவற்றில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சின்னம் மற்றும் வேட்பாளரின் படங்கள் அச்சிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.