கிழக்கில் தொடர்ச்சியாக கனமழை மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்பு

டி.எஸ்.சேனநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் திறப்பு தாழ் பிரதேசங்கள் வெள்ளத்தில்; நெற்பயிர் செய்கை பாதிப்பு

0 62

எம்.ஏ.றமீஸ்

கிழக்கு மாகா­ணத்தில் தொடர்ச்­சி­யாக நிலவி வரும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக மக்­களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த சில தினங்­க­ளாக பெய்து வந்த கன­மழை இம்­மா­கா­ணத்தில் சற்று குறை­வ­டைந்­தி­ருந்த போதிலும் நேற்று அதி­காலை முதல் மீண்டும் மழை­யு­ட­னான கால­நிலை நிலவி வரு­கின்­றது. சீரற்ற கால­நிலை கார­ண­மாக கிழக்கு மாகா­ணத்தில் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் ஆயி­ரக்­க­ணக்­கானோர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அம்­பாறை மாவட்­டத்தின் பிர­தான நீர்த்­த­தேக்­க­மான டி.எஸ்.சேன­நா­யக்க சமுத்­திரம் 110 அடி­யினைக் கொள்­ள­வாக கொண்­டுள்ள போதிலும் நேற்று மாலை 4 மணி­ய­ளவில் அம்­பாறை டி.எஸ்.சேன­நா­யக்க சமுத்­தி­ரத்தின் வான் கத­வுகள் மூல­மாக மூன்­றரை அடி தண்ணீர் திறக்­கப்­பட்டு விநாடி ஒன்­றுக்கு 3335 கன அடி நீர் அப்­புறப்படுத்­தப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் அம்­பாறை மாவட்ட பிரதிப் பணிப்­பாளர் எம்.ஏ.சீ.எம்.றியாஸ் தெரி­வித்தார்.

இதன்­கா­ர­ண­மாக அம்­பாறை மாவட்­டத்தின் தாழ்­நிலப் பிர­தே­சங்கள் நீரில் மூழ்கிக் காணப்­ப­டு­வ­துடன், இம்­மா­வட்­டத்தின் தாழ்­நிலப் பகு­தி­களில் வசித்து வரு­ப­வர்கள் வெள்ள நீர் உட்­பு­கு­வதை மிகுந்த அவ­தா­னத்­துடன் கண்­கா­ணித்து செயற்­ப­டு­மாறு வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இம்­மா­வட்­டத்தில் செய்கை பண்­ணப்­பட்ட சுமார் மூவாயிரம் ஏக்கர் நெற் செய்கை பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இவற்றுள் ஒலுவில் வீர­யடி விவ­சாயப் பிரிவில் செய்கை பண்­ணப்­பட்ட சுமார் நான்­கா­யிரம் ஏக்கர் நெற் காணி­களில் சுமார் ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட ஏக்கர் விவ­சாயச் செய்கை முற்­றாக நீரில் மூழ்­கி­யுள்­ள­தாக நீர்ப்­பா­சன திணைக்­க­ளத்தின் அதி­காரி ஒருவர் தெரித்தார்.

கடந்த சில வாரங்­க­ளுக்கு முன்னர் ஏற்­பட்ட வெள்ளப் பெருக்கின் மூலம் ஒலுவில் அஷ்ரஃப் நகர் பிர­தான கொங்றீட் பாதை உடைப் பெடுத்­தது. இவ்­வாறு உடைப் பெடுத்த பாதைக்கு அருகில் தற்­கா­லி­க­மாக கிறவல் பாதை­யொன்றும் அண்­மையில் அமைக்­கப்­பட்­டது. இவ்­வாறு அமைக்­கப்­பட்ட தற்­கா­லிக பாதையம் தற்­போது உடைப் பெடுத்­துள்­ள­துடன் அப்­பாதை முற்­றாக நீரில் மூழ்­கி­யு­முள்­ளன. இது­த­விர, களி­யோடை ஆற்றின் அணைக்­கட்டுப் பகுதி உடைப் பெடுத்­துள்­ள­மையால் ஒலுவில் வீர­யடிப் பிரிவு விவ­சாய நிலங்கள் தற்­போது நீரில் மூழ்­கி­யுள்­ளன.

இதே­வேளை, ஒலுவில் வீர­யடிப் பகு­தியில் அமையப் பெற்­றுள்ள நீர் நிலையின் பிர­தான 12 வான்­க­த­வு­களும் திறக்­கப்­பட்டு களி­யோடை ஆற்றின் மூலம் அந்நீர் கட­லுக்கு அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. இதனால் களி­யோடை ஆற்­றினை அண்­டிய விவ­சாயச் செய்­கைகள் நீரில் மூழ்­கி­யுள்­ள­துடன், களி­யோடை பாலத்தின் கீழ்ப் பகு­தியின் நீர்­மட்டம் வெகு­வாக உயர்­வ­டைந்தும் காணப்­ப­டு­கின்­றது.

அம்­பாறை மாவட்­டத்தில் கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் ஆயி­ரக்­க­ணக்­கானோர் பாதிக்­கப்­பட்டும் சில குடும்­பத்­த­வர்கள் நலன்­புரி நிலை­யங்­க­ளிலும், சிலர் உற­வி­னர்­களின் இல்­லங்­க­ளிலும் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்த போதிலும், கடந்த ஒரு சில தினங்கள் கால­நிலை சீர­டைந்து காணப்­பட்­ட­மையால் பாதிக்­கப்­பட்ட பொது­மக்கள் தமது சொந்த இடங்­க­ளுக்கு திரும்பி இயல்பு வாழ்க்­கை­யினை தொடர்­கின்­றனர்.

இருந்த போதிலும் அம்­பாறை மாவட்­டத்தின் சம்­மாந்­துறை, மகா­ஓயா மற்றும் தமண ஆகிய பிர­தே­சங்­களைச் சேர்ந்த 88 குடும்­பங்­களைச் சேர்ந்த 269 பேர் தற்­போது பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், இம்­மா­வட்­டத்தில் ஆறு வீடுகள் பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

கடந்த சில வாரங்­க­ளுக்கு முன்னர் ஏற்­பட்ட வெள்ள அனர்த்த வேளையில் அம்­பாறை மாவட்­டத்தின் மாவ­டிப்­பள்ளி பிர­தான வீதியில் நிகழ்ந்த உழவு இயந்­திரம் குடை­சாய்வில் மத்­ரஷா மாண­வர்கள் சிலரும் உழவு இயந்­திர சார­தியும் உயி­ரி­ழந்­த­மையால், தற்­போது நிலவி வரும் சீரற்ற கால­நி­லையில் உயி­ரி­ழப்­புகள் மற்றும் ஏனைய அசம்­பா­வி­தங்­களைத் தவிர்க்கும் பொருட்டு மாவட்ட அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலைய உத்­தி­யோ­கத்­தர்­களும், பிர­தேச செய­லா­ளர்கள் உள்­ளிட்ட துறை­சார்ந்­தோரும் மிகுந்த அவ­தா­னிப்­புடன் செயற்­ப­டு­வ­தனை காண முடி­கி­றது.

கடந்த இரண்டு நாட்­க­ளாக கிட்­டங்கி தாம்­போ­தியில் வெள்ளம் பாய்­வ­துடன் கல்­முனை சேனைக்­கு­டி­யி­ருப்பு நாவி­தன்­வெளி சவ­ளக்­கடை பிர­தே­சங்­களை தரை வழி­யாக இணைக்­கின்ற கிட்­டங்கி பாலா­மா­னது அதி­க­ரித்த ஆற்றின் நீர்­மட்டம் கார­ண­மாக இரா­ணுவம் பொலிஸார் நாவி­தன்­வெளி பிர­தேச செய­லகம் பிர­தேச சபை அனர்த்த முகா­மைத்­துவ குழு­வினர் போன்றோர் மிகுந்த அவ­தா­னத்­துடன் இப்­ப­குதி போக்­கு­ர­வத்­தினை கண்­கா­ணித்து வரு­கின்­றனர்.

இதே­வேளை, இம்­மா­வட்­டத்தில் பல்­வேறு பாதை­களைக் குறுக்­கிட்டு வெள்ள நீர் பரவிச் சென்­ற­மையால் அவற்றுள் சில வீதி­களின் போக்­கு­வ­ரத்­து­களும் முற்­றாக தடைப்பட்­டி­ருந்­தன. குறிப்­பாக தடைப்­பட்­டி­ருந்த அம்­பா­றை -­கண்டி பிர­தான வீதியின் போக்­கு­வ­ரத்து தற்­போது வழ­மைக்கு திரும்­பி­யுள்­ள­தா­கவும், தமண பிர­தேச செயலப் பிரிவில் போக்­கு­வ­ரத்­துக்­கென தடைப் பட்­டி­ருந்த பாத­கொட பிர­தான வீதியும், இறக்­காமம் பிர­தேச செய­லகப் பிரிவின் கீழுள்ள நெய்­னா­காடு குடுவில் பிர­தேச பிர­தான பாதையும் தற்­போது போக்­கு­வ­ரத்­திற்­காக திறக்­கப்­பட்­ட­தா­கவும் அட்­டா­ளைச்­சேனை அஷ்ரஃப் நகர் பிர­தான பாதை மாத்­தி­ரமே போக்­கு­வ­ரத்­துக்­காக பயன்­ப­டுத்த முடி­யாமல் தற்­போது மூடப்­பட்­டுள்­ள­தா­கவும் மாவட்ட பிரதிப் பணிப்­பாளர் மேலும் தெரி­வித்தார்.

இதே­வேளை, மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் பெய்து வந்த கன மழை காரண­மாக தாழ்­நிலப் பகு­திகள் நீரில் மூழ்­கி­யுள்­ள­தா­கவும், கனத்த மழை கார­ண­மாக அறு­வ­டைக்கு தயா­ராக இருந்த பல்­லா­யிரம் ஏக்கர் நெல் வயல்கள் நீரில் மூழ்­கி­யுள்­ளன.

இதே­வேளை, மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் உள்ள 12 பிர­தேச செய­லகப் பிரி­வு­களில் 3737 குடும்­பங்­களைச் சேர்ந்த 11971 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தோடு, ஏறாவூர்ப் பற்று மற்றும் கோறளைப் பற்று ஆகிய பிர­தேச செய­லகப் பிரி­வு­களில் அதி­க­மானோர் பாதிக்­கப்­பட்­ட­தா­கவும், இம்­மா­வட்­டத்தில் 17 வீடுகள் பகு­தி­ய­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட உதவிப் பணிப்­பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் தெரி­வித்தார்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் உற­வி­னர்கள் இல்­லங்­களில் 3037 குடும்­பங்­களைச் சேர்ந்த 10031 பேர் தங்க வைக்­கப்­பட்­ட­தா­கவும், பாது­காப்­பான இடங்­களில் 334 குடும்­பங்­களைச் சேர்ந்த 921 பேர் தங்க வைக்­கப்­பட்­ட­தா­கவும் மட்­டக்­க­ளப்பு மாவட்ட அனர்த்த முகா­மைத்­துவ உதவிப் பணிப்­பாளர் மேலும் தெரி­வித்தார்.
மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் பெய்து வரும் கன­மழை கார­ண­மாக மாவட்­டத்தில் அறு­வ­டைக்குத் தயா­ராக இருந்த ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்கர் நெற் செய்கை வெள்ள நீரில் மூழ்­கி­யுள்­ள­தாக விவ­சா­யிகள் தெரி­விக்­கின்­றனர்.
இம்­மா­வட்­டத்­தி­லுள்ள 16 விவ­சாய போத­னா­சி­ரியர் பிரி­வு­க­ளிலும் செய்கை பண்­ணப்­பட்ட பெரும் போக நெற் செய்கை வயல் நிலங்கள் நீரில் மூழ்கி காட்சி தரு­கின்­றன. இம்­முறை 1 லட்­சத்து 90 ஆயிரம் ஏக்கர் நிலப்­ப­ரப்பில் இம்­மா­வட்­டத்தில் பெரும்­போகை நெற்­செய்கை செய்கை பண்­ணப்­பட்­ட­தாக மட்­டக்­க­ளப்பு மாவட்ட கம­நல அபி­வி­ருத்தி திணைக்­கள பணிப்­பாளர் எஸ். ஜெக­நாதன் தெரி­வித்தார்.

மட்­டக்­க­ளப்பில் கடந்த பத்து தினங்­க­ளுக்கு முன்னர் அறு­வ­டைக்குத் தயா­ராக இருந்த நெற்­செய்­கை­யினை அறு­வடை செய்­யாமல் விவ­சாய கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்ட திக­தியில் தான் அதனை அறு­வடை செய்ய வேண்டும் என சிலர் விவ­சாய அமைப்­பு என்ற பெயரில் மனித உரிமை ஆணைக்­கு­ழு­வுக்கு சென்று தடுத்­துள்­ளனர்.

இதனால் தற்­போது பெய்து வரும் மழை வெள்­ளத்தால் ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்கர் நெற் செய்கை நீரில் மூழ்­கி­யுள்­ளது. அறு­வ­டையை தடை செய்­த­வர்­களே இந்த நஷ்­டத்தை தர வேண்டும் என பாதிக்­கப்­பட்ட விவ­சா­யிகள் விசனம் தெரி­விக்­கின்­றனர்

வெலி­கந்தை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட முத்­துக்கல் எனும் பகு­தியில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை(19) இரவு வெள்­ள­நீரில் அடித்துச் செல்­லப்­பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

வாழைச்­சேனை பிறைந்­து­றைச்­சேனை பகு­தியில் வசித்த 37 வய­து­டைய றிஸ்வான் எனும் நபரே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்ளார். தனது மனைவி மற்றும் உற­வி­ன­ருடன் குறித்த நபர் கரப்­பொல–-முத்­துக்கல் வழி­யாக சேன­புர பகு­திக்குச் செல்­லும்­போது மூவரும் வெள்­ள­நீரில் அடித்துச் செல்­லப்­பட்­டனர்.
நீரில் அடித்துச் செல்­லப்­பட்ட நிலையில் இளம் குடும்­பஸ்தர் சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்­ள­துடன், அவ­ரது மனைவி மற்றும் மற்­றைய நபர் மரக்­கி­ளை­யினைப் பிடித்து உயிர் தப்­பி­யுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

மட்­டக்­க­ளப்பில் சீரற்ற கால நிலை கார­ண­மாக மாவட்­ட­தி­லுள்ள குளங்கள் அனைத்தும் நீர் நிரம்­பிய நிலையில் வான்­க­த­வுகள் திறக்­கப்­பட்­டுள்­ள­துடன் இவற்றுள் குறிப்­பாக உன்­னிச்சை, நவ­கிரி உள்­ளிட்ட குளங்­களின் வான் கத­வுகள் திறக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அந்தப் பகு­தி­யி­லுள்ள பெரும்­பா­லான விவ­சாயச் செய்­கைகள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரிய வரு­கி­றது.
தொடர் மழை­யினால் மாவட்­டத்­தி­லுள்ள நவ­கி­ரி­குளம், புனாணை அனைக்­கட்டு, வட­மு­னைக்­குளம், வெலி­யா­கண்­டிய குளம், றூகம்­குளம். வாக­னே­ரி­குளம், கட்­டு­மு­றி­வுக்­குளம், போன்ற குளங்­களில் நீர் மட்டம் அதி­க­ரித்­த­தை­ய­டுத்து அந்­தந்தக் குளங்­களின் தேவைக்கு ஏற்­ற­வாறு வான்­க­த­வுகள் திறக்­கப்­பட்­டுள்­ளன.

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் நிலவும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக சேரு­வல மற்றும் வெருகல் ஆகிய பிர­தேச செய­லகப் பிரி­வு­களில் 51 குடும்பங்களைச் சேர்ந்த 144 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்களின் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கே.சுகணதாஸ் தெரிவித்தார்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக மகாவலி கங்கையின் திம்புலாகலை, ஈச்சிலம்பற்று. ஹிங்குராக்கொட, கந்தளாய், கிண்ணியா, கோரளைப்பற்று வடக்கு, லங்காபுர, மெதிரிகிரிய, மூதூர், சேருவில, தமங்கடுவ, தம்பலகாமம் மற்றும் வெலிகந்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளிலும் வசித்து வரும் மக்களுக்கு அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கந்தளாய் நீர்த் தேக்கத் திற்குள் சென்றடையும் கட்டுப் படுத்தும் வகையில் இக்குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டு விநாடிக்கு 1200 கனஅடி நீர் வெளியேற்றபட்டு வருவதாக கந்தளாய் பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் சிந்தக சுரவீர தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.