குழந்­தை­களை நெறிப்­ப­டுத்­து­தல்

0 30

குழந்­தை­களை நெறிப்­ப­டுத்­து­கின்ற முறைகள்
இணைய உல­கிற்கு குழந்­தை­களை தயார்­ப­டுத்­து­கின்ற பெற்றோர் முதன் முதலில் செய்ய வேண்­டி­யது தமது இணைய பயன்­பாடு தொடர்­பான தர்க்க ரீதி­யான சுய­வி­சா­ரணை ஒன்றை மேற்­கொள்­வ­தாகும். குழந்­தை­களுக்கும் மாண­வர்­களுக்கும் தமது பரா­ம­ரிப்பில் உள்­ள­வர்­களுக்கும் தாம் எத்­த­கைய முன்­மா­தி­ரி­களை கொண்­டி­ருக்­கிறோம் என்­பதை ஒவ்­வொ­ரு­வரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சிறு­வர்கள் பெற்­றோர்­களை கேள்வி கேட்க முடி­யா­த­வர்­க­ளாக இருந்­தாலும் பெற்­றோரின் இணை­ய­தள பாவ­னையை மிக அவ­தா­ன­மாக பார்த்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பதை பெற்றோர் தெரிந்­து­கொள்ள வேண்டும்.

பெற்றோர் எவ்­வ­ளவு நேரம் இணை­ய­த­ளத்தில் செல­வி­டு­கி­றார்கள், யாருடன் தொடர்­பு­களை பேணிக் கொள்­கி­றார்கள், எந்த விண்­ணப்­பங்­களை அதிகம் பிர­யோ­கிக்­கின்­றார்கள், எந்த சந்­தர்ப்­பங்­களில் அதி­க­மாக இலத்திரனியல் கரு­வி­களை பயன்­ப­டுத்­து­கின்­றார்கள் என்­ப­தை­யெல்லாம் பிள்­ளைகள் அவ­தா­னித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். வாக­னங்­களில் பிள்­ளை­களை அழைத்துச் செல்­கின்ற பெற்றோர் தமது பய­ணங்­களின் போது இலத்­தி­ர­னியல் கரு­வி­களை பயன்­ப­டுத்­து­கின்ற பழக்கம் இருந்தால் முதலில் அது ஆபத்­தா­னது என்­ப­தற்கு அப்பால் குழந்­தைகள் பெற்­றோரின் இணை­ய­தள செயல்­பா­டு­களை நேர­டி­யாக அவ­தா­னிக்கும் வாய்ப்­பினை அது ஏற்­ப­டுத்திக் கொடுக்­கி­றது என்­ப­தையும் பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.

பெற்றோர் தம்மை தயார்­ப­டுத்திக் கொள்­ளுதல்
தகவல் தொடர்­பாடல் தொழில்­நுட்பம், இலத்­தி­ர­னியல் கரு­விகள் மற்றும் சமூக ஊட­கங்கள் என்­ப­ன­வற்றின் பிரதிகூலங்­களை மாத்­திரம் கருத்தில் கொள்­கின்ற பெற்றோர் குழந்­தை­களை வளர்த்­தெ­டுப்­பது ஒரு சிக்­க­லான விடயம் என்றே கரு­து­கின்­றனர். எனினும், தகவல் தொடர்­பாடல் தொழில்­நுட்­பமும் அத­னோடு சார்ந்த இணைய வரப்­பி­ர­சா­தங்­களும் ஆபத்­தா­னவை என்­கின்ற உண்­மைக்கு அப்பால், குழந்­தை­களின் கல்வி சமூக பொரு­ளா­தார முன்­னேற்­றத்தில் அதி­க­ளவு பயன் விளை­விக்க கூடி­யவை என்­ப­ன­வற்­றையும் பெற்றோர் கருத்தில் கொள்ள வேண்டும்.

அத்­தோடு, இணைய உலகில் பிர­வே­சிப்­பது – அதே கல்வி பொழு­து­போக்கு சமூகம் சார்ந்த எந்த விட­ய­மாக இருந்­தாலும் சரி, சிறு­வர்­களின் அடிப்­படை உரி­மை­களில் ஒன்று என்­ப­தையும் பெற்றோர் கருத்தில் கொள்ள வேண்டும். இலத்­தி­ர­னியில் கரு­வி­களை குழந்­தை­க­ளி­ட­மி­ருந்து பறித்­தெ­டுக்­கின்ற பொழுது அது குழந்­தை­களின் அபி­வி­ருத்­தியை பல்­வேறு தளங்­களில் பாதிக்­கின்­றது என்­ப­தையும் உணர வேண்டும். குழந்­தை­களை இணைய உல­கிற்கு தயார்­ப­டுத்­து­கின்ற ஒவ்­வொரு பெற்­றோரும் இணைய உல­கத்­திற்­கான குடி­மக்கள் அல்­லது பிர­ஜைகள் யார்? அவர்­க­ளுக்கு கட்­டாயம் இருக்க வேண்­டிய பண்­புகள் எவை? என்­ப­ன­வற்றை அறிந்து வைத்­தி­ருப்­பது காலத்தின் தேவை­யாகும். ஒரு குழந்தை ஏக காலத்தில் தான் வாழ்­கின்ற சமூ­கத்­திலும் தான் பிர­வே­சிக்­கின்ற இணைய உல­கத்­திலும் சிறந்த பிர­ஜை­யாக தம்மை வெளிக்­காட்டிக் கொள்­வது பெற்­றோரின் வழி­ந­டத்­தலில் உள்­ள­தாகும்.

ஆரோக்­கி­ய­மான இணையப்
பிர­வே­சத்­திற்கு வழி­காட்­டுதல்
இணைய உலகில் குழந்­தை­களை வளர்த்­தெ­டுக்க விரும்­பு­கின்ற பெற்றோர் தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்­டிய மற்றுமொரு விடயம் இணைய உலக குடி­மக்­க­ளுக்­கான ஆரோக்­கி­ய­மான நடத்­தை­களை தெரிந்து வைத்­தி­ருப்­ப­தாகும். குழந்­தைகள் இணைய உலகில் எவ்­வ­ளவு நேரம் செல­வி­டு­கி­றார்கள் என்­பதை விட தான் செல­விடும் நேரத்தில் பிர­தி­ப­ல­னாக இத்­த­கைய அடை­வினை கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்­பதை அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்­றோ­ரிடம் இருக்க வேண்டும். இணைய உலகில் இருக்­கின்ற ஒரு சந்­தர்ப்­பத்­திலும் சக நண்­பர்­களை மதித்தல், ஆரோக்­கி­ய­மான தொடர்­பா­டலில் ஈடு­ப­டுதல், புத்­தாக்கம் மிக்க தயா­ரிப்­பு­களை வெளிக்­கொண்டு வருதல், காலத்­துக்கு தேவை­யான பிரச்­சி­னைகள் தொடர்­பாக அறிவு சார்ந்த நண்­பர்­க­ளுடன் உரை­யா­டலில் ஈடு­ப­டுதல், சக நண்­பர்­களின் கருத்­துக்­க­ளுக்கு பாராட்­டு­களை வழங்­குதல், தர்க்க ரீதி­யான கருத்­துக்­களை முன் வைக்க வேண்டி வரு­கின்ற ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் நியா­ய­மான முறையில் நடந்து கொள்­ளுதல், சக நண்­பர்­களின் ரக­சி­யங்­களை பாது­காத்தல், சக நண்­பர்கள் விரும்­பாத விட­யங்­களில் ஈடு­ப­டு­வதில் இருந்து தவிர்ந்து கொள்­ளுதல், தவ­றான அடை­யா­ளங்­களை ஏற்­ப­டுத்திக் கொண்டு ஏனை­ய­வர்­க­ளுக்கு உள்­ளத்தை பாதிக்­கின்ற பின்­னூட்­டல்­க­ளையும் கருத்­துக்­க­ளையும் வழங்­கா­தி­ருத்தல் போன்ற நல்ல பண்­பு­களை விதைக்­கின்ற ஆற்றல் ஒவ்­வொரு பெற்­றோ­ரி­டமும் இருக்க வேண்டும்.

பருவ வயதை அடை­கின்ற ஒவ்­வொரு சிறு­வர்­களும் இணை­ய­வெ­ளியில் தமக்­கான நண்­பர்­களைத் தேடிக் கொள்­கின்­றனர். சிலர் குடும்­பங்­களில் ஏற்­ப­டு­கின்ற தக­ராறு, பெற்­றோ­ரிடம் ஆசி­ரி­யர்­க­ளிடம் மற்றும் உற­வி­னர்­க­ளி­ட­மி­ருந்து போதிய அன்பு கிடைக்­காமை, நட்பு கிடைக்­காமை போன்ற கார­ணங்­களால் முன்பின் அறி­யாத முகம் தெரி­யாத நண்­பர்­க­ளிடம் இணைய உலகில் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்திக் கொண்டு ஆறுதல் பெறு­கின்­றனர். இது மிகவும் ஆபத்­தா­னது. எவ்­வா­றா­யினும், இணைய உலக நண்­பர்­க­ளுடன் நட்­பினை பேணிக் கொள்ளும் ஒவ்­வொரு பிள்­ளை­க­ளி­டமும் பெற்றோர் உரை­யா­டலில் ஈடு­பட வேண்டும். வய­துக்குப் பொருத்­த­மான வகையில் அவர்­களின் நட்பு எந்த திசையை நோக்கி செல்­கின்­றது என்­பது பற்­றியும் உரை­யா­டல்கள் இடம் பெற வேண்டும். தம்­மோடு பேசு­வ­தற்­கான சந்­தர்ப்­பத்தை பெற்றோர் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கின்ற பொழுது பிள்­ளைகள் தீர்வு காண முடி­யாமல் தமக்­குள்­ளேயே திண்­டாடிக் கொண்­டி­ருக்­கின்ற நட்­புசார் பிரச்­சி­னை­களை திறந்த மன­தோடு பேசு­கின்ற வாய்ப்பு ஏற்­ப­டு­கின்­றது. தமது கருத்­துக்­களை பிள்­ளை­க­ளிடம் திணித்து பிள்­ளைகள் எப்­போதும் தமது எதிர்­பார்ப்­பு­களை மாத்­திரம் நிறை­வேற்­று­கின்­ற­வர்­க­ளாக நடந்து கொள்ள வேண்டும் எனக் கரு­து­வது முரண்­பாட்டு நிலையை தோற்­று­விக்­கின்­றது.
குழந்­தை­க­ளுக்கு எப்­போது இலத்­தி­ர­னியல் கரு­வி­களை கொடுக்க வேண்டும்?

குழந்­தைகள் சுதந்­தி­ர­மாக எப்­போது இலத்­தி­ர­னியல் கரு­வி­களை பயன்­ப­டுத்த ஆரம்­பிக்க வேண்டும் என்­பது தொடர்பில் பல்­வேறு வாதப்பிர­தி­வா­தங்கள் உள்­ளன. உலக சுகா­தார நிறு­வனம் இரண்டு வய­துக்கு குறைந்த சிறு­வர்­க­ள் இலத்­தி­ரனியல் கரு­விகளைப் பயன்­படுத்துவதை ஆபத்­தா­ன­தாக கருதுகிறது. பல ஆய்­வா­ளர்கள் மூன்று தொடக்கம் 5 வயது வரை­யி­லான சிறு­வர்கள் சுமார் ஒன்று தொடக்கம் இரண்டு மணி நேரத்திற்கு இலத்­தி­ர­னியல் கரு­வி­க­ளைப் பயன்­ப­டுத்­தலாம் என்ற பரிந்­து­ரையை வழங்­கு­கின்­றனர். எனினும் பருவ வயதை நோக்கி வளர்­கின்ற ஒரு பிள்ளை சுயா­தீ­ன­மாக எப்­போது இலத்­தி­ர­னியில் கரு­வி­களை பயன்­ப­டுத்த வேண்டும் என்­பது தொடர்பில் உறு­தி­யான நிலைப்­பா­டுகள் எதுவும் கிடை­யாது. எனினும் இது தொடர்­பான ஆய்­வு­க­ளையும் பரிந்­து­ரை­க­ளையும் வழங்­கு­கின்ற இணைய உள­வி­ய­லா­ளர்கள் குழந்­தை­களின் தர்க்க சிந்­தனை, அறிவு மட்டம், சமூகத் தொடர்­பாடல், குடும்ப உற­வு­க­ளுடன் ஆரோக்­கி­ய­மான உரை­யா­டலை பேணிக் கொள்­கின்ற திறன் போன்­ற­வற்றின் அடிப்­ப­டையில் இது தீர்­மா­னிக்­கப்­பட வேண்டும் என்­கின்­றனர். இதன் அர்த்தம், ஒரு குழந்தை பருவ வயதை அடைந்­தி­ருந்­தாலும், அக்­கு­ழந்­தையின் கல்வி சமூக நடத்­தைகள் சுயா­தீ­ன­மான இணைய பாவ­னைக்கு பொருத்­த­மற்­ற­தாக இருந்தால் அத்­த­கை­ய­வர்­க­ளுக்கு சொந்­த­மாக பயன்­ப­டுத்­தக்­கூ­டிய இலத்­தி­ரனியல் கரு­வி­களை பெற்றுக் கொடுப்­பது பிரச்­சினைக்குரியது என்பதாகும். இந்த இடத்தில் பெற்றோர் மிகுந்த அவ­தா­னத்­துடன் நடந்து கொள்ள வேண்டும்.

எவ்­வா­றா­யினும் குழந்­தை­க­ளுக்கு சுயா­தீ­ன­மாக பயன்­ப­டுத்­து­வ­தற்­காக இலத்­தி­ரனியல் கரு­வி­களை பெற்றோர் பெற்றுக் கொடுக்­கின்ற பொழுது அதனால் ஏற்­ப­டு­கின்ற நன்­மை­களைப் போன்று தீமை­க­ளுக்கும் அவர்கள் பொறுப்பு கூற வேண்டி உள்­ளது என்­பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

குழந்­தை­க­ளுக்கு கைய­டக்க தொலை­பே­சி­களை வழங்­கு­கின்ற ஒவ்­வொரு பெற்­றோரும் அதன் பாது­காப்பு விண்­ணப்­பங்கள் (அப்) பற்றி தெரிந்­தி­ருக்க வேண்டும். ஆரோக்­கி­ய­மற்ற உள்­ள­டக்­கங்­களை, குறிப்­பாக ஆபாச உள்­ள­டக்­கங்­களை சிறு­வர்கள் பார்­வை­யி­டு­வதை, அல்­லது தேடு­வதை கட்­டுப்­ப­டுத்தும் பல ஏற்­பா­டுகள் ஆப்பிள் மற்றும் அண்ட்ரோய்ட் கைய­டக்க தொலை­பே­சி­களில் காணப்­ப­டு­கின்­றன. தமது கைய­டக்க தொலை­பே­சியில், செட்டிங் பகு­தியில், ஆபத்­தான உள்­ள­டக்­கங்­களை தடுத்து நிறுத்தும் ஏற்­பா­டுகள் உள்­ளன. அதே­போன்று, ஆபத்­தான விண்­ணப்­பங்­களை (அப்) தர­வி­றக்கம் செய்­வ­தி­லி­ருந்து தவிர்ந்து கொள்ளும் ஏற்­பா­டு­களும் உள்­ளன. கைப்­பே­சியை பெற்­றுக்­கொண்ட குதூ­க­லத்தில் பல சிறு­வர்கள் தமது பெற்­றோரின் வங்கி கணக்­கட்­டை­களை பயன்­ப­டுத்தி கொள்­வ­னவு செய்யும் முயற்­சி­களில் ஈடு­ப­டு­வதும் உண்டு. இவற்றை முன்­கூட்­டியே பெற்றோர் தடுத்து வைத்துக் கொள்ள முடியும். மிக முக்­கி­ய­மா­ன­தாக பெற்றோர் கட்­டுப்­பாட்டு கரு­விகள் பல உள்­ளன. இவற்றில் பெரும்­பா­லா­னவை இல­வ­ச­மா­னவை. மேலும் சில கட்­டணம் செலுத்­தப்­பட வேண்­டி­யவை. ஒவ்­வொரு பெற்­றோரும் தனித்­த­னி­யாக இத்­த­கைய கட்­டுப்­பாட்டு கரு­விகள் பற்றி தெரிந்து வைத்துக் கொள்­வ­தோடு அவற்றை முதன் முதலில் பிள்­ளை­க­ளுக்கு இலத்­தி­ரனியல் கரு­வி­களை பெற்றுக் கொடுக்­கின்ற போதே உட்செலுத்தி வைக்க வேண்டும். அவ்­வாறு செய்­கின்ற பொழுது, பெற்றோர் தமது எதிர்­பார்ப்பை முன்­கூட்­டியே பிள்­ளை­க­ளுக்கு விளக்கி விட்­ட­தாக அமைந்து விடும். இவற்றை சிறிது காலம் சென்ற பின்னர் செய்­கின்ற பொழுது, பெற்றோர் தன் மீது சந்­தே­கப்­ப­டு­கின்­றார்கள் என்ற எண்ணம் பிள்­ளை­க­ளுக்கு வந்து விடு­கின்­றது. எனவே, முதன் முதலில் இலத்­தி­ர­னியல் கரு­வி­க­ளையும் கைய­டக்கத் தொலை­பே­சி­க­ளையும் பிள்­ளை­க­ளுக்கு சுயா­தீ­ன­மாக பயன்­ப­டுத்­து­வ­தற்­காக வழங்­கு­கின்ற பெற்றோர், இத்­த­கைய விட­யங்­களை தம்மால் செய்து கொள்ள முடி­யாது என்று இருக்­கின்ற போது, தமது கிரா­மங்­களில் வாழ்­கின்ற இது பற்­றிய போதிய ஆற்றல் உள்­ள­வர்­க­ளிடம் சென்று இவற்றைச் செய்து கொள்­வது ஆரோக்­கி­ய­மா­ன­தாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.