ஐ.நா.வும் பலஸ்தீனமும் நிதியுதவி கோருகின்றன

0 516

அமெ­ரிக்­கா­வினால் முக்­கிய உத­விகள் நிறுத்தப் பட்­ட­தை­ய­டுத்து யதார்த்­த­பூர்­வ­மான தேவைகள் அதி­க­மாக இருப்­ப­தால் 2019 ஆண்டில் பலஸ்­தீன அதி­கா­ர­ச­பைக்கு 350 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் நிதி­யு­தவி தேவைப்­ப­டு­வ­தாக ஐக்­கிய நாடுகள் சபையும் பலஸ்­தீன அதி­கார சபையும் தெரி­வித்­துள்­ளன. 2018 ஆம் ஆண்டின் 539 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் நிதி­யு­த­வி­யி­லி­ருந்து 200 இற்கும் அதி­க­மான திட்­டங்­க­ளி­னூ­டாக 1.4 மில்­லியன் பலஸ்­தீன மக்­க­ளுக்கு உத­வு­வ­தற்கு முடி­யா­ததன் கார­ண­மா­கவே இக் கோரிக்கை விடுக்­கப்­ப­டு­வ­தாக ஐக்­கிய நாடுகள் சபை தெரி­வித்­துள்­ளது. பலஸ்­தீன அக­தி­க­ளுக்­கான ஐக்­கிய நாடுகள் சபை முக­வ­ரகம் உள்­ள­டங்­க­லாக பல்­வேறு பொறி­மு­றைகள் ஊடாக வரு­டாந்தம் சுமார் 500 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் நிதி­யு­த­வி­யினை வழங்கி வந்த அமெ­ரிக்கா இவ்­வ­ருட ஆரம்­பத்தில் பலஸ்­தீ­னத்­திற்­கான அதன் உத­விகள் அனைத்­தையும் நிறுத்­திக்­கொண்­டது.

பலஸ்­தீன அக­தி­க­ளுக்­கான ஐக்­கிய நாடுகள் சபை முக­வ­ரகம் உல­கெங்­கி­லு­முள்ள சுமார் ஐந்து மில்­லியன் பலஸ்­தீன அக­தி­க­ளுக்கு உதவி வரு­கின்­றது.
2019 இற்­கான ஐக்­கிய நாடுகள் சபை, மனி­தா­பி­மான உதவித் திட்­டத்தின் கீழ் உணவு, சுகா­தாரப் பரா­ம­ரிப்பு, உறை­விடம், தண்ணீர் மற்றும் சுத்­தி­க­ரிப்பு போன்­றன அவ­சியம் தேவைப்­ப­டு­கின்ற பலஸ்­தீ­னர்கள் தொடர்பில் அதிக அக்­கறை செலுத்­த­வுள்­ளது என காஸா பள்­ளத்­தாக்கு, மேற்­குக்­கரை மற்றும் கிழக்கு ஜெரூ­சலம் பகு­திக்­கான ஐக்­கிய நாடுகள் சபையின் மனி­தா­பி­மான இணைப்­பாளர் மெக்­கோல்ட்ரிக் தெரி­வித்தார்.

அமெ­ரிக்­காவின் நகர்­வி­னை­ய­டுத்து நன்­கொடை வழங்­கு­வோரின் எண்­ணிக்கை குறை­வ­டைந்­துள்ள நிலையில் நிதி­யு­த­வி­களைக் கோரும் போது ஐக்­கிய நாடுகள் சபை யதார்த்­த­பூர்­வ­மாக தனது கோரிக்­கை­களை முன்­வைக்க வேண்­டி­யி­ருந்­தது எனவும் மெக்­கோல்ட்ரிக் தெரி­வித்தார்.

அவ­சியத் தேவை மற்றும் முன்­னு­ரிமை அடிப்­ப­டையில் மனி­தா­பி­மான உதவித் திட்டம் செயற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக கடந்த திங்­கட்­கி­ழமை மேற்குக் கரையின் ரமல்­லாவில் கோரிக்­கை­யினை ஆரம்­பித்து வைக்கும் நிகழ்­வின்­போது அவர் குறிப்­பிட்டார்.

2018 ஆம் ஆண்டு பலஸ்­தீன அக­தி­க­ளுக்­கான ஐக்­கிய நாடுகள் சபை முக­வ­ர­கத்­திற்கு அமெ­ரிக்கா 365 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் நிதி­யு­த­வி­யினை வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்­தி­ருந்த போதிலும் முதற்­கட்ட நிதி­யான 60 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் நிதி­யு­த­வி­யினை மாத்­தி­ரமே வழங்­கி­யி­ருந்­தது. அதன் பின்னர் பலஸ்­தீன அக­தி­க­ளுக்­கான ஐக்­கிய நாடுகள் சபை முக­வ­ர­கத்­திற்­கான அனைத்து நன்­கொடை நிதி­யு­த­வி­க­ளையும் நிறுத்­து­வ­தாக கடந்த ஆகஸ்ட் மாதம் அறி­வித்­தது.

இவ்­வா­றான செயற்­பா­டுகள் இஸ்­ரே­லு­ட­னான சமா­தானப் பேச்­சு­வார்த்­தைக்கு பலஸ்­தீன தலை­மைத்­து­வத்தை இணங்க வைப்­ப­தற்­கான அழுத்­த­மாகப் பர­வ­லாகப் பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அழுத்­தங்­க­ளுக்கு அடி­ப­ணியப் போவ­தில்லை என கடந்த திங்­கட்­கி­ழமை பலஸ்­தீன சமூக அபி­வி­ருத்தி அமைச்சர் இப்­ராஹீம் அல்-­ஷஹீர் தெரி­வித்தார்.
உத­விக்­கா­கவும் பணத்­திற்­கா­கவும் எமது சட்­ட­பூர்வ உரி­மை­களை கைவி­டு­வ­தில்லை என்­பதே பலஸ்­தீன மக்­க­ளி­னதும், தலை­மைத்­து­வத்­தி­னதும், அர­சாங்­கத்­தி­னதும் நிலைப்­பா­டாகும் எனவும் அவர் தெரி­வித்தார்.

இரண்டு மில்­லியன் பலஸ்­தீ­னர்கள் வாழு­கின்ற, அவர்­களுள் மூன்றில் இரண்டு பகு­தி­யினர் உத­வி­க­ளையே நம்பி இருக்­கின்­றனர். இஸ்­ரே­லிய தடை­க­ளுக்குள் சிரியா ஆள்­புலப் பிர­தே­சத்­திற்குள் மிகவும் நெருக்கமாக வாழ்கின்ற காஸா பள்ளத்தாக்கிற்கே எமது பெரும்பாலான உதவிகள் அனுப்பி வைக்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

பொருளாதாரச் சரிவு, அதிகரித்து வரும் இஸ்ரேலுடனான பதற்றநிலை ஆகியவற்றினால் காஸா வீழ்ச்சியடைந்து வருவதாக மத்திய கிழக்கிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் விஷேட பிரதிநிதி நிக்கலோய் மிலாடினேவ் கடந்த ஒக்டோபர் மாதம் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.