தவறாக புரியப்பட்ட அரபு மத்ரஸாக்கள் விவகாரம்!

0 77

கடந்த ஜன­வரி 09ஆம் திகதி வெளி­யான இப் பத்­தியில் “அரபு மத்­ர­ஸாக்கள் க்ளீன் செய்­யப்­ப­டு­வது எப்­போது?” எனும் தலைப்பில் முன்­வைக்­கப்­பட்ட விட­யங்கள் தொடர்பில் சமூக வலைத்­த­ளங்­களில் சிலர் விமர்­ச­னங்­களை முன்­வைத்­தி­ருந்­தனர். இது நாம் கூற வந்த விட­யத்தை இத­ய­சுத்­துடன் விளங்கிக் கொள்ள முற்­ப­டா­ததன் வெளிப்­பா­டே­யாகும்.

அரபு மத்­ர­ஸாக்­க­ளுக்கு எதி­ராக எமது பத்­தி­ரிகை செயற்­ப­டு­வ­தா­கவும் இதன்­போது குற்­றச்­சாட்­டொன்று முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. விடி­வெள்­ளியை தொடர்ச்­சி­யாக வாசிப்­ப­வர்­க­ளுக்கு இது ஒரு முட்­டாள்­த­ன­மான விமர்­சனம் என்­பது நன்கு புரியும்.

எமது நாட்­டி­லுள்ள அரபு மத்­ர­ஸாக்கள் ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்­க­ளாக முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது. இது நியா­ய­மான கோரிக்­கை­யு­மாகும். எனினும், குறிப்­பிட்ட ஒரு சாரார் மாத்­திரம் இந்த ஒழுங்­கு­ப­டுத்தல் எனும் விட­யத்­திற்கு எதிர்ப்பு வெளி­யிட்டு வரு­கின்­றனர்.
இவர்கள் யார் என்­ப­தையும் மக்கள் நன்­க­றி­வார்கள். இவ்­வாறு எதிர்ப்பு வெளி­யி­டு­ப­வர்­க­ளி­னா­லேயே அண்­மையில் வெளி­யான குறித்த பத்­தி­யினை அடிப்­ப­டை­யாக வைத்து விடி­வெள்­ளிக்கு எதி­ராக போலிப் பிர­சா­ரங்­களை முன்­வைத்து வரு­கின்­றனர்.

எமது நாட்டில் தெரு­விற்கு தெரு அரபுக் மத்­ர­ஸாக்கள் தொடர்ச்­சி­யாக ஆரம்­பிக்­கப்­பட்டு வரு­கின்­றன. அரபு மத்­ர­ஸாக்கள் ஒழுங்­கு­ப­டுத்­தப்­ப­டா­மை­யி­னா­லேயே இவ்­வாறு புதிது புதி­தாக முளைக்­கின்­றன. இதனால் பாரிய குள­று­ப­டிகள் சமூ­கத்தில் தோற்றம் பெற்­றுள்­ளன.

எதிர்­கா­லத்தில் அரபு மத்­ர­ஸாக்கள் ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்டால் தெரு­விற்கு தெரு ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள பதிவு செய்­யப்­ப­டாத இந்த அரபு மத்­ர­ஸாக்­களில் பணி­யாற்­று­ப­வர்கள் நிச்­சயம் தொழில் இழக்க நேரிடும். இந்த அச்சம் கார­ண­மா­கவே இவர்கள் அரபு மத்­ர­ஸாக்கள் ஒழுங்­க­ப­டுத்­த­லுக்கு எதிர்ப்பு வெளி­யிட்டு வரு­கின்­றனர்.

கடந்த காலங்­களில் உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் வாழ்­கின்ற முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக இடம்­பெற்ற அநி­யா­யங்­களின் போது விடி­வெள்ளி பத்­தி­ரிகை துணிச்­ச­லாகச் செயற்­பட்­ட­தனை வாச­கர்கள் நன்­க­றிவர்.

ஈஸ்டர் தற்­கொலைத் தாக்­கு­தலை அடுத்து எமது நாட்­டி­லுள்ள அரபு மத்­ர­ஸாக்­க­ளிற்கு எதி­ராக போலிப் பிரச்­சா­ரங்கள் முன்­வைக்­கப்­பட்­டன. அதே போன்று ஹிஜா­புக்கு எதி­ரான பிர­சா­ரங்­களும் மேலெ­ழுந்­தன. இச்­ச­ம­யத்தில் விடி­வெள்ளி பத்­தி­ரிகை சமூ­கத்தின் உரி­மை­க­ளுக்­காக பல்­வேறு அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு மத்­தி­யிலும் துணிச்­ச­லாக செயற்­பட்­ட­தனை ஞாபக மூட்ட விரும்­பு­கிறோம்.

இக்­காலப் பகு­தியில் அரபு மத்­ர­ஸாக்­களை ஒழுங்­கு­ப­டுத்­துவோம் என்ற கோசத்­துடன் தான் கோட்­ட­பாய ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான அர­சாங்­கமும் ஆட்சி பீட­மே­றி­யது. அக்­காலப் பகு­தியில் முஸ்லிம் சமூ­கமும் இதற்கு ஆத­ர­வ­ளித்­தது.

இந்த சந்­தர்ப்­பத்­தினை பயன்­ப­டுத்தி அரபு மத்­ரா­ஸாக்­களை பலப்­ப­டுத்­தலாம் என்ற அடிப்­ப­டை­யி­லேயே இதற்கு ஆத­ர­வ­ளிக்­கப்­பட்­டது. துர­திஷ்­ட­வ­ச­மாக, இந்த விடயம் தேர்தல் பிரச்­சார உத்­தி­யாக காணப்­பட்­டதே தவிர ஆட்­சிக்கு வந்த கோட்­ட­ப­யவின் அர­சாங்­கத்­தினால் எதுவும் செய்­யப்­ப­ட­வில்லை.

இவ்­வா­றான நிலையில் தான் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் நாட்­டி­லுள்ள அரபு மத்­ர­ஸாக்­க­ளுக்­கான பொது­வான பாடத்­திட்­ட­மொன்­றினை தயா­ரிக்கும் பணி முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

நாட்­டி­லுள்ள தலை­சி­றந்த கல்­வி­மான்­களின் பங்­க­ளிப்­புடன் தயா­ரிக்­கப்­பட்ட இந்த பாடத்­திட்­டத்­திற்கு ஒரு தரப்­பினர் மாத்­திரம் தொடர்ச்­சி­யாக எதிர்ப்பு வெளி­யிட்டு வரு­கின்­றனர். இதன் கார­ண­மாக பல்­வேறு சிர­மங்­க­ளுக்கு மத்­தியில் தயா­ரிக்­கப்­பட்ட இந்த பொது­வான பாடத்­திட்டம் இது­வரை பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

இவ்­வா­றான நிலையில், அரபு மத்­ர­ஸாக்கள் தொடர்பில் சிபா­ரி­சு­களை மேற்­கொள்ள கல்வி அமைச்­சினால் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. 1981ஆம் ஆண்டு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஸ்தாபிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்னர் கல்வி அமைச்சில் தான் அரபு மத்­ர­ஸாக்கள் பதி­வு­செய்­யப்­பட்டு வந்­தன என்ற விட­யத்­தினை தற்­போது வட்ஸ்அப் குழு­மங்­களில் குரல் பதி­வினை பகிர்­ப­வர்கள் மறந்­து­விட்­டனர்.

கல்வி அமைச்சின் கீழ் அரபு மத்­ர­ஸாக்கள் பதி­வு­செய்­யப்­பட்டால் அரபு மத்­ர­ஸாக்­க­ளுக்கும் அங்கு கல்வி பயிலும் மாண­வர்­க­ளுக்கும் பல்­வேறு நன்­மைகள் கிடைக்கும் என்­பதில் மாற்றுக் கருத்­தில்லை.

நாட்­டி­லுள்ள பிரி­வே­னாக்கள் அனைத்தும் கல்வி அமைச்சின் கீழ் பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளன. இதனால் குறித்த பிரி­வே­னாக்கள் தற்­போது பல்­வேறு நன்­மை­களை அடைந்து வரு­கின்­றன.

அர­சாங்­கத்­தினால் தற்­போது அமுல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்ற பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு பாத­ணிகள் கொள்­வ­னவு செய்­வ­தற்­காக 3,000 ரூபா பெறு­ம­தி­யான வவுச்சர் வழங்கும் திட்­டத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை­யான காலப் பகு­தியில் பிரி­வே­னாக்­க­ளி­லுள்ள பௌத்த துற­வி­க­ளான மாண­வர்­களும் உள்­வாங்­கப்­பட்­டனர்.

மீண்டும் இந்த வருடம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள இந்த செயற்­திட்­டத்தின் கீழ் பௌத்த துறவி மாண­வர்­களும் பாதணி கொள்­வ­ன­விற்கு வவுச்சர் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. இவர்­களின் பிரி­வே­னாக்கள் கல்வி அமைச்சின் கீழ் பதி­வு­செய்­யப்­பட்­ட­மையே இதற்கான காரணமாகும்.

இது போன்று எமது அரபு மத்ரஸாக்களையும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களித்தின் பங்களிப்புடன் கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவந்தால் இது போன்று பல்வேறு நன்மைகள், நிதி்ஒதுக்கீடுகள் எமது மாணவர்களுக்கும் கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
அத்துடன் அரபு மத்ரஸாக்களினால் வழங்கப்படுகின்ற சான்றிதழ்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அங்கீகாரம் கிடைக்கும். இதனால்தான், எமது நாட்டிலுள்ள அரபு மத்ரஸாக்களை ஒழுங்குபடுத்தி கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்காக நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.