உடுநுவரவில் பட்டப்பகலில் மாணவி கடத்தல்: நடந்தது என்ன?

0 100

உடு­நு­வர நிருபர்

முஸ்லிம் மாண­வி­யொ­ருவர் வேனில் வந்தவர்களால் கடத்திச் செல்­லப்­படும் சீ.சீ.டி.வி காட்சி கடந்த சனிக்­கி­ழமை காலை சமூக ஊட­கங்­களில் வைர­லாகத் தொடங்­கி­யது. அத்­துடன், இக்­க­டத்தல் பற்றி தொலைக்­காட்சி சேவை­க­ளிலும் பிரேக்கிங் நியுஸ் வர ஆரம்­பித்­தது.

இது நாட்டு மக்கள் மத்­தியில் பெரும் அதிர்ச்­சி­யையும் பர­ப­ரப்­பையும் தோற்­று­வித்­தது. இக்­க­டத்தல் சம்­பவம் காலை வேளையில் பல­ருக்கு முன் நடை­பெற்­ற­மை­யா­னது பெரும் அதிர்ச்சியைத் தோற்­று­வித்­ததில் வியப்­பில்லை. சீருடை அணிந்­தி­ருந்த மாணவி கடத்­தப்­ப­டு­வது கண்டு பலரும் ஆத்­தி­ரத்­திற்­குள்­ளா­கினர்.

இது நடை­பெற்ற இடம் கண்டி மாவட்­டத்தில் முஸ்­லிம்கள் செறி­வாக வாழும் உடு­நு­வர பகு­தியில் ஆகும். இதனால் நாட்டின் நாலா­பக்­கங்­க­ளிலும் இருந்து மட்­டு­மல்ல வெளி­நா­டு­களில் வசிப்­ப­வர்­களும் உடு­நு­வ­ரையில் இருக்கும் தமது உற­வி­னர்கள், நண்­பர்­க­ளுடன் தொடர்பு கொள்ள ஆரம்­பித்­தனர்.

12 ஆம் திகதி நடந்த சம்­பவம்
இச்­சம்­பவம் இடம்­பெற்ற தினம் கடந்த 12 ஆம் திகதி சனிக்­கி­ழமை ஆகும். க.பொ.த உயர்­த­ரத்தில் விஞ்­ஞானப் பிரிவில் கல்வி கற்­று­வரும் 18 வயது மாண­வி­யொ­ருவர் அரவ்­வா­வல பகு­தியில் தனது நண்பி சகிதம் தனியார் வகுப்­புக்கு சென்று கொண்­டி­ருந்தார். அப்­போது, எவரும் எதிர்­பா­ராத வகையில் ஹப்­பு­க­ஹட்­டு­தன்னை எனும் இடத்தில் நடந்து செல்லும் இரு மாண­வி­க­ளுக்கும் முன்னால் வந்து நின்ற, கறுப்பு நிற வேனில் இருந்து இறங்­கிய பிர­தான சந்­தேக நபர் மாண­வியை இழுத்து வேனில் ஏற்­று­கின்றார். இதில் பீதி­ய­டைந்த நண்பி வந்த வழியே திரும்பி ஒடு­கின்றார்.

இக்­க­டத்தல் காட்சி அரு­கி­லி­ருந்த கட்­டி­டத்தின் சீ.சீ.டி.வி கமெ­ராவில் தெளி­வாகப் பதி­வா­கி­யுள்­ளது.

இக்­க­டத்தல் சம்­பவம் இடம்­பெற்ற ஹப்­பு­க­ஹட்­டு­தன்னை என்ற இடம் அரவ்­வா­வல பகு­தியில் பூவெ­லி­கடை – தவு­ல­கல பிர­தான வீதியில் அமைந்­துள்­ளது. இங்கு பொது­வாக காலை வேளையில் மக்கள் நட­மாட்டம் குறை­வாகக் காணப்­ப­டு­வது வழக்­க­மாகும். எனினும், மாலை வேளை­களில் மக்கள் நட­மாட்டம் அதி­க­ளவில் காணப்­படும். ஆனால், இச்­சம்­பவம் சன­ ந­ட­மாட்டம் குறை­வாகக் காணப்­படும் காலை வேளையில் இடம்­பெற்­ற­மை­யா­னது இக்­க­டத்தல் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது என்­ப­தற்கு சான்­றாகும் என்று இப்­ப­குதி மக்கள் தெரி­விக்­கின்­றனர்.

உஷாரா­கிய பிர­தே­ச­வா­சிகள்
இச்­சம்­ப­வத்தை தொடர்ந்து உஷாரா­கிய பிர­தே­ச­வா­சிகள் வேன் சென்ற திசையில் வேனை மறிப்­ப­தற்கு கடும் பிர­யத்­த­னங்­களை மேற்­கொண்­டனர். தொலை­பேசி அழைப்­புக்கள் நாலா­பு­றங்­க­ளுக்கும் பறந்­தன. கெலி­ஓயா நகரில் வேனை மறிப்­ப­தற்கு முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. மேலும், இந்த வேனை ஆசி­ரி­ய­ரொ­ருவர் தனது மோட்டார் சைக்­கிளில் கட்­டு­கஸ்­தோட்டை வரை விரட்டிச் சென்­ற­தா­கவும் அதற்­கப்பால் வேன் மறைந்து விட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டது. இதனால், இப்­பி­ர­யத்­த­னங்கள் யாவும் துரதிஷ்டவ­ச­மாக தோல்­வியில் முடிந்­தன.

கடத்­தல்­காரர் மாண­வியின் உற­வினராம்
இக்­க­டத்தில் ஈடு­பட்­டவர் மாண­வியின் தந்­தையின் சகோ­த­ரியின் மகன் ஆவார். இவர் கம்­ப­ளையை சேர்ந்­தவர் எனவும் ஜப்­பானில் சில வரு­டங்கள் தொழில் புரிந்து விட்டு நாடு திரும்­பி­ய­வ­ர் எனவும் பொலிஸ் விசா­ர­ணைகளில் இருந்து தெரிய வந்­தது. அத்­துடன், அன்­றைய தினம் இச்­சந்­தேக நபரின் புகைப்­படம், சாரதி அடை­யாள அட்டை உட்­பட பல விப­ரங்கள் சமூக ஊட­கங்­களில் வைர­லா­கின.

பொலிஸ் முறைப்­பாடு
இச்­சம்­ப­வத்தை தொடர்ந்து, இம்­மா­ணவி வாட­கைக்கு தங்­கி­யி­ருந்த வீட்டின் உரி­மை­யாளர் மற்றும் பெற்­றோ­ரினால் தவு­ல­கல பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து, தவு­ல­கல பொலிஸ் நிலை­யத்தின் பதில் பொறுப்­ப­தி­காரி சம்பத் ரண­சிங்க தலை­மை­யி­லான பொலிஸார் மாண­வியை மீட்­ப­தற்கும் கடத்­தல்­கா­ரர்­களை கைது செய்­வ­தற்­கு­மான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டனர்.

வேனின் சாரதி கைது – வேனும் சிக்கியது
இக்­க­டத்தல் சம்­ப­வத்­திற்கு வாட­கைக்கு அமர்த்­தப்­பட்ட வேன் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்­பதை கண்­ட­றிந்த பொலிஸார் வேனுடன் தொடர்­பு­டைய ஜீ.பி.எஸ் தொழி­நுட்­பத்தை பயன்­ப­டுத்தி வேன் பொலன்­னறுவை கது­ரு­வெல பகு­தியில் காணப்­ப­டு­வதை உறுதி செய்து கொண்­டனர். இத­னை­ய­டுத்து, சம்­பவ தினம் மாலை கது­ரு­வெல பகு­தியில் கைவி­டப்­பட்ட நிலையில் இருந்த வேனைப் பொலிஸார் கைப்­பற்­றினர். அத்­துடன், கண்டி நோக்கி திரும்பிக் கொண்­டி­ருந்த வேனின் சார­தியும் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார்.
எனினும், இவ்­வேனில் இருந்து இடையில் இறங்­கிய சந்­தேக நபர் முச்­சக்­க­ர­வண்­டி­களை வாட­கைக்கு அமர்த்தி பய­ணித்­துள்­ள­தா­கவும் தெரிய வந்­தது.

50 இலட்சம் ரூபா கப்பம் கோரல்
இதற்­கி­டையில், சம்­பவ தினம் மாலை மாண­வியின் தந்­தை­யுடன் தொடர்பு கொண்ட சந்­தேக நபர், மகளை விடு­விப்­ப­தற்கு 50 இலட்சம் ரூபா கப்பம் தரு­மாறு கூறி மிரட்ட ஆரம்­பித்­துள்ளார். எனினும், அன்­றைய தினம் விடு­முறை தினம் என்­பதால் 50 இலட்சம் ரூபா பணத்தை வங்கிக் கணக்கில் இருந்து மீளப் பெற்றுக் கொள்­வது மட்­டு­மன்றி வைப்­பி­லி­டு­வதும் முடி­யாத காரி­ய­மாக இருந்­தது. எனவே, முதலில் 50 ஆயிரம் ரூபா ஒன்லைன் மூலம் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

மேலும், மாண­வியின் தந்­தை­யுடன் பல தட­வைகள் தொடர்பு கொண்ட சந்­தேக நபர் கப்பப் பணத்தை செலுத்­து­மாறு மிரட்டல் விடுத்து வந்­துள்ளார்.
இதற்­கி­டையில், சந்­தேக நபரின் கைய­டக்கத் தொலை­பே­சி­யூ­டாக விசா­ர­னை­களை மேற்­கொண்டு அதி­லி­ருந்து டவர் மூலம் தொழி­நுட்ப முறை­களை பயன்­ப­டுத்தி சந்­தேக நபரை கைது நெய்யும் நட­வ­டிக்­கையை கண்டி குற்றப் புல­னாய்வுப் பிரிவின் குழு­வொன்று ஆரம்­பித்­தி­ருந்­தது. இதன் அடிப்­ப­டையில், கிழக்கு மாகா­ணத்தில் அம்­பாறை பகு­தியில் சந்­தேக நபரை மடக்கிப் பிடிப்­ப­தற்­காக பொலிஸார் வலை விரித்­தி­ருந்­தனர்.

சந்­தேக நபர் கைது
அம்­பறை பேரூந்து நிலை­யத்­தி­லி­ருந்து அம்­பா­றையில் இருந்து கண்டி நோக்கி புறப்­ப­ட­வி­ருந்த பேரூந்தில் இருந்து 13 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை காலை மாண­வியை மீட்ட பொலிஸார் சந்­தேக நப­ரையும் மடக்கிப் பிடித்­துள்­ளனர். இத­னை­ய­டுத்து அம்­பாறை பொலிஸ் தலை­மை­ய­கத்தில் சந்­தேக நபரை தடுத்து வைத்து விசா­ர­னை­களை மேற்­கொண்ட பொலிஸார் இக்­க­டத்­த­லுடன் தொடர்­பு­டைய ஏனைய நபர்­க­ளையும் கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டனர். மேலும், இச்­சந்­தேக நபரும் மாண­வியும் தவு­ல­கல பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டனர்.

“இக்­க­டத்தல் கப்பம் பெறு­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இதனை முறி­ய­டித்த பொலி­ஸா­ருக்கும் மகளைக் கடத்திச் செல்லும் போது காப்­பாற்ற முயற்­சித்த அர்ஷாத் என்ற இளை­ஞ­ருக்கும் நன்­றி­களைத் தெரி­வித்துக் கொள்­கின்றேன். இதில் ஈடு­பட்­டவர் எனது சகோ­த­ரியின் மகன். மற்ற இரு­வ­ரையும் எனக்குத் தெரி­யாது. இதில் ஈடு­பட்­ட­வர்கள் பொய்­களைப் பரப்பி தப்­பித்துக் கொள்ள முயற்­சிக்­கின்­றனர். இக்­குற்றச் செயலில் ஈடு­பட்­ட­வர்­களை சட்­டத்தின் முன்­நி­றுத்தி தண்­டனை வழங்­கப்­பட வேண்டும்” என்று மாணவின் தந்தை எம்.எச்.எம். ஹில்மி ஊட­கங்­க­ளுக்குத் தெரி­வித்­துள்ளார்.

கடத்­தல்­கா­ரர்­க­ளுடன் போர­டிய அர்சாத் முஹம்மத்
இச்­சம்­பவம் நடை­பெறும் போது பாதையில் சென்று கொண்­டி­ருந்த இளை­ஞ­ரொ­ருவர் மாண­வி­யொ­ருவர் நப­ரொ­ரு­வரால் வேனில் வந்­த­வர்­களால் கடத்­தப்­ப­டு­வதை கண்டு வேக­மாக வேனை நோக்கி ஒடி வந்துள்ளார். இவர் அரவ்­வா­வல பகு­தியை சேர்ந்த எம்.ஐ. அர்சாத் முஹம்மத் என்ற இளைஞர் ஆவார்.
இவ்­வி­ளைஞன் தன்­னு­யி­ரையும் பொருட்­ப­டுத்­தாது மாண­வியைக் காப்­பாற்ற கடத்­தல்­கா­ரர்­க­ளுடன் துணி­க­ர­மாகப் போரா­டி­யுள்ளார். கடத்­தல்­கா­ரர்கள் வேனை ஓட்டிச் சென்ற போதிலும் இவர் வேனில் தொத்­தி­ய­வாறு போராட்­டத்தை தொடர்ந்­துள்ளார். எனினும், வேனில் இருந்த கடத்­தல்­கா­ரர்­களின் தாக்­கு­தலில் கால், கை மற்றும் முகத்தில் காய­ம­டைந்த இளைஞன் சுமார் 500 மீற்றர் தூரத்தில் பாதையில் வீசப்­பட்டு வீழ்ந்­துள்ளார். இக்­காட்­சியும் சீ.சீ.டி.வி கமெ­ராவில் தெளி­வாகப் பதி­வா­கி­யுள்­ளது.

இதில் காய­ம­டைந்த நிலையில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்­பி­யுள்ள எம். ஐ. அர்சாத் முஹம்மத் என்ற இளை­ஞரின் செயலை பொலி­ஸாரும் பாராட்­டி­யுள்­ளனர்.

மேலும், இவ­ருக்கு சமூக ஊட­கங்கள் ஊடா­கவும் நேர­டி­யா­கவும் பெருந்­தொ­கை­யானோர் பாராட்­டுக்­களைத் தெரி­வித்து வரு­கின்­றனர். அத்­துடன் இவரின் வீட்­டுக்கு பலரும் நேர­டி­யாகச் சென்று பாராட்­டி­யதைக் காண முடிந்­தது.
இதே­வேளை, அக்­கு­றனைப் பகு­தியில் இருந்து இவரின் வீட்­டுக்கு வந்த குழு­வினர் இவரைப் பாராட்டி பரிசும் வழங்கிச் சென்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

எமது சமூ­கத்தில் அவ்­வப்­போது இடம்­பெறும் சில சம்­ப­வங்கள் முஸ்லிம் சமூ­கத்தை நோக்கி ஏனைய சமூ­கங்கள் தலை உயர்த்தி பார்ப்­ப­தற்கு வழி செய்­கின்­றன. இச்­சம்­ப­வங்கள் தொடர்­பான, பிற சமூ­கங்­களின் புரி­தல்கள், விமர்­ச­னங்கள், நிலைப்­பா­டுகள் பற்­றிய புரி­தல்­களை முஸ்லிம் சமூகத் தலை­மைகள், புத்­தி­ஜீ­விகள், சமூக ஆர்­வ­லர்கள் உள்­வாங்கி செயற்­பட வேண்­டி­யுள்­ளது என்­பதை இங்கு வலி­யு­றுத்­தாமல் இருக்க முடியாது. இதன் மூலம் எமது சமூகத்தில் குடும்ப, சமூக வாழ்வியல் ஒழுங்குகள் தொடர்பாக மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டிய விடயங்களை சமூகத்தின் முன் கொண்டு செல்வது உலமாக்கள், சமூகத்தலைமைகள், புத்திஜீவிகள் சார்ந்த பொறுப்பாகும்.

இது போன்ற குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் எவராக இருப்பினும் தராதரம் பாராது தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.