சமூக ஊட­கங்­களும் மன­நல ஆரோக்­கி­யமும்

0 135

டிஜிட்டல் போஷாக்கினைப் பேணுதல்
தமது டிஜிட்டல் போஷாக்­கினை பேணும் முறை தொடர்­பாக சிறு­வர்­க­ளையும் இளை­ஞர்­க­ளையும் விழிப்­பு­ணர்­வூட்டும் அதே­வேளை, முதி­ய­வர்­களும் அது பற்றி தெரிந்து வைத்­தி­ருப்­பது கட்­டா­ய­மாகும்.
பின்­வரும் உத்­தி­களை பயன்­ப­டுத்தி முதி­ய­வர்கள் சிறு­வர்­க­ளுக்கு வழி­காட்­டலாம்.

முன்­னு­தா­ர­ண­மாக நடந்து கொள்­ளுதல்
ஏனைய விட­யங்­களை போல, இணை­யத்­த­ளப்­பா­வனை தொடர்­பா­கவும் சிறு­வர்கள் தமக்­கான முன்­மா­தி­ரியை தம்மைச் சூழ உள்ள முதி­ய­வர்­க­ளிடம் குறிப்­பாக பெற்­றோர்­க­ளிடம் இருந்து பெறு­கின்­றனர். பெற்றோர் தமது இணை­ய­தள பாவ­னையை நெறிப்­ப­டுத்­தா­த­வரை சிறு­வர்­க­ளிடம் எந்த மாற்­றத்­தையும் எதிர்­பார்க்க முடி­யாது.

சிறு­வர்­க­ளுடன் வரை­ய­றைகள் வகுத்தல்
ஒவ்­வொரு பெற்­றோரும் பரா­ம­ரிப்­பா­ளரும் சிறு­வர்­களின் இணை­யப்­பா­வனை தொடர்­பான வெளிப்­ப­டை­யான உரை­யா­டலில் ஈடு­பட வேண்­டும். பார்­வை­யிட தகுந்த அல்­லது தகாத உள்­ள­டக்­கங்கள் தொடர்­பாக வெளிப்­ப­டை­யான உரை­யா­டலில் ஈடு­ப­ட­வேண்டும். டிஜிட்டல் திரை­க­ளி­லி­ருந்து தவிர்ந்து கொள்­வ­தற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொள்ள வேண்டும். ஒரு வாரத்தில் எந்­தெந்த வேளை­களில் டிஜிட்டல் திரையைப் பார்க்க வேண்டும் அல்­லது தவிர்க்க வேண்டும் என்­பது பற்றி சிறு­வர்­க­ளுக்கு வலி­யு­றுத்த வேண்டும். முக்­கி­ய­மாக, பெற்­றோரும் தமக்­கான வரை­ய­றை­களை வகுத்­துக்­கொள்ள வேண்டும். பிள்­ளைகள் தமது பெற்­றோரும் வரை­யைறை­களைப் பேணிக்­கொள்­கின்­றார்கள் என்­பதை அறிய வேண்டும். சிறு­வர்கள் வய­தா­கின்ற போது தம்மைத் தாமே நிர்­வ­கித்துக் கொள்ளும் வாய்ப்­பினை வழங்க வேண்டும்.

காத்­தி­ர­மான டிஜிட்டல் செயல்­பா­டுகள்
ஒவ்­வொரு பெற்­றோரும் தமது பிள்­ளை­க­ளுக்கு காத்­தி­ர­மான இணையச் செயற்­பா­டு­களை எடுத்துக் கூற வேண்டும். பார்­வை­யிட பொருத்­த­மான பொருத்­த­மற்ற உள்­ள­டக்­கங்­களை விளக்க வேண்டும். பெற்­றோரும் அவற்றை விளங்கி நடக்க வேண்டும். பெற்றோர், பிள்­ளை­க­ளுக்கு திரை நேரத்தை பரி­சாக கொடுக்க கூடாது. சில பெற்­றோர் பிள்­ளைகள் செய்யும் நற்­கா­ரி­யங்­க­ளுக்­காக அல்­லது அவர்­களின் அடை­வுக்­காக அவர்­க­ளுக்கு டிஜிட்டல் கரு­வி­களை பார்­வை­யிட அனு­ம­திப்­ப­துண்டு. இது லஞ்சம் வழங்­கு­வது போன்­றது. ஆபத்­தா­னது. இதனால் அதிக நேரத்தை பெற்றுக் கொள்­வதை இலக்­காகக் கொண்டு சிறு­வர்கள் கற்றல் போன்ற விட­யங்­களில் ஈடு­ப­டு­வார்கள். இது தவ­றான முன்­மா­தி­ரி­யாகும்.

தூக்கம், உடற்­ப­யிற்சி, தேக அப்­பி­யாசம்
மேற்­கு­றிப்­பிட்­டவை இணை­யத்தை அதி­க­மாக பயன்­ப­டுத்தும் சிறு­வர்­க­ளுக்கு முக்­கி­ய­மா­ன­தாகும்.

சமூக ஊட­கங்­களும் மன­நல ஆரோக்­கி­யமும்
சமூக ஊட­கங்கள் மன­நல ஆரோக்­கி­யத்தை பாதிக்­கின்­றதா இல்­லையா என்­பது பற்­றிய ஆய்­வுகள் இணைய உள­வியல் கற்­கைத்­து­றையில் முக்­கிய இடம்­பி­டித்­துள்­ளன. இந்த வினா­வுக்­கான விடைகள் பல ஆய்­வு­களில் கிடைத்­துள்­ளன. எனினும், எந்த ஒரு ஆய்­வையும் சர்­வ­தேச நிய­ம­மாக கொள்ள முடி­யாது. சகல ஆய்­வு­களும் குறிப்­பிட்ட தேச, வயது, கல்வித் தகமை, சமூகப் பின்­புலம் மற்றும் பல்­வேறு கார­ணி­களால் பாதிக்­கப்­ப­டு­கின்­றன. எனவே அற்றைப் பொது­மைப்­ப­டுத்த முடி­யாது. எனினும், பெரும்­பா­லான ஆய்­வுகள் சமூக ஊடகப் பாவ­னையின் பார­தூ­ர­மான விளை­வுகள் பல­வற்றை பற்றி அக்­க­றை­யுடன் பேசு­கின்­றன.

அத்­த­கைய ஆய்­வுகள் பற்றி நோக்­கு­வ­தற்கு முன்னர் சில அடிப்­ப­டை­யான விட­யங்கள் பற்றி நாம் புரிந்து கொள்­வது முக்­கி­ய­மா­ன­தாகும். முதலில், நாம் யாவரும் சமூக பிரா­ணிகள். சிறு­வர்­களும் அவ்­வா­றுதான். எமது வாழ்வில் மானிடம் தொடர்­பான தேவை­க­ளி­லி­ருந்து நாம் விலகி வாழ முடி­யாது. உணவு, உடை, வீடு, பாது­காப்பு மற்றும் நண்­பர்கள் இல்­லாமல் எம்மால் வாழ முடி­யாது. இது சிறு­வர்­க­ளுக்கும் பொருந்தும். சிறு­வர்­களும் தமக்­கான நண்­பர்­களை எங்கோ ஒரு இடத்தில் தேடிக் கொள்­கின்­றார்கள். தமக்­காக நண்­பர்கள் இருப்­பதை பெரு­மை­யா­கவும் கரு­து­கி­றார்கள். நட்பும் சமூகத் தொடர்பும் இல்­லா­த­வர்கள் பெரும்­பாலும் வாழ்வில் ஏதோ ஒன்றை இழந்து விட்­டவர் போல எண்­ணு­கின்­றனர். நல்ல நட்பும் உற­வு­களும் எமக்கு மகிழ்ச்சி, காதல், மன அமைதி, நம்­பிக்கை, மற்றும் மான­சீகப் பாது­காப்பு என்­ப­வற்றை வழங்­கு­வதால் நாம் அவற்றை தேடிக் கொண்டே இருக்­கின்றோம். இத்­தகைய நட்புத் தேடல் ஆரோக்­கி­ய­மா­ன­தாக இல்­லா­த­போது, அது வருத்­த­ம­ளிக்கும் அனு­ப­வத்தை தந்­து­வி­டு­கின்­றன.

சமூக ஊடகம் என்­பது மாயை­யான வர்த்­தக உல­க­மாகும். சமூக ஊடகம் தரும் புதிய உற­வுகள் அன்­றாட வாழ்வில் எமக்­குள்ள நட்­பு­களை பிரதி ஈடு செய்ய முடி­யாது. நிஜ வாழ்வில் எமது உற­வு­களும் நண்­பர்­களும் எம்மை விட தூரத்தில் இருக்­கின்­றார்கள். ஆனால், சமூக ஊடக நண்பர்கள் நமது காற்­­சட்­டைக்குள் இருக்­கின்­றார்கள். நாம் செல்லும் இட­மெல்லாம் அவர்­களும் நம்­முடன் வரு­கின்றார்கள். நம்­மு­ட­னேயே உறங்­கு­கின்­றார்கள். நம்மை எப்­போதும் பார்த்­துக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். எனவே, அவ­ர்கள் நமக்கு மிகவும் நெருக்­க­மாக இருக்­கின்­றார்கள். நிஜ­வு­லக நண்­பர்கள் அவ்­வா­றல்ல. அவர்கள் பெரும்­பாலும் தூரத்­தி­லி­ருக்­கின்­றார்கள். சமூக ஊடக நண்­பர்­களின் அண்­மித்த நிலை எம்மை உள­வியல் ரீதி­யாக பாதிக்கும் விட­யங்­களில் ஒன்­றாகும். அண்­மித்த நண்­பர்­க­ளிடம் எமக்கு மான­சீக ரீதி­யான தேவை அதி­கம். அவர்­க­ளிடம் நாம் பல­வற்றை உட­னுக்­குடன் எதிர்­பார்க்­கின்றோம். அவர்கள் எமது பதி­வு­க­ளுக்கு பின்­னூட்­டல்கள் வழங்­காத போது அது எம்மை அதிகம் பாதிக்­கின்­றது. அல்­லது தர்க்­க­ரீ­தி­யான பின்­னூட்­டங்­களை வழங்கும் போதும் இவ்­வா­றுதான். சமூக ஊட­கங்­களின் மௌனம் கவலை தரக்­கூ­டி­யது.

பயன்கள்
சமூக ஊட­கங்கள் பல நன்­மை­களைக் கொண்­டுள்­ளன. கல்வி, தகவல், தொழில்­துறை, உள­வளம், ஆளு­மை­வி­ருத்தி என பல துறை­களில் இதன் நன்­மை­களை காண முடியும். வித்­தி­யா­ச­மான துறை­களில் தம்மை ஈடு­ப­டுத்திக் கொள்ளும் சிறு­வர்­க­ளுக்கும் இளை­ஞர்­க­ளுக்கும் சமூக ஊட­கங்கள் வெவ்வேறு குழுக்­க­ளுடன் தொடர்­பா­டலை ஏற்­ப­டுத்திக் கொடுக்­கின்­றன. வலைப்­பின்­ன­லையும் பிர­தி­நி­தித்­து­வத்­தையும் வழங்­கு­கின்­றன. புதிய தக­வல்­க­ளையும் செய்­தி­க­ளையும் உட­னுக்­குடன் வழங்­கு­கின்­றன. கருத்து வெளிப்­பாட்­டுக்­கான களத்தை பெற்­றுக்­கொ­டுக்­கின்­றன (Uhls et al, 2017). உற­வு­களை பேணிக்­கொள்­வ­தற்­கான வாயில்­களை திறந்து விடு­கின்­றன. சமூகத் தொடர்­பு­களை பாரி­ய­ளவில் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கின்­றன. புதிய வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­து­கின்­றன (Anderson and Jiang, 2018). பால்­நிலை, வயது, இனம், ஏனைய சமூக வித்­தி­யா­சங்கள் கார­ண­மாக தனி­மை­பட்­டுள்ள இளை­ய­வர்­க­ளுக்கு மன அமை­தியை தேடித் தரு­வ­தாக அமெ­ரிக்க தேசிய சுகா­தார நிறு­வனம் மேற்­கொண்ட ஆய்வில் (2022) குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

வைபர்ரா ((Ybarra) மற்றும் நண்­பர்கள் (2015) மேற்­கொண்ட ஆய்வு இதனை உறுதி செய்­கின்­றது. பால்­நிலை வித்­தி­யா­சங்கள் அடிப்­ப­டையில் ஓரங்­கட்­டப்­பட்ட இளைஞர் யுவ­தி­க­ளுக்கு நண்­பர்­க­ளிடம் இருந்து ஆறுதல், உள அமைதி, மற்றும் உத­வி­களை பெற்றுக் கொள்ள சமூக ஊட­கங்கள் உத­வு­கின்­றன. பர்ஜர் (Berger) மற்றும் நண்­பர்கள் 2022 இல் மேற்­கொண்ட ஆய்வில் நிற அடிப்­ப­டையில் ஓரங்­கட்­டப்­பட்ட இளம் தலை­மு­றை­யி­ன­ருக்­கான சமூக உத­வி­களை பெற்­றுக்­கொள்ள சமூக ஊட­கங்கள் உத­வு­வ­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அவ்­வாய்வில் நிற அடிப்­ப­டையில் வித்­தி­யா­ச­மான சுமார் 10 பேருள் குறைந்­தது 7 பேரா­வது தமக்­கான சமூக உத­வியை சமூக ஊட­கங்­களில் பெற்றுக் கொள்­வ­தாக அறி­யப்­பட்­டுள்­ளது. கிரா­மப்­பு­றங்­களில் வாழும் பல இளை­ஞர்கள் யுவ­திகள் தமக்­கான அடை­யா­ளத்தை சமூக ஊட­கங்­களின் வாயி­லாக பெற்றுக் கொள்­கின்­றனர். சமூக ஊட­கங்கள் தமக்­கான அங்­கீ­கா­ரத்தை நட்­பு­டை­மையை இள வய­தி­ன­ருக்கு வழங்­கு­வ­தாக பல ஆய்­வு­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. பெவ் ஆய்வு நிலை­யத்தின் ஆய்­வு­களின் படி உதவி தேவைப்­ப­டு­கின்ற ஓரங்­கட்­டப்­பட்ட இளைஞர் யுவ­தி­க­ளுக்கு சமூக ஊட­கங்கள் சமூக உத­வியை பெற்றுக் கொடுக்­கின்­றன. அதே­போன்று, இளம் தலை­மு­றையின் படைப்­பாற்றல் திறனை உல­க­றியச் செய்ய சமூக ஊட­கங்கள் உத­வு­கின்­றன. கல்வி, தொழில் வாய்ப்பு என்­ப­வற்­றையும் சமூக ஊட­கங்கள் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கின்­றன. விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்தல் மற்றும் சமூக வலைப்­பின்­னல்­களை பேணுதல் என பல்­வேறு மேல­திக நன்­மைகள் சமூக ஊடப்­பா­வ­னையின் மூலம் கிடைக்­கின்­றன.

மூளை வளர்ச்சி
சமூக ஊட­கங்கள் மன நலனை பாதிக்கும் விதம் தொடர்­பாக ஆராயும் போது மூளை வளர்ச்சி பற்றி தெரிந்து கொள்­வது முக்­கி­ய­மா­ன­தாகும். புஹுர்மன் – Fuhrmann (2015) மற்றும் Blackmore (2014) ஆகியோர் மேற்­கொண்ட ஆய்வில் 10 தொடக்கம் 19 வயது வரை­யான காலப்­ப­கு­தியை மூளை வளர்ச்­சியின் பொற்­கா­ல­மா­கவும் சிக்­க­லான காலப்­ப­கு­தி­யா­கவும் கரு­து­கின்­றனர். இக்­கா­லத்தில் இளை­ய­வர்கள் ஆபத்­துக்­களை சந்­திப்­பதை பொருட்­ப­டுத்­து­வ­தில்லை. மாறாக எந்த ஒரு ஆபத்­தான விட­யத்­தையும் பரீட்­சித்துப் பார்க்க முற்­ப­டு­கின்­றனர். மன­நலன் அதிக தளம்பல் நிலையை சந்­திக்­கின்­றது. இளை­ய­வர்கள் தமக்­கான அடை­யா­ளத்தை கட்­ட­மைக்­கின்­றார்கள். சுய கௌரவம் பற்றி சிந்­திக்கத் தொடங்­கு­கின்­றார்கள். சக தோழர்­களின் கருத்­துக்கள் சமூ­கத்­தாக்கம் என்­ப­னவும் அவர்­களின் மூளை வளர்ச்­சியை பாதிக்­கின்­றன. தம்மைச் சுற்­றி­யி­ருப்­ப­வர்­க­ளிடம் தமக்­கான அங்­கீ­கா­ரத்தை எதிர்­பார்க்­கின்­றனர். தமது உடை, உடற்­தோற்றம், சிகை அலங்காம் தமது அணி­க­லன்கள் என்­பன பற்­றிய நண்­பர்­களின் மதிப்­பீ­டுகள் சிறு­வர்­களை அதிகம் பாதிக்­கின்­றன. நல்ல கருத்­துக்கள் அதிக மனத்­தி­ருப்­தியை வழங்­கு­கின்­றன. குறிப்­பாக, “மகிழ்ச்­சி­யான ஹார்­மோன்கள்” ஆக்­ஸி­டாக்ஸின் மற்றும் டோபமைன் ஏற்­பிகள் மூளையின் வென்ட்ரல் ஸ்ட்ரைட்டம் என்று அழைக்­கப்­படும் ஒரு பகு­தியில் பெருகி, மற்­ற­வர்­களின் கவ­னத்­திற்கும் பாராட்­டு­த­லுக்கும் கூடுதல் உணர்­திறன் அளிக்­கி­றது. “சமூக ஊடக செயல்­பாடு வென்ட்ரல் ஸ்ட்ரைட்­டத்­துடன் நெருக்­க­மாக பிணைக்­கப்­பட்­டுள்­ளது என்­பதை நாங்கள் அறிவோம்” என்று அமெ­ரிக்க உள­வி­ய­லாளர் சங்­கத்தின் தலைமை அறிவியல் அதிகாரி மிட்ச் பிரின்ஸ்டீன் கூறினார். “நாங்கள் சமூக வெகுமதிகளை அனுபவிக்கும் போதெல்லாம் இந்த பகுதி டோபமைன் மற்றும் ஆக்ஸிடாக்ஸின் பெறுகிறது.”

அத்தோடு, சக நண்பர்களுடன் தம்மை ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்குகின்றனர். இதனாலேயே Crone மற்றும் Kanjith (2018) ஆகியோர் இக்காலப்பகுதியில் சமூக ஊடகத்தொடர்பாடல் செயல்பாடு மற்றும் சமூக ஊடகத்தின் கவர்ச்சி என்பன சிறுவர்களை அதிகம் பாதிப்பதாக குறிப்பிடுகின்றனர். அதிக சமூக ஊடகப் பாவனை எமது மூளைக்கு ஊக்க சக்தியை வழங்குகின்றன. மூளைக்கு களிப்பினை வழங்குகின்றன. சூதாட்டத்தின் போதும் போதையின் போதும் ஏற்படும் நடத்தை மாற்றத்தைப்போல அதிக சமூகப் பாவனையின் போதும் நடத்தை மாற்றம் ஏற்படுகின்றது. சமூக ஊடகங்கள் மூளையின் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன (கஸ் மற்றும் கிரிப்பித் – Kuss and Griffith, 2011). எனவே, நல்ல உள்ளடக்கங்களை இக்காலப்பகுதியில் பெற்றுக்கொள்வது மிகவும் கட்டாயமாகும். அத்தோடு, பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இக்காலத்தில் மூளை வளர்ச்சி தொடர்பான கரிசனைகள் அதிகம் தேவைப்படுகின்றன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.