முதலாவது ஹஜ் குழு மே 13 இல் பயணம்

0 38

(றிப்தி அலி)
இவ்வருடத்திற்கான புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்கான இலங்கையின் முதலாவது குழு எதிர்வரும் மே 13ஆம் திகதி செல்லவுள்ளதாக ஹஜ் முகவர் சங்கத்தின் தலைவர் ஏ.கியூ.பீ.எம். கரீம் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.

இதற்குத் தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் அரச ஹஜ் குழு, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மற்றும் கொழும்­பி­லுள்ள சவூதி அரே­பிய தூது­வ­ரா­லயம் ஆகி­ய­வற்­றுடன் இணைந்து முன்­னெ­டுத்து வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.
இந்த வருடம் புனித ஹஜ் கட­மை­யினை மேற்­கொள்ள சவூதி அரே­பி­யா­வினால் இலங்­கைக்கு 3,500 ஹஜ் கோட்­டாக்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. இதில் 90 சத­வீ­த­மான யாத்­தி­ரி­கர்கள் தமது பெயர்­களை பதிவு செய­துள்­ள­தாக அரச ஹஜ் குழுவின் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இலங்­கைக்கு இந்த வருடம் கிடைக்கப் பெற்ற ஹஜ் கோட்­டாக்கள் 92 ஹஜ் முகவர் நிறு­வ­னங்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளன. அதே­வேளை, 30 நாட்­களுக் கான ஹஜ் பொதிக்கு 21 இலட்சம் ரூபா­வினை அறி­வி­டு­மாறு ஹஜ் குழு சிபா­ரிசு செய்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இலங்கை யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு இந்த வருடம் மினாவில் 2ஆவது வல­யத்தின் பீ பிரி­வி­லேயே வி­லேயே கூடாரம் வழங்­கப்­பட வேண்டும் எனவும் ஹஜ் குழு தீர்­மா­னித்­துள்­ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.