இளம் ஊடகவியலாளர்களை உருவாக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட மீடியா போர தென்பகுதி விஜயம்

மாணவர்களுக்கு ஊடகப் பயிற்சி வழங்கவும் திட்டம்

0 71

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்­பாடு செய்த தென்­ப­கு­திக்­கான ஊடக மற்றும் சமூக நலன் சார் கலந்­து­ரை­யாடல் கடந்த ஞாயி­றன்று வெலி­கம அறபா தேசிய பாட­சாலை மற்றும் காலி மல்­ஹ­ருஸ்­ஸுல்­ஹியா தேசிய பாட­சாலை என்­ப­வற்றில் நடை­பெற்­றது.

அமைப்பின் தலைவர் என்.எம்.அமீன் தலை­மையில் நடை­பெற்ற இந்தக் கலந்­து­ரை­யா­டலில் மீடியா போர செயற்­குழு உறுப்­பி­னர்­களும் மாவட்ட அமைப்­பா­ளர்­களும் கலந்து கொண்­டனர். பிர­தேச சமூக சேவை அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள்,பாட­சாலை அதி­பர்கள்,உலமா சபை பிர­தி­நி­திகள், பள்ளி பரி­பா­லன சபை உறுப்­பி­னர்கள், பிர­தேச ஊட­க­வி­ய­லா­ளர்கள்,எழுத்­தா­ளர்கள், பாட­சாலை ஊடகக் கழக மாண­வர்கள், சமூக ஆர்­வ­லர்கள் போன்­றோ­ரின் ­பங்­க­ளிப்­புடன் இந்தக் கலந்­து­ரை­யாடல் நடை­பெற்­றது.

வெலி­கம அறபா தேசிய பாட­சா­லையில் இரு அமர்­வு­க­ளாக இந்தக் கலந்­து­ரை­யாடல் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­த­தோடு முதல் அமர்வில் மாத்­தறை மாவட்­டத்தில் இளம் ஊட­க­வி­ய­லா­ளர்­களை ஊக்­கு­விப்­பது, பாடா­சாலை மாண­வர்­க­ளுக்கு பயிற்சி வழங்­கு­வது, வாசிப்புத் திறனை அதி­க­ரிப்­பது, சிங்­கள மொழி­மூலம் செயற்­படும் ஊட­க­வி­ய­லா­ளர்­களை அடை­யாளங் கண்டு அவர்­களை ஊக்­கு­வித்தல் உட்­பட பல முக்­கி­ய­மான விட­யங்கள் குறித்து ஆரா­யப்­பட்­டது. கல்­வியி­ய­லா­ளர்­களும் ஊடக ஆர்­வ­லர்­களும் இதன் போது கருத்­துக்­களை முன்­வைத்­தனர். சமூகம் சார்ந்த விட­யங்­களை அச்சு இலத்­தி­ர­னியல் ஊட­கங்­க­ளிலும் சமூக ஊட­கங்­க­ளிலும் வெளிப்­ப­டுத்தி அவற்­றிற்கு தீர்வு பெற்றுக் கொடுப்­பதன் முக்­கி­யத்­துவம் பற்­றியும் இதன் போது கருத்து முன்­வைக்­கப்­பட்­டது. இங்கு மாத்­தறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அர்கம் இல்­யாஸும் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டார். அமைப்பின் தலைவர் என்.எம்.அமீன், செய­லாளர் ஸாதிக் சிஹான் ஆகி­யோரும் உரை­யாற்­றி­ய­தோடு பிரதி செய­லாளர் ஷம்ஸ் பாஹிம் நன்­றி­யுரை வழங்­கினார். அதனைத் தொடர்ந்து நடை­பெற்ற பாட­சாலை மாண­வர்­க­ளுக்­கான அமர்வில் ஊடகப் பயிற்­று­விப்­பா­ளர்­க­ளான இஸ்­பஹான் சாப்தீன், ஜாவிட் முனவ்வர் ஆகியோர் கருத்துத் தெரி­வித்­தனர்.

பக­லு­ணவின் பின்னர் மீடியா போர செயற்­குழு உறுப்­பி­னர்­க­ளுக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அர்கம் இல்­யா­ஸுக்கும் இடை­யி­லான சந்­திப்பு நடை­பெற்­றது. சமூகம் சார்ந்த பல்­வேறு விட­யங்கள் இதன் போது ஆரா­யப்­பட்­டது.

காலி மாவட்ட சமூக நலன்சார் கலந்­து­ரை­யாடல் காலி மல்­ஹ­ருஸ்­ஸுல்­ஹியா தேசிய பாட­சா­லையில் பிற்­பகல் நடை­பெற்­றது. இந்த நிகழ்வில் பிர­தேச சமூக சேவை அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள், பாட­சாலை அதி­பர்கள், உலமா சபை பிர­தி­நி­திகள், பள்ளி பரி­பா­லன சபை உறுப்­பி­னர்கள், உல­மாக்கள், கல்­வி­யி­ய­லா­ளர்கள் உட்­பட முக்­கி­யஸ்­தர்கள் பங்­கேற்­ற­தோடு பாட­சாலை மாணவ மாண­வி­களும் இதில் இணைந்­தி­ருந்­தனர். இதன் போதும் பிர­தேச ஊடக ஆர்­வ­லர்கள், கல்­வி­ய­லா­ளர்கள் போன்றோர் கருத்­துக்­களை வெளி­யிட்­ட­தோடு எதிர்­கா­லத்தில் மாண­வர்­க­ளுக்கு ஊடகப் பயிற்­சி­களை நடத்­து­வது குறித்தும் இளம் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளையும் உரு­வாக்­கு­வது தொடர்­பிலும் ஆரா­யப்­பட்­டது.

இதன் போது அமைப்பின் தலைவர் என்.எம்.அமீன் மொழி­பெ­யர்ந்த உயிர்த்த ஞாயிறு அனர்த்தம் நூலின் பிர­தி­திகள் முக்­கி­யஸ்­தர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டது குறிப்­பி­டத்­தக்­கது.
தென்­ப­குதி விஜ­யத்­திற்கு தொழி­ல­தி­பரும் நலன்­வி­ரும்­பி­யு­மான எம்.ஏ.சி.மஹ்சூம் பிர­தான அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­த­தோடு டிரான் மொபைல் உரிமையாளர் எம்.வை.எம்.முகர்ரம், டீன் பிரதர்ஸ் முகாமைத்துவப் பணிப்பாளர் நஜீப்தீன் ஆகியோரும் அனுசரணை வழங்கியிருந்தனர்.

அமைப்பின் பிரதிச் செயலாளர் சம்ஸ் பாஹிம் இந்த விஜயத்திற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்ததோடு மாவட்ட இணைப்பாளர்களான எம்.எப்.பர்ஹான், இஸ்பஹான் மற்றும் பிரதேச ஊடக ஆர்வலர்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.