அநியாயங்களை கண்டு தூண்டப்படாது முஸ்லிம் இளைஞர்கள் உணர்வுகளை நிர்வகிக்க வேண்டும்

0 31

அநி­யா­யங்கள் இடம்­பெ­று­வதை கண்டு உணர்ச்­சி­வ­சப்­ப­டு­வது மனித இயல்­புதான். ஆனாலும், அதனை புத்­தியின் மூலமும், இஸ்­லா­மிய வழி­யிலும் நிர்­வ­கிக்க முஸ்லிம் இளை­ஞர்கள் கற்­றுக்­கொள்ள வேண்டும் என அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் வலி­யு­றுத்­தி­யுள்ளார். கடந்த வாரம் இடம்­பெற்ற ஜும்ஆப் பிர­சங்­க­மொன்றில் உரை­யாற்­றும்­போதே, அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், சூடானில் இரு தரப்பு உள்­நாட்டு யுத்­தத்­தினால் 3 இலட்­சத்­துக்கு அதி­க­மானோர் கொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றனர். இரா­ணு­வமும் இன்­னொரு சாராரும் யுத்­தத்தில் ஈடு­ப­டும்­ வி­ட­யத்தில் மிகக் கவ­லை­யான விடயம் என்­ன­வெனில், ஒரு தரப்­புக்கு முஸ்லிம் நாடொன்றே ஆயு­தங்­களை வழங்­கு­கின்­றது. இந்த விட­யத்தை நாம் கண்­டு­கொள்­வதே இல்லை. அத்­தோடு, இது பெரும்­பா­லா­னோ­ருக்கு தெரி­யாத விட­ய­மாக உள்­ளது.

சிரி­யாவில் பல வரு­டங்­க­ளாக நடக்கும் யுத்­தத்தில் இலட்­சக்­க­ணக்­கானோர் பலி­யா­கி­யுள்­ளனர். பல நக­ரங்கள் அழிக்­கப்­பட்­டுள்­ளன. அங்கு யூதர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக யுத்தம் செய்­ய­வில்லை, உள்­நாட்­டுக்குள் இரு தரப்­பாக பிரிந்து மோதிக்­கொள்­கின்­றனர்.
உல­கத்தில் இன்று யுத்தம் அர­சி­ய­லாக மாறி­யி­ருக்­கி­றது. யார் யாருடன் இருக்­கின்­றனர். யார் யாருக்கு உதவி செய்­கின்­றனர் என்­பது யாருக்கும் தெரி­யாது.
இன்­றைய யுத்­தங்கள் இப்­ப­டித்தான் இருக்­கின்­றது. இதி­லி­ருந்து அல்லாஹ் எமக்கு விமோ­ச­னத்தை தர வேண்டும்.

இந்த அநி­யா­யங்­க­ளுக்கு எதி­ராக நாம் குரல் கொடுக்க வேண்டும். ஆனால், இதில் மிகவும் ஜாக்­கி­ர­தை­யாக நடந்­து­கொள்ள வேண்டும். குறிப்­பாக இந்த விட­யத்தை இளை­ஞர்கள் கவ­னத்தில் எடுக்க வேண்டும். அநி­யா­யங்­களை காணும்­போது எம்மால் தாங்­கிக்­கொள்ள முடி­வ­தில்லை உணர்ச்சி தூண்­டப்­ப­டு­கி­றது. இதனால், ஆத்­திரம் கோபம் மேலி­டு­கி­றது. அநி­யாயம் நடக்­கும்­போது ஒரு மனி­த­னுக்கு உணர்வு தூண்­டப்­ப­டு­வ­தா­னது சாதா­ர­ணம்தான். ஆனால், அந்த உணர்­வு­களை நிர்­வ­கிக்க கற்­றுக்­கொள்ள வேண்டும்.

முத­லா­வது புத்­தி­சு­வா­தீ­ன­மாக அந்த உணர்வு நிர்­வ­கிக்­கப்­பட வேண்டும். அடுத்­த­ப­டி­யாக, இஸ்­லா­மிய கண்­ணோட்­டத்தில் அந்த உணர்வு நிர்­வ­கிக்கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மா­கி­றது. இந்த சந்­தர்ப்­பத்தில் குர்­ஆனும் ஹதீஸும் என்ன சொல்­கி­றது என்று பார்க்க வேண்டும். அல்­லாஹ்வின் கட்­ட­ளை­யையும் ரசூலின் கட்டளையையும் மதித்து உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

உணர்வுகளுக்கு நாம் கட்டுப்படுவது இஸ்லாம் அல்ல, கோபம் ஆத்திரம் வருவதாயின் அதனை நாம் கட்டுப்படுத்தாது செயற்படுத்துவதானது இஸ்லாம் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என அஷஷெய்க் அர்கம் நூராமித் தெரிவித்துள்ளார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.