பலஸ்தீனத்தை உருவாக்காமல் இஸ்ரேலுடன் எந்தவித இராஜதந்திர உறவுகளும் கிடையாது

சவூதி அரேபியா திட்டவட்டமாக தெரிவிப்பு

0 54

(எம்.ஐ.அப்துல் நஸார்)
சுதந்­திர பலஸ்­தீன அர­சிற்­கான தனது ஆத­ரவை சவூதி அரே­பியா மீண்டும் வலி­யு­றுத்­தி­ய­துடன், கிழக்கு ஜெரூச­லத்தைத் தலை­ந­க­ராகக் கொண்ட அத்­த­கைய அரசை உரு­வாக்கும் வரை இஸ்­ரே­லுடன் எந்­த­வித இரா­ஜ­தந்­திர உற­வுகள் இருக்­காது என்றும் திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­துள்­ளது.

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் அமெ­ரிக்கா காஸா பகு­தியை கைப்­பற்றும் என்று அறி­வித்த சில மணி நேரங்­க­ளுக்குப் பின்னர் சவூதி அரே­பி­யாவின் அறிக்கை வந்­துள்­ளது.

நேற்று புதன்­கி­ழமை வெளி­யி­டப்­பட்ட குறித்த அறிக்­கையில், பலஸ்­தீன அரசை நிறு­வு­வது குறித்த நாட்டின் நிலைப்­பாடு “‘உறு­தி­யா­னது மற்றும் அசைக்க முடி­யா­தது” என சவூதி அரே­பி­யாவின் வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சு தெரி­வித்­துள்­ளது

மேலும் கடந்த ஆண்டு செப்­டம்பர் 18 ஆந் திக­தி­யன்று ஷூரா சபையின் ஒன்­ப­தா­வது பத­விக்­கா­லத்தின் முதல் அமர்வின் அங்­கு­ரார்ப்­பண நிகழ்வில் சவுதி அரே­பி­யாவின் பட்­டத்து இள­வ­ரசர் முக­மது பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் தனது உரையின் போது தெரி­வித்த கருத்தை அவ்­வ­றிக்கை நினைவு கூர்ந்­துள்­ளது.

“பலஸ்­தீன அரசை நிறு­வு­வது குறித்த சவுதி அரே­பி­யாவின் நிலைப்­பாடு உறு­தி­யா­னது மற்றும் அசைக்க முடி­யா­தது என்­பதை வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சு உறு­திப்­ப­டுத்­து­கி­றது. பட்­டத்து இள­வ­ர­சரும் பிர­த­ம­ரு­மான இள­வ­ரசர் முக­மது பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத், செப்­டம்பர் 18, 2024 அன்று ஷூரா சபையின் ஒன்­ப­தா­வது பத­விக்­கா­லத்தின் முதல் அமர்வின் அங்­கு­ரார்ப்­பண நிகழ்வில் ஆற்­றிய அவ­ரது உரையின் போது இந்த நிலைப்­பாட்டை தெளி­வா­கவும் சந்­தே­கத்­திற்கு இட­மின்­றியும் மீண்டும் உறு­திப்­ப­டுத்­தினார். கிழக்கு ஜெரு­சத்தை தலை­ந­க­ராகக் கொண்ட ஒரு சுதந்­திர பலஸ்­தீன அரசை நிறு­வு­வ­தற்­கான சவூதி அரே­பியா தனது இடை­வி­டாத முயற்­சி­களைத் தொடரும் என்றும், அது இல்­லாமல் இஸ்­ரே­லுடன் இரா­ஜ­தந்­திர உற­வு­களை ஏற்­ப­டுத்­தாது’ எனவும் அவர் தெரி­வித்­தி­ருந்தார் எனவும் எக்ஸ் தளத்தில் இல் பகி­ரப்­பட்ட அறிக்­கை­யொன்றில், சவுதி அரே­பி­யாவின் வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சு தெரி­வித்­துள்­ளது,

இஸ்­ரே­லிய குடி­யேற்றக் கொள்­கைகள், நில இணைப்பு அல்­லது பலஸ்­தீ­னர்­களை அவர்­களின் பிர­தே­சத்­தி­லி­ருந்து வெளி­யேற்ற முயற்­சிகள் என்­ப­ன­வற்றின் மூலம் பலஸ்­தீன மக்­களின் நியா­ய­மான உரி­மை­களை மீறு­வதை சவுதி அரே­பியா நிரா­க­ரிக்­கி­றது. சவுதி அரே­பியா அதன் அசைக்க முடி­யாத நிலைப்­பாடு ‘பேச்­சு­வார்த்­தைக்கு உட்­பட்­ட­து­மல்ல, சம­ர­சங்­க­ளுக்­குட்­பட்­ட­து­மல்ல’ என அந்த அறிக்­கையில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.
‘இஸ்­ரே­லிய குடி­யேற்றக் கொள்­கைகள், நில இணைப்பு அல்­லது பலஸ்­தீன மக்­களை அவர்­களின் நிலத்­தி­லி­ருந்து வெளி­யேற்ற முயற்­சிகள் மூலம் பலஸ்­தீன மக்­களின் சட்­ட­பூர்­வ­மான உரி­மைகள் மீதான எந்­த­வொரு மீற­லையும் சவுதி அரே­பியா நிரா­க­ரிக்­கின்­றது’ என சவூதி அரே­பி­யாவின் வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சு அந்த அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளது.

பலஸ்­தீன மக்கள் தங்கள் நிலத்தில் உறு­தி­யாக இருப்­பார்கள், அதி­லி­ருந்து நகர மாட்­டார்கள், தாங்கிக் கொள்ள முடி­யாத கடு­மை­யான மனி­தா­பி­மான துன்­பங்­களைத் தணிக்க சர்­வ­தேச சமூகம் இன்று கட­மைப்­பட்­டுள்­ளது.’

“இந்த அசைக்க முடி­யாத நிலைப்­பாடு பேச்­சு­வார்த்­தைக்கு உட்­பட்­டது அல்ல, சம­ர­சங்­க­ளுக்கு உட்­பட்­டதும் அல்ல என்பதை சவுதி அரேபியா இராச்சியம் வலியுறுத்துகிறது. முன்னாள் மற்றும் தற்போதைய அமெரிக்க நிருவாகங்களுக்கு முன்னர் தெளிவுபடுத்தப்பட்டபடி, சர்வதேச தீர்மானங்களின்படி பாலஸ்தீன மக்கள் தங்கள் சட்டப்பூர்வமான உரிமைகளைப் பெறாமல் நீடித்த மற்றும் நியாயமான அமைதியை அடைவது சாத்தியமற்றது,” எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.