கொவிட் 19 கட்டாய தகனம் செய்யப்பட்டோரின் ஐந்தாண்டு நினைவு கூரல் நிகழ்வின் தீர்மானங்கள்

0 35

கொவிட்-19 நோயால் உயி­ரி­ழந்­தோ­ருக்கு மரி­யா­தை­யான அடக்கும் உரி­மையை மறுத்­த­மைக்­காக, விசா­ரணை நடத்தி நீதி­யினை வழங்­கு­மாறு இலங்கை அர­சாங்­கத்­திடம் இந்த அறி­விப்பின் மூலம் வலி­யு­றுத்­தப்­ப­டு­கி­றது.

கொவிட்-19 கார­ண­மாக இலங்­கையில் கட்­டா­ய­மாக எரிக்­கப்­பட்ட முதல் முஸ்லிம் நீர்­கொ­ழும்பைச் சேர்ந்த முகம்­மது ஜமால் ஆவார். 2020 மார்ச் 30ஆம் திகதி அவர் உயி­ரி­ழந்தார். மார்ச் 27ஆம் திகதி வெளி­யான அறி­வுறுத்தல்களின்­ படி புதைப்­ப­தற்கு அனு­மதி இருந்த போதிலும், அவ­ரது குடும்­பத்தின் சம்­ம­த­மின்­றியே சடலம் எரிக்­கப்­பட்­டது. அந்த நேரத்தில் எந்த நாடும் இது போன்ற கொள்­கையை அமுலில் வைக்­க­வில்லை, மேலும் இது உலக சுகா­தார நிறு­வ­னத்தின் (WHO) வழி­காட்­டு­தல்­க­ளுக்கும் முர­ணா­னது. மறு­நாளில், இலங்கை சுகா­தார அமைச்சு, கொவிட்-19 ஆல் உயி­ரி­ழந்­தோரின் சட­லங்­களை எரிப்­பதே ஒரே வழி என கட்­டாய நடை­மு­றை­களை அறி­வித்­தது. இது முஸ்லிம் சமூகம் உள்­ளிட்ட பல மதங்­க­ளுக்கு எதி­ரா­னது. இந்த கொள்­கைக்கு தேசிய மற்றும் சர்­வ­தேச மட்­டத்தில் கடு­மை­யான விமர்­ச­னங்கள் எழுந்­தன.

இஸ்­லாத்தில் உயி­ரி­ழந்த சட­லத்தை எரித்தல் கடு­மை­யாகத் தடை செய்­யப்­பட்­டுள்­ளது. சட­லத்தை மரி­யா­தை­யுடன் குளிப்­பாட்டி, ஆடை­ய­ணி­வித்து (கஃபன் செய்து) தொழுகை செய்து நல்­ல­டக்கம் செய்­வதே அதற்­கு­ரிய மரி­யா­தையும் கட­மை­யு­மாகும். சட­லத்தை எரிப்­பது உடலின் புனி­தத்தைக் களையும் செயல் எனக் கரு­தப்­ப­டு­கி­றது.
ஐ.நா மனித உரிமை பேர­வையின் (46/1, 2021) என்ற இலக்க தீர்­மானம், இச்­செயல் மத சுதந்­தி­ரத்­தையும் சிறு­பான்­மைகள் மீதான பாகு­பா­டையும் அதி­க­ரித்­துள்­ள­தாகக் கண்­டித்­தது.

இலங்­கையின் பல மருத்­துவ அமைப்­புகள், WHO மற்றும் பல தொழில்­நுட்ப நிபு­ணர்­களின் கருத்­து­க­ளையும் புறக்­க­ணித்து, அர­சாங்கம் புதைப்­ப­தற்­கான அனு­ம­தியை மறுத்­தது. பின்னர், 2021 பெப்­ர­வரி மாதம், கட்­டாய எரித்தல் கொள்­கையை நிறைவு செய்து, மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட முறையில் மட்­டுமே அடக்கம் செய்ய அனு­மதி வழங்­கப்­பட்­டது (ஓட்­ட­மா­வ­டியில் அடங்கம் செய்ய அனு­ம­தித்­தது). இது குடும்­பங்­க­ளுக்குப் பெரும் வேத­னையை ஏற்­ப­டுத்­தி­யது.

2024 ஜூலை மாதத்தில், அடுத்த அர­சாங்கம் முஸ்லிம் சமூ­கத்­திடம் மன்­னிப்புக் கேட்­டது மற்றும் எதிர்­கா­லத்தில் இது­போன்ற செயற்­பா­டுகள் மீண்டும் நடக்­காது என உறு­தி­ய­ளித்­தது.

இந்த மிகக் கொடு­மை­யான, மனித உரி­மை­களை மீறிய வர­லாற்றுப் பகு­தியில் இருந்து உட­ன­டி­யாக நீங்கும் வகையில், நியா­யமும் இழப்­பீடும் வழங்­கப்­ப­டு­வது இன்­றி­ய­மை­யா­தது.

நாங்கள், முஸ்லிம் சிவில் சமூகம், மதத் தலை­வர்கள், சமூகத் தலை­வர்கள், செயற்­பாட்­டா­ளர்கள் மற்றும் பாதிக்­கப்­பட்ட குடும்ப உறுப்­பி­னர்கள், கொவிட்-19 கார­ண­மாக இடம்­பெற்ற கட்­டாய சடல எரிப்பை கடு­மை­யாகக் கண்­டிக்­கிறோம். சுமார் 300 பேர், அதில் பிறந்து 20 நாட்கள் மட்­டுமே நிறம்­பிய குழந்­தையும் கூட, குடும்ப சம்­ம­த­மின்றி எரிக்­கப்­பட்­டனர்.

இந்தக் கொடூ­ர­மான மற்றும் அநி­யா­ய­மான வர­லாற்றுக் கட்­டத்தை நினை­வு­கூரும் வேளையில், நியா­யமும் இழப்­பீடும் மிக முக்­கி­ய­மா­ன­தாகும். இவ்­வ­ழி­யாக மட்­டுமே, நாட்டின் அனைத்து குடி­மக்­களும் மரி­யா­தை­யுடன் எதிர்­கா­லத்­திற்கு நகர முடியும்.
நாங்கள், இலங்­கையில் கொவிட்-19 நோயால் உயி­ரி­ழந்­தோரின் மீது கட்­டா­ய­மாகச் செயல்­ப­டுத்­தப்­பட்ட “வலுக்­கேற்பச் சடலம் எரித்தல்” கொள்­கையால் பாதிக்­கப்­பட்ட முஸ்லிம் சிவில் சமு­தாய உறுப்­பி­னர்கள், மதத் தலை­வர்கள், சமூகத் தலை­வர்கள், செயற்­பாட்­டா­ளர்கள் மற்றும் குடும்ப உறுப்­பி­னர்கள் அந்த காலப்­ப­கு­தியில் மேற்­கொள்­ளப்­பட்ட அடிப்­படை மனித உரி­மைகள் மீறல்­களை ஆழ்ந்த வேத­னை­யுடன், வன்­மை­யாகக் கண்­டிக்­கிறோம்.

இந்த கொள்­கையின் கார­ண­மாக, பிறந்­த­தி­லி­ருந்து சில மணி நேரங்கள் மட்­டுமே வாழ்ந்த ஒரு புதுப் பிறந்த குழந்­தையை உள்­ள­டக்­கிய சுமார் 300 பேர், அவர்­க­ளது குடும்­பங்­களின் விருப்­ப­மின்றி மற்றும் சம்­ம­த­மின்றி எரிக்­கப்­பட்­டனர். இது, இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பில் பாது­காக்­கப்­படும் அடிப்­படை உரி­மை­களை மிக மோச­மாக மீறி­யது.
வலுக்­கேற்பச் சடலம் எரித்தல் நடை­மு­றைக்கு ஐந்­தாண்­டுகள் நிறைவு காணும் இந்­நாளில், 2020 ஆம் ஆண்டில் அனைத்து இலங்­கை­யர்­களும் அனு­ப­வித்த துய­ரங்­க­ளையும் வேத­னை­க­ளையும் நாம் மிகக்கவ­லை­யுடன் நினை­வு­கூ­ரு­கிறோம்.
எனவே, இலங்கை அர­சாங்கம் பின்­வரும் நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும் என வலி­யு­றுத்­து­கிறோம்:

சட்­டத்­திற்குப் புறம்­பாக “கட்­டாய ஜனாஸா எரித்தல்” எவ்­வாறு மற்றும் ஏன் நடை­மு­றையில் கொண்டு வரப்­பட்­டது என்­ப­தற்­கான சுயா­தீ­னமும் நம்­ப­க­மா­ன­து­மான விசா­ர­ணையை மேற்­கொள்ள வேண்டும். இது, மீண்டும் நிக­ழா­தி­ருக்கும் உத்­த­ர­வா­தங்கள் மற்றும் நேரடி பொறுப்­பா­ளர்­களை அடை­யாளம் காணும் நட­வ­டிக்­கைகள் உள்­ளிட்ட அனைத்து நீதித்­துறைப்படி­களும் உள்­ள­டக்­கப்­பட வேண்டும்.

விஞ்­ஞான ஆதா­ரங்கள் மற்றும் மனித உரி­மைகள் குறித்த தக­வல்­களை புறக்­க­ணித்­தோரை, அதா­வது இந்தக் கொடூ­ர­மான கொள்­கையை திட்­ட­மிட்டும், நடை­மு­றைப்­ப­டுத்­தி­யதும் பொறுப்­பா­ளர்­க­ளாக உள்ள அதி­கா­ரி­க­ளையும், முடி­வெ­டுத்­த­வர்­க­ளையும் சட்­டத்தின் கீழ் நீதிக்கு முன் கொண்டு வரப்­படல் வேண்டும்.

மார்ச் 31ஆம் திக­தியை, கட்­டாய ஜனாஸா எரிக்­கப்­பட்­ட­வர்­களின் நினை­வா­கவும், எதிர்­கா­லத்தில் இத்­த­கைய அநி­யா­யங்கள் மீண்டும் நிக­ழா­தி­ருக்கும் உறு­திப்­பத்­தி­ர­மா­கவும், தேசிய நினைவு நாளாக அறி­விக்­கப்­படல் வேண்டும்.

ஒரு தேசிய நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும். இதில், பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் பெயர்கள் பொறிக்­கப்­பட வேண்டும். இது அவர்­களின் நினை­வு­க­ளுக்கும், குடும்­பங்­களின் வேத­னை­க­ளுக்கும் மரி­யாதை செலுத்தும் முக­மா­கவும், இலங்­கையின் அனைத்து சமூ­கங்­க­ளுக்கும் அணு­கத்­தக்­க­வாறும் இருக்க வேண்டும்.
இந்தப் பிரகடனம், இலங்கையில் நீதியும், மரியாதையும், அடிப்படை உரிமைகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்ற தீவிர உறுதிமொழியாகக் கருதப்படுகிறது.

இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட சமூகத்துடன் துணையாக நின்ற அனைத்து நற்பண்புடைய நபர்களுக்கும் மற்றும் சர்வதேச சமூகத்திற்கும், நாங்கள் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அர­சாங்கம் உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும் என்­ப­தோடு, இச்­சம்­ப­வங்­களைப் பற்­றிய எங்கள் ஈடு­பாடும் தொடரும் என்­ப­தையும், அவர்­களின் புரி­த­லையும் ஒத்­து­ழைப்­பையும் எதிர்பார்க்கின்றோம்!- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.