உள்ளூராட்சி தேர்தலில் மு.கா. தனித்து போட்டி

சின்னம் தொடர்பில் தீர்மானம் இல்லை என்கிறார் ஹக்கீம்

0 54

(எஸ்.என்.எம்.சுஹைல்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் தனித்து போட்­டி­யி­ட­வுள்­ள­தாக அக் கட்­சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். மேல் மற்றும் மத்­திய மாகாண கட்­சியின் மத்­திய குழுவும் தனித்து போட்­டி­யி­டவே விரும்பம் தெரி­வித்­துள்­ளன. எனினும், எந்த சின்­னத்தில் போட்­டி­யி­டு­வது குறித்து தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வில்லை என்றும் அவர் மேலும் தெரி­வித்தார்.

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் நடத்­தப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற நிலையில் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் கட்­சியின் நிலைப்­பாடு குறித்து விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

மேலும் தெரி­விக்­கையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி தேர்­த­லின்­போது வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் தனித்து போட்­டி­யி­ட­வுள்­ளது. அத்­தோடு, மத்­திய மாகா­ணத்­திலும் மேல் மாகா­ணத்­திலும் அண்மையில் இடம்­பெற்ற மத்­திய குழு கூட்­டத்­தின்­போது தனித்து போட்­டி­யி­டு­வ­தற்கு விருப்பம் தெரி­விக்­கப்­பட்­டது. ஏனைய பகு­தி­க­ளிலும் மத்­திய குழு கூட்­டத்தில் எடுக்­கப்­படும் தீர்­மா­னத்­திற்கு அமை­வாக முஸ்லிம் காங்­கிரஸ் உள்­ளூ­ராட்சி தேர்­த­லுக்கு முகம் கொடுக்கும்.

எது எவ்­வா­றா­யினும் உள்­ளூ­ராட்சி தேர்­தலில் தனித்து மரச் சின்­னத்தில் போட்­டி­யி­டு­வதா அல்­லது வேறு சின்­னங்­களில் போட்­டி­யி­டு­வதா என்­பது குறித்த தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வில்லை. இது இறுதி நேரத்தில் உயர்­பீ­டத்தின் தீர்­மா­னத்­திற்கு அமை­வாக எடுக்­கப்­படும்.

அத்­துடன், கூட்­டணிக் கட்­சிகள் ஆட்­சியை கைப்­பற்­று­வ­தற்கு வியூகமமைத்து சரியான ஆசன பங்கீடுகள் குறித்த இணக்கப்பாடுகள் ஏற்படுமிடத்து நாம் சில நெகிழ்வுப் போக்குடன் செயற்படவும் தயாராக இருக்கிறோம் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.