முஸ்லிம் தனியார் மற்றும் வக்பு சட்டங்கள் திருத்தங்களுக்கான சில ஆலோசனைகள்

0 103

சட்டத்தரணி
ஏ.எல்.எம். அன்வர் குருணாகல்.

இலங்கை முஸ்­லிம்கள் தமது நீண்ட கால வர­லாற்றில் அவர்­க­ளு­டைய நடை, உடை, மதம் சம்­பந்­த­மாக பல வித­மான விமர்­ச­னங்­க­ளுக்கு ஆளாக வேண்­டிய ஒரு கால­கட்­டத்தில் இருந்து கொண்­டி­ருக்­கி­றார்கள்.

போர்த்­துக்­கேயர் கி.பி.1505 இல் இலங்­கைக்கு வந்த கால­கட்­டத்தில் கூட, கொழும்பில் அச்­ச­மயம் வாழ்ந்த முஸ்­லிம்கள் அவர்­க­ளு­டைய விவ­கா­ரங்­களில் அவர்­க­ளு­டைய தனிப்­பட்ட சட்­டமே அமுல்­ப­டுத்­தப்­பட்­ட­தாக சரித்­திரக் குறிப்­புகள் கூறு­கின்­றன. அதேபோல் அவர்­களின் பின்­வந்த டச்­சுக்­கா­ரர்கள் மற்றும் ஆங்­கி­லே­யரும் முஸ்­லிம்­களின் தனிப்­பட்ட சட்­டங்­களை அங்­கீ­க­ரித்து அவை தழு­விய சட்­டங்­களை இயற்றி முஸ்­லிம்­களின் தனித்­து­வத்தை கௌர­வித்­தனர்.

இக்­கா­லத்­துக்குப் பின் வந்த, சமூக நலனை கருத்திற் கொண்டு கரு­ம­மாற்­றிய எமது மதிப்­பிற்­கு­ரிய கற்­ற­றிந்த மூதா­தையோர், அக்­கா­லத்தில் நில­விய அர­சியல், நல்­லி­ணக்­கத்­தையும், சமூக புரிந்­து­ணர்­வி­னையும் பயன்­ப­டுத்தி எமக்கு அவ­சி­ய­மான பல சட்­டங்­களை இயற்­றினர்.

இலங்கை சட்­ட­ச­பையில் 1926 மற்றும் 1939 வரு­டங்­களில் தெரிவுக் கமிட்­டிகள் அமைக்­கப்­பட்டு அவற்றின் சிபா­ரி­சு­களின் அடிப்­ப­டையில் 1951 ஆம் வருட 13 ஆம் இலக்க முஸ்லிம் விவாக மற்றும் விவா­க­ரத்து சட்டம் இயற்­றப்­பட்­டது. எனினும் மனிதன் இயற்றும் சட்­டங்­களில் குறை­பா­டுகள் ஏற்­ப­டு­வது இயல்பு என்­ப­தற்­க­மைய 1951 ஆம் வருடம் இயற்­றப்­பட்ட மேற்­கண்ட விவாக, விவா­க­ரத்து சட்­டத்தை திருத்தி அமைக்­கப்­பட வேண்டும் என பல கோணங்­களில் இருந்தும் வேண்­டுகோள் வந்­ததன் பெயரில் 1956, 1972 மற்றும் 1990 ஆம் வரு­டங்­களில் பல கமிட்­டிகள் அமைக்­கப்­பட்டு ஆரா­யப்­பட்­டன. எனினும் இவற்றின் சிபா­ரி­சுகள் எதையும் இது கால வரை உள்­வாங்­கப்­பட்டு சட்ட திருத்­தங்கள் செய்­யப்­ப­ட­வில்லை என்­பது ஈண்டு கவ­னிக்­கத்­தக்­கது.

நாம் வாழு­கின்ற இந்த நாடு பல்­லின, பல மத சமூ­கத்­த­வர்­க­ளுடன் நாம் சிறு­பான்­மை­யோ­ராக வாழ்­கின்­ற­வர்கள் என்ற அடிப்­ப­டையில் எமது மார்க்கம், நடை, உடை, பண்­பா­டுகள் சம்­பந்­த­மா­கவும் அவை தொடர்­பா­கவும் மற்ற சமூ­கத்­த­வர்­க­ளி­டையே பல சந்­தே­கங்கள் ஏற்­ப­டு­வது இயல்பு. இப்­ப­டிப்­பட்ட சந்­தே­கங்­க­ளையும் சில பார­தூ­ர­மான தப்­ப­பிப்­பி­ரா­யங்­க­ளையும் நாம் கவ­னத்தில் கொண்டு அவற்றை நிவர்த்தி செய்ய நட­வ­டிக்கை எடுக்­காமல் விட்­டதன் விப­ரீத விளை­வு­களை நாம் எதிர்­கொள்ள வேண்டி வந்­தது கவ­லைக்­கு­ரியதாகும்.

அவர்­க­ளு­டைய மொழி­யி­லேயே நாம் அவர்­க­ளுக்கு எழுத்து, ஒலிப­ரப்பு மற்றும் தொலைக்­காட்­சிகள் மூலம் எமது மார்க்­கத்தின் சரி­யான நிலைப்­பாட்­டையும், அதன் சிறப்­பையும் தெளிவுபடுத்த வேண்டும். இப்­ப­டிப்­பட்ட முயற்­சி­களில் நாம் பல தசாப்­தங்­க­ளாக பின்­ன­டைந்து தோல்­வி­ய­டைந்­துள்­ள­தைக் கருத்திற் கொண்டு இதனை நிவர்த்தி செய்யும் முக­மாக இதற்­கு­ரிய அடித்­த­ளங்­களை அமைத்து அதற்­கான தகுதி உள்­ள­வர்­களை உரு­வாக்க வேண்­டி­யது எமது அவ­சரத் தேவை­யாகும்.

பல தசாப்­தங்­க­ளாக நிலு­வையில் உள்ள 1951 ஆம் வருட முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்ட திருத்­தத்­துக்­காக 2009 ஆம் வரு­டத்தில் ஒரு கமிட்டி நிய­மிக்­கப்­பட்டு பல வருட தாம­தத்தின் பின்னர் 2017 ஆம் வரு­டத்தில் இந்த கமிட்­டியின் தக­வு­ரைகள் அர­சாங்­கத்­திற்குச் சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

சிறந்த புத்தி ஜீவி­களும், கற்­ற­றிந்த உல­மாக்­களும் உள்­ள­டங்­கிய இந்தக் க­மிட்டி சில அடிப்­படைக் கார­ணங்­களில் ஒன்­று­ப­டாமல் இரு வேறு அறிக்­கை­களை அர­சாங்­கத்­திற்கு சமர்ப்­பித்­த­தனால் அந்த சந்­தர்ப்­பத்தில் உரிய சட்ட திருத்­தங்­களை மேற்­கொள்ள முடி­யாமல் போனது பெரும் கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

எத்­த­கைய வேறு­பட்ட கருத்­துக்கள் இருந்­தாலும் எல்லா சந்­தர்ப்­பங்­க­ளிலும் எமக்கு ஒற்­று­மை­யாக ஒரு பொது முடி­வுக்கு வரு­வ­தற்கு குர்ஆன், ஹதீஸ் மற்றும் இமாம்­களின் வழி­காட்­டல்கள் இருப்­பது எமக்கு ஒரு வரப்­பி­ர­சா­த­மாகும்.

எமது சமூ­கத்தை மிகவும் பார­தூ­ர­மான முறையில் பாதிக்கும் இத்­த­கைய ஒரு காரி­யத்தில் மிக மிக அவ­தா­ன­மாக நாம் நடந்து கொள்­வது அவ­சி­ய­மாகும்.
“சகல காரி­யங்­க­ளிலும் அவர்­க­ளுடன் கலந்­தா­லோ­சிப்­பீ­ராக நீர் முடிவு செய்து விட்டால் அல்­லாஹ்­வையே முற்­றிலும் சார்ந்து இருப்­பீ­ராக” (3:159)
“நீங்கள் அனை­வரும் ஒன்று சேர்ந்து அல்­லாஹ்வின் (வேத­மா­கிய) கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்­ளுங்கள். உங்­க­ளுக்குள் கருத்து வேறு­பட்டு நீங்கள் பிரிந்து விடா­தீர்கள்.” (3:103)
“மக்­க­ளி­டையே ஒற்­று­மையை ஏற்­ப­டுத்­து­வது அனைத்­திலும் சிறந்­தது. ஏனெனில், ஒற்­று­மை­யின்றி இருப்­பது தீனை (மார்க்­கத்தை) சிரைத்து விடக் கூடி­யது. (திர்­மிதி)

ஆகவே, புரை­யோடிப் போயுள்ள இந்தப் பிரச்­ச­ினைக்கு சம்­பந்­தப்­பட்டோர் சமூ­கத்தின் பொது நலனைக் கருத்திற் கொண்டு வெகு அவ­ச­ர­மாக”ஷரி­யா­வுக்கு” எந்­த­வி­த­மான குந்­த­கமும் இல்­லாத முறையில் ஒரு முடிவு காண வேண்டும் என்­பதே எல்­லோ­ரதும் எதிர்­பார்ப்­பாகும்.

எமது மூதா­தையோர் எமக்கு இயற்றித் தந்த இன்னும் ஒரு சட்­ட­மா­கிய 1956 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க “முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள் தரும நம்­பிக்கை பொறுப்­புகள் அல்­லது வக்ஃபு சட்டம்” இப்­போது சர்ச்­சைக்­கு­ரிய இன்னும் ஒரு பேசு பொரு­ளாக மாறி­யுள்­ளது.

இந்த சட்­ட­மா­னது இலங்­கையில் உள்ள அனைத்து பள்­ளி­வா­சல்கள் மற்றும் மதஸ்­தா­ப­னங்­களின் நிர்­வாகம் மற்றும் வக்ஃபு சொத்­துக்கள் சம்­பந்­த­மான சட்ட திட்­டங்கள் உட்­பட இன்­னோ­ரன்ன சட்­டங்­களை உள்­ள­டக்­கி­யுள்­ளது.
வக்ஃபு சொத்­துக்கள் என்­பது அல்­லாஹ்­வு­டைய திருப்­பொ­ருத்­தத்தை நாடி, உய­ரிய நோக்­கத்­துடன், சமூக நலன் கருதி, தன்­னலம் பாராது ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­வை­யாகும். இந்த சொத்­துக்கள் அநே­க­மா­னவை மஸ்­ஜி­து­க­ளுக்கு வக்ஃபு செய்­யப்­பட்­ட­வை­யாகும்.

மேற்­கண்ட வக்ஃபு சட்­டத்தின் கீழ் மஸ்­ஜி­து­களை நிர்­வா­கிக்கும் நிர்­வா­கி­களின் அறி­யாத்­தன்மை, பொடு­போக்கு, பார­பட்சம் போன்ற இன்­னோ­ரன்ன கார­ணங்­களால் இப்­போது அநே­க­மான மஸ்­ஜி­து­களில் சண்டை சச்­ச­ர­வுகள் மற்றும் நிர்­வாக சீர்­கே­டுகள் ஏற்­பட்டு நீதி­மன்­றங்­களில் வழக்­காடி வக்ஃபு சத்­துக்கள் சீர­ழிந்து கொண்­டி­ருப்­பதை நாம் இப்­போது கண்­கூ­டாகக் கண்டு கொண்­டி­ருக்­கின்றோம்.

மஸ்ஜித் நிர்­வாகம் என்­பது தக்வா உள்ள அடி­யார்கள் பய­பக்­தி­யுடன் அல்­லாஹ்­வு­டைய திருப்­பொ­ருத்­தத்தை நாடி மேற்­கொள்ளும் ஒரு சிறப்­பு­மிக்க கைங்­க­ரி­ய­மாகும். உண்­மையில் இது அல்­லாஹ்­வு­டைய சொத்­துக்­களை நிர்­வ­கிக்க அவ­னுடன் ஏற்­ப­டுத்திக் கொள்ளும் ஒரு புனி­த­மிக்க உடன்­ப­டிக்­கை­யாகும்.

“அல்­லாஹ்வின் பள்­ளி­வா­சல்­களை நிர்­வாகம் செய்­ப­வர்கள் யாரெனில், அல்­லாஹ்­வின் ­மீதும் இறுதி நாளின் மீதும் நம்­பிக்கை கொண்டு, தொழு­கையைக் கடை­பி­டித்து, ஸகாத்தும் கொடுத்து அல்­லாஹ்வைத் தவிர வேறு எதையும் எவ­ரையும் பயப்­ப­டாமல் இருக்­கி­றார்­களோ அவர்­கள்தாம் அத்­த­கையோர் நேர்­வழி பெற்­ற­வர்­களில் நின்றும் இருக்கப் போது­மா­ன­வர்கள்” (அத்­தன்பா: 18)
மஸ்­ஜித்­களின் புனிதத்தன்மை குறித்து எமக்கு பல­வா­றாக அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. அவற்­றுக்­கு­ரிய கண்­ணியம் பாது­காக்­கப்­பட வேண்டும்.

பிற மதத்­த­வ­ருடன் அன்­னி­யோன்­ய­மா­கவும், இணக்­க­மா­கவும், சகோ­தரத் தன்­மை­யு­டன் ­வாழ வேண்­டி­யது மிகமிக முக்­கி­ய­மாகும். அவர்­களில் பலர் இஸ்­லாத்தைப் பற்றி அறி­வ­தற்­கு ­மி­கவும் ஆவ­லாக இருக்­கின்­றனர். அவர்­களை எமது மஸ்­ஜி­து­க­ளுக்கு வர­வ­ழைத்து எம­து­மார்க்­கத்தை அவர்­க­ளுக்கு அறி­வு­றுத்­து­வது, இப்தார் போன்ற நிகழ்­வுகள் மற்றும் எமது விசே­ட­ வை­பவ நாட்­களில் கலந்து கொள்ளச் செய்­வது மிக வர­வேற்­கத்­தக்­க­தாகும். இதன்­மூ­லம்­ எ­மக்­கி­டையே உள்ள விரி­சலை நீக்கி புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்­தலாம்.

இத்­த­கைய நிகழ்ச்­சி­களை மஸ்­ஜித்­களில் நடத்தும் போது அவற்றை எந்த விதத்­தில் ­ந­டத்த வேண்டும் என்­ப­தற்­கு­ரிய சரி­யான வழி­காட்­டல்­க­ளையும், அறி­வு­றுத்­தல்­க­ளை­யும் ­நிர்­வா­கி­க­ளுக்கு சம்­பந்­தப்­பட்ட கற்­ற­றிந்த எமது மதிப்­பிற்­கு­ரிய உல­மாக்கள் வழங்க வேண்­டி­ய­து­ மிக மிக அவ­சி­ய­மாகும்.
1962 மற்றும் 1982 ஆம் ஆண்­டு­களில் திருத்­தி­ய­மைக்­கப்­பட்ட 1956 ஆம் வருட 51 ஆம் இலக்க வக்ஃப் சட்­டத்தின் 14ஆம் 15 ஆம் பிரி­வு­களின் படி மஸ்ஜித் நிர்­வா­கி­க­ளின்­ நி­ய­மனம் சம்­பந்­த­மாக அறி­வு­றுத்­தல்கள் இடம்­பெற்­றுள்­ளன. -வக்பு சபை, நிய­ம­னங்­களில் நேர­டி­யாக தலை­யீ­டு­வ­தில்லை.

இன்று மஸ்­ஜி­து­களில் ஏற்­பட்­டி­ருக்கும் பல பிரச்­சி­னை­க­ளுக்கு மூல கார­ணம் ­த­கு­தி­யற்­ற­வர்கள் நிர்­வா­கி­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாகும்.

இந்த நிலை மாற வேண்டும். அர­சியல் தலை­யீடு மற்றும் செல்­வாக்­கு­டை­யோ­ரு­டைய சிபா­ரிசு முற்று முழு­தாக இல்­லா­ம­லாக்­கப்­ப­டுதல் வேண்டும். ஒவ்­வொரு விண்­ணப்­ப­தா­ரி­யை­யும் ­த­னித்­த­னி­யாக தீர விசா­ரணை (Interview) செய்து அவர்­க­ளுக்கு நாட்டின் மும்­மொ­ழி­க­ளில்­ ஒரு மொழி­யி­லேனும் நன்கு எழுத வாசிக்க, விளங்க முடி­யு­மாக இருத்தல், மார்க்க சட்­ட­ப­ழக்­க­வ­ழக்­கங்கள் மற்றும் நாட்டின் பொது சட்ட திட்­டங்­களில் சிறி­த­ள­வான அடிப்­படை அறி­வு­ ஆ­கி­ய­வற்றை பரீட்­சித்துப் பார்த்து தகுதி கண்டு நிய­மிக்­கப்­ப­டுதல் வேண்டும்.
மஸ்­ஜி­தி­னு­டைய சட்ட திட்­டங்கள், குர்­ஆ­னிய சட்­ட­திட்­டங்­க­ளுக்கு மாறாக செயல்­பட்­டால் ­ப­தவி இழந்­த­தாகும் என்­ப­தற்­கான ஒரு சத்­தி­யக்­க­ட­தாசி (AFFIDAVIT) விண்­ணப்­ப­தா­ரி­யி­ட­மி­ருந்­து­பெற வேண்டும்.

நாட்டில் தற்­போது அமுலில் இருக்கும் வக்பு சட்­டத்தில் கீழ்­காணும் திருத்­தங்­க­ளை­யும் ­மாற்­றங்­க­ளையும் ஏற்­ப­டுத்­து­வது தற்­போ­துள்ள பிரச்­சி­னை­களைத் தீர்க்க உத­வலாம்.
1. நாட்டில் உள்ள எல்லா மஸ்­ஜி­து­க­ளுக்­கு­மான ஒரே சீரான சட்­ட­யாப்பு. (CONSTITUTION)
a. இதில் அந்­தந்த ஊருக்­கான தகு­தி­யுள்ள நாட்டின் சட்ட திட்­டங்­க­ளுக்கு முர­ணில்­லாத மர­புகள், பழக்க வழக்­கங்கள், வழக்­கா­றுகள் உள்­வாங்­கப்­ப­டலாம்.
b. இந்த சட்­ட­யாப்பு வக்பு சபையில் கட்­டா­ய­மாக பதிவு செய்­யப்­ப­டுதல் வேண்டும்.
2. மஸ்­ஜி­து­களின் ஆவ­ணங்கள் (INVENTORY) உரிய முறையில் பாது­காக்­கப்­ப­டுதல் வேண்டும் இவற்றை கணினி மயப்­ப­டுத்­து­வ­தற்கு ஆவ­ணங்கள் கணினி மயப்­ப­டுத்தும் அரசு நிறு­வ­னத்தின் உத­வியைப் பெற்று அட்­ட­வ­ணைப்­ப­டுத்­தலாம்.
3. நாட்­டி­லுள்ள மஸ்­ஜி­துகள், தக்­கி­யாக்கள் கட்­டா­ய­மாக பதி­யப்­ப­டுதல் வேண்டும்.
4. ஜமா­அத்தார் பட்­டியல் வருடா வருடம் புதுப்­பிக்­கப்­பட்டு வக்பு சபையில் பதி­யப்­ப­டுதல் வேண்டும். ஜமா­அத்தார் பார்­வைக்கு வைக்க வேண்டும்.
5. பிரிவு 27 இல் சொல்­லப்­பட்­டுள்ள கணக்கு வழக்­கு­களை உரிய நேரத்தில் சமர்ப்­பிக்­காத நிர்­வா­கி­க­ளுக்கு தண்­டனை வழங்­கு­வது அவ­சியம்.
6. மஸ்­ஜித்­களில் ஏற்­படும் வீண் விர­யங்கள் (தேவை­யற்ற கட்­ட­டங்கள்) மேற்­கொள்­ளாமல் தடுத்தல் வக்ஃப் சொத்­துக்­களை விற்­ப­தற்கோ அல்­லது வாங்­கு­வ­தற்கு முன் வக்ஃப் சபையின் அனு­மதி பெறுதல் கட்­டா­ய­மாக்­கப்­ப­டுதல்.
a. இவற்றை மேற்­கொள்ளும் முன்னர் வக்ஃப் சபைக்கு விண்­ணப்­பித்து அனு­மதி பெறுதல் வேண்டும்.
b. வக்பு சபையில் நிய­மிக்­கப்­படும் அதி­கா­ரி­களின் (ENGINEER VALUER) தர­வு­ரையின் அடிப்­ப­டையில் இவற்­றுக்கு அனு­மதி அளிக்­கலாம்.
7. நிர்­வா­கி­களின் தவ­றினால் அல்­லது உதா­சீ­னத்­தினால் வக்ஃப் சொத்­துக்­க­ளுக்கு ஏதும் இழப்போ அல்­லது பாதிப்போ ஏற்­பட்டால் அந்த இழப்­பீ­டு­களை நிர்­வா­கி­க­ளி­ட­மி­ருந்­து ­த­னிப்­பட்ட ரீதியில் அற­வி­டு­வ­தற்கு குற்­ற­வியல் சட்­டத்தின் கீழ் அறவிட சட்டம் இயற்­றப்­ப­டுதல் வேண்டும்.
8. வக்பு சொத்­துக்­க­ளுக்கு எவரும் ஏக­போக உரிமை கோர முடி­யா­த­வாறு சட்ட ஏற்­பா­டு­கள் ­செய்தல் வேண்டும் (Adverse prescriptive right).
9. பல­முறை திருந்தி அமைக்­கப்­பட்­டுள்ள 1972 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க வாட­கைச்­சட்­டத்தின் (RENT ACT) ஏற்­பா­டு­களில் இருந்து வக்பு சொத்­துக்­களை விடு­விக்­கப்­பட்ட (EXCEPTED PREMISES) சொத்­து­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்த சிபா­ரிசு செய்தல்.
10. அனு­மதி இல்­லாமல் வக்பு சொத்­துக்­களை குத்­த­கைக்குக் கொடுப்­பதைத் தடை செய்தல்.
a. ஐந்து வரு­டங்­க­ளுக்கு மேல் குத்­தகை கொடுப்­பதைத் தடை செய்தல் (குத்­த­கையை நீடிக்க ஒப்பந்தப்படலாம்)
b. சட்­ட­பூர்­வமான குத்­தகை உடன்­ப­டிக்கை (REGISTERED LEASE AGREEMENT) மூலம் குத்­தகை கொடுத்தல்.
C.கீழ் குத்­தகை மூலம் வக்ஃபு சொத்­துக்­க­ளுக்குப் பெரும் கேடு­ வி­ளை­விக்­கப்­பட்­டுக் ­கொண்­டி­ருக்­கின்­றது. இதனை தடை செய்ய உரிய நட­வ­டிக்­கை­ எ­டுத்தல்.
11. வக்பு சபை­யி­னதும் மஸ்­ஜி­து­களின் சட்டத் தேவை­களை நிறை­வேற்ற பிராந்­திய அடிப்­ப­டையில் சட்­டத்­த­ர­ணி­களை (ZONAL PANEL LAWYERS) நிய­மிக்­கலாம்.
12. வக்ஃபு சபையின் கட­மை­களில் உத­வு­வ­தற்­காக நிபு­ணர்­க­ளான (ENGINEERS, VALUERS ACCOUNTANTS AND SURVEYORS) போன்­றோரை ஒப்­பந்த அடிப்­ப­டையில் சேவைக்கு அமர்த்தலாம்.
13. பிரிவின் 43 இரண்டில் விவரிக்கப்பட்டுள்ள நிதியம் வினைத்திறனாக வெளிப்படையாக செயல்படுதல் வேண்டும். அதன் நடவடிக்கைகளைப் பொதுமக்கள் அறிதல் அவசியம்.
14.நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான மஸ்ஜிதுகளின் விவகாரங்களை திறம்பட நிர்வகிப்பது பெரும் சிரம சாத்தியமான காரியமாகும். வக்ஃபு சபை இதற்கு தேவையான தகுதி உள்ள ஆளணிகளை தமது சேவைக்கு அமர்த்தி வினைத்திறனாக செயல்படுதல் அவசியம்.
15. கதீப்மார், முஅத்தின்மாரின் சேவைகளை ஸ்திரப்படுத்தி அவர்களுக்கு அங்கீகாரமும் அந்தஸ்த்தும் உரிய சம்பளங்களும் வழங்குவதுடன் ஓய்வூதியம் வழங்குவதற்காக சேம லாபநிதி (EPF) போன்றதொரு திட்டம் அமைத்தல்.
16.வக்ஃபு சபையில் தற்போது நிலுவையில் உள்ள வழக்குககள், பிச்சினைகளைத் தீர்ப்பதற்காக பிராந்திய ரீதியில் (OMBUDSMAN) போன்ற அதிகாரிகளை நியமிக்கலாம். அவர்களுக்குத் தேவையான காரியாலய வசதிகள் செய்து கொடுக்கப்படல் வேண்டும்.
17. பிரிவு 58 இல் சொல்­லப்­பட்­டுள்ள வரை­வி­லக்­க­ணத்தில் “வக்ஃபு சொத்து” என்றால் என்ன என்று கூறப்­பட்­டில்லை. இதே போல் இன்னும் பல சொற்­க­ளுக்கு விளக்கம் தேவை. வக்ஃபு சொத்­துக்­க­ளுக்குத் தற்­போது நீதி­மன்­றங்­களில் பல வழக்­குகள் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. அதனால் நாம் இவற்றைக் கவ­னத்­திற்­கொள்­வது அவ­சியம்.
(இக்­கட்­டு­ரை­யா­சி­ரியர் “முஸ்லிம் சட்டத் திருத்தம்” சம்­பந்­த­மாக 20.04.2018 வெள்­ளிக்­கி­ழமை விடி­வெள்ளி இதழில் எழு­திய கட்டுரையின் ஒரு தொடர்ச்சி இதுவாகும்.)- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.