ஹஜ் யாத்திரையை வினைத்திறனாக ஒழுங்கமைக்க ஹஜ் குழு நடவடிக்கை

பெப்ரவரி 14க்கு முன் யாத்திரிகர்களை பதிவு செய்யுமாறும் அழைப்பு

0 73

எம்.ஆர்.எம்.வசீம்

ஹஜ் யாத்­திரை செல்­வ­தற்கு பதிவு செய்­த­வர்கள் பெப்ரவரி 14ஆம் திக­திக்கு முன்னர் தங்­க­ளது முகவர் நிறு­வ­னங்­களை சந்­தித்து பயண ஏற்­பா­டு­களை பூர்த்தி செய்­து­கொள்ள வேண்டும். அத்­துடன் தெரி­வு ­செய்­யப்­பட்­டுள்ள 92 முகவர் நிறு­வ­னங்­களைத் தவிர வேறு எந்த முகவர் நிறு­வ­னங்­க­ளுக்கும் தங்­களின் கட­வுச்­சீட்டை வழங்­க­வேண்டாம் என ஹஜ் குழுவின் தலைவர் ரிஸ்வி மிஹுலார் தெரி­வித்தார்.
எதிர்­வரும் ஹஜ் யாத்­தி­ரைக்­கான ஏற்­பா­டுகள் தொடர்பில் ஊட­கங்­களை தெளி­வு­ப­டுத்தும் செய்­தி­யாளர் சந்­திப்பு வெள்­ளிக்­கி­ழமை முஸ்லிம் சமய கலா­சார திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு விளக்­க­ம­ளிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,
இந்த வருடம் ஹஜ் யாத்­தி­ரைக்­காக சவூதி ஹஜ் அமைச்­சி­ட­மி­ருந்து இலங்­கைகு 3500 கோட்­டாக்கள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. அந்த கோட்­டாக்­களை பெற்­றுக்­கொள்ள 117 ஹஜ் முகவர் நிறு­வ­னங்கள் விண்­ணப்­பித்­தி­ருந்­தன. அவர்­களின் விண்­ணப்­பங்கள் சுயா­தீன குழு­வொன்­றினால் பரீட்­சிக்கப்பட்டு, 92 முகவர் நிறு­வ­னங்கள் தெரிவு செய்­யப்­பட்­டன. நேர்­மு­கப்­ப­ரீட்­சையில் அவர்­க­ளுக்கு வங்­கப்­பட்ட புள்­ளி­களின் அடிப்­டையில் ஹஜ் கோட்­டாக்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளன. அதன் பிர­காரம் ஆகக்­கு­றைந்த கோட்­டா­வாக 20 கோட்­டாவும் ஆகக்­கூ­டிய கோட்­டா­வாக 49 கோட்­டாவும் புள்­ளிகள் அடிப்­ப­டையில் வழங்­கப்­பட்­டுள்­ளன.

ஹஜ் வணக்க வழி­பாட்­டுக்கு செல்­வ­தற்கு இது­வரை 4400 பேர் பதிவு செய்­துள்­ளனர். முன்­னு­ரி­மையின் அடிப்­ப­டையில் இவர்­க­ளுக்­கான ஹஜ் விசா வழங்­கப்­படும். எஞ்­சி­ய­வர்­களின் பெயர் காத்­தி­ருப்பு பட்­டி­யலில் இருக்கும். 3500 பேரில் யாரா­வது ஹஜ் யாத்­திரை மேற்­கொள்ள முடி­யாத நிலை ஏற்­பட்டால், அந்த இடத்­துக்கு காத்­தி­ருப்பு பட்­டி­யலில் இருந்தே தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள்.

அத்­துடன் ஹஜ் யாத்­தி­ரைக்கு செல்­வ­தற்கு பதிவு செய்­த­வர்கள் மிக விரை­வாக தங்­களின் முகவர் நிறு­வ­னங்­க­ளுடன் தொடர்­பு­கொண்டு தேவை­யான அனைத்து ஆவண நட­வ­டிக்­கை­க­ளையும் பூர்த்தி செய்­து­கொள்ள வேண்டும். எதிர்­வரும் 14ஆம் திக­திக்குள் ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் தொடர்­பான அனைத்து ஆவ­ணங்­களும் பூர்த்­தி­செய்­யப்­பட்டு சவூதி ஹஜ் அமைச்­சுக்கு அனுப்பி வைக்­கப்­பட வேண்டும். அதனால் யாத்­தி­ரி­கர்கள் தாம­திக்­காது இது தொடர்பில் விரை­வாக செயற்­ப­டு­மாறு கேட்­டுக்­கொள்­கிறோம்.
ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு தேவை­யான சேவையை வழங்க சவூ­தியில் உள்ள பிர­தன மூன்று சேவை நிறு­வ­னங்கள் விண்­ணப்­பித்­தி­ருந்­தன. அந்த மூன்று நிறு­வ­னங்­களின் சேவையை எமது சுயா­தீன குழு பரீட்­சித்து பார்த்து, அதில் ஆகச் சிறந்த சேவையை வழங்­கு­வ­தற்கு முன்­வந்­தி­ருந்த அல் பைத் நிறு­வ­னத்தின் சேவையை எமது சுயா­தீன குழு அனு­ம­தித்­தது. யாத்­தி­ரி­கர்கள் வழங்கும் பணத்­துக்கு தகுந்த சேவையை அவர்கள் வழங்­கு­கி­றார்­களா என பார்ப்­ப­தற்கு அவர்கள் வழங்கும் சேவையை எழுத்­து­மூலம் பெற்று அவர்­க­ளுடன் ஒப்­பந்தம் செய்ய இருக்­கிறோம்.

மினாவில் விசேட தங்­கு­மிட வசதி
ஒவ்­வொரு வரு­டமும் ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் மினாவில் தங்கும் காலப்­ப­கு­தி­யி­லேயே பல்­வேறு அசெ­ள­க­ரி­யங்­களை எதிர்­கொள்­கின்­றனர். மினாவில் ஹாஜிகள் தங்­கு­வ­தற்கு ஏ,பி,சீ என வல­யங்கள் பிரிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அதில் சீ வலயம் கட்­டணம் குறைந்­த­தாகும். அதனால் அதி­க­மா­ன­வர்கள் அங்கு தங்கச் செல்­வதால் அங்கு நெருக்­கடி நிலை­மைகள் ஏற்­ப­டு­கின்­றன. அதனால் இந்த முறை நாங்கள் 2ஆம் வல­யத்தில் பீ தரத்தில் தங்­கு­வ­தற்கு தீர்­மா­னித்­தி­ருக்­கிறோம். அதில் நடுத்­த­ர­மான வசதி வாய்ப்­புக்கள் செய்து கொடுக்­கப்­படும். சீ வல­யத்­தை­விட சிறி­ய­தொரு தொகை கட்டணம் அதி­க­மாக இருக்கும். தூங்­கு­வ­தற்கு சோபா கட்டில் வழங்க நட­வ­டிக்கை எடுத்­துள்ளோம்.

ஒரு ஹஜ் குழு­வுக்கு ஒரு பஸ்
அதே­போன்று அர­பாவில் இருந்து முஸ்­த­லிபா மற்றும் மினா­வுக்கு பய­ணிப்­ப­தற்கு ஒரு ஹஜ் குழு­வுக்கு ஒரு பஸ் அடிப்­ப­டையில் தயார்படுத்தி இருக்­கிறோம். இதன்­மூலம் ஹாஜிகள் அனை­வரும் ஒரே நேரத்தில் குறித்த இடங்­க­ளுக்கு செல்ல முடி­யு­மாக இருக்­கி­றது. கடந்த காலங்­களில் ஒரு பஸ் இரண்டு மூன்று தட­வைகள் ஹாஜி­களை இந்த இடங்­க­ளுக்கு அழைத்துச் செல்ல வேண்டி இருந்­ததால், பல்­வேறு அசெ­ள­க­ரிய நிலை மற்றும் நேர வீண் விர­யங்கள் ஏற்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக அமைந்­தன. இந்த நட­வ­டிக்கை மூலம் கட்­டணம் சற்று அதி­க­ரிக்கும் என்­றாலும் அங்கு ஏற்­படும் கடு­மை­யான நெருக்­கடி நிலை­களை தவிர்த்­துக்­கொள்­ளவே இந்த தீர்­மா­னங்­களை எடுத்­தி­ருக்­கிறோம்.

முகவர் நிறு­வ­னங்­க­ளு­ட­னான ஒப்­பந்­தத்தை வாசித்து கையொப்­ப­மி­டவும்
ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் முகவர் நிறு­வ­னங்­க­ளுடன் பயண வச­திகள் தொடர்பில் ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டும்­போது குறித்த ஒப்­பந்­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்கும் விட­யங்­களை நன்கு வாசித்துப் பார்த்து கைச்­சாத்­திட வேண்டும். அவ்­வாறு இல்­லா­விட்டால், ஹஜ் கட­மைக்குச் சென்­ற­பின்னர் அங்கு அவர்­க­ளுடன் முரண்­ப­டு­வதில் பய­னில்லை. அதே­நேரம் முகவர் நிறு­வ­னங்கள் வாக்­கு­றுதி அளித்த வசதி வாய்ப்­பு­களில் குறை­பாடு செய்­தி­ருந்தால், அது தொடர்பில் ஹாஜி­மார்கள் எங்­க­ளிடம் முறை­யி­டலாம். அதனால் முகவர் நிறு­வ­னங்­க­ளுடன் ஒப்­பந்தம் கைச்­சாத்­திடும் போது நன்கு வாசித்து, சந்­தே­கங்­களை தெளி­வு­டுத்­திக்­கொண்டு கைச்­சாத்­திட வேண்டும்.

ஹாஜி­களை ஒன்­றி­ணைத்து
வட்ஸ்அப் குழு
இம் முறை இலங்­கையில் இருந்து 3500 பேருக்கு ஹஜ் கட­மையை நிறை­வேற்றச் செல்ல அனு­மதி கிடைக்­கப்­பெற்­றுள்­ளது. அவர்கள் அனை­வ­ரையும் ஒன்­றி­ணைத்து, வட்ஸ்அப் குழு­வொன்றை அமைக்க இருக்­கிறோம். இதன் மூலம் அவர்­க­ளுக்கு ஏதா­வது தெரி­விக்க வேண்டி இருந்தால் நாங்கள் இந்த வட்ஸ்அப் குழுமம் ஊடாக அறி­விப்போம். அதே­நேரம் அவர்­க­ளுக்கு அங்கு ஏதா­வது பிரச்­சினை இருந்தால் அவர்­களும் எங்­க­ளுக்கு இந்த வட்ஸ்அப் குழு­மத்­தி­னூ­டாக தெரி­விக்க முடியும்.

கோட்­டாவை மாற்ற முடி­யாது
ஹஜ் முகவர் நிறு­வ­னங்­க­ளுக்கு பகிர்ந்த­ளிக்­கப்­பட்­டி­ருக்கும் ஹஜ் கோட்­டாவை முகவர் நிறு­வ­னங்கள் வேறு முக­வர் நிறு­வ­னங்­க­ளுக்கு கை மாற்ற முடி­யாது. ஏதா­வது முகவர் நிறு­வ­னத்­துக்கு வழங்­கப்­பட்­டி­ருக்கும் கோட்­டாவின் அடிப்­ப­டையில் அவர்­க­ளுக்கு ஹாஜி­மார்­களை அனுப்ப முடி­யாத நிலை ஏற்­பட்டால், அந்த கோட்­டாவை வேறு நிறு­வ­னங்­க­ளுக்கு கைமாற்ற முடி­யாது. நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்கும் கோட்டா ஹஜ் குழு­வுக்­கு­ரி­ய­தாகும். அதனால் அந்த கோட்­டாக்­களை ஹஜ் குழு­வுக்கே மீள ஒப்­ப­டைக்க வேண்டும்.

அனு­ம­திக்­கப்­பட்ட முக­வர்­க­ளிடம்
மாத்­திரம் கட­வுச்­சீட்டை ஒப்­ப­டைக்­கவும்
ஹஜ் யாத்­தி­ரி­கர்­களை அழைத்­துச்­செல்ல 92 முகவர் நிறு­வ­னங்­க­ளுக்கே அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. ஹஜ் யாத்­திரை மேற்­கொள்ள அனு­மதி கிடைக்­கப்­பெற்­ற­வர்கள் இந்த 92 முகவர் நிறு­வ­னங்­களில் தாங்கள் விரும்­பிய முகவர் நிறு­வ­னத்­திடம் மாத்­திரம் தங்­களின் கட­வுச்­சீட்டை ஒப்­ப­டைக்க வேண்டும். அவ்­வாறு இல்­லாமல் வேறு முகவர் நிறு­வ­னங்­க­ளிடம் ஒப்­ப­டைக்க வேண்டாம். இதன் மூலம் உங்­களின் ஹஜ் பய­ணத்­துக்­கான கட்­டணம் அதி­க­ரிக்­கப்­ப­டலாம். அதனால் இது­தொ­டர்பில் சிந்­தித்து செயற்­பட வேண்டும்.

ஹஜ் கட­மையை
வியா­பா­ர­மாக்க வேண்டாம்
இஸ்­லாத்தின் கட­மை­களில் இறுதி கட­மை­யா­கவே ஹஜ் கடமை அமைந்­துள்­ளது. அதனால் ஹஜ் யாத்­திரை மேற்­கொள்­ப­வர்­க­ளுக்கு அர­சாங்கம் பல்­வேறு வச­தி­க­ளையும் சலு­கை­க­ளையும் வழங்கி வரு­கி­றது. இதனை நாங்கள் துஷ்­பி­ர­யோகம் செய்­து­வி­டக்­கூ­டாது. குறிப்­பாக ஹஜ் பய­ணத்தை முடித்­து­விட்டு வரும்­போது எமக்கு அனு­ம­திக்­கப்­பட்ட பொருட்­களை மாத்­திரம் எடுத்­து­வர வேண்டும். ஏனெனில் விமான நிலை­யத்தில் பரி­சோ­தனை பிரி­வு­களில் ஹஜ் கட­மைக்குச் சென்று வரு­ப­வர்­களை மதித்து, அங்கு எமது பொருட்கள் பாரி­ய­ளவில் பரி­சோ­திக்­கப்­ப­டு­வ­தில்லை. இதனை பயன்­ப­டுத்­திக்­கொண்டு யாரும் மோசடி நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டக்­கூ­டாது. இதனால் எதிர்காலத்தில் பல்வேறு அசெளகரியங்களுக்கு நாம் முகம்கொடுக்க நேரிடலாம். அதனால் ஹஜ் கடமைக்கு சென்றவர்களும் முகவர் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் இந்த கடமையை வியாபாரமாக்காமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதேபோன்று உங்களுடை பொருட்களை தவிர வேறு யாருடைய பொருட்களையும் நீங்கள் விமான நிலையத்தில் பெற்றுக்கொள்ள வேண்டாம்.

முகவர் நிறுவனங்களுக்கு பதக்கம்
ஹஜ் கடமை முடிந்த பின்னர் ஹஜ் முகவர் நிறுவனங்களின் சேவை தொடர்பில் ஆராய்ந்து பார்த்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெங்கல பதக்கம் வழங்கி கெளரவிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். சிறந்த சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கு தங்க விருது கிடைப்பதுடன் அடுத்த வருடம் ஹஜ் சேவைக்கு அந்த முகவர் நிறுவனத்துக்கு அதிக கோட்டாக்களை பெற்றுக்கொள்ள உதவியாக அமையும் என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.