அடி­மை­யா­தலை எவ்­வாறு மதிப்­பி­டு­வது?

0 112

இணையவழித் துன்புறுத்தல்
இணை­ய­வழித் துன்­பு­றுத்தல் என்­பது, தகவல் தொழில்­நுட்பக் கரு­வி­களைப் பயன்­ப­டுத்தி ஒரு­வரை துன்­பு­றுத்­து­வதை குறிக்­கின்­றது. புகைப்­ப­டங்கள், குறுஞ்­செய்­திகள், சமூக ஊடகப் பின்­னூட்­டங்கள், வீடி­யோ­ காட்­சிகள் மற்றும் ஏனைய தொடர்­பாடல் கரு­விகள் மூலம் ஒரு­வரை மன உளைச்­ச­லுக்கு உட்­ப­டுத்­தலும் இதில் அடங்கும். இது பற்றி வேறொரு பகு­தியில் பின்னர் நோக்­க­கலாம். இப்­பி­ரிவில் நாம் குறிப்­பிட விரும்­பு­வது, அள­வு­க­டந்த இணையப் பயன்­பாடு மற்றும் சமூக ஊடகப் பயன்­பாடு என இத்­த­கைய நோவினை தரக்­கூ­டிய அனு­ப­வங்­களை ஏற்­ப­டுத்தும் என்­ப­தாகும். இதனால், சிறு­வ­ர்­களும் இளை­ஞர்­களும் பல தவ­றான முடி­வு­களை எடுத்த பல சம்­ப­வங்கள் நடந்­துள்­ளன. பள்ளி மற்றும் பல்­க­லைக்­க­ழக வய­தி­னரை இத்­தகைய துன்­பு­றுத்­தல்கள் அதிகம் பாதிக்­கின்­றன. அவர்­களின் நடத்­தையில், கிர­கித்­தலில், கடமை உணர்வில், சமூக செயற்­பாட்டில் பாரிய தாக்­கத்தை செலுத்­து­கின்­றது.
இள­வ­ய­தி­னரின் உணர்­வு­க­ளையும் உள நல­னையும் இது அதிகம் பாதிக்­கி­றது. தனிப்­பட்­ட­வர்­களில் இதன் தாக்கம் எப்­போதும் அதி­க­மாக காணப்­படும்.

போதை போன்­றது
இணை­ய­தள பாவ­னையும் சமூக ஊட­கத்தில் நேரத்தை செல­வி­டு­வதும் போதை போன்­றது.

அதனால், இணைய நண்­பர்­களின் தொடர்­பி­லி­ருந்து விலகி இருக்க முடி­யாத நிலை ஏற்­ப­டு­கி­றது. நாம் வலைத்­த­ளங்­களில் பதி­விடும் சிறுகதை­களை, கருத்­துக்­களை மற்றும் படங்­களை யார் யார் கமெண்ட் செய்­கி­றார்கள், யார் லைக் செய்­கி­றார்கள், அல்­லது யார் செயார் செய்­கி­றார்கள் என எப்­போதும் எண்ணத் தோன்றும். நமக்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளி­ட­மி­ருந்து பின்­னூட்­டங்கள் கிடைக்­காத போது மனம் துடிக்கும். சில­ருக்கு இதனை தாங்கிக் கொள்ள முடி­வ­தில்லை. பல்­க­லைக்­க­ழக விரி­வுரை ஒன்றின் போது, எவ்­வ­ளவு நேரம் கைப்­பே­சியைப் பயன்­ப­டுத்தி இணை­யத்­தில் நேரம் செல­வி­டு­வீர்கள் எனக் கேட்­ட­போது, இரவில் தூக்கம் வரும் வரை இணை­யத்தில் இருப்போம் எனப் பதி­ல­ளித்­தார்கள். பின்னர், எத்­தனை மணிக்கு தூக்கம் வரும் எனக் கேட்ட போது, கைப்­பே­சியில் சார்ஜ் முடி­யும்­வரை தூக்கம் வராது எனக் கூறி­னார்கள்.

இதுதான் இணை­யத்தின் போதை என்­பது. பெரிய பெரிய எழுத்­தா­ளர்கள் கூட தமது எழுத்­துக்­க­ளுக்கு குறிப்­பிட்ட சில­ரி­ட­மி­ருந்து துலங்கள் கிடைக்­காத போது அதனை மீண்டும் பொது­வெ­ளியில் எழுதி தமது ஆத்­தி­ரத்தை வெளிப்­ப­டுத்­து­வார்கள். சில­ருக்கு ஏதா­வது ஒன்றை சமூக ஊட­கத்தில் பகிர்ந்து கொண்டே இருக்க தோன்றும். முக்­கி­ய­மான வேலை­களின் போதும் கை தன்­னை­றி­யா­ம­லேயே கைப்­பே­சிக்குச் செல்லும். முக்­கிய கூட்­டங்­களின் போதும் கைப்­பே­சியை பிரிந்து, அதனைப் பார்க்­காமல் இருக்க முடி­வ­தில்லை. இத்­த­கைய போதை இலத்­தி­ர­னியில் கரு­வி­களின் உரு­வாக்­கத்­தி­லேயே உள்­ளன. இத்­த­கைய ஈர்ப்பு, மயக்க சக்தி, பிரிந்­தி­ருக்க முடி­யா­த ­நிலை என்­பது இணையம் மற்றும் டிஜிட்டல் கரு­வி­களின் அமைப்­பி­லேயே உள்­ளது.

பார்ப்­ப­தெல்லாம் உண்மை இல்லை
தொழில்­நுட்ப வளர்ச்­சியும் அதீத ஸ்மார்ட்போன் பாவ­னையும் தகவல் வழங்­கு­வ­தையும் பெறு­வ­தையும் இல­கு­ப­டுத்தி உள்­ளது. இப்­போது யார் வேண்­டு­மா­னாலும் தக­வல்­களை வெளி­யி­டலாம். எப்­போது வேண்­டு­மா­னாலும் வெளி­யி­டலாம். இந்த திறந்த நிலை, முன்னர் குறிப்­பிட்­டது போன்று, ஒரு வகைத் தகவல் வெள்­ளத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. முன்­பை­விட இல­குவில் எம்­மிடம் தக­வல்கள் வந்து சேர்­கின்­றன. நாம் விரும்­பா­விட்­டாலும் தகவல் கிடைப்­ப­தி­லி­ருந்து எம்மால் பிரிந்து வாழ முடி­வ­தில்லை. அனை­வ­ரது கைபே­சியும் எண்­ணி­ல­டங்­காத தக­வல்­களை நம்­மிடம் கொண்டு சேர்க்­கின்­றன. இதனால், எமது தகவல் சூழல் மாச­டை­கின்­றது. உண்­மைக்கு புறம்­பான செய்­திகள் வெளிப்­ப­டு­கின்­றன. உண்­மை­யையும் பொய்­யையும் பிரித்துப் பார்க்க முடி­யாத நிலை உரு­வா­கின்­றது. போலி, இட்­டுக்­கட்­டப்­பட்ட திரிவுபடுத்­தப்­பட்ட, உணர்ச்­சி­வ­சப்­பட்ட செய்­திகள் என எண்­ணி­ல­டங்­காத – -உண்­மைக்கு புறம்­பான செய்­திகள், நம்­மிடம் வந்து சேர்­கின்­றன. உண்­மையை விட பொய் ஆறு மடங்கு வேகத்­துடன் பர­வு­கின்­றது என ஆய்­வுகள் கூறு­கின்­றன. பிர­சாரப் பணி­களில் -குறிப்­பாக, வியா­பார அர­சியல் ரீதி­யான பிர­சாரப் பணி­களில் ஈடு­ப­டு­ப­வர்கள் ஏனை­ய­வர்கள் நம்பச் செய்யும் வகையில் பொய்­களை உண்­மை­யாக அலங்­கா­ரப்­ப­டுத்தி வழங்­கு­கின்­றனர். எனவே, இணைய வெளியில் அதிக நேரத்தை செல­விடும் இளம் தலை­முறை­யினரும் வயது முதிர்ந்­த­வர்­களும் இணைய வழிச் செய்­தி­களில் உண்­மைத்­தன்மை பரி­சோ­திக்­கின்ற ஆற்­றல்­களை பெற்­றி­ருப்­பது கட்­டா­ய­மாகும். இவ்­வாறு உண்­மையை கண்­ட­றியும் செயற்­பாடு (Verification) எனப்­ப­டு­கின்­றது. எனவே, இணை­யத்தில் அதிக நேரம் செல­வி­டு­ப­வர்கள் அதில் உள்ள மதி மயக்கும் தன்மை தொடர்பில் அதிக கவ­னத்­துடன் நடந்து கொள்­வது முக்­கி­ய­மாகும்.

இணை­ய­தள பாவ­னைக்கு
அடி­மை­யா­தலை எவ்­வாறு மதிப்­பி­டு­வது?
இணை­ய­தள பாவ­னைக்கு அடி­மை­யாதல் பற்றி மதிப்­பிட பல அள­வு­கோல்கள் உள்­ளன. இவற்றில் முதன்­மை­யா­னது யங் (Young) என்­பவர் 1996, 1998களில் வெளி­யி­ட்ட அடி­மை­யாதல் மதிப்­பீட்டுக் கரு­வி­யாகும். இணையப் பாவ­னைக்கு அடி­மை­யாதல் பற்­றிய ஆய்வுத் துறையின் ஆரம்­ப­கால முன்­னோ­டி­யாக யங் கரு­தப்­ப­டு­கின்றார். இவர் இணை­ய­தள பாவ­னைக்கு அடி­மை­தலை சூதாட்ட வெறிப் பிறழ்­வுடன் ஒப்­பி­டு­கின்றார். சூதாட்ட வெறி எதனை இழந்­தாலும் மீண்டும் மீண்டும் சூதா­டத்­தூண்டும். இணை­யத்­திற்கு அடி­மை­யா­தலும் அவ்­வாறு தான். சூதாட்ட வெறி போல கட்­டுப்­பாட்டை மீறி செல்லும் பிறழ்­வாக இணை­ய­த­ளத்தில் அடி­மை­யாதல் உள்­ளது என யங் உறு­தி­யாகக் குறிப்­பி­டுவார். இதனை இந்­திய ஆய்­வா­ளர்கள் சிலர் மனக்­கட்­டுப்­பாட்டு இழப்பு பிறழ்வு என்­கின்­றனர். ஒரு செயலில் ஈடு­ப­டு­வதன் மூலம் ஏற்­ப­டக்­கூ­டிய இழப்பு, அவ­மானம் மற்றும் ஆபத்து என்­ப­வற்றை பொருட்­ப­டுத்­தாமல் தவ­றான செயல்­களில் ஈடு­ப­டு­வதை மனக்­கட்­டுப்­பாடு இழப்பு பிறழ்வு குறிக்­கின்­றது. இணைய பாவ­னைக்கு அடி­மை­யா­தலிலும் இவ்­வா­றுதான். அடி­மைத்­த­னத்திற்கு உட்­பட்­ட­வர்கள் அந்த நிலை­யி­லி­ருந்து விடு­பட முடி­யாமல் சிர­மப்­ப­டு­கின்­றார்கள். இணைய பாவ­னைக்கு அடி­மை­யா­ன­வர்கள் தம்­மைத்தாம் சுய­வி­சா­ர­ணையும் மதிப்­பீடும் செய்து கொள்­வது முக்­கி­ய­மா­ன­தாகும். இதற்கு யங் சிறந்த வகைப்­ப­டுத்­த­லையும் வினாக்­க­ளையும் வின­வு­கின்றார்.

லயித்­தி­ருத்தல்
நீங்கள் இறு­தி­யாக இணை­ய­த­ளத்தில் பிர­வே­சித்துப் பார்த்­தவை பற்றி தொடர்ந்தும் நினைத்துக் கொண்­டி­ருக்­கி­றீர்­களா? அல்­லது இணை­யத்­த­ளத்தைப் பயன்­ப­டுத்தும் அடுத்த முறை எப்­போது வரும் என காத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றீர்­களா? மறு­ப­டியும் தன்­னிடம் உள்ள டிஜிட்டல் கரு­வியை பயன்­ப­டுத்தும் நேரத்­திற்­காகக் காத்துக் கொண்­டி­ருக்­கின்­றீர்­களா? அவ்­வா­றெனில், இது இணை­யப்­பா­வ­னைக்கு அடி­மை­யா­தலின் ஒரு அறி­கு­றி­யாகும்.

பொறுமை
அதிக நேரம் இணைய உலகில் மூழ்கி இருப்­பதால் ஒரு­மித்த திருப்­தியை உணர்­கின்­றீர்­களா? அதீத இணை­யத்­தளப் பாவ­னையின் மூலம் உங்­க­ளது கல்வி, சமூகக் கடமை, குடும்பப் பொறுப்­புகள் பாதிக்­கப்­ப­டு­வதை ஒரு பொருட்­டாக எடுத்­துக்­கொள்­ளாமல் இருக்­கின்­றீர்­களா? அவ்­வா­றெனில், இதுவும் இணை­யப்­பா­வ­னைக்கு அடி­மை­யா­தலின் அறி­கு­றி­யாகும்.

விலகிச் செல்­லுதல்
நீங்கள் இணை­ய­த­ளத்தை பாவித்துக் கொண்­டி­ருக்கும் போது யாரா­வது அதனை தடுத்தால் அல்­லது இணை­யத்தை பயன்­ப­டுத்தும் போது எதிர்­பா­ராத தடைகள் ஏற்­பட்டால் திடீ­ரென அமை­தி­யி­ழந்து விடு­கின்­றீர்­களா? மன அழுத்தம் ஏற்­ப­டு­கின்­றதா? உளச் ­சோர்­வ­டை­கின்­றீர்­களா? அதிக இணை­யத்­தளப் பாவ­னை­யினால் உங்­க­ளது கல்வி, சமூகக் கடமை, குடும்பப் பொறுப்­பு­க­ளி­லி­ருந்து வில­கி­யி­ருக்க தோன்­று­கின்­றதா? அவ்­வா­றெனில், இதுவும் இணை­யப்­பா­வ­னைக்கு அடி­மை­யா­தலின் அறி­கு­றி­யாகும்.

உட­லியல் தீங்­குகள்
என்­டஸன் மேற்­கொண்ட ஆய்­வு­களில், கட்­டுப்­பாட்டை மீறிய இணையப் பாவனை உடற்­ப­ரு­மனை ஏற்­ப­டுத்தும் என கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. அத்­தோடு சீரற்ற வாழ்க்கை முறை­யுடன் உடல் வளர்ச்­சியை பேணுதல் ஆர்­வ­மின்மை ஏற்­ப­டு­வ­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. கைபே­சியில், தொலைக்­காட்­சிக்கு அல்­லது மடிக்­க­ணி­னிக்கு முன்னால் நேரம் செல்­வதே புரி­யாமல் மடிக்­க­ணக்கில் செல­வி­டு­ப­வர்­களை நீங்கள் கண்­டி­ருக்­கலாம். இத்­த­கை­ய­வர்­களில் ஏற்­படும் உடற்­ப­ருமன் நீரி­ழிவு இதய நோய்கள் என்­ப­வற்றை ஏற்­ப­டுத்த முடியும்.

தூக்­க­மின்மை
கட்­டுப்­பாட்டை மீறிய இணை­யப்­பா­வனை தூக்­கத்தை பாதிக்கும். சீரற்ற தூக்கம் பல பின் விளை­வு­களை ஏற்­ப­டுத்த முடியும். கல்வி, சமூக வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, மற்றும் உள­நிலை என்­ப­வற்றை பாதிக்­கின்­றது. கணனி திரையில் அதிகம் மூழ்கி இருப்­ப­வர்­க­ளுக்கு கண் சோர்வு ஏற்­படும். உரிய வேளைக்கு தூக்­கத்­தி­லி­ருந்து எழுந்­தி­ருக்க முடி­யாது போகும். உரிய முறையில் உறக்­கத்­திற்கு செல்­லாத மாண­வர்கள் பெரும்­பாலும் கல்வி அடை­வு­களில் முன்­னி­லையில் இருக்க மாட்­டார்கள். இணை­யத்­தளப் பாவ­னைக்கு அடிமைப்பட்­ட­வர்­களின் கல்­வி­ய­டைவு பாதிக்­கப்­படும். சில இணைய உள்­ள­டக்­கங்­களை புரிந்து கொள்ள, ரசிக்க, உள்­வாங்கிக் கொள்ள, சிர­மத்தை ஏற்­ப­டுத்திக் கொள்­கி­றது. இது எரிச்­சலை ஏற்­ப­டுத்­து­கின்­றது. விட­யங்­களை உள்­வாங்கிக் கொள்ள சிர­மத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது. இவை சேய் மற்றும் குழு­வினர் மேற்­கொண்ட ஆய்­வு­களில் உறு­திப்­ப­டுத்­து­கி­றது.

மிகை இயக்கம்
பல ஆய்­வா­ளர்கள் கட்­டுப்­பாட்டை மீறிய இணையப் பாவனை அவ­தான குறை­பாடு மற்றும் மிகை இயக்க குறை­பாடு என்­ப­ன­வற்­றுடன் தொடர்­பு­ப­டு­கின்­றனர். ஒரு பொருளைக் கொண்­டு­வரும் படி கூறினால் வேறு ஒரு பொரு­ளுடன் பிள்ளை வந்து நிற்பார். கையி­லெ­டுத்த விட­யத்தை தட்­டுத்­த­டு­மாறிச் செய்வார். அல்­லது கருத்தில் எடுக்­கா­ம­லேயே மேற்­கொள்வார். இத்­த­கைய அறி­கு­றி­களை சிறு­வர்­களில் அவ­தா­னித்தால் அவர்­க­ளுக்கு அவ­ச­ர­மாக உதவி செய்யும் நேரம் வந்து விட்­டது என்­பதை பெற்­றோரும் ஆசி­ரி­யர்­களும் புரிந்து கொள்ள வேண்டும்.

காட்சிப் பிறழ்­வுகள்
கட்­டுப்­பாட்டை மீறிய இணையப் பாவனை பல வகை­யான காட்சி பிறழ்­வு­களை அல்­லது பார்வை தொடர்­பான குறை­பா­டு­களை ஏற்­ப­டுத்­து­வ­தாக பல ஆய்­வு­களில் குறிப்­பிட்­டுள்­ளன. கண் சோர்­வ­டைதல், கண் வறட்சி அல்­லது கண் உல­ருதல், தலை­வலி என்­ப­னவும் ஏற்­ப­டு­கின்­றன.

டிஜிட்டல் கரு­வி­களின் திரை­களை நீண்ட நேரம் பயன்­ப­டுத்­து­வது கண் சோர்­வ­டை­த­லுக்கு இட்டுச் செல்லும். அதிக சோர்­வ­டைதல் பார்­வையை பாதிக்கும். ஹாங்­காங்கில் நடத்­தப்­பட்ட ஒரு ஆய்வில், 8 முதல் 14 வய­துக்­குட்­பட்ட குழந்­தை­களின் ஸ்மார்ட்ஃபோன் பயன்­பாட்­டிற்கும் கண் சோர்­வ­டை­த­லுக்­கு­மி­டை­யி­லான தொடர்பை ஆய்­வுக்­குட்­ப­டுத்­தி­யது. 1,508 மாண­வர்­களில், 1,298 பேர் ஒரு வரு­டத்­திற்குப் பிறகு பகுப்­பாய்­வுக்­கான முழு­மை­யான தரவை வழங்­கி­யுள்­ளனர்.

பொது­வான சோர்­வ­டை­தலில் அறி­கு­றி­களில் கண் சோர்வு, மங்­க­லான பார்வை மற்றும் எரியும் கண்கள் ஆகி­யவை அடங்கும். ஒரு நாளைக்கு 4 மணி நேரத்­திற்கும் மேலாக ஸ்மார்ட்­போன்­களைப் பயன்படுத்துபவர்களுடன் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகப் பயன்படுத்துபவர்களுடன் ஒப்பிடும்போது, அதிக மதிப்பெண்க ளைப் பெற்றுள்ளதாக ஆய்வில் கண்ட றியப்பட்டுள்ளது. அதாவது குறைவாகப் பயன்படுத்தினால் சோர்வடைதலும் குறைவாகும். ஒரு வருடத்தில், அதிக ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் அதிக கண் திரிபு அறிகுறிகளைக் காட்டியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது (Chu et al. (2023)

கல்வி மற்றும் ஏனைய அடைவுகள் பாதிக்கப்படுதல்
கட்­டுப்­பாட்டை மீறிய இணை­யப்­பா­வனை அதிக நேரத்தை டிஜிட்டல் கரு­வி­க­ளுடன் செல­வி­டுதல் என்­பன கல்­வியைப் பாதிக்­கின்­றது. இரவு முழுக்க விழித்­தி­ருப்­பதால் பல மாண­வர்கள் வகுப்­ப­றையில் தூங்­கு­கின்­றனர். கற்றல் மற்றும் பரீட்சை விட­யங்­களை கிர­கிக்க முடி­வ­தில்லை. கற்­றலில் மாத்­தி­ர­மன்றி சமூக விட­யங்­க­ளிலும் தாக்கம் செலுத்­து­கின்­றது. உடல் பயிற்சி, சமூக உற­வு­களை பேணுதல், பொதுப்­ப­ணி­களில் ஈடு­ப­டுதல் என்­ப­ன­வற்றில் ஆர்வம் இல்­லாமல் போகின்­றது. வாசிப்பின் மீதான ஆர்வம் மங்கிப் போகின்­றது. கற்­றலை பிற்­போடத் தோன்றும். கல்­விசார் உள்­ள­டக்­கங்­களை ஆழ­மாகக் கிர­கிக்­காமல் அவ­சர அவ­ச­ர­மாக வெறு­மனே பார்­வை­யிட தூண்டும். எவ்வாறு பெற்றோர்கள் உதவலாம் என்பதை வேறு பிரிவுகளில் விளக்குவோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.