இஸ்லாமிய விழுமியங்களையும் போதனைகளையும் பாதுகாப்பதற்கும் பரப்புவதற்கும் அல்–குர்ஆன் பெரும் பங்களிப்புச் செய்துள்ளது: அமைச்சர் சுனில் செனவி

0 93

(றிப்தி அலி)
தூய அரபு மொழியில் எழு­தப்­பட்ட புனித அல்-­குர்ஆன், இஸ்­லா­மிய மத விழு­மி­யங்கள் மற்றும் போத­னைகள் ஆகி­ய­வற்றை பாது­காப்­ப­தற்கும் பரப்­பு­வ­தற்கும் பெரும் பங்­க­ளிப்புச் செய்­துள்­ளது என புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார விவ­கார அமைச்சர் ஹினி­தும சுனில் செனவி தெரி­வித்தார்.

மகத்­தான கலா­சார அடை­யா­ளங்­களைக் கொண்ட உல­க­ளா­விய மொழி­யா­க­வுள்ள அரபு மொழி­யினை 450 மில்­லி­ய­னுக்கு மேற்­பட்ட மக்கள் பேசு­கின்­றனர். அத்­துடன் சுமார் 25 நாடு­களின் உத்தி­யோ­க­பூர்வ மொழி­யா­கவும் அரபு மொழி காணப்­ப­டு­கின்­றது என அவர் குறிப்­பிட்டார்.

கொழும்­பி­லுள்ள சவூதி அரே­பிய தூது­வ­ரா­ல­யத்தின் ஆத­ர­வுடன் 2­வது தட­வை­யாக இலங்­கையில் ஏற்­பாடு செய்­யப்­பட்ட புனித அல்-­குர்ஆன் மனனப் போட்­டியின் பரி­சில்கள் வழங்கும் இறுதி நிகழ்வு கடந்த திங்­கட்­கி­ழமை (20) கொழும்பில் இடம்­பெற்­றது.

இலங்­கைக்­கான சவூதி அரே­பிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்­தா­னியின் தலை­மையில் நடை­பெற்ற இந்த நிகழ்வில் புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார விவ­கார அமைச்சர் ஹினி­தும சுனில் செனவி பிர­தம அதி­தி­யா­கவும் சவூதி அரே­பி­யாவின் இஸ்­லா­மிய விவ­கார மற்றும் வழி­காட்டல் அமைச்சின் உயர் அதி­கா­ரி­யான சவுத் ஒலைபி அல்­கம்தி விசேட அதி­தி­யா­கவும் கலந்­து­கொண்­டனர்.

பிரதி அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் வெளி­நாட்டுத் தூது­வர்கள் எனப் பலர் பங்­கேற்ற நிகழ்வில் உரை­யாற்றும் போதே அமைச்சர் ஹினி­தும சுனில் செனவி மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரை­யாற்­றிய அமைச்சர், காலஞ்­சென்ற மன்னர் அப்துல் அஸீஸ் மற்றும் தற்­போ­தைய மன்­னரும் இரண்டு புனித ஸ்தலங்­களின் பாது­கா­வ­ல­ரு­மான சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆகி­யோரை கௌர­விக்கும் முகமாக தேசிய ரீதி­யா­கவும் சர்­வ­தேச ரீதி­யாக அல்-­குர்ஆன் மனனப் போட்­டி­களை நடத்தி பெறு­ம­தி­யான பரி­சில்­களை சவூதி அரே­பி­யா­வினால் வழங்­கப்­ப­டு­வ­தை­யிட்டு நான் மிகவும் சந்­தோ­ச­ம­டை­கின்றேன்.

சவூதி அரே­பி­யா­வினால் நீண்ட கால­மாக புனித அல்-­குர்­ஆ­னுக்கு முக்­கி­யத்­துவம் அளித்து வரு­கின்ற பாரம்­ப­ரியம் இன்று வரை தொடர்­கின்­றது. இது போன்று அல்-­குர்ஆன் மனனப் போட்­டி­களை சவூதி அரே­பி­யா­விலும் உல­க­ளா­விய ரீதி­யிலும் நடத்தி மில்­லியன் றியால்கள் பரி­சாக வழங்­கப்­ப­டு­கின்­றன.
இதன் கீழ் முதற் தட­வை­யாக 2023ஆம் ஆண்டு அல்-­குர்ஆன் மனனப் போட்டி இலங்­கையில் அங்­கு­ரார்ப்­பணம் செய்­யப்­பட்­டது. வர­லாற்று முக்­கி­யத்­து­வ­மிக்க இந்த நிகழ்வு சவூதி அரே­பி­யாவின் இஸ்­லா­மிய விவ­கார மற்றும் வழி­காட்டல் அமைச்­சுடன் இணைந்து இலங்­கைக்­கான சவூதித் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்­தா­னியின் தலை­மைத்­து­வத்தின் கீழ் ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

எனது அமைச்சும் அதன் கீழுள்ள முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் இந்த அல்­குர்ஆன் மனனப் போட்­டிக்கு தேவை­யான முழு ஒத்­து­ழைப்­புக்­க­ளையும் வழங்கி வரு­கின்­றன.

ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்­கவின் தலை­மைத்­து­வத்தின் கீழ் மத்­திய கிழக்கு பிராந்­தியம் தொடர்பில் அதிக கவனம் செலுத்­தப்­ப­டு­கின்­றது. சுமார் 10 இலட்சம் இலங்­கை­யர்கள் அப்­பி­ராந்­தி­யத்தில் உள்­ளனர்.
இந்த வகை­யான அரபு மொழி, அல் குர்ஆன் மற்றும் கலா­சார ஊக்­கு­விப்பு நிகழ்­வுகள் உல­கத்தைப் பற்றி மேலும் அறிய வழி வகுக்­கின்­றன, குறிப்­பாக இது பல்­வேறு கலா­சார வேறு­பா­டு­களை குறைப்­ப­தற்­கான ஒரு பால­மா­க­வுள்­ளது.

புனித அல்-­குர்­ஆனை மனனம் செய்­வதன் மூலம் சர்­வ­வல்­ல­மை­யுள்ள அல்­லாஹ்­வுடன் முஸ்­லிம்­களின் ஆன்­மீகத் தொடர்பை ஆழ­மாக்­கு­கி­றது. அத்­துடன் அமைதி, வழி­காட்­டுதல் மற்றும் இறை நெருக்கம் ஆகி­ய­வற்றை வழங்­கு­வ­தா­கவும் நான் கேள்­விப்­பட்­டுள்ளேன்.

புனித அல்-­குர்­ஆனை மனனம் செய்­வதன் மூலம் ஆன்­மீக நிறைவு, இறை பக்தி தொடர்ச்­சி­யான இறை வெகு­ம­திகள், அறி­வுசார் வளர்ச்சி உள்­ளிட்ட பல நன்­மைகள் கிடைக்கும் என இஸ்­லா­மிய போத­னைகள் கற்­பிக்­கின்­றன.
இந்த அல்-­குர்­ஆனை மனனம் செய்யும் பணி­யினை மக்கள், நிறைவு செய்யும் போது எல்லாம் வல்ல இறைவன் தன் கரு­ணை­யாலும், ஆசீர்­வா­தத்­தாலும், வழி­காட்­டு­த­லாலும் அவர்­களை ஆசிர்­வ­திக்­கின்றான். இதனால் ஒரு மனிதன் உலக வாழ்­விலும் மறு­மை­யிலும் சந்­தோ­ச­ம­டை­வ­துடன் வெற்­றியும் பெறு­கிறான்.

எமது இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லுள்ள நெருக்­க­மான நட்­பு­ற­வி­னையும் ஒத்­து­ழைப்­பி­னையும் மேலும் பலப்படுத்த இலங்கைக்கான சவூதித் தூதுவர் மேற்கொண்டு வரும் பணிகள் பாராட்டத்தக்கது.

அதேவேளை, ஹஜ் விவகாரம் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்த மொன்றில் கைச்சாத்திடுவதற்காக கடந்த வாரம் எனது தலைமையிலான குழுவினர் சவூதி அரேபியா சென்றபோது அங்கு வழங்கப்பட்ட அனைத்து வசதிகளுக்கும் சிறந்த விருந்தோம்பலுக்கும் அந்நாட்டு உபசரணைப் பிரிவிற்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.