உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள்: அரச உளவு சேவை கான்ஸ்டபிள் கைது

புதிய விசாரணைகளின் கீழ் முதலாவது நடவடிக்கை

0 31

(எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்பில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள புதிய விசா­ர­ணை­க­ளுக்கு அமைய, அரச உளவுச் சேவையின் கிழக்கு மாகா­ணத்­துக்கு உட்­பட்டு கட­மை­களை முன்­னெ­டுக்கும் பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒரு­வரை சி.ஐ.டி.யினர் கைது செய்­துள்­ளனர். நேற்று முன் தினம் இரவு அவரை கைது செய்­த­தாக சி.ஐ.டி. உய­ர­தி­காரி ஒருவர் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­க­ளுக்கு முன்னர் அத­னுடன் தொடர்­பு­பட்ட சம்­ப­வ­மாக நடந்த வவு­ண­தீவு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் இரு­வரின் கொலை தொடர்பில், விசா­ர­ணை­களை திசை திருப்ப நட­வ­டிக்கை எடுத்­தவிவகாரத்தில் இந்த பொலிஸ் கான்ஸ்­டபிள் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

கடந்த 2018 நவம்பர் 30 ஆம் திகதி வவு­ண­தீவு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் இருவர் கொலை செய்­யப்­பட்­டனர். இது தொடர்பில் சி.ஐ.டி.யின­ருக்கு விசா­ர­ணைகள் பொறுப்­ப­ளிக்­கப்­பட்ட பின்னர், குறித்த குற்­றத்தை விடு­தலை புலி ஆதர­வா­ளர்கள் செய்­த­தாக காண்­பிக்க உளவுத் துறை­யினர் பல்­வேறு சான்­று­களை நிர்­மா­ணித்­த­தாக கூறப்­ப­டு­கின்­றது.

அதன்­படி அப்­போது வவு­ண­தீவு பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்ட பின்னர் சி.ஐ.டி.யின­ரிடம் கைய­ளிக்­கப்­பட்ட அஜந்தன் எனும் இளை­ஞனின் ஜெக்கட் ஒன்­றினை கொலை நடந்த பகு­தியில் வைத்து, பொலிஸ் மோப்­பநாய் ஊடாக சந்­தே­கத்தை உறுதி செய்ய நட­வ­டிக்கை எடுத்­த­தாக கூறப்­படும் விடயம் தொடர்பில், இப்­போது குறித்த உள­வுத்­துறை பொலிஸ் கான்ஸ்­டபிள் கைது செய்­யப்பட்­டுள்ளார்.

குறித்த பொலிஸ் கான்ஸ்­ட­பி­ளிடம் நடாத்­தப்­பட்ட விசா­ர­ணை­களில் அவர் வழங்­கிய வாக்கு மூலங்கள், அவ­ரது மேலதி­காரிகள் வழங்­கிய வாக்கு மூலங்கள் என அனைத்தும் ஒன்­றுக்­கொன்று முர­ணா­னது என உறுதி செய்­யப்­பட்ட நிலையில், குறித்த இடயம் தொடர்பில் இக்­கைது நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

வவுண தீவு கொலை விவ­கா­ரத்தில் விசா­ர­ணை­களை திசை திருப்ப உள­வுத்­துறை முன்­னெ­டுத்த நட­வ­டிக்கை காரணமாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சந்தேக நபர்களை கைது செய்வது சாத்தியமற்று போனதாக கருதப்படும் நிலையிலேயே இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.