முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் இரு நூல்களின் வெளியீட்டு விழா

0 65

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்­பாடு செய்த “உயிர்த்த ஞாயிறு அனர்த்தம் -மறை­கரம் வெளிப்­பட்­ட­போது” மற்றும் “நாங்கள் வேறா­ன­வர்கள் அல்ல மண்ணின் வேரா­ன­வர்கள் – முஸ்­லிம்கள் மீது கட்­ட­மைக்­கப்­பட்ட சந்­தே­கங்­களை களைதல்” ஆகிய இரு மொழி­பெ­யர்ப்பு நூல்­களின் வெளி­யீட்டு நிகழ்வு ஜன­வரி 30 ஆம் திகதி, வியா­ழக்­கி­ழமை கொழும்பு -7இல் அமைந்­துள்ள இலங்கை மன்றக் கல்­லூரி கேட்போர் கூடத்தில் இடம் பெற்­றது.

பேரா­சி­ரியர் ராஜன் ஹூல் ஆங்­கி­லத்தில் எழு­திய “SRI LANKA’S EASTER TRAGEDY .Wheh the deep state gets out of its depth” என்ற ஆங்­கில நூலை முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தமிழில் மொழி­பெ­யர்த்­தி­ருந்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்கீம் ஆங்­கி­லத்தில் எழுதி வெளி­வந்த “WE ARE A PART NOT APART -Demystifying Myths Against Muslims of Sri Lanka” என்ற நூலின் தமி­ழாக்கம் ஆகும் .

இந்த நூல்கள் இரண்­டி­னதும் ஆய்­வு­ரையை பேரா­சி­ரியர் எம்.எஸ். எம் அனஸ் நிகழ்த்­தினார். முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம்.சுஹைர்,முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.ஏ. சுமந்­திரன், சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர் மஹிந்த ஹத்­தக்க, ஸ்ரீ லங்­கா­முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவர் என் .எம்.அமீன் ஆகி­யோரும் இந்­நி­கழ்வில் உரை­யாற்­றினர்.

இவ்­விரு நூல்­களும் அண்மைக் காலத்தில் இலங்­கையை உலுக்­கிய உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் உள்­ளிட்ட அதிர்ச்­சி­யான சம்­ப­வங்­க­ளையும், அச்­சு­றுத்­தல்­க­ளையும் மைய­மாகக் கொண்டு எழு­தப்­பட்­ட­வை­யாகும். இந்நிகழ்வில் இடம்பெற்ற சில முக்கிய உரைகளின் தொகுப்பு வருமாறு:

ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம்.ஸுஹைர்

இந்­நி­கழ்வில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணியும் தேசிய சூறா சபையின் தலை­வரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.எம்.ஸுஹைர் உரை­யாற்­று­கையில்,
ரவூப் ஹக்கீம் எழு­தி­யுள்ள நூலில் கடந்த காலங்­களில் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்ட பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் வகையில் கட்­டு­ரைகள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக இலங்­கையில் முஸ்­லிம்­களின் சனத்­தொகை உயர்­வ­டைந்து செல்­கி­றது எனும் குற்­றச்­சாட்டைக் குறிப்­பி­டலாம். இந்த குற்­றச்­சாட்டை முறி­ய­டிப்­ப­தற்கு ரவூப் ஹக்கீம் ஆதா­ர­மான புள்­ளி­வி­ப­ரங்கள் மூலம் இந்­நூலில் பதி­ல­ளித்­துள்­ளமை வர­வேற்­கத்­தக்­க­தாகும்.

முஸ்லிம் சமூ­கத்தின் வாழ்­வொ­ழுங்கு இந்­நாட்டின் பெரும்­பான்மை மக்­களின் கலா­சா­ரத்­திற்கு அச்­சு­றுத்­த­லாக அமைந்­துள்­ள­தாக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்கும் முஸ்­லிம்­களின் ஆடைக்­க­லா­சாரம் தொடர்­பான விமர்­ச­னங்­க­ளுக்கும் ரவூப் ஹக்கீம் சிறப்­பா­கவும் தெளி­வா­கவும் பதி­ல­ளித்­துள்ளார். சுமார் 4000 வரு­டங்­க­ளுக்கும் மேலாக முஸ்­லிம்கள் இலங்­கையில் பெரும்­பான்மை சமூ­கத்­துடன் சமா­தா­ன­மா­கவும் சந்­தோ­ச­மா­கவும் வாழ்ந்து வரு­கின்­றனர் என்­பதை வர­லாற்று ஆதா­ரங்கள் மூலம் நூலா­சி­ரியர் விளக்­கி­யுள்ளார்.

அதே­போன்­றுதான் பேரா­சி­ரியர் ராஜன் ஹூல் எழு­திய ‘மறை­கரம் வெளிப்­பட்ட போது’ எனும் நூலும் முக்­கி­ய­மா­ன­தாகும். இந்த நூலில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள பல விட­யங்­களை கடந்த காலங்­களில் நான் பல்­வேறு உரை­க­ளிலும் கட்­டு­ரை­க­ளிலும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளேன். இந்­நூலை எழு­திய பேரா­சி­ரியர் ராஜன் ஹூல் பலத்த உயி­ரச்­சு­றுத்­தல்­க­ளுக்கு மத்­தியில் மனித உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுத்து வரு­பவர். இந்­நி­லையில் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­னணி தொடர்பில் பல்­வேறு உண்­மை­களை அவர் இந்த நூல் மூலம் வெளிக் கொணர்ந்­துள்ளார். அர­சாங்­கத்தின் உள்­ளி­ருந்து செயற்­படும் நிழல் அர­சாங்­க­மொன்று இந்த தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இருப்­ப­தாக அவர் இந்­நூலில் வாதி­டு­கிறார். இந்­நூலை என்.எம்.அமீன் அவர்கள் தமிழில் மொழி­பெ­யர்த்­துள்­ளமை பாராட்­டுக்­கு­ரி­ய­தாகும் என்றார்.

சட்­டத்­த­ரணி எம்.ஏ.சுமந்­திரன்
இந்­நி­கழ்வில் உரை­யாற்­றிய இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் ஊட­கப்­பேச்­சா­ளரும், ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.ஏ.சுமந்­திரன் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களை ஒழுங்­க­மைத்­த­வர்கள் யார் என்­பதை அடை­யாளம் காண்­ப­தற்­கான போது­மான தக­வல்கள் உள்ள நிலையில் அவற்றை விசா­ரணை செய்து வெளிப்­ப­டுத்­தாது விட்டால் உண்­மை­களை கண்­ட­றி­வ­தற்­கான முது­கெ­லும்பு அர­சாங்­கத்­துக்கு இல்­லை­யென்றே பொருள்­படும் எனக் குறிப்­பிட்டார். அவர் தொடர்ந்தும் பேசு­கையில், உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சம்­பந்­த­மான பாரா­ளு­மன்ற விசா­ர­ணைக்­கு­ழுவின் உறுப்­பி­னர்­க­ளாக நானும், ரவூப் ஹக்­கீமும் இருந்தோம். எங்­க­ளு­டைய குழுவின் விசா­ரணை அறிக்கை தயா­ரிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக பேரா­சி­ரியர் ராஜன் ஹூலின் நூல் வெளி­யி­டப்­பட்­டது. பாரா­ளு­மன்­றக்­கு­ழுவின் விசா­ரணை அறிக்­கையின் நிறை­வேற்றுச் சுருக்­கத்தில் நாட்டில் ஒரு­வ­ருட இடை­வெ­ளியில் ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­ற­வுள்ள நிலையில் வலி­மை­யான ஆட்­சி­யாளர் ஒருவர் உரு­வாக்­கப்­ப­டு­வ­தற்­கான சூழலை தோற்­று­விப்­பதை நோக்­காக கொண்டா உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது என்ற கேள்­வியை எழுப்­பி­யுள்ளோம். அதற்கு சில வரு­டங்கள் பிள்­ளையான் என்று அழைக்­கப்­படும் சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்­தனின் செய­லா­ள­ராக இருந்த அசாத் மௌலானா அது தான் நடை­பெற்­றது என்று தனது சாட்­சி­யத்தில் கூறி­யி­ருக்­கின்றார். இந்த விட­யங்­க­ளையே பேரா­சி­ரியர் ராஜன் ஹூலும் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார்.

அத்­துடன், இனக்­கு­ழு­ம­மொன்றின் தலை­வ­ராக இருந்­து­கொண்டு, ரவூப் ஹக்கீம் தன்­னு­டைய நூலில் பக்­கச்­சார்­பற்ற வகையில் சமூ­கத்தில் பேசப்­பட வேண்­டிய விட­யங்­களை, வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார். நூல் முழு­வதும் பக்­கச்­சார்­பின்றி விட­யங்­களை தொகுத்துச் சென்­றி­ருக்­கின்றார். இது­மி­கவும் கடி­ன­மா­ன­தொரு பணி­யாகும்.

உயிர்த்­த­ ஞா­யிறு தாக்­குதல் விட­யத்தில் தாக்­கு­தல்­களை தடுப்­ப­தற்கு தவ­றி­ய­வர்கள் உயர்­நீ­தி­மன்ற விசா­ர­ணை­க­ளின்­போது அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளார்கள். வேறு விசா­ர­ணை­க­ளின்­போதும் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். ஆனால் இது­வ­ரையில் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களை ஒழுங்­க­மைத்­த­வர்கள் அடை­யாளம் காண்­பிக்­கப்­ப­ட­வில்லை. அவ்­வா­றான நிலை­மைகள் தொடர்­வது எவ்­வாறு என்ற கேள்­விகள் உள்­ளன என்றார்.

ரவூப் ஹக்கீம் எம்.பி.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும், கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் உரை­யாற்­று­கையில், நாட்டின் பெரும்­பான்மை மக்­களின் தொகையை முஸ்­லிம்­களின் சனத்­தொகை விகி­தா­சாரம் விஞ்­சிப்­போய்­விடும் என்­பது விஞ்­ஞா­ன­பூர்­வ­மாக உறு­தி­யான விட­ய­மல்ல.

பேர்ட்ரம் ரசல் எனும் தத்­து­வா­சி­ரியர் ‘இந்த உலகம் தீவி­ர­வா­தி­க­ளாலும், முட்­டாள்­க­ளாலும் நிறைந்­த­தாக இருந்­தாலும் அவர்கள் எல்­லோரும் தம்மைப் பற்றி மிகத்­தி­ட­காத்­தி­ர­மான உணர்­வுடன் இருக்­கின்­றார்கள். ஆனால் அறி­வுள்­ள­வர்கள் எப்­போதும் சந்­தே­கத்­துடன் வாழ்­கின்­றார்கள்’ என்று கூறு­கின்றார். முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வ­ரையில் இந்த வார்த்­தைகள் மிகவும் பொருத்­த­மா­ன­வை­யாக இருக்­கின்­றன.

சமூ­கத்தில் தீவி­ர­வாத சிந்­த­னை­க­ளுடன், முட்­டாள்­த­ன­மான சிந்­த­னை­யுடன் இருப்­ப­வர்கள் உள்­ளார்கள். அவர்கள் தங்­க­ளு­டைய விட­யத்தில் உறு­தி­யாக இருக்­கையில் நாங்கள் தான் ஒவ்­வொரு விட­யத்­தி­னையும் அச்­சத்­துடன், பீதி­யு­டனும் பார்­கின்றோம். இந்த மனோ­நி­லையில் இருந்து நாங்கள் மாற­வில்லை என்றால் எமது அடுத்த சந்­த­தி­யி­ன­ருக்­கான சமூகக் கட்­ட­மைப்­பினை அமைப்­பதில் நாங்கள் தவ­றிப்­போவோம்.

முஸ்­லிம்­க­ளாக நாம் தற்­பா­து­காப்பு நிலைப்­பாட்டை எடுக்கும் கார­ணத்­தினால் பல்­வேறு சந்­தே­கங்­க­ளுக்கு எதி­ரான கருத்­துக்­களை முன்­வைப்­பதில் தவ­றி­யி­ருக்­கின்றோம்.
முஸ்­லிம்­களின் சனத்­தொகை விகி­தா­சாரம் இந்த நாட்டின் பெரும்­பான்­மையை விஞ்­சிப்­போய்­விடும் என்­றொரு அச்சம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இது­சம்­பந்­த­மாக விஞ்­ஞான பூர்­வ­மாக உறுதி செய்­வ­தற்­காக சனத்­தொ­கை­வ­ளர்ச்சி விஞ்­ஞானம் சம்­பந்­த­மான பேரா­சி­ரியர் திசா­நா­யக்­க­வுடன் நீண்ட கலந்­து­ரை­யா­டல்­களைச் செய்து அதன்­மூ­ல­மாகப் பெற்­றுக்­கொண்ட தக­வல்­களின் அடிப்­ப­டையில் விட­யங்­களை முன்­வைத்­துள்ளேன். இந்த விட­யங்கள் சமூக மயப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­ப­தோடு பெரும்­பான்மை மக்­க­ளுக்கும் தெளி­வு­ப­டுத்­தப்­பட வேண்டும் என்றார்.

பேரா­சி­ரியர் எம்.எஸ்.எம். அனஸ்
முஸ்­லிம்கள் தொடர்பில் சிங்­கள மக்கள் மத்­தியில் விதைக்­கப்­பட்­டுள்ள பல்­வேறு நச்­சுக்­க­ருத்­துக்­களை எவ்­வாறு அவர்­களின் மன­தி­லி­ருந்து அகற்­றலாம் என்ற முயற்­சியின் வெளிப்­பா­டா­கவே ரவூப் ஹக்கீம் அவர்­களின் நூல் அமைந்­துள்­ளது. அந்த வேட்­கையில் தான் அவர் இந்­நூலை எழு­தி­யுள்ளார்.

முஸ்லிம் சமூகம் தன்­னைத்­தானே சுய­வி­சா­ரணை செய்து கொள்ள வேண்­டி­யுள்­ளது. இலங்­கையில் வாழும் பன்­மைச்­ச­மூ­கத்தின் மத்­தியில் முஸ்லிம் சமூ­கத்தை வெற்­றி­க­ர­மான சமூ­க­மாக கட்­டி­யெ­ழுப்ப வேண்­டி­யுள்­ளது. என்னைப் பொறுத்­த­வ­ரையில் முஸ்­லிம்கள் இன்­னமும் அதற்குத் தயாராகவில்லை என்றே கருதுகிறேன்.

ராஜன் ஹூல் எழுதிய நூல் முஸ்லிம் சமூகத்தின் உள்ளக விவகாரங்கள் குறித்தும் உயிர்த்த ஞாயிறு தா

க்குதலின் பின்புலம் பற்றியும் விரிவாகப் பேசுகிறது. இதன் பின்னணியில் உண்மையில் என்ன நடந்தது என்பதை முஸ்லிம்கள் சார்பில் நின்று பேராசிரியர் எழுதியுள்ளார். குறிப்பாக காத்தான்குடி பற்றி இந்நூலில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அங்கு நிலவும் சூபி வஹாபிய முரண்பாடு பற்றி எழுதப்பட்டுள்ளது. சஹ்ரான் எப்படி ஓர் ஆயுததாரியாக மாறினான் என்பது பற்றி இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தவ்ஹீத் ஜமாஅத்துக்கள் பற்றியும் இதில் உள்ளது. சாதாரண மொழியில் சொல்வதானால் முஸ்லிம் சமூகத்தின் உள்ளக விவகாரங்களை நூலாசிரியர் போட்டுடைத்துள்ளார் என்றுதான் சொல்லலாம். இவற்றை நாம் இனியும் மறைத்துப் பிரயோசனமில்லை. நமக்குள் உரையாடலுக்கு உட்படுத்தி தீர்வுகளை நோக்கி நகர வேண்டும். அதனைத்தான் இந்த இரண்டு நூல்களும் சொல்ல வருகின்றன என்றார்.
இங்கு உரையாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் மஹிந்த ஹத்தகவும் இந்நூல்களின் உள்ளடக்கம் தொடர்பில் தனது அவதானத்தைப் பகிர்ந்து கொண்டார்.
மறைகரம் வெளிப்பட்டபோது நூலின் மொழிபெயர்ப்பாளர் என்.எம். அமீன் ஏற்புரையாற்றினார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.