சொனிக் சொனிக்கிடம் சி.ஐ.டி. விசாரணை

0 38

(எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்பில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள புதிய விசா­ர­ணை­க­ளுக்கு அமைய, சஹ்ரான் கும்­ப­லுடன் தொடர்­பு­களைப் பேணி­ய­தாக கூற­பப்டும் உளவுத் துறையின் சொனிக் சொனிக் எனும் பெயரால் அறி­யப்­பட்ட உப பொலிஸ் பரி­சோ­த­கரை சி.ஐ.டி.யினர் விசா­ரணை செய்­துள்­ளனர். தொடர்ச்­சி­யாக விசா­ர­ணை­களை தவிர்த்து வந்த குறித்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரிடம் கடந்த 7 ஆம் திகதி இவ்­வி­சா­ர­ணைகள் நடாத்­தப்­பட்­ட­தாக குற்றப் புல­னாய்வுத் திணைக்­கள தக­வல்கள் தெரி­வித்­தன.

குறிப்­பாக உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்­பி­லான விட­யங்கள் தொடர்பில் ஆரம்­பத்தில் விசா­ரணை செய்த, தற்­போ­தைய பொது மக்கள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் ரவி சென­வி­ரத்ன உள்­ளிட்டோர் சொனிக் சொனிக் தொடர்பில் விட­யங்­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

மாத்­தளை சஹ்­ரா­னுடன் தொடர்­பு­களை குறித்த அதி­காரி பேணி, உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களை ஐ.எஸ். ஐ.எஸ். பயங்­க­ர­வா­திகள் செய்­த­தாக காண்­பிக்க எடுக்­கப்­பட்ட முயற்­சி­களில் குறித்த உள­வுத்­துறை அதி­கா­ரியின் பங்­க­ளிப்பு தொடர்பில் தெரி­ய­வந்­தி­ருந்­தது.

இவ்­வா­றான நிலையில், அவரை விசா­ரிக்க தொடர்ச்­சி­யாக தடைகள் இருந்த நிலை­யி­லேயே இப்போது, புதிய விசாரணைகளுக்கு அமைய குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.