தவறான புரிதல்கள் குறித்து உலமா சபையுடன் கலந்துரையாடினேன்

பாட்டலி சம்பிக்க ரணவக்க

0 41

ஐக்­கிய குடி­ய­ரசு முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க நேற்று முன்­தினம் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா தலை­மை­ய­கத்­திற்கு விஜயம் செய்தார். கட்­சியின் கிழக்கு மாகாண முஸ்லிம் அங்­கத்­த­வர்­களும் இச்­சந்­திப்பில் பங்­கு­பற்­றினர்.

இச்­சந்­திப்பு தொடர்பில் சம்­பிக்க ரண­வக்­கவின் ஊடகப் பிரிவு விடுத்­துள்ள அறிக்­கையில்,
“முஸ்லிம் சமூ­கத்­திற்குள் நிலவும் பல்­வேறு பிரச்­சி­னைகள் மற்றும் தவ­றான புரி­தல்கள் குறித்து இதன்­போது விரி­வாக ஆரா­யப்­பட்­டது. மேலும் நாட்டின் எதிர்­கா­லத்தை நோக்கி அனைத்து மதக் குழுக்­களும் எவ்­வாறு ஒன்­றி­ணைந்து செயல்­பட முடியும் என்றும் படித்த, புத்­தி­சா­லித்­த­ன­மான மற்றும் தொலை­நோக்குப் பார்­வை­யுடன் எவ்­வாறு முன்­னோக்கிச் செல்ல முடியும் என்­பது குறித்து இரு தரப்­பி­ன­ருக்கும் இடையே கருத்­துக்கள் பரி­மா­றப்­பட்­டன. குறிப்­பாக கடந்த காலங்­களில் எழுந்த சில தவ­றான புரி­தல்­களைத் தெளி­வு­ப­டுத்­து­வ­தற்­காக, இரு தரப்­பி­னரும் மிகவும் முற்­போக்­கான கருத்­துக்­களைப் ைப் பரிமாறிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.