பாடசாலை மாணவி கடத்தல் விவகாரம்: தவுலகல பொலிஸ் நிலைய‌ பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தம்;இருவருக்கு இட‌மாற்றம்

0 54

(எப்.அய்னா)
தவு­ல­கல பொலிஸ் நிலை­யத்தின் பதில் பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரி­யாக கட­மை­யாற்­றிய பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் சம்பத் ரண­சிங்க பணி இடை­நி­றுத்தம் செய்­யப்­பட்­டுள்ளார்.

கண்டி, தவு­ல­கல பொலிஸ் பிரிவில், மேல­திக வகுப்­புக்­காக சென்­று­கொண்­டி­ருந்­த­போது கடத்­தப்­பட்ட பாட­சாலை மாணவி விவ­கா­ரத்தில், உட­ன­டி­யாக செயற்­பட்டு நட­வ­டிக்கை எடுக்கத் தவ­றி­யமை தொடர்பில், பொலிஸ் கட­மை­களை நிறை­வேற்­றாமை தொடர்பில் அவரை இவ்­வாறு பணி இடை நிறுத்தம் செய்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­லகம் தெரி­வித்­தது.

மத்­திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பரும் பொலிஸ் நிர்­வாக சேவைக்கு பொறுப்­பா­ள­ரு­மான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்­தி­நா­யக்­கவின் கீழ் இடம்­பெறும் விசா­ர­ணைக்கு அமைய அவர் இவ்­வாறு பணி இடை நிறுத்தம் செய்­யப்­பட்­டுள்ளார்.

இத­னை­விட, தவு­ல­கல பொலிஸ் நிலை­யத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் பொறுப்­பா­ள­ராக செயற்­பட்ட பிர­தான பெண் பொலிஸ் பரி­சோ­த­கரும், அப்­பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் விசா­ரணைப் பிரிவில் கட­மை­யாற்­றிய உப பொலிஸ் பரி­சோ­தகர் ஒரு­வரும் உடன் அமு­லுக்கு வரும் வகையில் அப்­பொலிஸ் நிலை­யத்தில் இருந்து இட­மாற்­றப்­பட்­டுள்­ளனர்.

முதலில் அவ்­வி­ரு­வரும் கடு­கண்­ணாவ பொலிஸ் நிலை­யத்­துக்கு இட­மாற்­றப்­பட்­ட­துடன் பின்னர் அவர்கள் அங்­கி­ருந்து வெலம்­பொட பொலிஸ் நிலை­யத்­துக்கு இட­மாற்­றப்­பட்­டுள்­ள­தாக மத்­திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலு­வ­ல­கத்தின் உய­ர­தி­காரி ஒருவர் கூறினார்.

கடத்­தப்­பட்ட பாட­சாலை மாணவி ஆபத்­தின்றி பொலி­ஸாரால் மீட்­கப்­பட்ட நிலையில், கடத்­தலின் பிர­தான சந்­தேக நப­ரையும் அவ­ரது நண்பர் மற்றும் வேன் சார­தியை எதிர்­வரும் 27 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க கம்­பளை நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது. வேன் சாரதி கடந்த 14 ஆம் திகதி நீதி­மன்றில் ஆஜர்­செய்­யப்­பட்­ட­துடன் தடுப்புக் காவலின் கீழ் விசா­ரிக்­கப்­பட்ட பிர­தான சந்­தேக நபர் மற்றும் அவ­ரது நண்பர் ஆகியோர் கடந்த 15 ஆம் திகதி நீதி­மன்றில் ஆஜர்­செய்­யப்­பட்­டனர். இதன்­போதே கம்­பளை நீதிவான் காஞ்­சனா கொடித்­து­வக்கு இவர்­களை 27 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்­டி­ருந்தார்.

கடத்­தலின் போது வேனின் சார­தி­யாக செயற்­பட்ட கம்­பளை, கஹட்­ட­பிட்­டிய பகு­தியைச் சேர்ந்த மொஹம்மட் அன்வர் சதாம், பிர­தான சந்­தேக நப­ரான மொஹம்மட் நாசிர், அவ­ரது நண்பர் ஆகி­யோரே இவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

பாட­சாலை மாணவி ஒரு­வரை கறுப்பு நிற வேனில் வந்த சிலர் கடந்த 12 ஆம் திகதி பலாத்­கா­ர­மாக கடத்திச் சென்ற விவ­காரம் தொடர்பில் விரி­வான விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன‌. அதன்­படி, கடத்­தலின் பிர­தான சந்­தேக நபர், மாண­வியின் உற­வினர் என அடை­யாளம் காணப்­பட்ட நிலையில், அவர் கடத்­தப்­பட்ட தினம் மாலை முதல் மாண­வியின் தந்­தைக்கு தொலை­பேசி அழைப்­புக்­களை எடுத்­தி­ருந்­த­தாக பொலிஸார் கூறினர். அத்­துடன் மாண­வியும் தனது தந்­தை­யுடன் தொலை­பே­சியில் பேசி தன்னை காப்­பாற்­று­மாறு கோரி­யுள்­ள­தாக பொலிஸார் கூறினர்.

இந்த நிலையில் ஏற்­க­னவே, 12 ஆம் திகதி முதலில் கைது செய்­யப்­பட்ட வேனின் சார­தி­யிடம் தடுப்புக் காவல் விசா­ர­ணையின் போது பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட தக­வல்கள் மற்றும் தொலை­பேசி கோபுரத் தக­வல்கள், சந்­தேக நபர் பயன்­ப­டுத்­திய தொலை­பே­சியின் இமி இலக்­கத்தை மைய­ப்­படுத்­திய விசா­ர­ணை­களில், பிர­தான சந்­தேக நபர், அம்­பாறை பகு­தியில் தங்­கி­யி­ருப்­பதை பொலிஸார் கண்­ட­றிந்­தனர்.

இந் நிலை­யி­லேயே அம்­பாறை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிக்கு இது குறித்த தக­வல்கள் பறி­மாற்­றப்­பட்ட நிலையில், அந்த தக­வல்­களை மையப்­ப‌­டுத்தி, 13 ஆம் திகதி காலை, அம்பாறை பஸ் தரிப்பு நிலையத்தில் வைத்து மாணவியை மீட்டு, பிரதான சந்தேக நபரைக் கைது செய்ததாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் புத்திக மனதுங்க குறிப்பிட்டார்.
இந்த நிலையிலேயே இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக செயற்பட தவுலகல பொலிஸார் தவறியதாக கூறி பிரத்தியேக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.