470 நாட்களின் பின்னர் காஸாவில் போர் நிறுத்தம்

0 80

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் அம­லுக்கு வந்­தி­ருப்­பதால் காஸாவில் 470 நாட்­க­ளுக்குப் பிறகு மீண்டும் அமைதி திரும்­பி­யுள்­ளது. போர் நிறுத்த ஒப்­பந்­தப்­படி, இஸ்ரேல் சிறை­களில் அடைக்­கப்­பட்­டுள்ள பலஸ்­தீன கைதிகள் விடு­த­லைக்கு ஈடாக, ஒவ்­வொரு கட்­ட­மாக ஹமாஸ் தன் வச­முள்ள இஸ்­ரே­லிய பண­யக்­கை­தி­களை விடு­விக்கும். விடு­விக்­கப்­படும் ஒவ்­வொரு இஸ்­ரே­லிய பண­யக்­கை­திக்கும் 30 பலஸ்­தீன கைதி­களை இஸ்ரேல் சிறை­களில் இருந்து விடு­விக்க வேண்டும் என்­பது நிபந்­தனை.

போர் நிறுத்த ஒப்­பந்தம் அமு­லுக்கு வந்த நிலையில் முதல் நாளில் 3 பணயக் கைதி­களை ஹமாஸ{ம், பதி­லுக்கு 90 பலஸ்­தீன கைதி­களை இஸ்­ரேலும் விடு­வித்­தன. முதல் நாளாக இரவுப் பொழுது குண்டு மழை, துப்­பாக்கி தாக்­கு­தல்கள் இல்­லாமல் காஸா மக்கள் கழித்­தனர். குறிப்­பாக மனி­தா­பி­மான உதவிப் பொருட்­க­ளுடன் 630 டிரக்­குகள் காஸா­வுக்குள் சென்­றன. இவற்றில் 300 டிரக்­குகள் போரால் மிக மோச­மாக பாதிக்­கப்­பட்ட வடக்கு காஸா­வுக்குள் சென்­றன.

முன்­ன­தாக, இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஓராண்­டுக்கும் மேலாக நீடித்து வந்த போரில் பலஸ்­தீ­னர்கள் 47,000 பேர் கொல்­லப்­பட்­டனர். இரு தரப்பு இடையே போர் நிறுத்தம் ஏற்­ப­டுத்த கத்தார், அமெ­ரிக்கா சார்பில் பல கட்ட பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டது. பணயக் கைதி­களை விடு­வித்தால் போரை நிறுத்­து­வ­தாக இஸ்ரேல் நிபந்­தனை விதித்­தது.

இந்­நி­லையில், பணயக் கைதிகள் பட்­டி­யலை அனுப்ப ஹமாஸ் தாம­தப்­ப­டுத்­தி­யதால் 3 மணி நேரம் தாம­தித்தே போர் நிறுத்த ஒப்­பந்தம் அமு­லுக்கு வந்­தது. போர் நிறுத்த ஒப்­பந்தம் அம­லுக்கு வரு­வது தாம­த­மான இந்த மூன்று மணி நேரத்­தினுள் மாத்­திரம் இஸ்ரேல் நடத்­திய வான்­வழித் தாக்­கு­தலில் 13 பலஸ்­தீ­னர்கள் பேர் கொல்­லப்­பட்­டனர்.

போர் நிறுத்­தத்தின் மூலம் 15 மாதங்­க­ளாக நடந்­து­வந்த போர் முடி­வுக்கு வந்­துள்­ளது. நிபந்­த­னைகள் இருந்­தாலும் கூட இந்தப் போர் நிறுத்த ஒப்­பந்தம் பல தரப்­பிலும் வர­வேற்பைப் பெற்­றுள்­ளது.

போர் நிறுத்த ஒப்­பந்­தத்தின் படி, ஹமாஸால் கடத்­தப்­பட்ட 250 பணயக் கைதி­களில் தற்­போது உள்ள 98 பேரில் 33 பேர் விடு­விக்­கப்­ப­டு­வார்கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அதேபோல் இஸ்­ரேலின் பல்­வேறு சிறை­களில் இருக்கும் 2000 பலஸ்­தீ­னி­யர்­களை இஸ்ரேல் விடு­விக்கும்.

காஸா பகுதி முழு­வதும் உள்­கட்­ட­மைப்பு எவ்­வ­ளவு சீர­ழிந்­துள்­ளது என்­பதை நீங்கள் கற்­பனை செய்து பார்க்க முடி­யாது. தெருக்­களில் கழி­வுநீர் நிரம்­பி­யுள்­ளது.

சில இடங்­களில், தண்ணீர் பற்­றாக்­குறை உள்­ளது. நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யங்கள் வேலை செய்­ய­வில்லை. உள்­கட்­ட­மைப்பு முற்­றிலும் சரிந்­து­விட்­டது.
இஸ்ரேல் கன­ரக இயந்­தி­ரங்­களை அனு­ம­தித்த முதல் நாள் மக்கள் தமது அழிந்­து­போன வாழி­டங்­களைப் பார்­வை­யிட்­டனர். சிவில் பாது­காப்பு குழுக்கள், பொறி­யி­ய­லா­ளர்கள் மற்றும் மீட்பு முயற்­சி­களில் பணி­பு­ரி­வோ­ருக்கு எங்­கி­ருந்து தொடங்­கு­வது என்று தெரி­ய­வில்லை.

ஒவ்­வொரு தெரு­விலும், சுற்­றுப்­பு­றத்­திலும், நக­ரத்­திலும் – உள்­கட்­ட­மைப்பு அழிக்­கப்­பட்­டுள்­ளது. பலஸ்­தீ­னி­யர்கள் தங்கள் வாழ்க்­கையை புதி­தாகத் தொடங்க வேண்டும். ஆனால் எப்­படி எங்­கி­ருந்து ஆரம்­பிப்­பது என்­ப­தற்குத் தான் வழி தெரி­ய­வில்லை.

போர் நிறுத்தம் ஆரம்­பித்த மறுநாள் 68 பலஸ்­தீ­னி­யர்­களின் உடல்­களை மீட்­டெ­டுக்க முடிந்­த­தாக அவர்கள் கூறினர். ஆனால் குறைந்­தது 11,000 பேர் காணாமல் போயுள்­ளனர் அல்­லது இடி­பா­டு­க­ளுக்குள் சிக்­கி­யி­ருக்­கலாம் என்று நம்­பப்­ப­டு­கி­றது.

இஸ்­ரே­லிய குண்­டு­வீச்­சினால் ஏற்­பட்ட பெரும் அழிவில் மீட்பு முயற்­சி­க­ளுக்குத் தேவை­யான போது­மான கன­ரக உப­க­ர­ணங்கள் மீட்புக் குழுக்­க­ளிடம் இல்லை.

பெரும்­பா­லான இடங்­களில், எலும்­புகள் அல்­லது அடை­யாளம் காண முடி­யாத உடல்­களை மட்­டுமே கண்­டு­பி­டிக்க முடிந்­தது. மக்கள் தங்கள் வீடு­க­ளுக்கு அரு­கி­லுள்ள பகு­தி­களில் அவற்றைப் புதைக்­கி­றார்கள். பல பலஸ்­தீ­னி­யர்­களிள் சட­லங்கள் ஒரு வரு­டத்­திற்கும் மேலாக இடி­பா­டு­க­ளுக்குள் சிக்கிக் கொண்­டுள்­ளன.

ஒக்­டோபர் 7, 2023 முதல் இஸ்­ரே­லிய தாக்­கு­தல்­களில் காசா பகு­தியில் உள்ள அனைத்து பொலிஸ் அலு­வ­ல­கங்கள் மற்றும் நிலை­யங்கள் அழிக்­கப்­பட்­டுள்­ளன, நூற்­றுக்­க­ணக்­கான வாக­னங்கள் மற்றும் பிற சொத்­துக்கள் அழிக்­கப்­பட்­டுள்­ளன என்று காசா பகு­தியில் உள்ள பலஸ்­தீன பொலிஸ் பொது பணி­யகம் தெரி­வித்­துள்­ளது.

இயக்­குநர் ஜெனரல் மேஜர் ஜெனரல் மஹ்மூத் சலா உட்­பட துறையின் 1,400 க்கும் மேற்­பட்ட உறுப்­பி­னர்­களும் கொல்­லப்­பட்­டுள்­ளனர் என்று பேஸ்­புக்கில் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் இஸ்­ரேலின் தாக்­கு­தல்­களில் 1,950 க்கும் மேற்­பட்ட காஸா பொலிசார் காய­ம­டைந்­துள்­ளனர், 211 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இஸ்ரேல் சிறை­க­ளி­லி­ருந்து முதற்­கட்­ட­மாக விடு­விக்­கப்­பட்ட பலஸ்­தீ­னர்கள், மேற்கு கரை மற்றும் ஜெரூ­சலம் பகு­தி­களைச் சேர்ந்த 69 பெண்கள் மற்றும் 21 பதின்­ப­ருவ ஆண்கள் என்று ஹமாஸ் தெரி­வித்­துள்­ளது.

விடு­விக்­கப்­பட்ட பலஸ்­தீ­னர்­களை வர­வேற்­ப­தற்­காக மேற்கு கரையில் ஞாயிற்­றுக்­கி­ழமை முழு­வதும் மக்கள் காத்துக் கொண்­டி­ருந்­தனர். அதி­காலை 2 மணிக்கு, பலஸ்­தீ­னர்­களை கூட்டி வந்த பேருந்து பெய்­டி­யூ­னியா என்ற நக­ருக்குள் நுழைந்த போது, அங்­கி­ருந்த மக்கள் சந்­தோ­சத்தில் கூச்­ச­லிட்­டனர், தங்கள் கார்­களின் ஹார்ன்­களை சத்­த­மாக ஒலித்து மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­தினர்.

தற்­போது விடு­விக்­கப்­பட்ட பலத்­தீ­னர்கள் அண்மைக் காலங்­களில் கைது செய்யப்பட்டவர்கள் என்றும், வழக்கு நடத்தி குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் அல்லர் என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

இதனிடையே, போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த மறுநாளே காஸாவுக்கு வெளியே ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஜெனின் பகுதியில் நடாத்திய தாக்குதல்களில் 10 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் காஸாவில் போர் நிறுத்­தத்­திற்கு இணங்­கி­னாலும் தற்­போது அதற்கு வெளியே தனது கொலைக்­க­ளத்தை ஆரம்­பித்­துள்ள சர்­வ­தேச விமர்­ச­கர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.